text
stringlengths 101
471k
|
---|
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW
9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள சாதாரணத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்களின் விவரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கருக்கு சாதாரணத் தேர்தலுக்கான அறிவிப்பு 13.09.2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்று கொண்டனர்.
2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம மராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் 2,478 உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இறுதியாக 6,547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு களத்தில் 70 பேர் உள்ளனர். 138 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 136 பதவிக்கு 503 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
247 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 231 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 820 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,079 பதவிக்கு 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள பதவிக்கு 5,154 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal
English Summary
vellore local body election
#Local Body Election
#admk
#dmk
கருத்துக் கணிப்பு
உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
சித்திரை 1
தை 1
கருத்து இல்லை
Submit your vote
கருத்துக் கணிப்பு
உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
சித்திரை 1
தை 1
கருத்து இல்லை
Submit your vote
செய்திகள்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட பரபரப்பு காட்சி.!
காணமால் போன இளைஞர் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!
வனத்துறை மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.!
அதிகாலை வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை., அய்யய்யோ இபிஎஸ் தான் காரணம், நாங்க இல்லை, டிடிவி தினகரன் கொந்தளிப்பு.! |
கிருஷ்ணகிரி: காரை இயக்க ஆசைப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே விபத்தில் உயிரிழந்த போச்சம்பள்ளி அரசு ஆசிரியை..! - Seithipunal
Today (09 Dec 2021)
Tamil
English
Toggle Navigation
செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
தமிழகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திருப்பத்தூர்
இராணிப்பேட்டை
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
ஈரோடு
நீலகிரி
தென்காசி
திருச்சி
கரூர்
பெரம்பலூர்
அரியலூர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
திண்டுக்கல்
தேனி
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
திருப்பூர்
கடலூர்
மதுரை
சென்னை
கோவை
YouTube
சினிமா
மருத்துவம்
விளையாட்டு
மேலும் செய்திகள்
வானிலை
ஆன்மிகம்
கல்வி & வேலைவாய்ப்பு
சமூக வலைத்தளங்கள்
வர்த்தகம்
லைப் ஸ்டைல்
டெக்னாலஜி
இராகுகால கோடாங்கி
கலை & கலாச்சாரம்
மகளிர் பக்கம்
கிருஷ்ணகிரி: காரை இயக்க ஆசைப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே விபத்தில் உயிரிழந்த போச்சம்பள்ளி அரசு ஆசிரியை..!
Sriramkanna.P
19/10/2021 04:22:34 PM
Krishnagiri Pochampalli Govt School Teacher Amaravathi Died Accident when try to Car WIthout Training
#தமிழகம்
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW
ஓட்டுநர் தேநீர் குடிக்க சென்ற நேரத்தில், கார் இயக்க ஆசைப்பட்ட ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அமராவதி (வயது 44). இவர் தர்மபுரியில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு நேரத்திற்கு வந்து செல்லும் வகையில், மாருதி கார் ஒன்றை புதிதாக வாங்கி இருக்கிறார்.
அமராவதிக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், காருக்கு ஓட்டுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது காரில் தினமும் தர்மபுரியில் இருந்து போச்சம்பள்ளி பள்ளிக்கு வந்து சென்ற நிலையில், நேற்று மாலை நேரத்தில் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல காத்திருந்துள்ளார்.
ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்ட நிலையில், அவர் கார் ஓட்டுநருக்காக காத்திருந்துள்ளார். இதன்போது, ஆசிரியைக்கு தீடீரென விபரீத எண்ணம் தோன்றியுள்ளது. ஓட்டுநர் காரை ஒட்டகையில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து வைத்ததை நினைத்து வாகனத்தை இயக்கலாம் என எண்ணியுள்ளார்.
இதனையடுத்து, காரில் ஏறி வாகனத்தை இயக்க முயற்சிக்கவே, கார் அதிவேகத்தில் சென்று பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், ஆசிரியையின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், ஆசிரியைகள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்க, கார் ஓட்டுனரும் பள்ளிக்குள் வந்துள்ளார். அதன்பின்னரே, அவருக்கு விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, அவசர ஊர்தி மூலமாக ஆசிரியை அமராவதி தர்மபுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து மற்றும் ஆசிரியை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal
English Summary
Krishnagiri Pochampalli Govt School Teacher Amaravathi Died Accident when try to Car WIthout Training
#krishnagiri
#Tamilnadu
#dharmapuri
#Pochampalli
#tamil online news
#accident
#death
#teacher
கருத்துக் கணிப்பு
உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
சித்திரை 1
தை 1
கருத்து இல்லை
Submit your vote
கருத்துக் கணிப்பு
உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
சித்திரை 1
தை 1
கருத்து இல்லை
Submit your vote
செய்திகள்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட பரபரப்பு காட்சி.!
காணமால் போன இளைஞர் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!
வனத்துறை மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.!
அதிகாலை வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை., அய்யய்யோ இபிஎஸ் தான் காரணம், நாங்க இல்லை, டிடிவி தினகரன் கொந்தளிப்பு.! |
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு - வெளிவராத புதிய தகவல்களை அம்பலப்படுத்திய பிரபல ஊடகம். "mainEntityOfPage": { "@type": "NewsArticle", "@id": "" }, "publisher": { "@type": "Organization", "name": "YarlExpress", "url": "http://www.yarlexpress.com", "logo": { "url": "http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg", "width": 600, "height": 60, "@type": "ImageObject" } }, "image": { "@type": "ImageObject", "url": "http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg", "width": 1280, "height": 720 } }, ] }
MENU MENU
Yarl Express
Home
உள்நாடு
முக்கிய செய்திகள்
சிறப்புக் கட்டுரை
VIDEOS
Privacy Policy
Contacts Us
Header$type=social_icons
facebook|20493|Likes|Like
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு - வெளிவராத புதிய தகவல்களை அம்பலப்படுத்திய பிரபல ஊடகம்.
0 0 Amuthan Sunday, January 17
யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையே முள்ளிவாய்க்கால்...
யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பிற்கான காரணமென சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பல்வேறு கருத்தரங்குகளில் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்,சந்திக்கும் போதும் அவர்கள் எழுப்பிய முதலாவது விடயமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயமே இருந்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 8ம் திகதி இரவோடு இரவாக தகர்க்கப்பட்ட செய்தியறிந்த இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அதுதொடர்பாக கடுமையான கரிசனையை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி ஆங்கிலப்பத்திரிகை சண்டே டைம்ஸ் அதன் அரசியல்பத்தியில் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற மறுதினமான 9ம்திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தொடர்புகொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்தியத்தூதரகம் பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. அப்போது பிரதமர் தனது தேர்தல் தொகுதியான குருணாகலையில் இருந்ததாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்பியதையடுத்து விஜேராமயிலுள்ள அவரது வாசஸ்தலத்திற்கு விரைந்த இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே, யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டிருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்த மறுதினம் நிகழ்ந்த இந்தச்சம்பவம் ,தமிழ் நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெடுவதற்கு வழிகோலும் எனவும் பிரதமரிடம் இந்தியத்தூதுவர் கூறியிருந்ததாக அறியமுடிவதாக அப்பத்திரிகையின் பத்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியத்தூதுவரின் கரிசனையை அடுத்து பிரதமர் உடனடியாக செயலில் இறங்கியிருந்தார். பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வரையில் ஒருவரொருவருடன் தொடர்பாடலில் இருந்து பதற்றநிலையை தணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே மாணவர்கள் குழுவினர் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகர்க்கப்பட்ட நினைவுத்தூபியில் இருந்த கற்களைக்கொண்டு திங்களன்று அடையாள அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டதுடன் கடந்த வெள்ளியன்று நினைவுத்தூபியை முறைப்படி அமைப்பதற்கான அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பமாகி தற்போது நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆங்கிலப்பத்திரிகையின் பத்தியின் படி ஜனாதிபதி செயலகம் தூபி தகர்ப்பு தொடர்பாக அறிந்திருக்கவில்லை எனவும் யார் தூபியை தகர்ப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது என வினவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொடர் அதிர்வலைகளுக்கு வழிகோலிய தூபி தகர்ப்பு தொடர்பாக குறித்த பத்திரிகைக்கு கருத்துவெளியிட்டுள்ள துணைவேந்தர் 'தாம் அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு விலாவாரியாக விபரித்துவிட்டேன்.'என்று குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் தூபி தகர்க்கப்பட்டமை முதற்கொண்டு புதிய தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டமை வரையான 60 மணி நேரத்தில் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் கணிசமான அளவிற்கு கேடு நடந்துமுடிந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னணி ஆங்கிலப்பத்திரிகை இதுதேசிய பாதுகாப்பிலுள்ள பாரதூரமான பலவீனங்களை காண்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பிற்கான காரணம் என தாம் அறிந்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த இரகசிய அறிக்கையானது புலனாய்வு முகவர் அமைப்புக்களின் அறிக்கைகளையும் உள்ளடக்கியதாகும். இதில் சில ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றுள்ளன. அதிலே இராணுவ புலனாய்வு பணியகத்தின் அறிக்கையானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. துணைவேந்தர் பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத காரணத்தால் அந்த அறிக்கையானது பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அந்தப்பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத்தூபி இருக்கின்றமையை விரும்பாத மாணவர்களும் உள்ளதால் நினைவுத்தூபியானது அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நினைவுதினங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளின்போது பல்வேறு நிகழ்ச்சியை நடத்தும் இடமாக இருப்பதால் அதனை நிர்மூலமாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத்தவிர யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பல்வேறு கருத்தரங்குகளில் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்திக்கும் போதும் அவர்கள் எழுப்பிய முதலாவது விடயமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயமே இருந்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
lanka
SHARE:
Author: Amuthan verified_user
/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow
Trending
[Follow Us]
2.7k likes
Like
1kfollowers
Follow
[பிரதான செய்திகள்]$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
Article (95)
Astrology (30)
cinema (200)
doctor (12)
Gallery (88)
india (267)
Jaffna (1403)
lanka (6888)
medical (6)
Medicial (39)
sports (182)
swiss (15)
technology (60)
Trending (3301)
Videos (7)
World (348)
Yarlexpress (3942)
கவிதை (3)
சமையல் குறிப்பு (3)
பியர் (1)
யாழ்ப்பாணம் (1)
வணிகம் / பொருளாதாரம் (7)
/fa-fire/ பிரபலமான செய்திகள்$type=blogging$rm=0$spc=0
யாழில் சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் ஆரம்பம் ...
பல்கலை மாணவர்களுக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்- இராணுவம் காவல்துறையினர் குவிப்பு!
யாழில் 200 மி.மி.மழை! இன்று பாடசாலைகள் இடம்பெறாது - ஆளுநர் அறிவிப்பு!
ட்ரெண்டிங் வீடியோ
© 2020 Yarl Express
All rights reserved.
மின்னஞ்சல் தொடர்புக்கு
இணையதளம்
[email protected]
விளம்பர தொடர்புக்கு
இணையதளம்
Ph: 94-703073280
94-778746463
Name
Email *
Message *
Article,95,Astrology,30,cinema,200,doctor,12,Gallery,88,india,267,Jaffna,1403,lanka,6888,medical,6,Medicial,39,sports,182,swiss,15,technology,60,Trending,3301,Videos,7,World,348,Yarlexpress,3942,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,7,
ltr
item
Yarl Express: முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு - வெளிவராத புதிய தகவல்களை அம்பலப்படுத்திய பிரபல ஊடகம்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு - வெளிவராத புதிய தகவல்களை அம்பலப்படுத்திய பிரபல ஊடகம்.
https://1.bp.blogspot.com/-BBwsSElsLVo/YAO8DUjAs9I/AAAAAAAAwgw/8ilonxrKRukAH1d_CV5TQsADSrzHTzVPgCLcBGAsYHQ/s0/download.jpeg
https://1.bp.blogspot.com/-BBwsSElsLVo/YAO8DUjAs9I/AAAAAAAAwgw/8ilonxrKRukAH1d_CV5TQsADSrzHTzVPgCLcBGAsYHQ/s72-c/download.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/01/blog-post_942.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/01/blog-post_942.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content |
திங்களன்று தனியார் போக்குவரத்து சேவை முடக்கம்..! தமிழ்தேசிய துக்க நாளுக்கு பூரணமாக ஒத்துழைப்பு.. "mainEntityOfPage": { "@type": "NewsArticle", "@id": "" }, "publisher": { "@type": "Organization", "name": "YarlExpress", "url": "http://www.yarlexpress.com", "logo": { "url": "http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg", "width": 600, "height": 60, "@type": "ImageObject" } }, "image": { "@type": "ImageObject", "url": "http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg", "width": 1280, "height": 720 } }, ] }
MENU MENU
Yarl Express
Home
உள்நாடு
முக்கிய செய்திகள்
சிறப்புக் கட்டுரை
VIDEOS
Privacy Policy
Contacts Us
Header$type=social_icons
facebook|20493|Likes|Like
திங்களன்று தனியார் போக்குவரத்து சேவை முடக்கம்..! தமிழ்தேசிய துக்க நாளுக்கு பூரணமாக ஒத்துழைப்பு..
0 0 Shabesh Max Sunday, April 4
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் நினைவாக திங்கள் கிழமை துக்க தினம் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் - மன்னார் இடையில் தனியார் ...
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் நினைவாக திங்கள் கிழமை துக்க தினம் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் - மன்னார் இடையில் தனியார் பயணிகள் பேருந்து சேவை இடம்பெறாது. என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவிக்கையில்,
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தைத் துக்க நாளாக அனுஸ்ஷ்டிக்குமாறு பல்வேறு தரப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் திங்களன்று நிறுத்தப்படவுள்ளன. அத்துடன், உள்ளூர் சேவைகளும் அன்றைய தினம் இடம்பெறாது.
வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் இருந்தும் மன்னாருக்கான தனியார் சேவைகள் அன்றைய தினம் இடம்பெறாது. மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கப் பிரதிநிதிகளும் ஆயரின் துயரில் பங்கு கொள்வதோடு
முழுமையாக துக்க நாளை அனுஷ்டிப்போம்.அன்றைய தினம் இறுதி அஞ்சலிக்காக வருகின்ற மக்கள் மீண்டும் திரும்பிச்செல்வதற்கு, தேவை ஏற்படின் விசேட போக்குவரத்துச் சேவைகள் எம்மால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Jaffna
SHARE:
Author: Shabesh Max verified_user
Journalist | Reporter | Web Editor @YarlExpressNews | Producer | SriLankan | #Photographer | #Dreamer | Instagram : shabesh_max
/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow
Trending
[Follow Us]
2.7k likes
Like
1kfollowers
Follow
[பிரதான செய்திகள்]$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
Article (95)
Astrology (30)
cinema (200)
doctor (12)
Gallery (88)
india (267)
Jaffna (1403)
lanka (6888)
medical (6)
Medicial (39)
sports (182)
swiss (15)
technology (60)
Trending (3301)
Videos (7)
World (348)
Yarlexpress (3942)
கவிதை (3)
சமையல் குறிப்பு (3)
பியர் (1)
யாழ்ப்பாணம் (1)
வணிகம் / பொருளாதாரம் (7)
/fa-fire/ பிரபலமான செய்திகள்$type=blogging$rm=0$spc=0
யாழில் சமாதான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டம் ஆரம்பம் ...
பல்கலை மாணவர்களுக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்- இராணுவம் காவல்துறையினர் குவிப்பு!
யாழில் 200 மி.மி.மழை! இன்று பாடசாலைகள் இடம்பெறாது - ஆளுநர் அறிவிப்பு!
ட்ரெண்டிங் வீடியோ
© 2020 Yarl Express
All rights reserved.
மின்னஞ்சல் தொடர்புக்கு
இணையதளம்
[email protected]
விளம்பர தொடர்புக்கு
இணையதளம்
Ph: 94-703073280
94-778746463
Name
Email *
Message *
Article,95,Astrology,30,cinema,200,doctor,12,Gallery,88,india,267,Jaffna,1403,lanka,6888,medical,6,Medicial,39,sports,182,swiss,15,technology,60,Trending,3301,Videos,7,World,348,Yarlexpress,3942,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,7,
ltr
item
Yarl Express: திங்களன்று தனியார் போக்குவரத்து சேவை முடக்கம்..! தமிழ்தேசிய துக்க நாளுக்கு பூரணமாக ஒத்துழைப்பு..
திங்களன்று தனியார் போக்குவரத்து சேவை முடக்கம்..! தமிழ்தேசிய துக்க நாளுக்கு பூரணமாக ஒத்துழைப்பு..
https://1.bp.blogspot.com/-8TXG1q3moGs/XsuLaGegpOI/AAAAAAAANQw/f7-06xSarRA4GqIsbOCJVjv8xAx0RUSlACLcBGAsYHQ/s640/Yarlexpresscom_breaking_news_.jpg
https://1.bp.blogspot.com/-8TXG1q3moGs/XsuLaGegpOI/AAAAAAAANQw/f7-06xSarRA4GqIsbOCJVjv8xAx0RUSlACLcBGAsYHQ/s72-c/Yarlexpresscom_breaking_news_.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/04/blog-post_4.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/04/blog-post_4.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content |
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம் உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம் - Yarl Voice உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம் - Yarl Voice "mainEntityOfPage": { "@type": "NewsArticle", "@id": "" }, "publisher": { "@type": "Organization", "name": "YarlVoice", "url": "http://www.yarlvoice.com", "logo": { "url": "https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png", "width": 600, "height": 60, "@type": "ImageObject" } }, "image": { "@type": "ImageObject", "url": "https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png", "width": 1280, "height": 720 } }, ] }
Home
உள்நாடு
முக்கிய செய்திகள்
செய்திகள்
ஏனையவைகள்
_மருத்துவம்
_ஜோதிடம்
About Us
Contacts Us
Homeworld
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்
Published byNitharsan - November 17, 2021 0
உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156 லட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020ஆம் ஆண்டில் 514 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.
இதன் மூலம் சீன நாட்டின் சொத்து மதிப்பு ரொக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000ஆம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டொலராக இருந்தது.
2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டொலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
மேலும் உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட் டில் உள்ளது. மற்றவை உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளன.
Tags world
Share
Published by:-Nitharsan
Journalist | Reporter at Kalaikathir Daily News Paper | Online Editor @YarlVoice | Twitter : nitharsan_vino
தொடர்பான செய்திகள்
Show more
0/Post a Comment/Comments
Post a Comment
Previous Post Next Post
Tweets by Yarl Voice
பிரதான செய்திகள்
[getWidget results='5' label='Lanka' type='list']
ட்ரெண்டிங் வீடியோ
மின்னஞ்சல் தொடர்புக்கு
[email protected]
விளம்பர தொடர்புக்கு
Ph: +9477 194 5672
Ph: +9470 307 3280
Yarl Voice
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Copyright © YarlVoice.com, All Rights Reserved.
About
Privacy
Contact Us
Terms of Service
Contact Form
');c.each(function(){if(b.animated==true){a(this).addClass(n)}e.find('.select-tab').append('
'+a(this).attr('tab-ify')+'
')}).eq(d).addClass(k).addClass('tab-'+b.transition);e.find('.select-tab a').on(event,function(){var f=a(this).parent().index();a(this).closest('.select-tab').find('.active').removeClass('active');a(this).parent().addClass('active');c.removeClass(k).removeClass('tab-'+b.transition).eq(f).addClass(k).addClass('tab-'+b.transition);return false}).eq(d).parent().addClass('active')})}}(jQuery); /*! jQuery replaceText by "Cowboy" Ben Alman | v1.1.0 - http://benalman.com/projects/jquery-replacetext-plugin/ */ (function($){$.fn.replaceText=function(b,a,c){return this.each(function(){var f=this.firstChild,g,e,d=[];if(f){do{if(f.nodeType===3){g=f.nodeValue;e=g.replace(b,a);if(e!==g){if(!c&&/ |
சேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்பிறப்புக்களும் உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து! எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.
அவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா கூடவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு என்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது.
இன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
ஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே! மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாராம் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்காக காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே?
தொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன.
அப்புறம் யார்..? நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.
அந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்? சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
*
Tags
அரசியல் கருணாநிதி ரஜினிகாந்த்
புதியது
பழையவை
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
மேலும் காட்டு
கருத்துரையிடுக
56 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
நாமக்கல் சிபி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:29
//தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//
:))
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நாமக்கல் சிபி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:29
//தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது//
Ore Kallil Irandu Maangai!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஜோ/Joe 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:34
//சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.//
இதை முதலிலேயே செய்திருக்கலாம் .. ரொம்ப டென்சன் ஆகாம நீங்களும் ,இந்த பதிவை படிக்க அவசியமின்றி நாங்களும் பயன் பெற்றிருப்போம்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அறிவிலி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:35
//சரியான தண்டனை இது//
ROTFL
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Karthikeyan G 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:44
:-)))
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
velji 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:47
you linked two separate incidents in their own way!nice!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:04
நான் டிவி பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டிகள் ஆகின்றது..இது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதில் மகிழ்ச்சியே ;)))) பகிர்விற்கு நன்றி தோழர்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஜ்யோவ்ராம் சுந்தர் 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:08
இந்த எழவிற்குத்தான் நான் டீவி பக்கமே போவதில்லை.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பாலா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:00
ஹாஹாஹாஹாஹா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
selventhiran 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:13
முத்தமிழ் வித்தகர் முன்னால முத்தமிழையும் வித்துருக்காய்ங்க போல...
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அம்பிகா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:17
காலில் விழும் கலாச்சாரம் எவ்வளவு அருவருப்பானதோ அதே போல் தான் இதுவும். இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அ.மு.செய்யது 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:23
//இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை.//
அந்த அப்பாவி உலகத்தமிழர்களில் நானுமொருவன்.
குறிப்பாக, வைரமுத்துவின் புகழாரம் கலைஞருக்கு திகட்டியிருக்கும்..
