text
stringlengths 135
969
|
---|
<s>[INST]அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு[/INST] இது திருக்குறள் 1 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்[/INST] இது திருக்குறள் 2 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்[/INST] இது திருக்குறள் 3 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல[/INST] இது திருக்குறள் 4 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லைஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு[/INST] இது திருக்குறள் 5 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லைஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்[/INST] இது திருக்குறள் 6 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது[/INST] இது திருக்குறள் 7 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது[/INST] இது திருக்குறள் 8 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை[/INST] இது திருக்குறள் 9 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையேஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்[/INST] இது திருக்குறள் 10 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:1, கடவுள் வாழ்த்து, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்று[/INST] இது திருக்குறள் 11 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை[/INST] இது திருக்குறள் 12 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையேஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசி[/INST] இது திருக்குறள் 13 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்[/INST] இது திருக்குறள் 14 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை[/INST] இது திருக்குறள் 15 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிது[/INST] இது திருக்குறள் 16 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்[/INST] இது திருக்குறள் 17 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு[/INST] இது திருக்குறள் 18 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்[/INST] இது திருக்குறள் 19 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு[/INST] இது திருக்குறள் 20 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:2, வான்சிறப்பு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு[/INST] இது திருக்குறள் 21 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று[/INST] இது திருக்குறள் 22 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு[/INST] இது திருக்குறள் 23 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்ததுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து[/INST] இது திருக்குறள் 24 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி,ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி[/INST] இது திருக்குறள் 25 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்[/INST] இது திருக்குறள் 26 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு[/INST] இது திருக்குறள் 27 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்[/INST] இது திருக்குறள் 28 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது[/INST] இது திருக்குறள் 29 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்[/INST] இது திருக்குறள் 30 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:3, நீத்தார் பெருமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு[/INST] இது திருக்குறள் 31 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு[/INST] இது திருக்குறள் 32 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லைஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஒல்லும் வகையான அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்[/INST] இது திருக்குறள் 33 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற[/INST] இது திருக்குறள் 34 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்[/INST] இது திருக்குறள் 35 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை[/INST] இது திருக்குறள் 36 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடை[/INST] இது திருக்குறள் 37 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்[/INST] இது திருக்குறள் 38 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இல[/INST] இது திருக்குறள் 39 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகாஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி[/INST] இது திருக்குறள் 40 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:4, அறன் வலியுறுத்தல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை[/INST] இது திருக்குறள் 41 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை[/INST] இது திருக்குறள் 42 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை[/INST] இது திருக்குறள் 43 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல[/INST] இது திருக்குறள் 44 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது[/INST] இது திருக்குறள் 45 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்[/INST] இது திருக்குறள் 46 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை[/INST] இது திருக்குறள் 47 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து[/INST] இது திருக்குறள் 48 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று[/INST] இது திருக்குறள் 49 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்[/INST] இது திருக்குறள் 50 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:5, இல்வாழ்க்கை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை[/INST] இது திருக்குறள் 51 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்[/INST] இது திருக்குறள் 52 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை[/INST] இது திருக்குறள் 53 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்[/INST] இது திருக்குறள் 54 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை[/INST] இது திருக்குறள் 55 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண்[/INST] இது திருக்குறள் 56 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை[/INST] இது திருக்குறள் 57 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு[/INST] இது திருக்குறள் 58 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை[/INST] இது திருக்குறள் 59 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு[/INST] இது திருக்குறள் 60 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:6, வாழ்க்கைத் துணைநலம், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற[/INST] இது திருக்குறள் 61 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்[/INST] இது திருக்குறள் 62 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தந்தம் வினையான் வரும்[/INST] இது திருக்குறள் 63 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்[/INST] இது திருக்குறள் 64 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு[/INST] இது திருக்குறள் 65 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்[/INST] இது திருக்குறள் 66 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்[/INST] இது திருக்குறள் 67 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது[/INST] இது திருக்குறள் 68 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்[/INST] இது திருக்குறள் 69 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்லெனும் சொல்[/INST] இது திருக்குறள் 70 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:7, மக்கட்பேறு, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும்[/INST] இது திருக்குறள் 71 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு[/INST] இது திருக்குறள் 72 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு[/INST] இது திருக்குறள் 73 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு[/INST] இது திருக்குறள் 74 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு[/INST] இது திருக்குறள் 75 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை[/INST] இது திருக்குறள் 76 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றதுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்[/INST] இது திருக்குறள் 77 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று[/INST] இது திருக்குறள் 78 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு[/INST] இது திருக்குறள் 79 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு[/INST] இது திருக்குறள் 80 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:8, அன்புடைமை, பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு[/INST] இது திருக்குறள் 81 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று[/INST] இது திருக்குறள் 82 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்றுஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்றுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று[/INST] இது திருக்குறள் 83 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்[/INST] இது திருக்குறள் 84 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்[/INST] இது திருக்குறள் 85 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு[/INST] இது திருக்குறள் 86 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்[/INST] இது திருக்குறள் 87 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்[/INST] இது திருக்குறள் 88 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு[/INST] இது திருக்குறள் 89 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து[/INST] இது திருக்குறள் 90 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:9, விருந்தோம்பல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்[/INST] இது திருக்குறள் 91 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்[/INST] இது திருக்குறள் 92 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லதுஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்[/INST] இது திருக்குறள் 93 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு[/INST] இது திருக்குறள் 94 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற[/INST] இது திருக்குறள் 95 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகாஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்[/INST] இது திருக்குறள் 96 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்[/INST] இது திருக்குறள் 97 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்[/INST] இது திருக்குறள் 98 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது[/INST] இது திருக்குறள் 99 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
<s>[INST]இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று[/INST] இது திருக்குறள் 100 இந்த பாடலின் பொருள்: ஆசிரியர்: மு.வரதராசன், பொருள்:இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .ஆசிரியர்: சாலமன் பாப்பையா, பொருள்:மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.ஆசிரியர்: மு.கருணாநிதி, பொருள்:இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும் இந்த பாடல் சம்பந்தமான சில தகவல்கள்: அதிகாரம்:10, இனியவை கூறல், பால்: அறத்துப்பால்</s> |
End of preview. Expand
in Data Studio
No dataset card yet
- Downloads last month
- 17