text
stringlengths 16
178
|
---|
அரியுஞ்சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு.
|
அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெட வேண்டும்.
|
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
|
அரிவான் சுறுக்கே அரிவாள்முனை கருக்கே.
|
அரிவை மொழிகேட்டால் அபத்தன் ஆவான்.
|
அருகாகப்பழுத்தாலும், விளாமரத்தில் வெளவால்சேராது.
|
அருக்காண முத்துக் கரிக்கோலமானான்.
|
அருக்காணி நாய்ச்சியார் குரங்குப்பிள்ளை பெற்றாளாம்.
|
அருக்காமணி முருக்கம்பூ.
|
அருக்கித்தேடிப் பெருக்கி அழி.
|
அருங்கோடை துரும்பு அற்றுப்போகுது.
|
அருஞ்சுனை நீருண்டால் அப்பொழுதே ரோகம்.
|
அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.
|
அருணாப் பரமே கருணாம்பரம்.
|
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
|
அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது.
|
அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?
|
அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை குறைந்துபோம்.
|
அருமை அற்றவீட்டில் எருமையும் குடியிராது.
|
அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதி காலத்து உரல்போகலாகாது.
|
அரும்புகோணினால் அதின் மணம் குற்றமா?
|
அருவருப்புச் சோறும் அசங்கிதக் கறியும்.
|
அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை.
|
அருள்வேணும், பொருள்வேணும், அடக்கம் வேணும்.
|
அரைக்கவுமாயம், கரைக்கவுமாயம்.
|
அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.
|
அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
|
அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
|
அரைக்காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது.
|
அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண் சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசாக்குகிறவளும் பெண்சாதி.
|
அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிக்கிறவன் ஓன்று நினைத்துக் குடிக்கிறான்.
|
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.
|
அரைக்குடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது.
|
அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்தது போல.
|
அரைச்சிலை கட்டக் கைக்கு உபசாரமா?
|
அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமா?
|
அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாமா?
|
அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையுமாய் விடுகிறவளும் பெண்சாதி.
|
அரைத்த பயறு முளைத்தாற்போல.
|
அரைத்துட்டுக்கு பீ தின்கிறவன்.
|
அரைத்துட்டிலே கலியாணம், அதிலே கொஞ்சம் பாண வேடிக்கை.
|
அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
|
அரைப்பணங் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வைசெய்த கதை.
|
அரைப்பணங் கொடுத்து அழச்சொல்லி ஒருபணங்கொடுத்து ஓயச்சொன்னதுபோல.
|
அரைப்பணச் சேவகமானாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
|
அரைப்பணத்துக்கு மருத்துவம் பார்க்கப்போய் ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டது.
|
அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.
|
அரைவித்தைகொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
|
அரைவேலையைச் சபையிலே கொண்டுவருவதா?
|
அலுத்துக் கொலுத்து அக்காளண்டைபோனால் அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம்.
|
அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப்போனால் அக்காள் இழுத்து மச்சானண்டையிற் போட்டானாம்.
|
அலை அடங்கியபின் ஸ்நானம் செய்வதுபோல.
|
அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது?
|
அலை ஓய்ந்து கடலாடலாமா?
|
அலைபோல நாக்கும், மலைபோல மூக்கும், ஆகாசந்தொட்ட கையும்.
|
அலைமோதும்போதே தலை முழுகுகிறது.
|
அலைவாய்த் துரும்புபோல் அலைகிறது.
|
அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறது.
|
அல்லாத வழியால் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் இவை ஆகா.
|
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
|
அல்லல் அருளாள்வார்க்கில்லை.
|
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
|
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
|
அல்லவை தேய அறம் பெருகும்.
|
அல்லற்பட்டு அழுதகண்ணீர் செல்வத்தைக்குறைக்கும்.
|
அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல்.
|
அல்லும் பகலும் கசடறக் கல்.
|
அவகடம் உள்ளவன் அருமை அறியான்.
|
அவகுணக்காரன் ஆவாசமாவான்.
|
அவசரக்காரனுக்குக் காக்கிலோ பெட்டு, நேக்குச் சேத்திலோ பெட்டு.
|
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
|
அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோலச் சொல்லுகிறாய்.
|
அவசரத்தில் அரிக்கண் சட்டியிலும் கை நுழையாது.
|
அவசரத்தில் உபசாரமா?
|
அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடே மாரடிக்கிறாள்.
|
அவசரத்தில் குண்டுச் சட்டியில் கை நுழையாது.
|
அவசரத்துக்குப் பாவமில்லை.
|
அவசரப்பட்ட மாமியார் மருமகனைப் புணர அழைத்தாளாம்.
|
அவசாரி ஆடினாலும் அதிருஷ்டம் வேண்டும், திருடப் போனாலும் திசை வேண்டும்.
|
அவசாரி ஆமூடையான் ஆபத்துக் குதவுவானா?
|
அவசாரி என்று ஆனைமேல் ஏறலாம், திருடி என்று தெருவில் வரலாமா?
|
அவதாரி போகவும் ஆசை யிருக்கிறது, அடிப்பான் என்று பயமுமாய் இருக்கிறது.
|
அவசாரிக்கு ஆணையில்லை, திருடிக்குத் தெய்வமில்லை.
|
அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.
|
அவசாரியிலே வந்து பெருவாரியிலே போகிறது.
|
அவதந்திரம் தனக்கு அந்தரம்.
|
அவதிக் குடிக்குத் தெய்வமே துணை.
|
அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.
|
அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
|
அவமானம் பண்ணி வெகுமானாம் பேசுகிறான்.
|
அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்.
|
அவரவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.
|
அவரவர் மனசே அவரவர்க்குச் சாட்சி.
|
அவரை விதைத்தால் துவரை முளைக்குமா?
|
அவரா சுறுக்கே அரிவாள்மணைக் கருக்கே?
|
அவருடைய சிறகு முறிந்துபோயிற்று.
|
அவலட்சணம் உன்ள குதிரைக்கு சுழிசுத்தம் பார்க்க வேணுமா?
|
அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
|
அவலைச் சாக்கிட்டு உரலை இடிக்கிறது.
|
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.