ஏ.கே 47 கத்தி நுனி போல கலைஞர் என்றதும் எனக்கு மெய்சிலிர்த்து....அடங்கொக்கா மக்கா..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Venkatesh Kumaravel 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:45
சும்மா ஒரு விளையாட்டுக்கு கேக்குறேன்... இந்தப் பதிவை எழுதுவது மு.க-வை யாராவது திட்டவேண்டும், அவரை அத்தனை பேரும் பாராட்டுவது மாதிரி நடிப்பது கூட எனக்கு பொறுக்கவில்லை என்பதற்கான மறுமொழிதானே? இதே நிகழ்ச்சியை சற்று மாற்றி மாதவராஜ் சாரை வைரமுத்துவும், வாலியும் பாராட்டினால் வேண்டாம் என்று மறுத்துவிடுவீர்களா? எல்லாருக்குமே ஈகோ தானே சார்?
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Venkatesh Kumaravel 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:45
-பின்னூட்டக் கயமை (அ) பொழுது போகாமை-
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:52
அண்ணா நூற்றாண்டு விழாவில் அண்ணாவின் தம்பி எனச் சொல்லும் கள்ளர் கூட்டத் தலைவனுக்கு ஜால்ரா அடித்தார்கள். பாவம் அண்ணா.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 11:34
விடுங்கண்ணே!அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...
கலைஞர் விருதையும் அறிவித்து அதையும் அவ்ர் தனக்கு தானே கொடுத்துக்காம இருந்தா சரி!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பின்னோக்கி 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 12:25
//“எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார்.
அந்த வரிகளை கருணாநிதி தான் சொன்னாராம்.
நானே இந்த கருத்துரையைப் பார்த்து கலங்கிப்போனேன். எப்பேர்பட்ட தமிழ் இலக்கியவாதி கலைஞர் என்று.
ஒரு வேளை நான் அவரது புத்தகங்கள் எதுவும் படிக்காததால் அவரை சரியாக மதிப்பிடவில்லையோ ? அண்ணாவை விட இவர் பெரிய எழுத்தாளர்/பேச்சாளர் என்று அனைவரும் கூறினார்கள். அது உண்மையா ? ஏனென்றால் நான் அண்ணா எழுதியதை/பேசியதை அறிந்தவன் இல்லை. யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன். உங்கள் பதிவு அதற்கு பதிலாக இருந்தது.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பின்னோக்கி 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 12:28
காலையில meeting இனிமேல தான் eating என்று கலைஞர் சொன்னதாக ஒருவர் சொன்னார். இந்த மாதிரி நிமிடத்துக்கு ஒரு முறை பேசக்கூடியவர் விஜய T. ராஜேந்தர் என நினைத்துக் கொண்டேன்.
அப்புறம் வாலி தனக்கு உயிர் கொடுத்தவர் என சொன்னார், ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா ?
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
RAGUNATHAN 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:12
அடடே இன்னும் நீங்க டி. வி. பாகுரீங்களா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அது சரி(18185106603874041862) 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:32
//
கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது.
//
இது தான் நமக்கு நாமே திட்டமா??
//
கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்?
//
முத்தமிழ் வித்தவர், எளக்கியவியாதி கலைஞ்சரை பத்தி இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது....அப்புறம் ஒங்களை தாக்கி ஒடன்பொறப்புக்கு ஒரு கடுதாசி எழுத வேண்டி வரும்...
//
போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.
//
இதுக்கு தாங்க பகுத்தறிவு வேணும்கிறது....இப்பவாவது ஒத்துக்கறீங்களா கலைஞசருக்கு பகுத்தறிவு இருக்குன்னு??
//
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
//
ரஜினி படம்னாலும் வருசத்துக்கு ஒண்ணு வருது....இவரு அன்றாடம் இது மாதிரி ஒரு அல்லக்கை நி(பு)கழ்ச்சிக்கு போய்க்கிட்டுல்ல இருக்காரு....காசு குடுத்து இவரே ஏற்பாடு பண்ணுவாரோ???
நீங்க எழுதியிருக்கதை படிச்சே எனக்கு பீதியாருக்கு...ரஜினிக்கு பேதியே ஆயிருக்கும்....தமிழ்நாட்டுல உயிர் வாழ்றது எவ்வளவு கஷ்டமா இருக்குடா சாமி!
:0)))
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:43
தலைப்பை சற்று மாற்றி வைத்திருக்கலாம்.
"முக வைச்சுற்றி சில காக்கைகள்".
அவஸ்தைகளிலே பெரிய அவஸ்தை மற்றவர்கள் தன்னை கூச்சநாச்சமில்லாமல் புகழ்வதை பலர் பார்க்க கேட்பதுதான். அதெற்கெல்லாம் ஒரு பக்குவம் இருக்கனும். "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா" -ன்னு வடிவேலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:47
இருபத்தி மூன்றாம் புலிகேசி Vs ஓணான்டி புலவர்.
மா மன்னா?!
மாமா மண்ணா?
குறிப்பு: மூணு சுழி "ண்" ல எந்த உள் குத்தும் இல்ல.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:28
எம் ஜி ஆர் எதையும் அளவில்லாமல் கொடுப்பவர் என்றால், கருனாநிதி எதையும் கொடுக்காமல் வருபவர் என்று கவிஞர்கண்ணதாசன் சொலியதாக படித்திருகிறேன் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
விநாயக முருகன் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:39
அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.
வாலி கவிதை டி.ராஜேந்தர் வசனம் போல இருந்தது. வைரமுத்து பேசியது அபத்தம்.
வாங்குன காசுக்கு என்னமா பீல் பண்ணி....
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
குப்பன்.யாஹூ 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 8:22
இதே வாலி, ஜெகத்ரட்சகன் ஒரு காலத்தில் எம்ஜியாரை இப்படித்தான் பாராட்டி பேசிய நபர்கள்.
நாளையே ஜெயலலிதா முதல்வர் ஆனதும் வாலி அம்மா, தாயீ அஷ்ட லக்ஸ்மி என்று துதி பாடுவார். அதையும் ரஜனி கமல் கை கொட்டி சிரிப்பார்.
நமக்கு ஒரு காமெடி நிகழ்ச்சி.
இன்றும் கலைஞர் டிவி பாருங்கள், அண்ணா நூறாண்டு விழா. இன்னும் ஒரு கவி அரங்கம்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அம்பிகா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 9:39
காலையில் கவியரங்கம் பார்த்ததால் வந்த கடுப்பு, இரவில் இந்த பின்னுட்டங்களை படித்ததில் தீர்ந்திருக்குமே! வாய் விட்டு சிரிக்க வைத்தன.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஈரோடு கதிர் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:10
சனிக்கிழமையே... இதுக்கான விளம்பரம் கலைஞர் டிவில திருப்பி திருப்பி போட்டாங்க...
ஜெகத்ரட்சகன் பேசுற சீன்ல ரஜினி சிரிக்கிற மாதிரி நடிக்க, கலைஞரே அவர பாவமா பார்க்கிற மாதிரி நடிக்க....
முடியல...
அப்பவே முடிவு பண்ணிட்டேன்.... ஞாயித்துக்கிழமை வீட்ல இருந்தா புத்தி மாறி இதப் பார்த்தாலும் பார்த்துடுவோம்னு...
எஸ்கேப் ஆயிட்டேன்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:20
நாமக்கல் சிபி!
‘கல்லோ மாங்காயோ’ என்று கவிதைகள் வந்தாலும் வரும்.
ஜோ!
நமக்கு பட்டால்தானே தெரியுது நண்பா...
அறிவிலி!
பார்த்த எனக்கும்தான்.
கார்த்திகேயன்...!
:-)))
வேல்ஜி!
நன்றி.
உமாஷக்தி!
வாருமுன் காத்துக்கொண்டீர்கள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:29
ஜ்யோவ்ராம்சுந்தர்!
உங்களது கோபமும், எரிச்சலும் மிக இயல்பாய் வார்த்தைகளில் தெரிகின்றன.
சட்டென சிரிப்பு வந்தது.
பாலா!
தங்கள் சிரிப்புக்கு மிக்க நன்றி.
செல்வேந்திரன்!
தம்பி... வித்தவங்களையெல்லாம் வித்தகர் பார்த்துச் சிரித்ததை நீங்க பார்த்திருக்கணும். அவரா வாங்குறவரு....?
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:35
அம்பிகா!
//இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.//
ரசித்தேன். ‘குடி குடியைக் கெடுக்கும்’, ‘புகை உடல்நலத்திற்கு தீங்கானது’ போன்ற வாசகங்கள் எதாவது வெளியிடலாமோ?
செய்யது!
ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்களும் அந்த கொடுமையை அனுபவித்தீர்களா? ஆமாமாம். ஏ.கே 47 தான். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
வெங்கிராஜா!
தவறான எண்ணுக்கு போன் செய்திருக்கிறீர்கள் நண்பரே!
அனானி!
‘கள்ளர் கூட்டத்தலைவர்’ என்றெல்லாம் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாமே.
அண்ணா நூற்றாண்டு விழா இப்படி என்றால், உலகத்தமிழ் மாநாடு எப்படி இருக்கும்?
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:41
அண்டோ!
எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ தம்பி?
பின்னோக்கி!
அந்த வரிகளை கருணாநிதிதான் சொன்னாரா! நன்றாக கொடுத்தாரே எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு....!
ஆமாமாம், டி.ஆர் பின்னி எடுத்துவிடுவார்தான். இதெல்லாம் தெரியாத மார்ட்டின் லூதர் கிங், சர்ச்சில், லெனின் போன்றவர்கள் எல்லாம் என்ன பேச்சாளர்கள்? உலகையே அதிரவைத்த பேச்சாளர்கள் என்று அவர்களை எந்தக் கிறுக்கன் சொல்லியிருப்பான்!
ரகுநாதன்!
என்ன செய்ய... பார்த்துட்டேனே...
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Deepa 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:51
//போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. //
அய்யய்யோ அது மிகத் தேவையான குணாம்சமாயிற்றே. அது இல்லா விட்டால் யாரும் பெரிய மனுஷன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
கடைசி வரி சூப்பர் பஞ்ச்! ஆமாம், ரஜினிக்குத் தேவை தான். நமக்கு என்ன தலையெழுத்து... இதெல்லாம் பார்க்க/கேட்க??
பாரதியை நினைவு கூர்ந்தது மிகவும் அருமை. ஹூம். அவர் வாழ்ந்த இதே மண்ணில் கவிஞர் என்ற பெயரில் மார்தட்டி வருபவர்களைக் கண்டால்...... :-((((
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:51
அதுசரி!
உங்கல் பின்னூட்டம் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன். என் எரிச்சலும் குறைந்து போனது நன்றி. ஆனாலும் சீரியஸான கேள்விகளைத்தான் கேட்டு இருக்கீங்க...
அனானி!
ஓஹோ... இதற்கும் அந்த வடிவேலுவின் வசனம் பொருந்துமோ!
சரி.... நமக்கு?
அனானி!
எதற்கு என்று நான் கேட்கவே மாட்டேன்...
விநாயக முருகன்!
நீங்களும் பார்த்தீர்களா? வாழ்க வையகம்!
ராம்ஜி!
எல்லாம் சரிதான்.
அதென்ன, கடைசியில் இன்றும் டிவி பார்க்கச் சொல்லியிருக்கீங்க? ஏன் இந்தக் கொலைவெறி?
அம்பிகா!
ஆமாம். கொஞ்சம் குறைந்திருக்கிறது....
கதிர்!
மணியோசை கேட்டே யானையிடம் இருந்த தப்பித்த புத்திசாலி நீங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:04
ரஜினி கொடுமைபடுத்த படுவது இருக்கட்டும். உங்கள் பதிவுகளை படித்து நாங்கள் கொடுமைபடுத்த படுவது பற்றி யொசியுங்கள். பதிவு எழுத மேட்டர் இல்லைன்னா நாலு பதிவுகளை படியுங்க சார். இதுமாதிரி கண்டதையும் எழுதி எங்களை சாவடிக்காதீங்க.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Suresh Kumar 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:07
ஆனா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ அவங்களே ஒரு அமைப்பை தொடங்கி ஆண்டு தோறும் அவங்களுக்கே விருதுகளை பங்கு வைப்பாங்களாம் அதுக்கு ஒரு கூட்டம் வருத்த படாத வாலிபர் சங்கம் போல . அவங்கள பற்றி அவங்களே பேசி பெருமை பாடுவாங்களாம்
என்ன கொடுமை .........
பாடி பாரிசில் வாங்கிய நவீன புலவர்களை என்ன சொல்ல
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஆரூரன் விசுவநாதன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 12:43
அண்ணா விருதை கலைஞருக்கு கொடுத்தார்கள், கொஞ்ச நாளில் கலைஞர் விருது அண்ணாவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.
மகள்,மகன் சென்னையில் தந்தைக்காற்றும் உதவியும், தந்தை தில்லியில் மகனுக்காற்றும் உதவியும்,........
வாழும் வள்ளுவர் தான்.....
வெட்கங்கெட்டவர்கள்.....
அன்புடன்
ஆரூரன்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
anujanya 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 2:26
ஆம் மாதவ்,
நிறைய அசட்டுத் தனமாகவும், அருவருப்பாகவும் இருந்தது அந்த நிகழ்ச்சி. ஜகத் பாதி பேசும் போதே தாங்க முடியாமல் வேறு சேனல் பார்க்கச் சென்றேன். வைரமுத்துவின் தாக்குதலிலிருந்து தப்பி விட்டேன் :)
தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை :(
அனுஜன்யா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
butterfly Surya 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 5:22
ஆல் இண்டியா ஐஸ் வைப்போர் சங்க நிகழ்ச்சிகள் அருமை...
நிறுவனர்: ஜெகத்ரட்சகன்.
மற்றவர்: உறுப்பினர்கள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 5:57
அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன்.
23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர்.
yenna kodumai sir ethu.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நந்தாகுமாரன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:33
அருவருப்பை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்
//
பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான்
//
உணரவேண்டிய உண்மை
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
வால்பையன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:59
அருமையான நகைச்சுவையை மிஸ் பண்ணிட்டேன் போல!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:27
பணம் சம்பாதிப்பத்ற்காக, தான் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் மகளிர் விடுதி சம்பந்தமாக அரசாங்க ரீதியாக உதவி செய்திருக்கும் முதல்வருக்கு வைரமுத்துவும்,
தனது மருத்துவ சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவியருக்கு வாலியும்...வேற எப்படித்தான் தங்களது நன்றிக்கடனை செலுத்துவது?
நாமதான் இதையெல்லாம் கண்டும் காணாம இருந்துக்கணும்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பொன் மாலை பொழுது 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 11:44
இந்த கருமங்களுக்கும், சீரியல் கொடுமைகளுக்கும் பயந்தே தான் நான் கேபுள் இணைப்பு இல்லாமல் T.V. வைத்திருக்கிறேன். வெறும் DVD யும் MP3 பாடல் களும் போதுமென்று.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 22 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:58
தீபா!
நன்றி. உனது பின்னூட்டத்தில் வரும் ‘ஹூம்’ அங்கே உனது பதிவின் தலைப்புமாகி இருக்கிறது. எத்தனை ஹூம்கள்.
அனானி நண்பரே!
உங்களைப் போன்றோரைக் கொடுமைப்படுத்தியதில் வருத்தமொன்றும் ஏனக்கில்லை.
சுரேஷ்குமார்!
நன்றி. நவீன பாணர்கள் அவர்கள்.
ஆரூரன்!
வாழும் வள்ளுவரா! அப்படியும் சொல்றாங்களா!!!!
அனுஜன்யா!
//தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை//
சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 22 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 8:03
butterfly surya!
நன்றி.
அனானி!
நன்றி.
நந்தா!
நன்றி.
வால்பையன்!
நீங்க மிஸ் பண்ணியிருக்கக் கூடாது. பதிவுலகம் ஒரு அருமையான நையாண்டிப் பதிவை இழந்துவிட்டது!
அனானி!
அப்படியா....!
கக்கு மாணிக்கம்!
நல்ல முடிவுதான். நன்றிங்க.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மங்களூர் சிவா 22 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 12:40
:)))
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அமிர்தவர்ஷினி அம்மா 22 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 1:42
எனக்கும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரமே (ஷ் அப்பா.., முடியல)
பார்த்தபோது இதுதான் தோன்றியது.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:38
மங்களூர் சிவா!
நன்றி.
அமித்து அம்மா!
//(ஷ் அப்பா.., முடியல)// கரண்ட போனவுடன் வர்ற கமெண்ட் மாதிரி இருக்கு. :-)))))
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
thiyaa 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:41
அருமை
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
சவுக்கு 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:43
அருமையான பதிவு. ஆனால், தாங்கள் எப்படி இதைப் பொறுமையோடு பார்த்தீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை ரிமோட் ரிப்பேர் ஆகியிருக்கக் கூடும்.
தாங்களே ஒரு விழா நடத்தி, தங்களின் கைத்தடிகளை விட்டு வாழ்த்திப் பேச வைத்து, தங்கள் டிவியிலேயே அதை ஒளிபரப்பி, கண்டு மகிழும், கருணாநிதி, ஒரு "நார்சிஸ்ட்" என்றே நினைக்கிறேன். எவ்வளவு அரசுப் பணிகள் இருந்தாலும், இது போன்ற பாராட்டு விழாக்களுக்கு கருணாநிதி நேரம் ஒதுக்க தவறியதே இல்லை. இதில், வரும் 26ம் தேதி, கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப் படப் போகிறதாம். இது தொடர்பாக, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இந்த தளத்தில் காணலாம்.
www.savukku.blogspot.com
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
யோகன் பாரிஸ்(Johan-Paris) 23 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 2:15
//போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.//
நெடுநாளாக எனது புரியாமையும் இதே!
///ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது.
///
மிகச் சரியான கணிப்பு!
ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்!மேடையில் காக்காக் கும்பலுடன் கலைஞரை கண்டால்;
மாறிவிடுவேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 24 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 3:31
மாது
அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் மன்னர் கால புலவர்கள் நினைவு சரிதான்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 24 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 10:22
//‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’//
இதுகள் எல்லாம் பன்றிகள் என்று கூறி பன்றிகளை கேவலப்படுத்தகூடாது.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ramgoby 25 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:37
இந்த மாதிரி நிகழ்சிகள் வரும்பொழுது நான் கவிதையை மட்டுமே ரசிப்பேன் மத்தபடி எல்லாமே பிஸ்னஸ்னு நான் நினைகிறேன்..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மாதவராஜ் 28 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:33
தியாவின் பேனா!
நன்றி.
ஒப்பாரி!
நகைச்சுவையாக பார்க்க முடிந்ததால், பொறுமை இருந்தது. லிங்க்கை தவறாக கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கே வருகிறது. பரவாயில்லை. தேடிப் பார்த்துவிட்டேன்.
யோகன் பாரிஸ்!
எனக்கு பொறுமையே கிடையாது என்றுதான் வீட்டில் சொல்கிறார்கள்.
ரவிசங்கர்!
நன்றி.
பகுத்தறிவு!
கோபம் புரிகிறது. இருந்தாலும்.....
ராம்கோபி!
பிசினஸா.....! என்ன பிசினஸ்?
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
சவுக்கு 28 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 3:05
மன்னிக்கவும். தவறான லிங்க் கொடுத்ததற்கு. இந்த லிங்க் சரியாக இருக்கும்.
http://savukku.blogspot.com/2009/09/blog-post_22.html
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
பக்கங்கள்
Home
எழுதியவை
Subscribe
Enter your email address:
Delivered by FeedBurner
அறிமுகம்
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். |
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.
சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)
இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.
தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.
கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?
கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.
ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?
இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.
அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”
உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.
இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)
இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.
இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.
’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!
எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.
பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!
கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் நாடித்துடிப்பு இங்கு.
.
Be a Fan
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
வகை இயக்குனர் நாடித்துடிப்பு
12 comments:
நெல்லை மைந்தன் said...
//கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)
//
ஐயா,வேல்,சேவல்,சிங்கம் போன்ற படங்கள் முழுக்க முழுக்க அம்பாசமுத்திரம்,தென்காசி பகுதிகளில் தான் எடுக்கப்பட்டன...
ஹரியின் திரைக்கதை மிக கச்சிதமாக வேகமாக இருக்கும். அதில் ஹரியை அடித்து கொள்ள யாரும் கிடையாது.
ஐயா படத்தில் ஒரு சண்டை காட்சியில் கார் செல்லும் போது சைக்கிளை போடுவார்கள். அது இன்னும் அப்பகுதியில் நடக்கும் நிகழுவு தான். இது போன்று அந்தந்த வட்டாரங்களில் உள்ளவற்றை தன் படத்தில் உபயோகித்திருப்பார்.
May 24, 2010 at 12:08 PM
sampath said...
அருள் படம் கோவையில் எடுத்ததாக பேபரில் வந்ததால் படம் பார்த்தேன். ஒரு காட்சி கூட கோவையில் எடுக்கவில்லை. அதனலாயே படம் ஓடவில்லை.
இவர் படம் வேகமா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் லாஜிக் இருக்காது.
எனினும் உங்கள் ஊர் பற்று நன்றாக தெரிகிறது. எனக்கும் அய்யா தான் பிடித்த படம்.
May 24, 2010 at 1:16 PM
கிரி said...
சரவணகுமரன் ஆறு தோல்வி படமல்ல
May 24, 2010 at 6:12 PM
சே.வேங்கடசுப்ரமணியன் said...
ஹரியை பற்றி விவேக் சொன்னது
“ எப்பவும் எதிர் காத்துல சைக்கிளில் வந்தவர் மாதிரி இருப்பர்ர்”
May 24, 2010 at 6:21 PM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எனக்கும் பிடிக்கும்
May 25, 2010 at 7:35 AM
சரவணகுமரன் said...
நன்றி நெல்லை மைந்தன். காட்சிக்கு இடத்தின் அவசியம் தேவைப்படாதப்போது காரைக்குடியில் எடுத்துவிடுவார். இதுவரை அவர் எடுத்த எந்த படத்திலும், கதைக்களம் காரைக்குடி கிடையாது. ஆனால், அவர் படத்தில் வரும் வீடுகளை பாருங்கள்.
மற்றபடி, சம்பந்தப்பட்ட ஊரிலும் காட்சிகளை எடுப்பார்.
May 27, 2010 at 7:39 AM
சரவணகுமரன் said...
வாங்க சம்பத். தெரிஞ்சு போச்சா? :-)
இருந்தாலும் நிறை, குறை இரண்டையுமே சொல்லி இருக்கிறேனே?
May 27, 2010 at 7:40 AM
சரவணகுமரன் said...
கிரி, ஆறு வெற்றிப்படமா? சந்தேகம் தான். சரண் போட்ட காசை எடுத்திருக்கலாம். ஆனால், குடும்ப ரசிகர்களை ஹரியின் மற்ற படங்களை போல் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
May 27, 2010 at 7:46 AM
சரவணகுமரன் said...
ஹி ஹி... ஆமாங்க, வேங்கடசுப்ரமணியன்.
May 27, 2010 at 7:47 AM
சரவணகுமரன் said...
வாங்க ரமேஷ்
May 27, 2010 at 7:47 AM
கானா பிரபா said...
இவர் இயக்கிய படங்களில் நான் மிகவும் ரசித்தது முதலில் இயக்கிய "தமிழ்"
May 27, 2010 at 8:03 AM
Unknown said...
mass director and kingmaker hari
August 19, 2013 at 3:28 PM
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
நான்...
சரவணகுமரன்
ஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
View my complete profile
குமரன் குடிலில் தேட
Facebook'இல் குமரன் குடில்
குமரன் குடில்
நண்பர்கள்
எங்க போனா என்ன சாப்பிடலாம்?
பார்க்க சேர்க்க
உங்க வசதிக்கு
ஆனந்த விகடனில் என் பதிவு :-)
Notable & Must Read Tamil Blog
கலாட்டா காமெடிகள்
மூன்றாம் கண்ணின் பார்வை
வாசித்தவைகளில் சில
என் பயணங்கள்
மகேந்திரனின் இசை பக்கங்கள்
நேரமிருந்தா இதையும் பாருங்க...
► 2020 (1)
► November (1)
► 2017 (26)
► October (18)
► May (8)
► 2016 (23)
► December (1)
► September (9)
► July (3)
► June (7)
► April (1)
► March (1)
► February (1)
► 2015 (15)
► October (1)
► September (1)
► June (1)
► May (1)
► April (3)
► March (5)
► February (3)
► 2014 (5)
► October (4)
► September (1)
► 2013 (22)
► November (1)
► October (1)
► September (2)
► August (2)
► July (1)
► June (1)
► May (4)
► April (3)
► February (2)
► January (5)
► 2012 (58)
► November (5)
► October (7)
► September (3)
► August (11)
► July (7)
► June (2)
► April (2)
► March (5)
► February (9)
► January (7)
► 2011 (30)
► December (8)
► November (3)
► October (4)
► September (2)
► July (5)
► June (2)
► May (2)
► April (1)
► February (1)
► January (2)
▼ 2010 (145)
► December (12)
► November (5)
► October (3)
► September (14)
► August (12)
► July (10)
► June (12)
▼ May (13)
சிங்கம் - இன்னொரு சாமி
பார்பேக்யு நேஷன்
பெங்களூர் டைம்ஸ்
ராமேஸ்வரம்
மாஞ்சா வேலு
இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி
ஏஏஏப்...
தாராசுரம்
திருவலஞ்சுழி
தஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்
சுறா - விஜய்க்கு மைல்கல்
பாண்டிய துறைமுகம் - கொற்கை
தியேட்டர் - 2
► April (16)
► March (16)
► February (12)
► January (20)
► 2009 (226)
► December (27)
► November (18)
► October (19)
► September (17)
► August (23)
► July (24)
► June (26)
► May (21)
► April (9)
► March (13)
► February (18)
► January (11)
► 2008 (122)
► December (23)
► November (12)
► October (10)
► September (19)
► August (9)
► July (15)
► June (12)
► May (6)
► April (5)
► March (3)
► February (2)
► January (6)
► 2007 (13)
► December (12)
► November (1)
சந்தாதாரர்கள்
பதிவு உங்களைத் தேடி வர
ஈமெயிலில் பதிவுகளை பெற...
Enter your email address:
Delivered by FeedBurner
விருந்தாளி பதிவேடு
குடிலின் சாளரங்கள்
முக்கியமான தகவல்
இந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும். |
தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
Join the forum, it's quick and easy
தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். |
முறிகள் மோசடி தனது தவறு அல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (14) பாராளுமன்றத்தில் கூறியதாக இன்று டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெறவில்லை என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்ததுடன், சுமத்தப்படும் குற்றச்சாட்டை பாதுகாக்கும் கொள்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
2019 மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்த மோசடி தொடர்பில் வெளிக்கொண்டு வந்ததன் பின்னர் தொடர்ந்தும் சமூக மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் இது குறித்து பேசும்பொழுது, அச்சமயம் வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி இது குறித்த ஆராயுமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயற்படும் முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சிக்குள் நெருங்கிய மூன்று சட்டத்தரணிகள் உள்ளடங்கிய குழுவை நியமித்தார்.
காமினி பிட்டிப்பன, மகேஸ் களுகம்பிட்டிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோர் அடங்கிய குழு இறுதியில் ரணில் விக்மரசிங்கவிற்கும் அர்ஜூன மகேந்திரனுக்கும் வௌ்ளை சுண்ணாம்பு பூசும் செயற்பாட்டையே மேற்கொண்டது.
மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் நியமித்த மூன்று சட்டத்தரணிகளுக்கும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும்.
மோசடி இடம்பெறவில்லை என்றால் முறிகள் தொடர்பில் தௌிவுள்ள ஒரு குழுவை நியமித்து இது தொடர்பில் ஆராய்வதில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை.
நேற்று நடைபெற்ற தனது அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பதில் அளித்து உரையாற்றும் போது முறிகள் மோசடி தனது தவறு அல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக இன்று டெய்லி மிரர் பத்திரிகையில் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sharing is caring!
Facebook
Twitter
Pinterest
LinkedIn
விளம்பரங்கள்
எம்மைப்பற்றி
புலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும். |
அவர்களைக்கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடேடே ..... யாரு .... பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்திருந்தே! அப்போ என்னவோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே ..... இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சிரித்துக்கொண்டே வினவினார்.
உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ண படியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளின்னு சொல்லலாம்] சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது ...... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே தங்கறது.
எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா .... தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்.
உடனே ஆச்சார்யாள், “ பேஷ் ... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா சரிதான் ..... அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே ... அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள்.
இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”
குதூகுலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?”
உடனே ஸ்வாமிகள், “ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, பெளவ்யமாக, “என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்” என்றார்.
அவரை அமரச்சொன்னார் ஸ்வாமிகள். பக்தரும் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பரப்பிரும்மம் பேச ஆரம்பித்தது.
”ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம் பண்ணிண்டிருந்தது.
அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாளே, இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்! சொல்றேன் ... கேளுங்கோ ... சற்று நிறுத்திவிட்டு, தொடர்ந்தார் ஸ்வாமிகள்.
கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி ஒருவர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபத்தினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.
கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா.
தொடரும்
oooooOooooo
[ 2 ]
எட்டு பவுன் ... இரட்டை வடம்
சங்கிலி ... எங்கே?
[இந்த அனுக்ரஹ அமுதமழைத் தொடரினை
வெளியிடுவதற்கு முன்பே மிகவும் சுவையானதோர்
MIRACLE சம்பவத்தை அடியேன் வெளியிட்டிருந்தேன்.
http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html
அதைப் படிக்கத் தவறியவர்களுக்காக
மீண்டும் இங்கே இதில் கொண்டு வந்துள்ளேன்.]
பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மஹாபெரியவா.
தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள்.
அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.
சந்தோஷம் தவழ, “அடடே, மீனாக்ஷி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே? பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…
பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.
மீனாக்ஷி பாட்டி.. ”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.
இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே … அதுக்கான சந்தர்ப்பம் வரலே..
ஆனா, இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே.. இவ எம் பொண் வயத்துப் பேத்தி. இந்த ஊர்ல பொறந்ததால காமாக்ஷின்னு பேரு வெச்சுருக்கு. நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.
“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன். படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு. வயசு பதினஞ்சு ஆறது..
இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.
பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன்.
சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.
முதலில் தயங்கிய மீனாக்ஷி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.
“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு. பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார். அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம், பிக்கல் புடுங்கல் இல்லே. ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.
எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.
உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.
அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.
பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.
ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, ’பாட்டி, நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரெட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா.
பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.
தலா ஒரு பவுன்ல இவ ரெண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி
வெச்சுருக்கேன்… அதான் என்னால முடிஞ்சது.
நா எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…
ஸ்வாமிகள், “ரெட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.
உடனே மீனாக்ஷி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு,
“அபசாரம்..அபசாரம் பெரியவா, நா அப்டி சொல்ல வரலே.
ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம் வராளே.. அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.
“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது? அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே.
நீ வேணும்னா ஒன் சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு.. பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ. அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.
உடனே மீனாக்ஷி பாட்டி பதற்றத்தோடு,
“பெரியவா அப்டி சொல்லிப்டு
போகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.
இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம், அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரெட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.
அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரெட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா.. வேறு ஒண்ணுமில்லே
பெரியவா, நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.
எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்
யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார்,
“நா ஒரு கார்யம் சொல்றேன்…. பண்றயா?”
“கண்டிப்பா பண்றேன். என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.
உடனே ஆச்சார்யாள்,
“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு
காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, “எட்டு பவுன்ல ரெட்ட வடம் சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.
இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.
நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.
உடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.
அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.
ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.
ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.
“சரி பெரியவா. அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார். பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
பேத்தியுடன் காமாக்ஷி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி.
வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.
அன்னை காமாக்ஷி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.
பேத்தியின் நக்ஷத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக்கொண்டாள், பாட்டி.
பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், ’எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி’ யையே பிரார்த்தித்தபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.
ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நமஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.
சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி, பாரிஜாத புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள்.
மடத்தில்
ஏகக் கூட்டம். மீனாக்ஷி பாட்டி இருபது முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.
பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.
அவர், “இன்னிக்கு அனுஷ நக்ஷத்ரம். பெரியவாளோட நக்ஷத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னிக்கி மௌன விரதம்.
யாரோடயும் பேசமாட்டாராம். முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.
மீனாக்ஷி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியைப்பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி அப்படியே அமர்ந்திருந்தது, அந்த பரப்பிரம்மம்.
”எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.
மஹா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, ”பாட்டி, நகருங்கோ… நகருங்கோ... பெரியவா இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார். பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.
காமாக்ஷியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.
அன்றைக்கும் காமாக்ஷியம்மன் சந்நிதியில் பெரியவா கூறியபடி ‘பஞ்ச
ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.
அடுத்தடுத்து ஞாயிறு, திங்கள் இரு நாட்களும் மஹா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார். இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.
பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள். ”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே, ஒண்ணுமே நடக்கலியே…
அம்மா காமாக்ஷி கண் திறந்து பார்ப்பாளா, மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி
செவ்வாய்க்கிழமை விடிந்தது. அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும்
கலகலப்பாக இருந்தது. ஆரணியிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரபாவத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.
ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்! இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக்கூட்டம்.
வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம்.
தான் கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, பூசணி, மொந்தன் வாழைக்காய் வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.
எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம் விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார்.
பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர்,
நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே?
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே.. ஏதோ சொல்லி
துக்கப்பட்டுண்டே.. இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட
நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாக்ஷி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது. சரிதானே!” என்று கேட்டார்.
அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, ”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த அவலத்தைச் சொல்லி அழுதேன். நீங்கதான் இந்த ஊர் காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி, அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி.. அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.
சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன். என்ன ஆச்சரியம் பாருங்கோ.. பதினஞ்சு நாளக்கி முன்னாடி, ஜாம்ஷெட்பூர் டாடா
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார்.
எல்லாம் அந்த காமாக்ஷி கிருபையும், ஒங்க அனுக்கிரஹமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.
உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்.. ரொம்ப சந்தோஷம். தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா… இவ்வளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.
அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே, ”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா. அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி.. ஒம் பொண்ணு, மாப்ளய திருப்பியும் அம்மா காமாக்ஷிதான் சேத்து வெச்சிருக்கா, அதனால் நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.
உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா… இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.
பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.
“பேஷா, பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல
சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்.. ஞாபகம் வெச்சுக்கோ” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.
அன்று காமாக்ஷியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால் பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி.
கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாக்ஷி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம். நீ என்ன பண்றே.. அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா, அஞ்சு
ஜோடி வாழப்பழம், வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா, பார்ப்போம்” என்று காசைக் கொடுத்தாள்.
பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்.
பாட்டி: “அம்மா காமாக்ஷி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா வேற கதி நேக்கு இல்லேடிம்மா. நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரெட்ட வட
சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின்தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.
நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்துகொண்டு இருந்தனர் இருவரும்.
“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்
திரும்பிப் பார்த்த பாட்டி, ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே? என்ன
பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.
“ஒண்ணும் பறிபோகலே பாட்டி, கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி. அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!
“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள்.
பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா.. அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது அறுந்துருக்கே பாட்டி.. பவுனா.. முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.
அதைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி, காமாக்ஷி, எட்டு.. எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.
இது பெரியவா கிருபைல காமாக்ஷியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா. சரி…சரி….வா, வெளியே போவோம், மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன் புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.
அன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள். மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர். பேத்தியுடன் வந்த மீனாக்ஷி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.
பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா என்று குழம்பினாள்.
அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாக்ஷியம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்….. ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! அந்த சந்தோஷம்…. நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாக்ஷி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே?” என யதார்த்தமாகக் கேட்டார்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால்
ஓடவில்லை.
“ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது.
பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச் சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்…அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”
என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.
உடனே பெரியவா,
“அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ
எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ…. அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு, “அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.
கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.
ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”
“அம்பாள் காமாக்ஷிக்கு.”
“நீயே சொல்லு… அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்பிலே முடிஞ்சிக்கலாமா?”
“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து, கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.
இப்போது மணி இரண்டு, மீனாக்ஷி பாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச்சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது, காலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சோகமே உருவாகத் திரும்பி வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.
பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,
“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.
உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்க உத்தரவுபடி காமாக்ஷியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே, ’பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.
தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரெட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப் போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன். ஒரு எடத்லயும் கிடைக்கலே… இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
ஸ்வாமிகள் மீனாக்ஷி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி,
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.
பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரெட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா அம்புஜம்… நீ தவறவிட்ட ரெட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.
அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்:
“இதேதான்….இதேதான்…..பாட்டி.. இது எப்படி இங்கே வந்தது?
ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள்.
நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.
மீனாக்ஷிப் பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள்
“பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ.
ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.
எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரெட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும்,
நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரெட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு
அர்ப்பணிக்கறதா வேண்டிண்டு இருக்கேன்.
இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாக்ஷியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய், எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.
ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
பார்த்துக்கொண்டு இருந்தார்.
அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.
ஆச்சார்யாள், மீனாக்ஷி பாட்டியைப் பார்த்து,
”இன்னிக்கு நீயும் ஒம்
பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.
மீனாக்ஷி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. !
oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:00 AM
லேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்
55 comments:
cheena (சீனா) December 20, 2013 at 4:43 AM
அன்பின் வை.கோ
அன்ன தான மகிமை - பதிவு நன்று நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் புகைப் படம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் - அவ்வளவு அழகு - தலையில் டர்பன் - முகத்த்ன் சாந்த சொரூபம் - உலகில் நடக்கும் அனைத்தையும் மனதில் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவாளை என்ன வென்று சொல்வது ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Replies
Reply
cheena (சீனா) December 20, 2013 at 4:46 AM
அன்பின் வை.கோ
அன்னதான சிறப்புக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா சொன்ன கதை - உண்மைக் கதை அருமை அருமை - முதல் பகுதி அருமை. தொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Replies
Reply
cheena (சீனா) December 20, 2013 at 4:52 AM
அன்பின் வை.கோ
எட்டு பவுன் ரெட்டைச் சங்கலி - எங்கே ? - பதிவு அருமை - பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கத் தேவையான சங்கிலி இல்லாததால் பாட்டியும் பேத்தியும் பெரியவாளைச் சந்தித்து சங்கிலி பெற வழி தேடி வந்திருந்தார்கள் -
ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளும் வழி கூறினார் - காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட வழி முறைகள் கூறி ஆசிர்வாதம் பண்னி அனுப்பி வைத்தார்.
ஆமாம் முதல் முறையாக இப்பதிவில் தான் பெரியவா சற்றே கோபக் கனலை வீசுவதைக் கண்டேன். அவருக்கும் கோபம் வருமா - நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை - ம்ம்ம் - கோபத்திலும் நன்மை இருக்கும், நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Replies
Reply
cheena (சீனா) December 20, 2013 at 4:56 AM
அன்பின் வை.கோ - மகாப் பெரியவா வழி காட்டி விட்டார்- பாட்டீயும் பேத்தியும் வழியினைப் பின் பற்றத் துவங்கி விட்டனர்-நிச்சயம் திருமணம் நடக்கும் - பொறுத்திருப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Replies
Reply
cheena (சீனா) December 20, 2013 at 4:59 AM
அன்பின் வை.கோ
பேத்தியின் திருமண்ம சிறப்புடன் நடை பெற பாட்டிக்கு வழி காட்டி - முகத்தில் சிரிப்புடன் வழி அனுப்பி வைத்த பெரியவாளின் கருணைக்கு அளவே இலலை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Replies
Reply
cheena (சீனா) December 20, 2013 at 5:03 AM
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர் ஹர் சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர் ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர் ஹர் சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ReplyDelete
Replies
Reply
ADHI VENKAT December 20, 2013 at 6:35 AM
அருமையான பகிர்வு.. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் வாசிக்கும் போதே பெரியவாளின் அருளை எண்ணி மகிழ்ந்தேன்..
ReplyDelete
Replies
Reply
இராஜராஜேஸ்வரி December 20, 2013 at 7:19 AM
அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”
அதிதி உபசாரம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDelete
Replies
Reply
இராஜராஜேஸ்வரி December 20, 2013 at 7:26 AM
எட்டு பவுன் ரெட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன். அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்” என்று ஆறுதல் அளித்தாள்.
ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாக்ஷியாக அமர்ந்து
பார்த்துக்கொண்டு இருந்தார்.
கேட்டது கேட்டபடியே அனுகிரஹித்த நடமாடும் தெய்வம்..!
ReplyDelete
Replies
Reply
இராஜராஜேஸ்வரி December 20, 2013 at 7:27 AM
“சுபஸ்ய சீக்ரஹ”ன்னு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.
ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.
வெள்ளிகிழமையில் கிடைத்த திருவாக்கு அற்புதம் ..!
ReplyDelete
Replies
Reply
இராஜராஜேஸ்வரி December 20, 2013 at 7:29 AM
அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.
அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு
அனுக்கிரகம் பண்றவ அவ,
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDelete
Replies
Reply
Geetha Sambasivam December 20, 2013 at 7:43 AM
ரெண்டுமே படிச்சேன். சக்தி விகடன்லேனு நினைக்கிறேன். கர்ணன் எல்லா தானமும் பண்ணியும் அன்னதானம் பண்ணாததாலே தானே அவனுக்கு சொர்க்கம் சென்றும் பசி எடுத்ததுனு சொல்வாங்க! :))) அன்னதானத்தின் மகிமை தனிதான். :)))
ReplyDelete
Replies
Reply
Yaathoramani.blogspot.com December 20, 2013 at 7:46 AM
இந்த உண்மைச் சம்பவத்தைப் படிக்க படிக்க
மெய் சிலிர்த்தது.சொல்லிச் சென்ற விதம்
நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
ReplyDelete
Replies
Reply
காரஞ்சன் சிந்தனைகள் December 20, 2013 at 7:49 AM
அன்னதான சிறப்பு குறித்து மஹாபெரியவாளின் உரையை அறிய மிக ஆவல்! நன்றி!
ReplyDelete
Replies
Reply
திண்டுக்கல் தனபாலன் December 20, 2013 at 8:12 AM
மஹாபெரியவா அவர்கள் சொன்ன அன்னதான கதை மிகவும் சிறப்பு... மீனாக்ஷி பாட்டியின் சம்பவம் மெய் சிலிர்க்க வைத்தது ஐயா... நன்றி...
வாழ்த்துக்கள்...
ReplyDelete
Replies
Reply
உஷா அன்பரசு December 20, 2013 at 10:54 AM
பசித்த வயிறுக்கு உணவு இடுவது மிக நல்ல தர்மம். என் அம்மா தினம் இதைத்தான் செஞ்சிட்டிகிட்டு இருக்காங்க...! ஒரு நாளைக்கு ஒரு ஏழை வயிறுக்காவது உணவை தர மறந்ததில்லை.
ReplyDelete
Replies
Reply
Menaga Sathia December 20, 2013 at 11:58 AM
அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!
ReplyDelete
Replies
Reply
Anonymous December 20, 2013 at 12:53 PM
இரட்டைவடச் சங்கிலி அருள் மகிமையோ மகிமை.
இனிய நன்றி.
இறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
ReplyDelete
Replies
Reply
middleclassmadhavi December 20, 2013 at 1:08 PM
புதுக் கதையை, இல்லையில்லை, சம்பவத்தை பாதியிலே சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் சம்பவத்தைப் போட்டதற்கு நான் என் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்!! :-))
ReplyDelete
Replies
Reply
Rukmani Seshasayee December 20, 2013 at 1:34 PM
ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர என்று பெரியவாளின் நாமத்தை ஜபிப்பதைவிட வேறு ஒன்றும் தோன்றவில்லை. அவ்வளவு நெகிழவைக்கும் பதிவு. நன்றி பல.
--
ReplyDelete
Replies
Reply
இராய செல்லப்பா December 20, 2013 at 1:59 PM
கண்களில் அருவியாக நீர் வழியாமல் படிக்கும்படியான ஒரு கட்டுரையை -ஆச்சார்யா சுவாமிகளைப் பற்றி- உங்களால் எழுதவே முடியாதா?
ReplyDelete
Replies
Reply
காமாட்சி December 20, 2013 at 3:53 PM
மீனாட்சி பாட்டிகதை முன்பே படித்திருந்தாலும், திரும்பப் படித்ததில் மகிழ்வாக இருக்கிறது.
இரட்டை வடச் சங்கிலி எங்கிருந்து எங்கு போய் யாதுமாகி நின்றது.
அதிதி போஜனம் நம் கையில் சமையலரை இருக்கும்போதே ஆரம்பித்து செய்து வர வேண்டும்.
பின்னாளில் வா என்றால் வராது. விசேஷ,மானது இது. நல்ல பதிவு. அன்புடன்
ReplyDelete
Replies
Reply
கோமதி அரசு December 20, 2013 at 4:57 PM
அன்னதான சிறப்பு சிறந்த அமுத வாக்கு.
சுவாமிகள் சொல்ல போகும்
கதையை படிக்க ஆவல்.
இரட்டைவட கதை முன்பே படித்தது, மீண்டும் படிக்கும் போதும்
எளியவருக்கு உதவும் கருணையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDelete
Replies
Reply
துரை செல்வராஜூ December 20, 2013 at 5:01 PM
படிக்கப் படிக்க பரவசமாக இருக்கின்றது.. பக்தி மயம்.
ஜய ஜய சங்கர.. ஹர ஹர சங்கர..
ReplyDelete
Replies
Reply
Ranjani Narayanan December 20, 2013 at 5:58 PM
பாட்டி, பேத்தி, இரட்டைவட சங்கிலி ... உங்கள் பதிவிலேயே ஏற்கனவே இந்தக்கதை வந்துவிட்டது, இல்லையோ? நிஜம் தான். நீங்களே இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள்.
அன்னதானக் கதை தொடருகிறதா? நல்லது வந்து படிக்கிறேன்.
ReplyDelete
Replies
Reply
தி.தமிழ் இளங்கோ December 20, 2013 at 6:05 PM
குமரேசன் செட்டியார் - சிவகாமி ஆச்சி தம்பதி உண்மைக் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.
எட்டுபவுன் இரட்டைவடம் செயின் பாட்டியை ரொம்பவே படுத்தி விட்டது.
ReplyDelete
Replies
Reply
தி.தமிழ் இளங்கோ December 20, 2013 at 6:39 PM
உங்களுக்கு ஒரு ஆலோசனை. சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவத்தின் இந்த பதிவைக் காணவும்.
http://rajalakshmiparamasivam.blogspot.in/2013/12/blog-post_10.html
ReplyDelete
Replies
Reply
அரவிந்த்குமார் December 20, 2013 at 7:02 PM
அதிதி போஜன மஹிமையை
அருமையாக எடுத்துரைத்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் December 20, 2013 at 8:52 PM
அரவிந்தகுமார் December 20, 2013 at 7:02 PM
வாங்கோ My Dear Mr. அரவிந்தகுமார் ஜெகமணி Sir, வாங்கோ, வணக்கம்.
//அதிதி போஜன மஹிமையை அருமையாக எடுத்துரைத்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..//
தங்களின் வருகை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
வெளிநாட்டில் உள்ள என் சொந்தக்குழந்தையே வருகை தந்ததுபோல மகிழ்வளிக்கிறது.
தாங்கள் இதுவரை இந்தத்தொடரின் கீழ்க்கண்ட நான்கு பகுதிகளுக்கு வருகை தந்து சிறப்பித்து மகிழ்வித்துள்ளீர்கள்
http://gopu1949.blogspot.in/2013/09/48.html
http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html
http://gopu1949.blogspot.in/2013/10/68.html
http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
என்றும் எப்போதும் க்ஷேமமாக , செளக்யமாக, சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த நல்லாசிகள்.
பிரியமுள்ள VGK
Delete
Replies
Reply
Reply
RajalakshmiParamasivam December 20, 2013 at 8:19 PM
இது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்தது மாதிரியே இருக்கிறதே!
இல்லை இது வேறோ? எப்படியிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது.
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் December 20, 2013 at 9:04 PM
rajalakshmi paramasivam December 20, 2013 at 8:19 PM
வாங்கோ மேடம், வணக்கம்.
//இது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்தது மாதிரியே இருக்கிறதே! இல்லை இது வேறோ? எப்படியிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது.//
இது நான் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுதான் மேடம். அதற்கான [LINK] இணைப்புகூட மேலே ஆரம்பித்தில் கொடுத்துள்ளேன், பாருங்கோ.
இதுவும் இதுபோல மற்றொன்றும், நான் இந்த அமுதமழைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே வெளியிட்டுள்ளேன்.
அவைகள் இரண்டையும் இந்தத்தொடரின் 108 பகுதிகளுக்குள் எங்காவது கொண்டு வந்தால் நல்லது என எனக்குத் தோன்றியதால், இந்தப்பகுதியில் ஒன்றும், அடுத்த பகுதியில் மற்றொன்றையும் கொண்டுவர இருக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு
Delete
Replies
Reply
Reply
அம்பாளடியாள் December 21, 2013 at 1:24 AM
நீங்கள் எழுதும் ஆக்கங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது சுவாமிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே போகிறது .இம்முறை மங்கோ ஜூஸ் வேண்டாம் சுவாமி தரிசனம் வேண்டும் .அம்பாளடியாள் மஹா பெரியவாளைக் காணத் துடிப்பதாகச் சொல்லிவிடுங்கள்
ஐயா ! :))
ReplyDelete
Replies
Reply
வெங்கட் நாகராஜ் December 22, 2013 at 7:36 AM
அன்ன தான மகிமை -- முதல் பாகம் படித்ததும் அடுத்த பாகங்களையும் படிக்கும் ஆவல்......
சங்கிலி சம்பவம் முதலில் படித்திருந்தாலும் மீண்டும் படிக்க மனதுக்கு திருப்தி......
ReplyDelete
Replies
Reply
தி.தமிழ் இளங்கோ December 22, 2013 at 1:37 PM
அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே! இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி!
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் December 23, 2013 at 11:54 PM
தி.தமிழ் இளங்கோ December 22, 2013 at 1:37 PM
//அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!//
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே!//
;)))))
அதன் பகுதி-2 இன்று 22.12.2013 வெளியிட்டு விட்டேன். [அது ஏனோ துரதிஷ்டவசமாக டேஷ் போர்டில் தோன்றவில்லை]
அதற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html
இன்னும் ஒரே ஒரு பகுதி அதாவது பகுதி-3 மட்டுமே பாக்கி. அது 24.12.2013 அதிகாலையில் [இந்த அமுத மழைத்தொடரின் 100வது பகுதியில்] வெளியிட உள்ளேன்.
//இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி! //
ஆம் ஐயா. இந்த இரண்டாவது சம்பவம் ஏற்கனவே நான் வெளியிட்டுள்ளது தான். ஆனால் இந்த அமுதமழைத் தொடரினில் சேராமல் இதுபோல 2-3 நிகழ்வுகள் நான் ஏற்கனவே என் ‘பொக்கிஷம்’ என்ற தொடரினில் எழுதியிருந்தேன்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவரைப்பற்றிய இந்த 108 சிறு பகுதிகள் கொண்ட ஒரு மெகா தொடரினில் அவைகளும் விட்டுப் போகாமல் இடம் பெற்றிருந்தால், சிறப்பாக இருக்கும் என்றும், நாளை என்றாவது ஒருநாள் இதை ஆர்வமாகப் படிக்கத்தொடங்கும் யாராவது ஒருவருக்காவது பயன்படக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கு மீண்டும் சேர்த்துள்ளேன்.
இதே போலவே 100வது பகுதியிலும், ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட ஓர் சம்பவம் இடம் பெறக்கூடும்.
அத்தோடு சரி. மொத்தத்தில் பகுதி-98, 99 + 100 இல் மட்டும் ஏற்கனவே வெளியிட்ட ஒருசில சுவையான சம்பவங்கள் மட்டும் மீண்டும் REPEAT ஆகியிருக்கும்.
அதை நானும் எடுத்துச்சொல்லி தலைப்பினிலேயே LINK கொடுத்துள்ளேன், பாருங்கோ.
அன்புடன் VGK
Delete
Replies
Reply
Reply
கரந்தை ஜெயக்குமார் December 22, 2013 at 6:58 PM
அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!
ReplyDelete
Replies
Reply
Unknown December 23, 2013 at 3:14 PM
தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞ்த்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் December 23, 2013 at 3:58 PM
Sundaresan Gangadharan December 23, 2013 at 3:14 PM
அன்புள்ள சுந்தர், வாப்பா, வணக்கம்.
//தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞத்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது//
எனக்கு மிகவும் பிடித்தமான அழகோ அழகான உதாரணக்கதையை நீ இங்கு சுட்டிக்காட்டியுள்ளது என்னை மிகவும் மகிழ்விக்கிறது, சுந்தர்.
இந்த தங்கமயமான கீரிப்பிள்ளையின் கதையினை தகுந்த படங்களுடனும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் விபரமான விளக்கங்களுடன், விரைவாக ஓர் தங்கமான தெய்வீகப்பதிவர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
// நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்//
இதன் அடுத்த பகுதியில், குறிப்பாக, உன்னை அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கப்போகும் ஓர் அபூர்வமான செய்தியும் இடம் பெற உள்ளது.
பிழைத்துக்கிடந்தால் இன்று நள்ளிரவு 12.05க்கு அது வெளியிடப்படும்.
எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹம் மட்டுமே.
அன்பான ஆசிகளுடன் கோபு.
Delete
Replies
Reply
Reply
kankaatchi.blogspot.com December 23, 2013 at 10:22 PM
பெரியவாளின் லீலைகளில் இது ஒரு தினுசு
அவர் நம்பியவரை என்றும் கைவிட்டதில்லை.
நம்பாதவரையும் கூட திருத்தி அருள் செய்வதில் அவருக்கு இணை அவரே
நெஞ்சை நெகிழ வைக்கும் நல்லதோர் பதிவு VGK
ReplyDelete
Replies
Reply
Unknown December 24, 2013 at 7:02 AM
Very Very Nice.. Thanks for sharing..
ReplyDelete
Replies
Reply
”தளிர் சுரேஷ்” December 28, 2013 at 3:17 PM
எட்டு பவுன் சங்கிலி சம்பவம்! மெய்சிலிர்க்க வைத்தது! அருமை! நன்றி!
ReplyDelete
Replies
Reply
மாதேவி December 28, 2013 at 5:40 PM
அன்ன தான மகிமை அருமை.
‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு."
ReplyDelete
Replies
Reply
viji January 14, 2014 at 12:44 PM
Aha Annadanamahimai......
Patti and pethi ......Ambal karunai......Periyiva asirvadam....
Maisilerkum anubhavam.
ReplyDelete
Replies
Reply
ப.கந்தசாமி May 19, 2015 at 8:36 AM
அன்னதான மகிமையைக் கேட்டு புல்லரித்துப் போனேன்.
ReplyDelete
Replies
Reply
பூந்தளிர் August 23, 2015 at 6:41 PM
அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்
ReplyDelete
Replies
Reply
பூந்தளிர் August 23, 2015 at 6:41 PM
அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்
ReplyDelete
Replies
Reply
ஆன்மீக மணம் வீசும் September 23, 2015 at 9:59 AM
//இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”//
இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.
இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள். சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார்.
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் September 23, 2015 at 1:48 PM
Jayanthi Jaya September 23, 2015 at 9:59 AM
வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
**இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”**
//இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.//
கரெக்ட் ... ஜெயா, அதே .... அதே .... சபாபதே !!
//இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள்.//
ஆஹா, மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துகள் + ஆசீர்வாதங்கள்.
தனியாக மெயிலில் லயாக்குட்டிக்காக நிறைய அனிமேஷன் படங்களாகத் தேடிப்பிடித்து அனுப்பியுள்ளேன். :)))))
உடனே பாருங்கோ ! அவளிடம் அவசியமாகக் காட்டுங்கோ.
//சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார்.//
மிகவும் நல்லதுதான்.
பைரவருக்கு நாம் அன்னமளித்தால் நம் கைகால்கள் உறுதியாக இருக்கும் என்றும் சொல்லுவார்கள். என் மாமியார் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.
>>>>>
Delete
Replies
Reply
Reply
ஆன்மீக மணம் வீசும் September 23, 2015 at 10:03 AM
//கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா.
தொடரும்//
இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.
இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது.
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் September 23, 2015 at 1:54 PM
Jayanthi Jaya September 23, 2015 at 10:03 AM
**கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா.
........தொடரும்.........**
//இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.//
அன்புத்தங்கை ஜெயாவின் குசும்புகளில் 1% ஆவது அண்ணாவாகிய கோபுவுக்கும் இருக்காதா என்ன? :)
//இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. //
முதல்முறை நான் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாகி அப்படியே ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.
தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
Delete
Replies
Reply
Reply
mru October 27, 2015 at 1:43 PM
இந்த கத நல்லாருக்குது. இதுபோலலா கதயிலதா நடக்கும்
ReplyDelete
Replies
Reply
சரணாகதி. November 30, 2015 at 3:12 PM
மீனாட்சி பாட்டி பெரியவாளே கதின்னு முழுமையா நம்பி வந்தா. பேத்தி கல்யாணத்திற்கும் வழிகாட்டினார்.
ReplyDelete
Replies
Reply
மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 7, 2015 at 8:53 PM
கேளுங்கள் தரப்படும்!!! உண்மை சம்பவத்தையும் சுவாரசியத்தொடராக்த் தருவது வாத்யாரலதான் முடியும்..
ReplyDelete
Replies
Reply
நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:47 PM
இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.
ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார்.
|இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"
படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.
ReplyDelete
Replies
வை.கோபாலகிருஷ்ணன் October 1, 2016 at 3:02 PM
'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:47 PM
வாங்கோ, வணக்கம்.
//இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.//
பொதுவாக அது நம் மனித சுபாவம் மட்டுமே.
//ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார்.//
ஆமாம். மிகச் சரியாகவே உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.
**இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"**
//படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Popular Posts
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...
38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;)
2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந...
’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’
அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...
22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
கொரனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் ஊரடங்கு 22.03.2020 ஞாயிறு ^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^ ^22.03.202...
நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
கடந்த ஓராண்டுக்குள் (02.02.2019 to 01.02.2020) வலையுலக மும்மூர்த்திகளான, ஆளுமை மிக்க மூவர், நம்மைவிட்டு மறைந்து, நமக்கு மீளாத்துயரை ஏற்ப...
உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....
//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...
31] போதும் என்ற மனம் !
2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
அறுபதிலும் ஆசை வரும் ! ;)))))
By வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது ! ...
7] அப்பா விட்டுச்சென்ற ஆஸ்திகள்
”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- என் தந்தை தினமும் மிகவும் சிரத்தையாக சிவபூஜை செய்து ... |
நீங்கள் வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். மங்கலான, செங்குத்தாக சுடப்பட்ட, ஒரு மத்திய மேற்கு மாநிலத்தில் ஏதோ ஒரு பின் நீர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கலக்கமான, அப்பாவியாக இருக்கும் கதாநாயகன் ஒரு கோமாளி உடையணிந்த ஒரு அச்சுறுத்தும் நபரிடமிருந்து பயங்கரத்தில் தப்பி ஓடுகிறான். சில நேரங்களில் அது இருட்டாக இருக்கிறது, சில சமயங்களில் கோமாளி தூரத்தில் ஒரு அந்நியன் தவிர வேறில்லை. மற்ற நேரங்களில் அது ஒரு கோமாளி பிரதிபலிப்பின் மூன்று வினாடி கிளிப் , நீங்கள் உண்மையிலேயே கசக்கினால் வர்ணம் பூசப்பட்ட முகம் தெரியும்.
ஓஹியோ pic.twitter.com/zz7JuPOaJk
- கோமாளி காட்சிகள் (loClown_Sightings) அக்டோபர் 4, 2016
அமெரிக்காவின் மோசமான புதிய போக்கு சில நாட்களில் வெடித்தது. தி LoClown_sightings Twitter கணக்கு ஒரு நாள் செயலில் இருந்தபோதும், 100 க்கும் குறைவான முறை ட்வீட் செய்திருந்தாலும் 112,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில், சைராகஸ் முதல் இல்லினாய்ஸ், ஜே.எம்.யூ வரையிலான டஜன் கணக்கான பள்ளிகளில் பார்வைகள் பதிவாகியுள்ளன டெலாவேர் பல்கலைக்கழகம்.
தவழும் கோமாளி கிராஸ் பல வடிவங்களில், பல பள்ளிகளில். ஆயுதம் மற்றும் கத்தி கையாளும் கோமாளிகளின் பல அறிக்கைகளுக்குப் பிறகு தங்குமிடங்கள் வெளியேற்றப்பட்டு வளாக எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற இடங்களில், பொலிசார் உறுதியளிக்கும் முன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் பொதுஜனம் அவர்கள் இந்த விஷயத்தை கவனித்துக்கொள்கிறார்கள். இல் பென் மாநிலம் , கோமாளிகள் தங்குமிடங்களுக்கு அருகில் காணப்பட்டதாகக் கூறப்பட்டபோது மாணவர்கள் ஒரு சிறு கலவரத்தைத் தூண்டினர்.
பென் மாநில பல்கலைக்கழக கலவரம் ஒரு கோமாளி pic.twitter.com/0B7dyfbgoo
- கோமாளி காட்சிகள் (loClown_Sightings) அக்டோபர் 4, 2016
ஆனால் கோமாளிகள் யார்? அவர்களுக்கு என்ன வேண்டும்? இது எல்லாம் ஒரு நோய்வாய்ப்பட்ட சந்தைப்படுத்தல் தந்திரமா?
அவர்கள் ஒரு திராட்சைக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள்
பதில் அவ்வளவு எளிதல்ல.
ஒரு முதல், ஒரே மாதிரியான போக்கின் ஒரு பகுதியாக இது முதல் பார்வையில் தோன்றினாலும், இவற்றில் எதையும் பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை கோமாளி பார்வைகள் இணைக்கப்பட்டுள்ளன .
கேள்விக்குரிய கோமாளிகள் மிகவும் அரிதாகவே அடையாளம் காணக்கூடிய வகையில் புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். சுற்றியுள்ள படங்கள் தெளிவாக இல்லை, அவை இருண்டவை, தானியங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி கல்லூரி குழந்தைகளுக்காக ஐபோன்கள் உள்ளன. வீடியோக்கள் இன்னும் மோசமாக உள்ளன, இந்த விஷயத்தை ஃபக் செய்யும் வழிகளில் ஒரு ஹைபர்போலிக் தலைப்பைக் கொண்ட ஒன்றும் சுருக்கமாக இல்லை.
ஆனால் பீதி பரவுவதற்கு படங்கள் கூட தேவையில்லை. மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில், வளாகத்திற்கு அருகில் எங்காவது கோமாளிகள் இருக்கலாம் என்று அநாமதேய அறிக்கைகள் கூறியதையடுத்து, ஒரு கும்பல் உருவாகி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. இது ஒரு சில ட்வீட்டுகள் மட்டுமே, மற்றும் ஒருமித்த கருத்து சிக்கிக்கொண்டது, புதியவர்கள் மனதை இழந்து கோமாளிகள் மீண்டும் வென்றனர்.
இல் டென்னசியில் உள்ள பெல்மாண்ட் பல்கலைக்கழகம் , ஒரு வளாக அளவிலான கோமாளி வேட்டை சோபோமோர் பால் மர்பி தயாரித்த ஒரு மோசமான ஃபோட்டோஷாப் படத்தால் தூண்டப்பட்டது, அவர் அதை பல வளாக பேஸ்புக் குழுக்களில் வெளியிட்டார்.
புரளிக்கு ஒப்புக்கொள்வது ரெடிட் , அவர் கூறினார்: இது ஒரு பெரிய நகைச்சுவை என்று நினைத்து, ஃபோட்டோஷாப் ஒரு பார்வைக்கு முடிவு செய்தேன். சுமார் ஆறு அல்லது ஏழு நிமிடங்களில், நான் இந்த படத்தை ஒன்றாக இணைத்தேன். இது ஒரு ஷிட் கடை, எனக்குத் தெரியும், ஆனால் அது மிகவும் முக்கியமானது, நான் நகைச்சுவையாக விளையாட விரும்பினேன். நான் அதை எனது பள்ளியின் வகுப்பு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன், வேறு எதுவும் வரப்போவதில்லை என்று நினைத்தேன்.
புனித மலம் நான் தவறு. நான் படத்தை இடுகையிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு என் ரூம்மேட் என்னை அழைத்து புனித ஷிட் மேன் என்று கூறுகிறார், நீங்கள் அந்த படத்தை இடுகையிட்ட இடத்திற்கு வெளியே மக்கள் இருக்கிறார்கள் (அவர் நகைச்சுவையாக இருந்தார்). அவர்களிடம் கோல்ஃப் கிளப்புகள் உள்ளன, மேலும் வளாக பாதுகாப்பு மெட்ரோ காவல்துறையை அழைத்து வருவது பற்றி பேசுகிறது. ஃபக். இது ஒரு உண்மையான படம் என்று எல்லோரும் நினைத்ததைக் கண்டுபிடிப்பதற்காக நான் உடனடியாக பேஸ்புக் பக்கத்தில் எனது இடுகைக்குச் சென்றேன். அனைத்து கருத்துகளுடன், முழு இடுகையும் கீழே உள்ளது. எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் வரை அந்தப் பகுதியிலுள்ள அனைவரையும் தங்களின் தங்குமிடங்களுக்குள் பூட்டியே இருக்குமாறு பாதுகாப்பு கூறியது. எனது ரூம்மேட் தங்குமிடத்திற்குள் செல்லும்போது, இந்த கோமாளியைத் தேடும் தேடுபொறிகளுடன் ஹெலிகாப்டர்கள் இருப்பதாக அவர் கூறினார்.
ஒரு மோசமான கொலை கோமாளி அல்ல, அச்சுறுத்தல் அல்ல, அதிக நேரம் மற்றும் ஃபோட்டோஷாப் சந்தா கொண்ட முதிர்ச்சியற்ற மாணவர்.
உங்களை எப்படி சிறந்த விரல்
பெரிய பள்ளிகளில், இழிந்த கண் கிரேக்க வாழ்க்கையை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது. உறுதிமொழியின் போது இந்த கோமாளி பார்வைகள் உயர்ந்தன என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. கோமாளி போக்கை வேறு வளாகத்தில் நீங்கள் காண்கிறீர்கள், உங்கள் உறுதிமொழிகள் அதை உங்களுடையது, எளிதான சிரிப்பு மற்றும் அடுத்த அவசர வாரம் பற்றி பெருமை பேசும் ஒன்றை நீங்கள் கொண்டு வருகிறீர்கள்.
ஐ.யு வளாகத்தில் உள்ள அனைத்து கோமாளிகளும் உறுதிமொழிகள். இது szn ஐ உறுதிமொழி அளிக்கிறது மற்றும் புரோலி மிகவும் பயப்படக்கூடாது
- ஜேசன் பிளாக் (@ black_jason21) அக்டோபர் 4, 2016
ஃப்ராட் ஹவுஸ் துவக்கம்: உறுதிமொழிகள் கோமாளிகளைப் போல அலங்கரிக்கவும். 'நீங்கள் இருக்கும் இரவில் நீங்கள் பிழைத்தால்!' #IUClowns
- கே-பெர்கி (ris krisperkins0) அக்டோபர் 4, 2016
இந்த கோமாளிகள் சில ஏழை உறுதிமொழிகள்…
- * B * M * A * V * (riBri_Marie_Velde) அக்டோபர் 4, 2016
தூசி நிலைபெறும்போது, பீதி குறைகிறது மற்றும் மாணவர்கள் இந்த பார்வைகள் வளாகத்திற்கு சமீபத்திய நினைவுச்சின்னத்தை கொண்டுவருவதற்கான தேசிய ஊக்கத்தை ஈர்க்கும் மக்கள் என்ற யதார்த்தத்துடன் வருகிறார்கள்.
எந்தவொரு பொலிஸ் படையினரும் அதைப் பற்றி கவலைப்படாத வலைத்தளங்களை அல்லது டீனேஜ் கேலிக்கூத்துக்களுக்கு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்துள்ளனர், சீரற்ற பள்ளிகளின் அறிக்கைகள் எதுவும் நம்பத்தகுந்ததாக நிரூபிக்கப்படவில்லை, மேலும் ஒரு கோமாளி உண்மையில் ஆர்வமுள்ள எதையும் செய்கிறார் என்ற அறிக்கை இன்னும் இல்லை .
கோமாளி பார்வைகள் பீதியை ஏற்படுத்துகின்றன, ஏனென்றால் மக்கள் பீதியடைய விரும்புகிறார்கள் - இது போக்கின் ஒரு பகுதியாக இருப்பது அவர்களின் வழி.
வகைகள்
விகிதங்கள்
செய்தி
பிரபல பதிவுகள்
டலனாஸ்டி ஸ்டீரியோடைப்பை உடைத்தல்
விகிதங்கள்
கணினி அறிவியல் மற்றும் இசையை சமநிலைப்படுத்தும் UIUC ராப்பரை சந்திக்கவும்
விகிதங்கள்
எனது சிறிய ஆண்குறியில் எந்தத் தவறும் இல்லை
செய்தி
நிராகரிக்கப்பட்ட பயிற்சியாளரின் பிகினி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்கு நிறுவனம் மன்னிப்பு கோருகிறது
செய்தி
ஜாக் ரென்ஷாவின் கதை: ஒரு கொலைக்கு சதி செய்த முன்னாள் மான்செஸ்டர் மாணவரும் பெடோஃபைலும்
செய்தி
எங்களை பற்றி
உணர்வுப்பூர்வமான கதைகள், ஃபேஷன், இரவு, பயண குறிப்புகள், மதிப்புரைகள், விளையாட்டு வர்ணனை முன்னணி பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் எழுதிய |
நெருங்கிய நண்பரோ, துராத்து உறவுகளோ யாராக இருந்தாலும்… திருமண விசேடங்களில் ‘மொய்’ எழுதுவது என்பது முக்கிய நிகழ்வாகிவிட்டது. மணமக்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்கிறார்களோ இல்லையோ; மணமக்களின் பெற்றோரைக் கண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு சாப்பாட்டுப் பந்திக்குப் போய்விடுகிறார்கள். சாப்பாடு முடிந்த பிறகு மண்டப வாசலுக்கு வந்து, பெயரைச் சொல்லி மொய்யை எழுதி விட்டு, (அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முதலியோ்ர், பரிசுப் பொருட்களும் வழங்குவதுண்டு) விசேட வீட்டுக்காரரைக் கண்டால் போய்ட்டு வர்றேன்னு சொல்லி… இன்னோர் கும்பிடு போடுவார்கள். இல்லையென்றால் தாம்பூலப் பையைப் பெற்றுக் கொண்டு பேசாமல் புறப்பட்டுப் போய் விடுவார்கள். வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் பொழுது எதுவும் மணமக்களுக்கு மண வீட்டாருக்கு உப யோககரமானதாக இருக்காது. சுவர் கடிகாரங்கள், அலங்கார ஓவியங்கள், சின்னச் சின்ன பிள்ளையார் சிலைகள் போன்றவைகளாகத்தான் இருக்கும். தேடித் தேடி பார்த்தாலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்திருக்காது. என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் புத்த கங்களை அன்பளிப்பாக கொடுக்கும் வழக்கம் இன்னமும் நம்மவர்களிடம் பழக்கத்திற்கு வரவில்லை.
தென்மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் பரிசுப் பொருட் கள் வழங்கும் பழக்கம் இல்லை. ஒரு சில நண்பர்களைத் தவிர உறவுக் கூட்டமெல்லாம் பணம்தான் மொய் என்கிற பெயரில் எழுதுவார்கள். அதுவும் அழைப்பிதழில் “தங்கள் நல்வரவை விரும்பும்” பகுதியில் பெயரைப் போட்டு விட்டால் போச்சு… ஆயிரத்தி ஒரு ருபாய்க்கு குறைந்து எழுதக் கூடாது என்பது சமீப காலங்களில் கடை பிடிக்கப்படும் எழுதப்படாத விதியாகும். திருமணங்கள் மட்டுமல்ல… காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகு விழா போன்ற விசேடங்களுக்கும் ‘மொய் எழுதுதல்’ முக்கியமான இடம் வைக்கிறது. மொய் வரவுக்காகவே சிலர் சின்னச் சின்ன விசேடங்களை நடத்துவதும் உண்டு. தென்மாவட்டங்களில் சில சமூகங்களில் மரண வீடுகளில் பணம் எழுதும் பழக்கம் இருப்பது பலரும் அறியாத தகவல் ஆகும். இதனை பச்சை எழுதுதல் என்கிற பெயரில் அழைக்கிறார்கள். இறந்தவர் வீட்டு உறவினர்கள் அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோர் மட்டுமே பச்சை எழுதுதலில் பங்கு கொள்கிறார்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள், அண்டை அயலார் போன்றவர்கள் பச்சை எழுதுவதில்லை. எதார்த்தமாக யோசித்ததால் கல்யாணம், காது குத்து உள்ளிட்ட விசேட வீடுகளில் மொய் எழுதுதலைக் காட்டிலும் துக்க வீடுகளில் எழுதுவது சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவும். விசேடங்கள் இன்ன தேதி என்று நிர்ணயம் செய்து நிகழ்வுக்கு தயாராகி விடுகிறார்கள்; செலவாகும் தொகைக்கும் முன்னேற்பாடு செய்து விடுவார்கள். இழப்பு வீடுகள் என்பது அப்படியல்ல.. எதிர்பாராமல் ஏற்படுவது ஆகும். நடுத்தர ஏழை குடும்பங்களில் எதிர்பாராத இறப்பு ஏற்படும் போது செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி திகைத்துப் போய் விடுகிறார்கள். கடன்களை வாங்கிக் காரியத்தை முடித்து கடனைத் தீர்ப்பதற்குள் படாதபாடுபட்டுப் போவோர் ஏராளம். வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களை… விழாக்களில் எண்ணற்ற புதுமுறைகளை காலப் போக்கில் புகுத்துகின்றோம். அது போன்று இறப்பு வீடுகளில் மொய் எழுதுகின்ற பழக்கத்தை அனைத்து சமூகத்தினரும் கடைப்பிடித்தால் பலரும் பயன்பெறுவர்.
Tags Making Moi மொய் செய்தல்
Similar Posts For You
மொய் செய்தல் - செல்வகதிரவன்
நமது நிருபர்
1/12/2020 5:30:00 AM
சுசில்காஜல் லக்கீம்பூர் விவசாயிகளின் மரணமே பாஜக சவப்பெட்டியின் கடைசி ஆணிகள்
நமது நிருபர்
11/27/2021 9:52:23 PM
சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்
நமது நிருபர்
11/27/2021 8:23:53 PM
Tags
தொடர்புடைய செய்திகள்
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்
நமது நிருபர்
டிசம்பர் 1, 2021
‘பி.1.1.529’ கொரோனா திரிபுக்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்ட உலக சுகாதார நிறுவனம்
நமது நிருபர்
நவம்பர் 27, 2021
பழனி: பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியர் கைது
நமது நிருபர்
நவம்பர் 27, 2021
சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் – சிபிஎஸ்இ
நமது நிருபர்
நவம்பர் 27, 2021
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
நமது நிருபர்
நவம்பர் 27, 2021
தீக்கதிர்
தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது. |
நூல்கள் [11,827] இதழ்கள் [13,470] பத்திரிகைகள் [53,685] பிரசுரங்கள் [1,191] நினைவு மலர்கள் [1,524] சிறப்பு மலர்கள் [5,613] எழுத்தாளர்கள் [4,910] பதிப்பாளர்கள் [4,212] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,161]
உங்கள் பங்களிப்புகளுக்கு
"https://www.noolaham.org/wiki/index.php?title=நிறுவனம்:கிளி/_கனகபுரம்_மகா_வித்தியாலயம்&oldid=150418" இருந்து மீள்விக்கப்பட்டது |
தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை
நேரலை
செய்தித் தொகுப்பு
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
சினிமா
உலகம்
விளையாட்டு
தற்போதைய செய்திகள்
நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சி நிரல்
பிரபலமானவை
ஆயுத எழுத்து
கேள்விக்கென்ன பதில்
மக்கள் மன்றம்
இந்தியா vs நியூசிலாந்து
ஸ்பெஷல்ஸ்
தேர்தல் முடிவுகள் - 2021
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
இந்தியா vs இங்கிலாந்து
தமிழ்நாடு பிரிமீயர் லீக்
ஐபிஎல் 2021
இந்தியா vs நியூசிலாந்து
டி20 உலகக் கோப்பை
"முதலீடுகள் ஈர்க்க திட்டம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
பதிவு : நவம்பர் 22, 2021, 08:00 PM
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
WhatsApp Facebook Twitter Mail
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னையில் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த 6 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ELCOT மூலம் முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்
(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்
1227 views
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
255 views
உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீரர்கள்
உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீரர்கள் உள்பட 54 இந்திய வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
198 views
மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,
65 views
நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
3 views
மேலும் >>
பிற செய்திகள்
பாலியல் துன்புறுத்தல் - கடும் நடவடிக்கை; "மாணவர்கள் நலன் முக்கியம்" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
0 views
அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றம்
கட்சியின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் "எம்.ஜி.ஆர் மாளிகை" என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
2 views
பூமிநாதனை கொன்றவர்களை பிடித்தது எப்படி? திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் பேட்டி
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடித்தது எப்படி என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
10 views
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரிக்கை - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க கோரி, திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
6 views
கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பாக இருங்கள் - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 views
"பாதிப்பு குறித்து முழுமையாக கூறிவிட்டோம்" - ககன் தீப்சிங் பேடி
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
8 views
மேலும் >>
பதிவு செய்வது எப்படி?
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.
ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும். |
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்க பாகிஸ்தான் போர்விமானங்கள் முயற்சி மேற்கொண்டன. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர்விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டுவீழ்த்தினார் இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்.
இதையடுத்து பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.
அவரை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தமும், உலக நாடுகளின் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடும், பாகிஸ்தானை நெருக்கடிக்கு உள்ளாக்கியது, அதனை தொடர்ந்து அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய பாகிஸ்தான் அரசு, ராவல்பிண்டியில் வைக்கப்பட்டிருந்த அபி நந்தனை, ஜெனீவா ஒப்பந்தப்படி சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் காட்டியது. மாலை 4 மணியளவில் அபிநந்தனை வாகாவில் ஒப்படைப்பதாகக்கூறி இருந்த பாகிஸ்தான், பின்னர் நேரத்தை இருமுறை மாற்றியது. இரவு ஒன்பது மணிக்கு மேல் வாகாவுக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளும், செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச பிரதிநிதியும் வந்தனர்.
எல்லையில் அபிநந்தனை வரவேற்க காத்திருந்த இந்தியதரப்பிடம் அதற்கான ஆவணங்களை பாகிஸ்தான் தரப்பு வழங்கியது. அந்த ஆவணங்களை சரிபார்த்த இந்திய அதிகாரிகள் அதில் கையெழுத்திட்டு கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அபிநந்தனை இந்திய எல்லையை நோக்கி அனுப்பி வைத்தனர். பாகிஸ்தானில் பிடிபட்ட போது விமானப்படை உடையில் இருந்த அவர், தாயகத்திற்கு திரும்பியபோது கோட் சூட் அணிந்திருந்தார். பாகிஸ்தானின் பிடியில் இரண்டு நாட்கள் இருந்தபோதிலும், கம்பீரம் குறையாத முகத்துடன் இந்திய மண்ணில் மீண்டும் கால்வைத்தார்.
அவரை இந்திய விமானப்படை துணைதளபதிகள் பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் அரவணைத்து தாய்மண்ணுக்கு அழைத்து வந்தனர். அப்போது பேட்டியளித்த ஆர்.ஜி.கே.கபூர், ‘விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது, அபிநந்தனுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர் விரிவான மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட விருக்கிறார். அபிநந்தன் திரும்பி வந்துள்ளதால் இந்திய விமானப்படை மகிழ்ச்சி கொள்கிறது’ என்று பேசியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் ஷிவ் துலார்சிங், தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என அபிநந்தன் கூறினார். அவர் சிரிப்பைத்தவிர வேறு எதையும் சொல்லவில்லை என்றார்.
பிறகு வாகா எல்லையில் இருந்து கார்மூலமாக அபிநந்தன் வாகன அணிவகுப்புடன் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் பலமணி நேரமாக காத்திருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். அமிர்தசரஸிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிநந்தன், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அபிநந்தன் தொடர்புடைய 11 வீடியோக்களை யு டியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. அபிநந்தன் பாகிஸ்தான் படையினரால் பிடிபட்டது தொடர்பான வீடியோக்கள் யு டியூப் தளத்தில் இருந்து, நீக்குமாறு கூறியது. இதையடுத்து, அந்த வீடியோக்களை ‘யு டியூப்’ இணையதளத்தை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது
Related Posts:
`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்
அபிநந்தன் பத்திரமாக உள்ளார் பாகிஸ்தான் ராணும்
அபிநந்தன் என்ற பெயருக்கே புதிய அர்த்தம் கிடைத்துள்ளது
பாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி
தீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி
பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை
Share this:
Related
Tags:
அபிநந்தன்
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
தொடர்புடையவை
அபிநந்தன் என்ற பெயருக்கே புதிய அர்த்த� ...
அபிநந்தன் விடுதலைக்குப் பின் உள்ள நடை� ...
தலையங்கம்
“ஒரே சுகாதாரம்” உலகின் குருவாகும் � ...
2021-11-14 — 0 comments
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் ... |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
அச்சு முன்காட்சி View:
ஆல் வகைப்படுத்துக:
அடையாளம்காட்டி
திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது
தலைப்பு
பொருத்தம்/இயைபு?
உசாத்துணைக் குறி
ஆரம்பத் திகதி
முடிவு திகதி
திசை/ நோக்கம்/ ஏவுரை?:
ஏறுமுகமான/ ஏறுநிரை?
இறங்குமுகமான
Cameron Treleaven
நகல்நினைவி இணை
CA ON00349 2003.001
Fonds
1993
This fonds is divided into 2 series, according to format. These are: Video Material and Cinefilms. All of the material in this collection pertains to the
production of one music video by the Toronto-based band Cowboy Junkies.
The first series, Video Material, consists of the screening dubs of the camera original negative (for editorial decisions) and protection copies (for actual high quality editing). A copy is also included.
The second series, Cinefilms, consists of 35mm colour camera original negative footage from which the final production was culled. |
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மதிப்பீட்டுக்கு உகந்த நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
கன்னி
கன்னி: ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவு கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதிக்கும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவுகளால் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புக்கள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள். |
ஆலயங்களுக்கு அருகே உள்ள பூக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது என சிரம்பான் பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் எஸ்ஓபி-யை முழுமையாக பயன்படுத்திதான் பூ வியாபாரம் செய்கிறோம். இங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாகவும், குடும்பமாகவும் வருவது கிடையாது. தனி ஆளாக ஒருவராக வந்து பூக்களை அல்லது பூ மாலையை வாங்கி செல்கிறார்கள்.
பூக்கடையில் கோவிட்-19 தொற்று பரவியதாக இதுவலையில் எந்தவொரு பதிவும் இல்லை, அப்படி இருக்கையில், ஏன் சிரம்பான் பசார் பெசாரில் பூக்கடைகள் திறக்க அனுமதிக்கக்கூடாது. விவசாயம் சார்ந்த பூக்கடையை தவிர்த்து காய்கறிகள், பழவகைகள் போன்ற வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் வேளையில், அத்துறையை சார்ந்த பூக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் .
இதனிடையே நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதனை தொடர்ப்புக்கொண்டு இவ்விவகாரம் குறித்து கேட்டபோது, பூக்கடைகள் திறப்பதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடமிருந்து எந்தவோர் அனுமதியும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றார்.
மாநில பாதுகாப்பு மன்றம் அதற்கான எந்தவோர் அறிவிப்பையும் செய்வதற்கு அனுமதிக்கவில்லை இருந்தபோதும் இதற்கான பரிந்துரை ஒன்றை ஏற்கனவே தாம் மாநில மந்திரி பெசார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதைக் குறிப்பிட்டார். |
சார்லஸ் மேன்சன் குற்றவாளியாக இருந்த ஒரு கொலைகாரர். 1960 களின் பிற்பகுதியில், "குடும்பத்தை" அறியப்பட்ட ஒரு ஹிப்பி கும்பல் குழுவை மேன்சன் நிறுவினார், அவர் தனது சார்பாக மற்றவர்களை கொடூரமாக கொலை செய்தார்.
மேன்சன் ஒரு சிக்கலான குழந்தை
சார்லஸ் மேன்சன், சில்சினாட்டி, ஓஹியோவில் 16 வயதான காத்லீன் மடோக்ஸிற்கு நவம்பர் 12, 1934 இல் சார்லஸ் மில்ஸ் மடோக்ஸாக பிறந்தார். காத்லீன் 15 வயதில் வீட்டில் இருந்து ஓடிவிட்டார், அவரது சமய வளர்ப்பில் இருந்து கிளர்ச்சியிலிருந்து வெளியேறினார்.
சார்லஸ் பிறந்த பிறகும், அவர் வில்லியம் மேன்சனை மணந்தார். அவர்களது சுருக்கமான திருமணம் இருந்தபோதிலும், அவரது மகன் தனது பெயரை எடுத்து, பின்னர் சார்லஸ் மேன்சன் என்று அழைக்கப்படுவார்.
காத்லீன் 1940 ஆம் ஆண்டில் வலுவான ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சிறைக்கு உட்பட சிறைச்சாலையில் அதிக நேரம் செலவழித்திருந்தார் மற்றும் அறியப்பட்டார். மேன்சன் அடிக்கடி சொல்கிற ஒரு கதையால் நிரூபிக்கப்பட்டதைப் போல அவள் ஒரு தாயாக இருக்க விரும்பவில்லை போல தோன்றுகிறது. :
"அம்மா அவளுடைய மடியில் ஒரு ஓட்டலில் ஒரு மதிய நேரத்தில் இருந்தாள், அவளுடைய குழந்தையின் குழந்தை இல்லாமல் ஒரு வண்டிமணி அம்மா, என் அம்மாவை அவளிடம் இருந்து வாங்குவதை நகைச்சுவையாக சொன்னாள் அம்மா. அவன் உன்னுடையவன். ' அந்தப் பணியாளன் பீர் ஒன்றை அமைத்தான், அம்மா முடிந்த அளவுக்கு அதைச் சுற்றியிருந்தான், என்னிடம் இல்லாமல் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு என் மாமா வெயிட்ரஸ் நகரத்தை தேடி தேடி என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. "
அவரது தாயார் அவரை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்பதால், மேன்சன் தனது இளைஞர்களை பல்வேறு உறவினர்களின் வீடுகளில் கழித்தார்.
இந்த சிறுவனுக்கு நல்ல அனுபவங்கள் இல்லை. அவரது பாட்டி, மேன்சனின் தாயிடம் தள்ளப்பட்ட மத வெறித்தனத்தை தொடர்ந்தார். ஒரு மாமா அவரை மிகவும் கரிசனையுள்ளவராகக் குறைகூறினார். மற்றொரு சூழ்நிலையில், மாமா அவர் தற்கொலை செய்துகொண்டதால், அவரது நிலம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
சீர்திருத்த பள்ளிகளில் டீன் எயர்ஸ்
அவரது சமீபத்திய காதலால் அவரது தாயுடன் தோல்வி அடைந்த பிறகு, மேன்சன் ஒன்பது வயதில் திருட ஆரம்பித்தார். சிறைச்சாலையுடன் அவரது முதல் சந்திப்பு இந்தியானாவின் கிபல்ட் ஹோம் ஃபார் பாய்ஸ். இது அவரது கடைசி சீர்திருத்த பாடசாலையாக இருக்காது, அவர் கும்பல் மற்றும் கார் திருட்டுத்தனத்தை தனது திறமைக்கு சேர்க்கும் முன்பே நீண்ட காலம் இல்லை. அவர் ஒரு பள்ளியில் இருந்து தப்பி, திருட, பிடிபட்டார், மறுபடியும் ஒரு சீர்திருத்த பள்ளியில் மீண்டும் வருவார்.
ஒரு இளைஞனைப் போல், மேன்சன் ஒரு தனித்துவமானவராக இருந்தார், சிறையில் அடைக்கப்படாத போதும் அவரது சொந்த வாழ்க்கையில் அடிக்கடி வாழ்ந்தார். அவர் வயது முதிர்ந்தவராக வடிவமைக்கும் மாஸ்டர் மானிபுலேட்டர் ஆக ஆரம்பித்தபோதுதான் இது. அவர் யாரிடமிருந்து விடுபட முடியும் என்பதை அறிந்தபோது அவர் திறமையானவராக ஆனார்.
அவர் 17 வயதாக இருந்தபோது, அவர் ஒரு ஸ்டோலன் கார் ஒன்றை அரசு வழிகளிலும், அவரது முதல் கூட்டாட்சி குற்றம் மற்றும் கூட்டாட்சி சிறையில் ஒரு வேலையையும் வழிநடத்தியது. அங்கு அவரது முதல் ஆண்டில், அவர் மற்றொரு வசதி மாற்றப்படும் முன் எட்டு தாக்குதல் குற்றச்சாட்டுகளை வரை racked.
மேன்சன் திருமணம் செய்துகொண்டார்
1954 இல், 19 வயதில், மேன்சன் நல்ல நடத்தை ஒரு அசாதாரண போட் பின்னர் பரோலில் வெளியிடப்பட்டது. அடுத்த வருடம், ரோசாலி வில்லிஸ் என்ற 17 வயதான பெண்மணியை மணந்தார், இருவரும் ஒரு திருடப்பட்ட காரில் கலிபோர்னியாவிற்குப் புறப்பட்டனர்.
ரோசலி கர்ப்பமாகிவிட்டால் அது நீண்டகாலம் இல்லை. மேன்சனுக்கு இது பயனுள்ளதாக இருந்தது, ஏனெனில் அது ஒரு காரை திருடிச்செல்ல சிறைச்சாலை நேரத்திற்கு பதிலாக அவரைப் பரிசோதித்தது.
அவரது அதிர்ஷ்டம் நீடிக்கும்.
மார்ச் 1956 இல், ரோசலி சார்லஸ் மேன்சன் ஜூனியர் (அவர் 1993 இல் தற்கொலை செய்து கொண்டார்), அவரது தந்தை திரும்பப் பெற்றபின், சிறைக்கு அனுப்பப்பட்ட ஒரு மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பிறந்தார். தண்டனை இந்த நேரத்தில் முனைய தீவு சிறையில் மூன்று ஆண்டுகள். ஒரு வருடம் கழித்து, அவரது மனைவி யாரோ புதிய, இடதுசாரி நகரத்தை கண்டுபிடித்தார், ஜூன் 1957 இல் மன்சன் விவாகரத்து செய்தார்.
மேன்சன் கான் மேன்
1958 இல், சிறையில் இருந்து மேன்சன் விடுதலை செய்யப்பட்டார். வெளியே சென்றபோது, ஹாலிவுட் திரைப்படத்தில் மேன்சன் பிம்பத்தைத் தொடங்கினார். அவர் ஒரு இளம் பெண்ணை பணத்திலிருந்து வெளியேற்றி, 1959 ஆம் ஆண்டில், அஞ்சல் பெட்டிகளில் இருந்து காசோலைகளை திருடி ஒரு 10 ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை பெற்றார்.
அவர் மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்து கொண்டார், இந்தச் சமயத்தில் கன்டி ஸ்டீவன்ஸ் (அவருடைய உண்மையான பெயர் லியோனா) என்ற ஒரு விபச்சாரிக்கு, மற்றும் இரண்டாவது மகனான சார்லஸ் லூதர் மான்சன் என்பவருக்கு பிறந்தார். அவரது அடுத்த சிறைத் தண்டனைக்குப்பின் விரைவில் அவரை விவாகரத்து செய்வார்.
இந்த கைது ஜூன் 1, 1960 இல் நிகழ்ந்தது. விபத்து விபச்சாரத்தின் நோக்கத்துடன் மாநில கோடுகளை கடந்து, அதன் பரோல் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அவர் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டார் மற்றும் வாஷிங்டன் மாநிலத்தின் கடற்கரையில் மெக்நீல் தீவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அவரது தண்டனை ஒரு பகுதியாக கலிபோர்னியாவின் முனையம் தீவில் மீண்டும் வழங்கப்படும்.
இந்த சிறைச்சாலையின் போது மேன்சன் செயிண்டாலஜி மற்றும் இசையைப் படிக்கத் தொடங்கினார். அவர் மார்கர் பர்கர் குழுவின் முன்னாள் உறுப்பினரான பிரபலமான ஆல்வின் "புல்லரிப்பு" கர்பிஸுடன் நட்புடன் இருந்தார். கார்லிஸ் சார்லஸ் மேன்சன் ஸ்டீல் கிதார் விளையாட்டிற்குப் போதனையைப் பெற்றபின், மேன்சன் இசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எல்லா நேரத்திலும் பயிற்சி செய்தார், டஜன் கணக்கான அசல் பாடல்களை எழுதினார், பாட ஆரம்பித்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, அவர் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருக்கலாம் என நம்பினார்.
மேன்சன் ஒரு தொடர்ந்து
மார்ச் 21, 1967 இல், மேன்சன் மீண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நேரத்தில் அவர் சான் பிரான்சிஸ்கோவின் ஹைட்-அஷ்பரிக்குத் தலைமை தாங்கினார், அங்கு ஒரு கிதார் மற்றும் மருந்துகள் இருந்தார், அவர் கலக்கினார் மற்றும் ஒரு பின்தொடரத் தொடங்கினார்.
மேன்சன் வீழ்ச்சிக்கு முதன்முதலில் மேரி ப்ரைன்னர் ஆவார். யு.சி. பெர்க்லி நூலகர் ஒரு கல்லூரி பட்டம் அவரை நகர்த்த அழைப்பு மற்றும் அவரது வாழ்க்கை நிரந்தரமாக மாறும் என்று. அவர் போதை மருந்துகளைத் துவங்குவதற்கு முன்பு நீண்ட காலம் இல்லை, அவர் சென்ற இடத்திற்கு மேன்சனைப் பின்தொடர தனது வேலையை விட்டு விலகினார். அவர் மேன்சன் குடும்பம் என்று அழைக்கப்படும் மற்றவர்களுடன் சேர உதவிய முக்கிய நபராக இருந்தார்.
லைனெட் ஃப்ரோமே விரைவில் ப்ரன்னர் மற்றும் மேன்சன் உடன் இணைந்தார். சான் பிரான்சிஸ்கோவில், மூவரும் பல இளைஞர்களை இழந்தனர் மற்றும் வாழ்க்கையில் ஒரு நோக்கத்திற்காக தேடினர். மேன்சனின் நீண்டகால தீர்க்கதரிசனங்களும், ஹிப்னாடிக், போலியான பாடல்களும், அவர் ஒரு விதமான ஆறாவது கருத்தை கொண்டிருந்ததாக புகழ் பெற்றது.
இந்த புதிய நிலையை ஒரு வழிகாட்டியாகவும், குழந்தை பருவத்திலும் சிறையில் அவர் கையாளும் கையாளுதலின் திறனையும் பாதிக்கக் கூடியவர்களிடம் அவர் ஈர்க்கப்பட்டார்.
அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மான்சன் ஒரு குரு மற்றும் தீர்க்கதரிசி என்று பார்த்தார்கள், அவர்கள் எங்கும் அவரைப் பின்பற்றுவார்கள். 1968 ஆம் ஆண்டில், மான்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் தெற்கு கலிபோர்னியாவிற்கு சென்றனர்.
தி ஸ்பான் ரஞ்ச்
மேன்சன் இன்னும் ஒரு இசை வாழ்க்கைக்காக நம்பிக்கையுடன் இருந்தார். ஒரு அறிமுகம் மூலம், மேன்சன் சந்தித்தார் மற்றும் கடற்கரை பாய்ஸ் டென்னிஸ் வில்சன் வெளியே தொங்கி. பீச் பாய்ஸ் கூட மேன்சனின் பாடல்களில் ஒன்றை பதிவுசெய்தது, இது அவர்களின் "20/20" ஆல்பத்தின் பி-பக்கத்தில் "நெவர் கண்ட் நாட் டு லவ்" என்று தோன்றியது.
வில்சன் மூலம், மேன்சன் டெரி மெல்ச்சர், டோரிஸ் டேவின் மகனை சந்தித்தார். மான்சர் மெல்ச்சர் தனது இசை வாழ்க்கையை முன்னெடுக்க போகிறார் என நம்பினார், ஆனால் எதுவும் நடக்காதபோது, மேன்சன் மிகவும் கவலையடைந்தார்.
இந்த நேரத்தில், சார்லஸ் மேன்சன் மற்றும் அவரது சில ஆதரவாளர்கள் ஸ்பான் ரன்ச்சிற்கு சென்றனர். சான்ட்வொர்த் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கின் வடமேற்கில் அமைந்திருக்கும் இந்த பண்ணை, 1940 கள் மற்றும் 1950 களில் மேற்கத்திய திரைப்படங்களில் பிரபலமாக இருந்தது. மேன்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நகர்ந்தபோது, அது " குடும்பம் " என்ற ஒரு கலவை கலவை ஆனது.
பிரன்னர் மேன்சன் தனது மூன்றாவது மகனையும் கொடுத்தார். காதலர் மைக்கேல் மேன்சன் ஏப்ரல் 1, 1968 அன்று பிறந்தார்.
ஹெல்டர் ஸ்கெல்டர்
சார்ல்ஸ் மேன்சன் மக்களை கையாள்வதில் நல்லவராக இருந்தார். பல்வேறு மதங்களிலிருந்து அவர் தனது சொந்த தத்துவத்தை உருவாக்கினார். பீட்டில்ஸ் அவர்களது "வெள்ளை ஆல்பம்" 1968 இல் வெளியிட்டபோது, மேன்சன் அவர்களுடைய பாடலான "ஹெல்டர் ஸ்கெல்டர்" வரவிருக்கும் ஒரு இனப் போரைக் கணித்துவிட்டதாக நம்பினார்.
ஹென்ற்டர் ஸ்கெல்டர், மேன்சன் நம்பினார், 1969 ம் ஆண்டு கோடையில் கறுப்பர்கள் உயரும் மற்றும் அனைத்து வெள்ளை மக்களையும் கொன்று குவிக்கும் போதெல்லாம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
அவர் இறந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி நகரம் தங்கம் பயணம் ஏனெனில் அவர்கள் சேமிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்.
இருப்பினும், மேன்சன் கணித்திருப்பதாக அர்மகெதோன் கூறியபோது, அவரும் அவருடைய சீடர்களும் "எப்படி கறுப்பர்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதைக் காட்ட வேண்டும்" என்று அவர் கூறினார். ஜூலை 25, 1969 அன்று கேரி ஹின்மான் என்ற இசை ஆசிரியரான அவர்களது முதல் அறியப்பட்ட கொலை ஆகும். பிளாக் பாந்தர்கள் செய்ததைப் போலவே குடும்பம் காட்சிக்கு வந்தது.
மேன்சன் ஆல்டர்டு த மோர்டர்ஸ்
ஆகஸ்ட் 9, 1969 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் 10050 Cielo Drive க்கு சென்று அவரது மக்களில் நான்கு பேரை மன்சன் கட்டளையிட்டார். வீட்டிற்கு ஒருமுறை டெர்ரி மெல்ச்சர், சாதனை படைத்த தயாரிப்பாளர் மன்சோனின் இசை வாழ்க்கையின் கனவுகளை மறுத்தவர். இருப்பினும், மெல்ச்சர் அங்கு இல்லை; நடிகை ஷரோன் டேட் மற்றும் அவரது கணவர், இயக்குனர் ரோமன் போலன்ஸ்ஸ்கி, வீட்டை வாடகைக்கு விட்டிருந்தனர்.
சார்லஸ் "டெக்ஸ்" வாட்சன், சூசன் அட்கின்ஸ், பாட்ரிசியா க்ர்ர்விங்கிங்கல் மற்றும் லிண்டா கசாபியன் ஆகியோர் கொடூரமாக டேட், அவரது பிறக்காத குழந்தையை கொலை செய்தனர், மற்றும் அவளை சந்தித்த நான்கு பேரும் (போலன்ஸ்கி வேலைக்காக ஐரோப்பாவில் இருந்தார்). அடுத்த நாள், மேன்சனின் சீடர்கள் லெனோ மற்றும் ரோஸ்மேரி லாபியர்காவை தங்கள் வீட்டில் கொடூரமாக கொன்றனர்.
மேன்சனின் சோதனை
யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்க போலீஸ் பல மாதங்கள் எடுத்தது. டிசம்பர் 1969 இல், மான்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். டெட் மற்றும் லாபியங்கா படுகொலைகளுக்கான விசாரணைகள் ஜூலை 24, 1970 இல் தொடங்கியது. ஜனவரி 25 இல், கொலை செய்யப்படுவதற்கு முதல் கட்ட கொலை மற்றும் சதித்திட்டத்தின் மீது மேன்சன் குற்றஞ்சாட்டப்பட்டார். மார்ச் 29, 1971 இல், மேன்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை வாழ்க்கை
1972 இல் கலிபோர்னியா உச்சநீதி மன்றம் மரண தண்டனையை சட்டவிரோதமாக நிறுத்தியபோது மேன்சன் மரண தண்டனையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.
சிறையில் அவர் பல தசாப்தங்களாக, சார்லஸ் மேன்சன் நவம்பர் 2017 ல் அமெரிக்க இறந்த மற்ற கைதிகளை விட அஞ்சல் பெற்றார். |
சி (+ 3 categories; ±பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து சேவைகள்→பகுப்பு:தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து using HotCat)
← முந்தைய வேறுபாடு
10:46, 5 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து))
அடுத்த வேறுபாடு →
|accessdate=2009-04-04}}</ref>
வண்டி எண் 12661 தினசரி செங்கோட்டையிலிருந்து தினமும் 8:55 மணிக்கு சென்னை நோக்கி செல்ல தொடங்குகிறது, அதே சமயத்தில் மறு மார்க்கத்தில் வண்டி எண் 12662, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்கிறது.<ref name="hindu3">{{Cite news|work=[[Theதி Hinduஇந்து]] online edition|title=Timings of Podhigai, Nellai Express trains to change|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/timings-of-podhigai-nellai-express-trains-to-change/article5509139.ece}}</ref> |
நாச்சாங்குளம் ஊராட்சி (Nachangulam Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1199 ஆகும். இவர்களில் பெண்கள் 613 பேரும் ஆண்கள் 586 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்[தொகு]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள்
எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 126
சிறு மின்விசைக் குழாய்கள் 13
கைக்குழாய்கள் 5
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 20
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 5
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 88
ஊராட்சிச் சாலைகள் 8
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10
சிற்றூர்கள்[தொகு]
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
சிந்தாமணி
ஊடுபோகி
வெட்டிவயல்
பாண்டனி
நாச்சாங்குளம்(திருவள்ளுவர்-நகர்)
பாரதிவேலாங்குலம்
கண்டியன்புதுவயல்
சான்றுகள்[தொகு]
↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தேவகோட்டை வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
பா
உ
தொ
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்
இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம்
விசவனூர் · விரையாதகண்டன் · விஜயன்குடி · வாணி · வண்டல் · வல்லக்குளம் · வடக்குகீரனூர் · உதயனூர் · துகவூர் · திருவள்ளூர் · தெற்கு கீரனூர் · தாயமங்கலம் · தடியமங்கலம் · சூராணம் · சீவலாதி · சாத்தனூர் · சாத்தனி · சமுத்திரம் · சாலைகிராமம் · எஸ். காரைக்குடி · புலியூர் · புதுக்கோட்டை · பூலாங்குடி · பெரும்பச்சேரி · நெஞ்சத்தூர் · நகரகுடி · நாகமுகுந்தன்குடி · வடக்கு அண்டக்குடி · முத்தூர் · முனைவென்றி · மேலாயூர் · மருதங்கநல்லூர் · குறிச்சி · குமாரகுறிச்சி · கோட்டையூர் · கொங்கம்பட்டி இடையவலசை · கீழநெட்டூர் · கீழாய்க்குடி · கட்டனூர் · கச்சாத்தநல்லூர் · காரைக்குளம் · கண்ணமங்கலம் · கல்லடிதிடல் · கலங்காதன்கோட்டை · கலைக்குளம் · இளமனூர் · பிராமணக்குறிச்சி · அரியாண்டிபுரம் · அரண்மனைக்கரை · அரணையூர் · ஆழிமதுரை · அளவிடங்கான் · ஆக்கவயல் · அதிகரை மெய்யனேந்தல் · எ. நெடுங்குளம்
எஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்
வாராப்பூர் · வலசைப்பட்டி · உரத்துப்பட்டி · உலகம்பட்டி · புழுதிபட்டி · எஸ். புதூர் · பிரான்பட்டி · நெடுவயல் · முசுண்டப்பட்டி · மின்னமலைப்பட்டி · மேலவண்ணாரிருப்பு · மாந்தகுடிப்பட்டி · மணலூர் · குன்னத்தூர் ஊராட்சி · குளத்துப்பட்டி · கிழவயல் · கரிசல்பட்டி · கே. புதுப்பட்டி · கணபதிபட்டி · தர்மபட்டிகொண்டபாளையம் · செட்டிகுறிச்சி
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம்
வெங்களுர் · உஞ்சனை · திருப்பாக்கோட்டை · தேரளப்பூர் · தத்தனி · சிறுவாச்சி · புத்தூரணி · புசாலகுடி · கொடுவூர் · கண்ணன்குடி · கங்கனி · காண்டியூர் · கல்லிவாயல் · களத்தூர் ஊராட்சி · கே. சிறுவனூர் · ஹனுமந்தகுடி · சித்தானூர்
கல்லல் ஊராட்சி ஒன்றியம்
விசாலையன்கோட்டை · வெற்றியூர் · வேப்பங்குளம் · வெளியாத்தூர் · தட்டட்டி · தளக்காவூர் · சிராவயல் · செவரக்கோட்டை · செம்பனூர் · எஸ். ஆர். பட்டணம் · பொய்யலூர் · பாதரக்குடி · பனங்குடி · பலவான்குடி · பி. நெற்புகப்பட்டி · நடராஜபுரம் · நரியங்குடி · நாச்சியாபுரம் · என். வைரவன்பட்டி · என். மேலையூர் · என். கீழையூர் · மேலப்பட்டமங்கலம் · மாலைகண்டான் · குருந்தம்பட்டு · குன்றக்குடி · கோவிலூர் · கூத்தலூர் · கீழப்பூங்குடி · கீழப்பட்டமங்கலம் · கண்டரமாணிக்கம் · கம்பனூர் · கல்லுப்பட்டி · கள்ளிப்பட்டு · கல்லல் · கலிப்புலி · கே. ஆத்தங்குடி · இலங்குடி · தேவபட்டு · ஆற்காடு வெளுவூர் · அரண்மனைப்பட்டி · ஆலங்குடி · ஆலம்பட்டு · அரண்மனை சிறுவயல் · ஏ. கருங்குளம்
காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
விட்டனேரி · வேளாரேந்தல் · உசிலங்குளம் · உடகுளம் · தென்மாவலி · சூரக்குளம் புதுக்கோட்டை · சிரமம் · சிலுக்கப்பட்டி · செங்குளம் · செம்பனூர் · சேதாம்பல் · புலியடிதம்மம் · பெரியகண்ணனூர் · பருத்திக்கண்மாய் · பள்ளித்தம்மம் · பாகனேரி · நகரம்பட்டி · நாடமங்கலம் · முத்தூர்வாணியங்குடி · முடிக்கரை · மேலமருங்கூர் · மேலமங்கலம் · மறவமங்கலம் · மாரந்தை · மரக்காத்தூர் · மல்லல் · குருந்தங்குடி · கொட்டகுடி · கொல்லங்குடி · காட்டேந்தல் சுக்கானூரணி · காஞ்சிப்பட்டி · காளையார்மங்கலம் · காளையார்கோவில் · காளக்கண்மாய் · காடனேரி · இலந்தக்கரை · கெளரிபட்டி · ஏரிவயல் · அதப்படக்கி · அம்மன்பட்டி · அல்லூர் பனங்காடி · எ. வேலாங்குளம் · சொக்கநாதபுரம்
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
வேங்காவயல் · வீரசேகரபுரம் · வடகுடி · டி. சூரக்குடி · சிறுகபட்டி · செங்காத்தங்குடி · சங்கராபுரம் · சாக்கவயல் · பிரம்புவயல் · பெரியகோட்டை · பெரியகொட்டகுடி · பி. முத்துப்பட்டிணம் · ஓ. சிறுவயல் · நேமம் · நாட்டுச்சேரி · மித்திராவயல் · ஐ. மாத்தூர் · கொத்தமங்கலம் · களத்தூர் · ஜெயங்கொண்டம் · இலுப்பக்குடி · சொக்கலிங்கம் புதூர் · செட்டிநாடு · அரியக்குடி · ஆம்பக்குடி · அமராவதிபுதூர்
சிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம்
வகுத்தெழுவன்பட்டி · வடவன்பட்டி · சிவபுரிப்பட்டி · செல்லியம்பட்டி · சதுர்வேதமங்கலம் · எஸ். வையாபுரிபட்டி · எஸ். செவல்பட்டி · எஸ். எஸ். கோட்டை · எஸ். மாத்தூர் · எஸ். மாம்பட்டி · பிரான்மலை · ஒடுவன்பட்டி · முறையூர் · மேலப்பட்டி · மதுராபுரி · மருதிப்பட்டி · டி. மாம்பட்டி · மல்லாகோட்டை · எம். சூரக்குடி · கோழிக்குடிப்பட்டி · கிருங்காக்கோட்டை · கண்ணமங்கலப்பட்டி · கல்லம்பட்டி · ஜெயங்கொண்டநிலை · எருமைப்பட்டி · ஏரியூர் · அரளிக்கோட்டை · அணைக்கரைப்பட்டி · அ. மேலையூர் · அ. காளாப்பூர்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்
வாணியங்குடி · வள்ளனேரி · திருமலைகோனேரிபட்டி · தமறாக்கி (தெற்கு) · தமறாக்கி (வடக்கு) · சாலூர் · சக்கந்தி · பொன்னாகுளம் · பிரவலூர் · பில்லூர் · பெருங்குடி · படமாத்தூர் · ஒக்கூர் புதூர் · ஒக்கூர் · ஒக்குப்பட்டி · நாமனூர் · நாலுகோட்டை · முளக்குளம் · முடிகண்டம் · மேலப்பூங்குடி · மாத்தூர் · மாங்குடி தெற்குவாடி · மலம்பட்டி · மதகுபட்டி · குமாரப்பட்டி · குடஞ்சாடி · கோவனூர் · கொட்டகுடி கீழ்பாத்தி · கீழப்பூங்குடி · காட்டுநெடுங்குளம் · கட்டாணிப்பட்டி · கண்ணாரிருப்பு · காஞ்சிரங்கால் · கண்டாங்கிப்பட்டி · இலுப்பக்குடி · இடையமேலூர் · சோழபுரம் · அரசனூர் · அரசனி முத்துப்பட்டி · அலவாக்கோட்டை · ஆலங்குளம் · அழகிச்சிப்பட்டி · அழகமாநகரி
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்
விராமதி · வேலங்குடி. ஏ · வஞ்சினிப்பட்டி · வாணியங்காடு · வையகளத்தூர் · வடமாவலி · துவார் · திருவுடையார்பட்டி · திருக்கோஷ்டியூர் · திருக்கோளக்குடி · திருக்களாப்பட்டி · சுண்ணாம்பிருப்பு · செவ்வூர் · சேவினிப்பட்டி · எஸ். இளயாத்தங்குடி · இரணசிங்கபுரம் · பூலாங்குறிச்சி · பிள்ளையார்பட்டி · ஒழுகமங்கலம் · வடக்கு இளையாத்தங்குடி · நெடுமரம் · மாதவராயன்பட்டி · மணமேல்பட்டி · மகிபாலன்பட்டி · குமாரபேட்டை · கோட்டையிருப்பு · கொன்னத்தான்பட்டி · கீழச்சிவல்பட்டி · காட்டாம்பூர் · கருப்பூர் · பி. கருங்குளம் · காரையூர் · கண்டவராயன்பட்டி · கே. வைரவன்பட்டி · அம்மாபட்டி · பிராமணப்பட்டி · ஆவணிப்பட்டி · ஆத்திரம்பட்டி · ஆலம்பட்டி · ஏ. தெக்கூர்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்
வெள்ளூர் · வீரனேந்தல் · தூதை · திருப்பாச்சேத்தி · தவத்தாரேந்தல் · டி. வேலாங்குளம் · டி. ஆலங்குளம் · டி. புளியங்குளம் · சொட்டதட்டி · எஸ். வாகைகுளம் · புலியூர் சயனாபுரம் · பொட்டப்பாளையம் · பூவந்தி · பிரமனூர் · பாட்டம் · பாப்பாகுடி · பழையனூர் · ஓடாத்தூர் · முதுவன்திடல் · முக்குடி · மைக்கேல்பட்டிணம் · மேலராங்கியம் · மேலச்சொரிக்குளம் · மாரநாடு · மாங்குடி அம்பலத்தாடி · மணலூர் · மழவராயனேந்தல் · மடப்புரம் · லாடனேந்தல் · கொந்தகை · கிளாதரி · கீழடி · கீழச்சொரிக்குளம் · கானூர் · காஞ்சிரங்குளம் · கணக்கன்குடி · கழுகேர்கடை · கல்லூரணி · கலியாந்தூர் நயினார்பேட்டை · கே. பெத்தானேந்தல் · இலந்தைகுளம் · ஏனாதி-தேளி · செல்லப்பனேந்தல் · அல்லிநகரம் · அச்சங்குளம்
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்
வெட்டிவயல் · வெள்ளிக்கட்டி · வீரை · உருவாட்டி · உறுதிகோட்டை · தூணுகுடி · திருவேகம்பத்தூர் · திருமணவயல் · திராணி · திடக்கோட்டை · தென்னீர்வயல் · தானாவயல் · தளக்காவயல் · சிறுவத்தி · சிறுநல்லூர் · சண்முகநாதபுரம் · செலுகை · சருகணி · சக்கந்தி · புளியால் · புதுக்குறிச்சி · பொன்னழிக்கோட்டை · பனங்குளம் · நாகாடி · நாச்சாங்குளம் · என். மணக்குடி · முப்பையூர் · மினிட்டாங்குடி · மாவிடுதிக்கோட்டை · மனைவிக்கோட்டை · குருந்தனக்கோட்டை · கிளியூர் · கீழஉச்சாணி · காவதுகுடி · கற்களத்தூர் · காரை · கண்ணங்கோட்டை · கண்டதேவி · கல்லங்குடி · இலங்குடி · எழுவன்கோட்டை · ஆறாவயல்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்
விளத்தூர் · வேம்பத்தூர் · வெள்ளிக்குறிச்சி · வாகுடி · வி. புதுக்குளம் · தெற்கு சந்தனூர் · தீர்த்தான்பேட்டை · தஞ்சாக்கூர் · தெ. புதுக்கோட்டை · சுள்ளங்குடி · சூரக்குளம் பில்லறுத்தான் · சிறுகுடி · செய்களத்தூர் · சன்னதிபுதுக்குளம் · ராஜகம்பீரம் · பெரும்பச்சேரி · பெரிய கோட்டை · பெரிய ஆவரங்காடு · பதினெட்டாங்கோட்டை · பச்சேரி · முத்தனேந்தல் · மிளகனூர் · மேலப்பிடாவூர் · மேலப்பசலை · மேலநெட்டூர் · மாங்குளம் · மானம்பாக்கி · எம். கரிசல்குளம் · குவளைவேலி · கீழப்பிடாவூர் · கீழப்பசலை · கீழமேல்குடி · கட்டிக்குளம் · கால்பிரவு · கல்குறிச்சி · இடைக்காட்டூர் · சின்னக்கண்ணணூர் · அரசகுளம் · அன்னவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சாங்குளம்_ஊராட்சி&oldid=2501141" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு:
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்
மறைக்கப்பட்ட பகுப்பு:
த. இ. க. ஊராட்சித் திட்டம்
வழிசெலுத்தல் பட்டி
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
புகுபதிகை செய்யப்படவில்லை
இந்த ஐபி க்கான பேச்சு
பங்களிப்புக்கள்
புதிய கணக்கை உருவாக்கு
புகுபதிகை
பெயர்வெளிகள்
கட்டுரை
உரையாடல்
மாறிகள் expanded collapsed
பார்வைகள்
படிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்
மேலும் expanded collapsed
தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
உதவி கோருக
புதிய கட்டுரை எழுதுக
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஏதாவது ஒரு கட்டுரை
தமிழில் எழுத
ஆலமரத்தடி
Embassy
சென்ற மாதப் புள்ளிவிவரம்
Traffic stats
உதவி
உதவி ஆவணங்கள்
Font help
புதுப்பயனர் உதவி
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
பிற
விக்கிப்பீடியர் வலைவாசல்
நன்கொடைகள்
நடப்பு நிகழ்வுகள்
கருவிப் பெட்டி
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிலையான இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுந்தொடுப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
விக்கித்தரவுஉருப்படி
அச்சு/ஏற்றுமதி
ஒரு புத்தகம் உருவாக்கு
PDF என தகவலிறக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு
மற்ற மொழிகளில்
Add links
இப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 11:43 மணிக்குத் திருத்தினோம்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
Viluppuram unseen heavy rain: rain water entering houses | விழுப்புரம் காணாத கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் – News18 Tamil |
அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ராஜேந்திர சோழன் 1019-ல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன், காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023-ல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கி அதில் பிரகதீஸ்வரர் கோயிலை நிறுவினான். பெண்ணின் நலினத்தை போல இக்கோவிலின் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் யுனெஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் கடந்த 1932-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனையடுத்து 85 ஆண்டுகளுக்கு பிறகு பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 6-ம் தேதி உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசம் கங்கை நதியிலிருந்து 108 குடங்களில் புனிதநீர் எடுத்துவந்து தஞ்சை மாவட்டம் திருலோகி எனும் இடத்தில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் குறிப்புகள் கொண்ட இடத்தில் வைக்கப்பட்டு, பின் கடந்த 27-ம் தேதி வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஆதினகர்த்தர் ஆகியோர் புடைசூழ யாணை மீது புனிதநீர் வைக்கப்பட்டு ஊர்வலமாக கங்கைகொண்டசோழபுரத்திற்கு வந்தடைந்தது.
85 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற 8 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் 85 சிவாச்சாரியர்கள், 20 வேத விற்பன்னர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வேதங்களையும், பன்னிரு திருமுறைகளையும் பாடி யாகபூஜைகள் செய்தனர். இந்நிலையில், காலை கோபூஜை செய்யப்பட்டு 8.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. இதனையடுத்து 9.30 மணியளவில் மூலவர், துர்க்கையம்மன், பிரகன்நாயகி ஆலயங்களின் கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றினர். இதனையடுத்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை காஞ்சி காமகோடி மடத்தினர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் இந்துஅறநிலையத்துறையினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி அரியலூர் எஸ்பி அனில்குமார் கிரி தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
« முந்தைய அடுத்து »
மேலும் இன்றைய செய்திகள் »
ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் டிசம்பர் 08,2021
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5ம் நாளான இன்று (8ம் தேதி) ... மேலும்
மலைநம்பி கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தல் டிசம்பர் 08,2021
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி மலைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நம்பி கோயிலில் சுவாமி ... மேலும்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.65 லட்சம் காணிக்கை டிசம்பர் 08,2021
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 12 நிரந்தர உண்டியல்கள், ஒன்பது தட்டுக்காணிக்கை உண்டியல்கள் ... மேலும்
வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி சிறப்பு பூஜை டிசம்பர் 08,2021
திருநெல்வேலி: பாளை அரியகுளம் மேலக்குளம் வாராகி அம்மன் கோயிலில் இன்று (8ம் தேதி) பஞ்சமி பூஜை நடைபெற்றது. ... மேலும்
சோழமாதேவி கோவிலில் சிறப்பு யாகம் டிசம்பர் 08,2021
மடத்துக்குளம்: மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லி அம்மன் குலசேகர சுவாமி கோவிலில் சிறப்பு ... மேலும் |
(“தாமோதர் ஆற்றுநீரைப் பயன்படுத்த வகுக்கப்பட்டுள்ள) இத்திட்டத்தினை இந்திய அரசு வரவேற்கிறது. ஆற்றையும், ஆற்றுவெள்ளத்தையும் கட்டுப்படுத்துவதுடன், நிலையான பாசனப் பரப்பை உருவாக்கி பஞ்சத்துக்கெதிரான காப்பீடு அமைத்து, அவசியத் தேவையான மண்ணாற்றல் உற்பத்திக்கு வழிவகுத்தும் அருமையானதோர் திட்டமாகக் காட்சியளிக்கிறது இத்திட்டம். தமது மாகாண மக்களுக்குக் கிடைக்கப் பெறும் நலன்களை நன்கு உணர்ந்தால், வங்காள, பீகார் அரசுகள் இத்திட்டத்தை உவகையுடன் வரவேற்கும் என்பது உறுதி.”
(1945) ஆகஸ்டு 23 ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற வங்காள, பீகார் அரசுகளின் சார்பாளர்களது மாநாட்டில் உரையாற்றிய, இந்திய அரசின் தொழிலாளர் நலத்துரை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார். தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம் குறித்த தொடக்கக் கருத்துருவை விவாதிப்பதற்காக நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு தொழிலாளர் நலத்துறை உறுப்பினரின் தலைமையில் நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய முழுமையான உரை வருமாறு:
“தாமோதர் ஆற்று நீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கானத் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்காக நாம் இரண்டாவது முறையாக இங்கே கூடியுள்ளோம். இது குறித்த முதல் கூட்டம், 1945 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் நாள் நடைபெற்றது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 1944 ஆம் ஆண்டில் வங்காள அரசு நியமித்த தாமோதர் ஆற்று வெள்ள விசாரணை குழுவின் அறிக்கை குறித்து அப்போது ஆராய்ந்தோம்.
இத்திட்டத்தை ஆற்றில் அணைகட்டி வெள்ளச் சேதத்தை தடுக்கும் திட்டமாக உருவாக்குவதா அல்லது பாசனம், மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களையும் உள்ளடக்கிய, பல்நோக்கு திட்டமாக விரிவாக்குவதா என்பதே, அன்று நம்முன் எழுந்த வினாவாகும். அம்மாநட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து பன்நோக்கு திட்டமே. அதற்கேற்றவாறு தேவையான தகவல்களைத் திரட்டி பன்நோக்கு திட்டத்தை வரைவதற்கு ஏற்பாடு செய்ய மாநாடு தீர்மானித்தது. இப்பணிக்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை முழுமையாகத் தருவதென்று இந்திய அரசின் சார்பில் கூறியிருக்கிறேன்.
வங்காளப் பொறியாளர்களின் ஒத்துழைப்புடன் வல்லுநர்களும் சேர்ந்து உருவாக்கிய திட்டம் “தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்த தொடக்க அறிக்கை” யாகக் கிடைத்துள்ளது. இவ்வறிக்கையின் படிகள் ஏற்கெனவே வங்காள, பீகார் அரசுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, இவ்வறிக்கையைத் தயாரித்த திரு.ஊர்துயினுக்கும் அவரோடு முழுமையாக ஒத்துழைத்த வங்காள அரசின் பொறியாளர்களுக்கும் நாம் மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை என் சார்பிலும் உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மின்விசை தொழில்நுட்ப வாரியத்தின் தலைவர் திரு.மாத்யூசின் ஆலோசனையும் இத்திட்டத்தை வகுப்பதில் மிகவும் உதவியுள்ளது. வரும் காலகட்டத்தில் நீர்வழிப் போக்குவரத்து வாரியத்தலைவர் திரு.கோஸ்லாவின் உதவியையும் நாம் வேண்டிப் பெறுவோம் என்பதில் ஐயமில்லை.
தற்போது தெளிவானதும் முழுமையானதுமான அறிக்கை விவரமும், தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தின் பல்வேறு மாற்று வடிவங்களும், நாம் அடுத்த செயல் திட்டத்தை வகுப்பதற்குத் தேவையான முழு விவரங்களும் நம் முன்னே வைக்கப்பட்டுள்ளன.
இவ்வறிக்கையின் பல்வேறு கூறுகளையும் குறித்து ஆலோசனை நடத்தவே நாம் இங்கு கூடியுள்ளோம். இக்கூறுகள் யாவும் நிகழ்ச்சி நிரலில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சி நிரலில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய கூறுகளும் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளன. வங்காள, பீகார் அரசுகளுக்கு இவை ஏற்கெனவே சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளமையால் நான் அவற்றை மீண்டும் இங்கே விவரித்தல் தேவையில்லை. எனவே, நான் இங்கே இரண்டு கருத்துகளைப் பற்றி மட்டும் கருத்துக் கூறி அமர்வேன். அவை கொள்கை விளக்கம் குறித்த கருத்தொன்றும், செயல்முறை நடைமுறை குறித்த கருத்தொன்றும் ஆகும்.
வெள்ளக் கட்டுப்பாடு என்பது அடிப்படைக் கொள்கை நிலையாகும். தாமோதர் ஆற்று வடிநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு எவ்வளவு கடுமையான வெள்ள காலத்திலும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று உறுதியாக நம்புவோம். தொடக்க அறிக்கை தரும் திட்டத்தில் முழுமையான பாதுகாப்புக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கையின் இரண்டாவது கூறு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தோள் கொடுத்தல் இங்கு கூடியுள்ள மூன்று அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என்பதாகும். தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் வளர்ச்சி குறித்து மூன்று அரசுகளும் எந்த அளவில் பங்கு கொண்டு ஊக்கத்துடன் செயல்பட வேண்டுமென்பதை தொடக்க அறிக்கை விளக்கி இருக்கும் தன்மை அனைவருக்கும் ஏற்புடையதாயிருக்கும் என நம்புகிறேன்.
இத்திட்டத்தினால் அப்பகுதி மக்கள் பெறும் பயன்களைத் தொகுத்துரைப்பின்,
(1) 4,700,000 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட கட்டுப்பாடுள்ள நீர்த்தேக்கம்
(2) 7,60,000 ஏக்கர் நிலத்திற்குத் தொடர்ந்த பாசன வசதி அளிப்பதற்கும், நீர்வழிப் போக்குவரத்திற்கும் உதவத் தேவையான அளவு நீர்
(3) 3,00,000 கிலோவாட் மின்திறன்,
(4) 50 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மேலும் பல லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் கிடைக்கக் கூடிய நல மேம்பாடு.
இப்போது நடைமுறை, செயல்திட்டங்கள் குறித்து கருதுவோமெனில், முன்னுரிமை அடிப்படையில் கீழ்வரும் கருத்துக்களை வரிசைப்படுத்தி உங்கள் முன் வைக்கிறேன்:
அணை அமைவிடங்களைத் தேர்ந்தெடுத்தல்;
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைவிடங்களில், கட்டுமானம் தொடங்குவதற்கு முந்தைய விரிவான கள ஆய்வுகள்;
இத்தகைய தொடக்க ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தும் அமைப்பு;
அணைகளை வடிவமைப்பதற்கும் கட்டுவதற்குமான அமைப்பு;
தேவையான பணிகளை ஒருங்கிணைத்தும், உந்தியும் தொழில்நுட்ப நிர்வாகக் கண்காணிப்பு நடத்தவும் தேவையான உயர் நிலை நிர்வாக அமைப்பை உருவாக்குதல்;
கிடைக்கும் நீரையும் மின்திறனையும் தகுந்த முறையில் பயன்படுத்தி மேம்பாடுமாறும் பகுதிகளுக்கு தேவையான, விரிவான கள ஆய்வுகள்.
செயல்முறை, நடைமுறை விவரங்கள் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்த விரும்புகிறேன். திட்டத்தின் முதன்மையான நோக்கங்கள் வெள்ளப் பாதுகாப்பும், பல்நோக்கு வளப்பெருக்கமும் என்பதில் ஐயமில்லை. அதேசமயத்தில் போர்ப் பிற்கால வேலைவாய்ப்புத் திட்டத்தையும் இதில் உள்ளடக்கலாம் என்பதை மறந்துவிட முடியாது. இப்போது எல்லா முனைகளிலும் போர் முடிந்துவிட்டது; எனவே சமாதானத்தினால் எழும் சிக்கல்களில் முக்கியமானதான வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறோம். போர்க்காலப் பணிகள் தற்போது நின்று விட்டமையாலும், செலவு மிக குறைக்கப்பட வேண்டியமையாலும் தோன்றும் மாபெரும் உள்நாட்டுப் பொருளாதார சிக்கலின் விளைவே இது.
மத்திய அரசின் பங்கு
இந்த நோக்கில் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் மிக மிக அவசரமானதொன்றாகும். இதில் ஒவ்வொரு அரசும் தரும் பங்கு என்ன என்பதை விரைவில் முடிவு செய்தால்தான் மேற்கொண்டு செயலாற்ற இயலும் என்பதால் விரைந்து முடிவெடுக்கத் தவறுதல் மதியீனமிக்க குற்றமெனலாம். எனவே, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நாம் உறுதியானதும், முழுமையானதுமான தீர்மானங்களை எய்தலாம் என்று உறுதியாக நம்புகிறேன்.
எனது உரையை முடிக்குமுன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தனது முழுப் பங்கையும் அக்கறையோடு ஆற்றுவதற்கு இந்திய அரசு ஆர்வத்தோடு தயாராக இருக்கிறது என்பதைக் கூற விரும்புகிறேன்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, ஒப்புக்கொள்ளப்பட்ட நெறியில், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேவையான தனது பங்கு அனைத்தையும் தவறாது நிறைவேற்றும் பொறுப்பு தனக்கு உண்டு என்பதை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக அமைப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டுமென்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனினும், அமைப்பு முறையொன்று தேவை என்னும் முந்தைய கருத்தில் இந்திய அரசு உறுதியாக நிற்கிறது.
இத்திட்டத்திற்கு தொடர்ந்து தேவைப்படும் கள ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் பணியாளர்களையும் அமர்த்தித் தரும் பொறுப்பை இந்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதுடன் இரண்டு மாநிலங்களிலும், போர் பிற்கால வளர்ச்சிப் பணிகளுக்கு பாதகமில்லாத வகையில் கிடைக்கும் பணி உதவியை மட்டும் ஏற்றுக் கொண்டு, விரைந்த கட்டுமானத்திற்கும் தேவையான பணியாளர்களை அமர்த்தும் பொறுப்பையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். வங்காளத்தில் போதுமான பொறியாளர்கள் இல்லை என்பதை இந்திய அரசு உணர்ந்துள்ளது. எனவே, கள ஆய்விற்கு மத்திய அரசு பணிகளிலிருந்தும், தேவைப்பட்டால் போர்ப்படை பணிகளிலிருந்தும் பொறியாளர்களை அமர்த்த வேண்டிய தேவையை மைய அரசு உணர்ந்துள்ளது. இதனால், மாநில அரசின் பொறியியல் பணிகளுக்குப் பெருமளவில் ஊறு ஏதும் விளைவிக்காது தவிர்க்க உதவுவதுடன் தேவையான கருவிகளில் பெரும் பகுதியையும் மத்திய அரசே வழங்கிவிடும்.
திட்டத்தின் தொடக்க கள ஆய்வுகளுக்குத் தேவையான முழுச்செலவுகளையும் மத்திய அரசே ஏற்று முன் பணமாக தரத் தயாராக உள்ளது. திட்டம் உருப்பெற்று நிறைவேற்றப்படும் கட்டத்தில் அந்தந்த மாகாண அரசுகளின் பங்குகளைச் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்ள இசைகிறது.
மாகாண அரசுகளின் பங்காக இந்திய அரசு எதிர்பார்ப்பது ஒன்று மட்டுமே. திட்டத்தின் பயன்கள் தேவையான அடித்தள மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டே அனைத்துக்கட்ட செயல்பாடுகளும் அமைய வேண்டும் என்பதே அது. அதாவது பள்ளத்தாக்கு பகுதியிலும் அதன் அண்மை பகுதிகளிலும் வாழும் மக்களுக்கே இத்திட்டத்தினால் கிடைக்கப்பெறும் மேம்பாடுகளின் பலன்கள் கிடைக்க வேண்டும். இதுவே மிக முக்கியமான கூறு என்பது எனது கருத்து. ஆகவே, முறையான திட்டமிடுவதற்கு தேவையான அமைப்பு உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இதன் மூலமே திட்டத்தின் இறுதி நோக்கத்தைச் செம்மையாக எய்த முடியும்.”
மாநாட்டு விவாதங்கள்
தாமோதர் பள்ளத்தாக்கு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பல்நோக்கு திட்டத்திற்கான கள ஆய்வுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மாநாடு தீர்மானித்தது.
எத்தகைய வெள்ளத்திலிருந்தும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டுமென்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அணை கட்டுதற்கு முன் மாற்று அமைவிடங்களைக் கள ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக மைத்தோன், ஐயார், சோனாபூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்று அமைவிடங்களின் தொழில்நுட்ப கூறுகளை ஆய்வு செய்தபின் முன்னுரிமை வரிசையில் மைத்தோன் முதலாவதாகவும் எடுத்துக் கொள்ளப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இம்மூன்று அமைவிடங்களுக்கும் மத்திய தொழில்நுட்ப மின்திறன் வாரியம் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. சோனாபூரைப் பொறுத்தவரை நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படுமா என்பது பற்றியும் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.
தேவையான பணியாளர்கள்
விரிவான கள ஆய்வுகளை நடத்தி திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணியாளர்களை தேடி அமர்த்தும் பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கள ஆய்வு பணிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுடன் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, இப்பணியில் ஈடுபடும் ஆய்வாளர்கள் அனைவரும் மத்திய தொழில்நுட்ப மின்வாரியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் படியே செயல்பட வேண்டுமென்று மாநாடு ஒப்புக்கொண்டது. ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் முன்மொழியப்படும் முதல் இரண்டு அணைகளையும் வடிவமைக்கவும், கட்டவும் ஆலோசனை கூற அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து நான்கு பொறியாளர்களை அழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இப்பொறியாளர்கள் தொழில்நுட்பக் குழுமமாக அமைவர். இவர்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரவேண்டும் என்றும், அவர்கள் வந்து சேர்வதற்குள் திட்டத்திற்கு தேவையான விவரங்கள் அனைத்தும் திரட்டி முடிக்கப்படும் என்றும் மாநாடு நம்பிக்கை தெரிவித்தது.
திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையம் நிறுவப்பட வேண்டுமென்பதே உத்தேசம் என்றாலும் அதுவரையிலான இடைக்கால நடவடிக்கையாக மத்திய அரசு உயர் நிலை நிர்வாக அலுவலர் ஒருவரை நியமித்து திட்டத்திற்கு தேவையான கள ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் விரைவுபடுத்தவும் வழி செய்யலாம் என்று மாநாடு முடிவு செய்தது.
இத்திட்டத்தோடு தொடர்பு கொண்ட பல்வேறு பிற சிக்கல்கள் குறித்தும் ஒருங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்மென்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வங்காள, பீகார் அரசுகளின் நீர்ப்பாசனத் துறைகள் மத்திய அரசின் பாசன, நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்துடன் கலந்தாலோசித்து, திட்டத்தின் வாயிலாய் கிடைக்கும் பாசன நீரை பயன்படுத்தற்குறிய மிகச் சிறந்த முறைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
ஆய்வு செய்யப்பட வேண்டிய பிற கூறுகளாவன: மின்திறன் தேவையின் வளர்ச்சி, தோட்டக்கலை நிலையங்கள் நிறுவல், மண்அரிப்பு தடுப்புப் பணிகள், படகுப் போக்குவரத்து, நிலவியல் கூறுகள், குடிநீர் வழங்கல், மின்னாற்றல் வழித்தட அமைப்பு ஆகியனவாகும்.
மாநாட்டில் அரசு சார்பாளர்களாக பங்கு பெற்றவர்களின் பட்டியல் வருமாறு:
இந்திய அரசு சார்பாளர்கள் –
திரு.எச்.சி.பிரியோர், தொழிலாளர் நலத்துறைச் செயலர்;
திரு.டி.எஸ்.மஜூம்தார், தொழிலாளர் நலத்துறைச் துணைச் செயலர்;
திரு.எம்.இக்கரமுல்லா, வழங்கல் துறை இணைச் செயலர்;
திரு.எச்.எம்.மாத்யூஸ், மத்திய தொழில்நுட்ப மின்வாரிய தலைவர்;
திரு.டபிள்யூ.எல்.ஊர்தின், மத்திய தொழில்நுட்ப மின்வாரியத்தின் நீர்மின் திட்ட உறுப்பினர்;
திரு.சி.கோட்ஸ், வழங்கல் துறை துணைச் செயலர்;
திரு.ஆர்.ஹாரிசன், துணை நிலக்கரி ஆணையர்.
வங்காள அரசின் சார்பாளர்கள் –
திரு.ஓ.எம்.மார்டின், ஆளுநரின் தொலைத்தொடர்பு, பொதுப்பணித்துறை ஆலோசகர்;
திரு.ஆர்.எல்.வாக்கர், ஆளுநரின் நிதி, வணிகம், தொழிலாளர் நலம், தொழில்துறை ஆலோசகர்;
திரு.பி.பி.சர்க்கார், தகவல்தொடர்பு, பொதுப்பணித்துறைச் செயலர்;
ராய்பகதூர் எஸ்.கே.குப்தா, மேற்கு வங்க பாசனத்துறை தலைமைப் பொறியாளர்;
திரு.மான்சிங், தாமோதர் திட்ட சிறப்புப்பணி மேற்பார்வை பொறியாளர்;
மேஜர் எம்.ஜாபர், பொதுநலத்துறை இயக்குநர்;
திரு.அசீஸ்அகமது, போர் பிற்கால மறு கட்டுமானத் துறை இணைச்செயலர்;
பீகார் அரசுச் சார்பாளர்கள் –
திரு.எஸ்.எம்.தார், வளர்ச்சித்துறை ஆணையாளர்;
திரு.டபிள்யூ.ஜி. கெய்னே, தலைமை பொறியாளர், பாசனம் மற்றும் மின்னாற்றல்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
Share this:
Click to share on Twitter (Opens in new window)
Click to share on Facebook (Opens in new window)
Click to share on WhatsApp (Opens in new window)
Like this:
Like Loading...
Related
TagsBhakra-Nangal damDamodar Valley projectDr.Ambedkarfather of nationHirakud damThe Sone River Valley projectஇந்தியா அணைகள்இந்தியாவின் தந்தைடாக்டர் அம்பேத்கர்தாமோதர் பள்ளத்தாக்கு
Previous article தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
Related Articles
More By sridhar
More In Dr.அம்பேத்கர்
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
“நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை…
November 1, 2021
30 second read
The philatelic lives of Dr. Ambedkar
The first commemorative stamp on Ambedkar (1966). Photo: From the writer’s personal…
April 18, 2021
17 min read
Load More Related Articles
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
“நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை…
November 1, 2021
30 second read
புத்தர் உலக புத்தராம்
புத்தர் உலக புத்தராம் புனிதம் நிறைந்த புத்தராம் உலகம் போற்றும் புத்தராம் உயர்ந்த அன்பின் ப…
September 24, 2021
22 second read
பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி வீ.வே. முருகேச பாகவதரின் பாடல்
பேரறிஞர் பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி வீ.வே. முருகேச பாகவதரின் பாடல். பேரறிஞர் அம்பேத்கர் எ…
September 12, 2021
25 second read
Load More By sridhar
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
“நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை…
November 1, 2021
30 second read
சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும்
சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும். எவ்வொருவரும் தம்…
May 23, 2021
22 second read
வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை
புதிர் எண் 2 வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை வேதங…
May 19, 2021
27 second read
Load More In Dr.அம்பேத்கர்
Comments are closed.
Popular
Recent
Comments
Tags
அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
sridhar
October 11, 2011
Dr.அம்பேத்கர் நூல் தொகுதிகள் – தமிழ் (அனைத்தும்)
sridhar
October 11, 2015
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை?
sridhar
March 29, 2018
புத்தர் சொல்கிறார்
Sasikumar
June 15, 2018
தாமோதர் பள்ளத்தாக்கின் பன்னோக்கு வளர்ச்சி
sridhar
November 11, 2021
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு
sridhar
November 1, 2021
புத்தர் உலக புத்தராம்
sridhar
September 24, 2021
பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி வீ.வே. முருகேச பாகவதரின் பாடல்
sridhar
September 12, 2021
கலையரசன்: அண்ணலின் வாழ்க்கை நிகழ்வுகளையும், பணிகளையும்,அவர் பட்ட பாடுகளையும் மிகவும் சிறப்...
D D BAUDDH: jay bheem nami buddhay. DR.BABA SAHEB AMBEDKAR A GREATEST MAN ON THE EARTH AFTER...
R. Thirunavukarasu: Dear Sridhar, Thanks for sharing this kind of rare speeches of Dr. Ambedkar,, mo...
கலீல் ஜாகீர்: பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 1 க்கும், பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப...
அம்பேத்கர் caste in india சாதி Ambedkar சாதி ஒழிப்பு ஒலிநூல் இடஒதுக்கீடு கச்சநத்தம் Pranay Honour Killing Dr.Ambedkar Annihilation of Caste இந்து மதத்தில் புதிர்கள் தாமோதர் பள்ளத்தாக்கு ரெட்டியூர் பாண்டியன் பறை இழிவு ஆவணப்படங்கள் இளவரசன் திவ்யா ராமதாஸ் ஆணவகொலை சன்னா பறை மேலவளவு பறையிசை மேலவளவு முருகேசன்
நாங்கள்
பௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா
sridhar
October 14, 2010
www.ambedkar.in நடத்திய பௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற வரலாற்று சிறப்பு மிக்க அக்டோபர் 14 ஆம் தேதியில் www.ambedkar.in ஏற்பாடு செய்திருந்த விழாவில் சுமார் 100 க்கும்மேற்பட்டோர் தம்மை பௌத்ததில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், அவர்கள் கலந்து கொண்டு பெளத்த நூல்களை வெளியிட்டு …
விடுதலை இயக்க முன்னோடிகள்
வாழ்க்கைக் குறிப்புக்கள்
பண்டிதமணி க. அப்பாதுரையார்
sridhar
November 13, 2018
e3
Stay Connected
380Posts
4Comments
10Members
Social
Login
Remember Me
Login
Forgot your password?
Newsletter
Get the best viral stories straight into your inbox!
Email address:
Leave this field empty if you're human:
Don’t worry we don’t spam
About US
ஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…
இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in |
* உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ராம்பூரில் கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தக் கிராமத்தில் உள்ள 11ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டிச் செல்கிறார்.
“கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. இப்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பியே உள்ளேன். அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன்...’’ என்கிறார் சந்தியா சாஹினி.
நுழைவுத் தேர்வு நடத்தியபோது...
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்.
எடுத்துக்காட்டாக 2004_2005ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய கிராமத்து மாணவர்கள் 1125. தேர்ச்சி பெற்றோர் வெறும் 227தான்.
இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு எடுத்துக்காட்டியது. இதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக...
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பள்ளிக் கல்வித் துறை பள்ளிகள்
2010ஆம் ஆண்டு 250 பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.)
2014ஆம் ஆண்டு 580 பள்ளிகள் (இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பு)
2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 10,775.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை
2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் 8,00,033
மருத்துவக் கல்வி
2016ஆம் ஆண்டு தேசிய அளவில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிக்கான ஒதுக்கீடு: மருத்துவம் 383, பல் மருத்துவம் 15.
சி.பி.எஸ்.இ.யில் படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்காக 8,000,33 சி.பி.எஸ்.இ. படிக்காத மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா?
‘நீட்’ வழக்கு ந(க)டந்து வந்த பாதை
2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில்(Medical Council of India - MCI) இந்திய கெசட்டில் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில்(Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்திருப்பதாகச் சொல்லி கெசட் ஒன்றை வெளியிட்டது.
அது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை“Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் மருத்துவக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. இதனை முதன்முதலாக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக எதிர்த்தார்.
ஜூலை 18, 2013
இந்தத் தேர்விற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித், சென், ஏ.ஆர்.தவே கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஓய்வு பெறுகிற அன்று அவரது கடைசித் தீர்ப்பாக தீர்ப்பு வெளியானது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வர்த்தகம் நடத்தும் உரிமையை மறுக்கிறது என்றும், இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்தார். (18.7.2013)
2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11
அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு பா.ஜ.க. ஆட்சியில் அல்தாமஸ் கபீர் அளித்த தீர்ப்பை எதிர்த்து நீட் தேர்வை நடத்தக் கோரி மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீட் தேர்விற்கு ரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த அனில் ஆர்.தவே தலைமை அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. (நண்டை சுட்டு நரியைக் காவலுக்கு வைத்த கதைதான்) அப்போது கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. இதனை அடுத்து நீட் தேர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
ஆனால், இந்தத் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருக்க அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா விலக்கு பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்டோபர் 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இதனை அடுத்து பல அரசியல் குழப்பங்களுக்கு இடையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நிருவாகத்தின் கீழ் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
இரட்டையர்கள் பிறந்த நாள்: 14.10.1887
உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பாகவோ, இணையாகவோ கூறிட முடியாது.
1887ஆம் ஆண்டு அக்டோபர் 14இல் பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் ஏ.இராமசாமி முதலியார் அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராக இருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இந்த இரட்டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா!
1917இல் சர்.ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ இதழின் கவுரவ ஆசிரியராக இருந்து (1927-35) சர்.ஏ.இராமசாமி முதலியார் எழுதிய தலையங்கங்கள் புகழ்பெற்றவை. அவற்றைத் தொகுத்து(Mirror of the Year) நூற்றாண்டு விழாவின்போது வெளியிட்டது திராவிடர் கழகமாகும்.
நூற்றாண்டு விழாவை நடத்தியதோடு, இரட்டையர்கள் பற்றிய நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்ட கடமையைத் திராவிடர் கழகம் வரலாற்றில் ஆற்றியுள்ளது.அம்மலரின் முகவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்: “இவர்கள் மட்டும் பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தால் திருஞான சம்பந்தனுக்குப் பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்ததாகக் கதை கட்டியதுபோல, புதிய சரடு ஒன்றைக் கிளப்பிப் புராணம் எழுதியிருப்பார்கள்’’ என்று எழுதியுள்ளார்.
இரட்டையர்கள் இருவரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள். “தமிழ்நாட்டின் ரூசோ’’ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆவார்.
வாழ்க ஆர்க்காடு இரட்டையர்கள்!
எலும்பினை வலுவாக்கும் சேம்பு!
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும், குடல் புண்களை விரைவில் குணமாக்கும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதன் கிழங்கு மட்டுமல்ல, தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்து உண்ணலாம். புளி சேர்க்காமல் சமைக்கக் கூடாது. புளிக்குழம்பு வைப்பவர்கள் இந்தத் தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைக்கலாம். உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவைச் சேர்க்கும்.
சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
சுய விமர்சனம்
1937-இல் ‘த மாடர்ன் ரிவ்யூ ஆஃப் கல்கத்தா’ என்னும் இதழில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த நேருவை விமர்சித்து சாணக்யா என்பவர் எழுதிய ஒரு கட்டுரை வெளியானது. “நேரு போன்றவர்கள் ஜனநாயகத்தில் ஆபத்தானவர்கள். ஒரு சிறு திருப்பமும் இவரை சர்வாதிகாரி ஆக்கிவிடலாம். ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய புகழ், மன உறுதி, செயல்திறன், கர்வம் எல்லாமே அவரிடம் இருக்கின்றன. இவரது முன்கோபம் எல்லோருக்கும் தெரிந்தது. இவருடைய தற்பெருமை ஏற்கெனவே பயங்கரமானது. அதை அடக்க வேண்டும்!’’ என்பது உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை நேருமீது வைத்திருந்தார் சாணக்யா.
அடுத்து சில இதழ்களுக்குப் பிறகுதான் அந்தக் கட்டுரையை எழுதிய ‘சாணக்யா’ வேறு யாருமல்ல... நேருதான் என்பதைப் பத்திரிகை குறிப்பிட்டது. மக்கள் தன்னைப் பற்றி நினைப்பதை உண்மையாக அறியவேண்டி, ‘சாணக்யா’ என்கிற புனைப் பெயரில் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார் நேரு.
192 இடங்கள் எங்கே எங்கே?
உயர்சிறப்புக் கல்வி (SUPER SPECIALITY) தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் 196. இந்தியாவில் 10 மாநிலங்களில் அறவே கிடையாது. மீதி மாநிலங்களிலும் ஒற்றைப்படை வரிசையில்தான் இடங்கள் உள்ளன.
ஒன்றிய அரசு கொண்டுவரும் அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நமது இடங்கள் முற்றிலும் களவாடப்படுகின்றன. எடுத்துக் காட்டாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்புப் படிப்பான DM-NEON NATOLOGY யில் உள்ள இடங்கள் 8, இவை கடந்த ஆண்டு 6 இடங்கள் வெளிமாநிலங்களுக்குப் பறிபோயின _ நமக்குக் கிடைத்தவை இரண்டே இரண்டுதான்.
நம் மாநில அரசின் பணம் _ கட்டுமானம் யாருக்கோ தாரை வார்க்கப்பட வேண்டுமா? இதனை நாம் அனுமதிக்கலாமா?
கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில்...
மருத்துவக் கல்வி 2015-2016இல்,
திறந்த போட்டிக்குரிய இடங்கள் 884
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
பிற்படுத்தப்பட்டோர் _ 599
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் _ 159
முசுலிம் (பிற்படுத்தப்பட்டோர்) _ 32
தாழ்த்தப்பட்டோர் _ 23
மலைவாழ் மக்கள் _ 1
அருந்ததியர் _ 2
முற்பட்டோர் _ 68
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால்
இது தலைகீழானது ஆகாதா?
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன?
மருத்துவக் கழகத்துக்கு (MCI) மோடி ஆண்ட குஜராத் மாநில அரசு எழுதிய கடிதம் என்ன?
இதோ... கண்களைக் கொஞ்சம் விளக்கிக் கொண்டு பார்க்கட்டும்.
மாநில அரசு நீட் தேர்வை அனுமதிக்காது என்று குஜராத் அரசு மருத்துவக் கழகத்திடம் வலியுறுத்தி உள்ளது.
குஜராத்தி மொழியில் நீட் தேர்வு இல்லை. அதேபோல் மாநிலப் பாடத்திட்டத்திலும் கேள்விகள் இல்லை என்பதால் குஜராத் மாநிலத்தின் பல பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஜராத் அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் கூறிய குஜராத் மாநில முதன்மை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் கிசோர் மாணவர்களின் நலன் கருதி மருத்துவக் கழகம் நல்ல முடிவு எடுக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை குஜராத்தில் நீட்டை அனுமதிக்க முடியாது என்று மருத்துவக் கழகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறி அக்கடிதத்தின் நகலை விசாரணையின்போது நீதிபதிகளிடம் கொடுத்தார். (23.1.2013)
துணுக்குகள்
* கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பதுபோல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக, ‘கார்னியா’ எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும். |
பவானிபூர்: பவானிபூர் இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 56,388 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
Related Stories:
கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
முல்லைப்பெரியாறில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்
ரூ.8,000 கோடி விமானத்தில் பறக்கும் மோடியால், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க மட்டும் நிதி இல்லையா?: பிரியங்கா காந்தி விளாசல்
மும்பையில் மம்தா - பிரபலங்கள் சந்திப்பு; நாட்டிற்கு பெண் பிரதமர் தயார்!: பாலிவுட் நடிகை தடாலடி கருத்து
சபரிமலையில் விரைவில் ஏற்பாடு; சன்னிதானத்தில் உள்ள அறைகளில் 12 மணிநேரம் பக்தர்கள் தங்கும் வசதி: தேவசம் போர்டு தலைவர் தகவல்
செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
இந்தியாவில் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்; கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று உறுதி..! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு
நாடு முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு முடிவு
கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு!: காவேரி கலாநிதி மாறனுக்கு ராஜ்நாத் சிங் கவுரவம்..!!
இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ்.:கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு
கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு
தமிழ்நாடு - கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லைப் பெரியாறில் புதிய அணைகட்ட அனுமதி: ஒன்றிய அரசு
காற்று மாசால் பெரியவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்; ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?: டெல்லி அரசை கண்டித்த சுப்ரீம் கோர்ட்..!!
28 மாநிலங்களில் 2020ம் ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,862 ஆக அதிகரிப்பு : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: ஒன்றிய அரசு மீண்டும் திட்டவட்டம்
ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!
கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவு
நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் போது வெட்டப்படும் மரங்களை ஈடுகட்ட, சாலைகளில் மரம் வளர்க்கும் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
வன்னியர்களுக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்து; மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்தவாரம் விசாரணை: உச்சநீதிமன்றம்
ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: சபரிமலையில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு முன்பதிவு தேவை இல்லை..தேவஸ்தானம் அறிவிப்பு..!! |
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்
தினம் தினம்
Back
தினம் தினம்
அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை
வாராவாரம்
Back
வாராவாரம்
நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்
ஆன்மிகம்
Back
ஆன்மிகம்
செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்
போட்டோ
Back
போட்டோ
தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம்
வீடியோ
Back
வீடியோ
Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி
மற்றவை
Back
மற்றவை
தமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்
சினிமா
Back
சினிமா
செய்திகள் விமர்சனம் திரை மேதைகள்
உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff
Advertisement
Home
சம்பவம்
Prev Next
மின்னல் தாக்கி பெண் பலி
பதிவு செய்த நாள்: நவ 26,2021 00:43
Share
சிவகங்கை:சிவகங்கை அருகே குமாரபட்டி பாலகுரு மனைவி பாண்டியம்மாள் 50. நேற்று அங்கு இவரது தோட்டத்தில் வேலை பார்த்தார். மதியம் 3:30 மணிக்கு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை:சிவகங்கை அருகே குமாரபட்டி பாலகுரு மனைவி பாண்டியம்மாள் 50. நேற்று அங்கு இவரது தோட்டத்தில் வேலை பார்த்தார். மதியம் 3:30
ஊடக தர்மம்
உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி.
தினமலர்
For technical contact :[email protected]
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். |
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்
தினம் தினம்
Back
தினம் தினம்
அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை
வாராவாரம்
Back
வாராவாரம்
நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்
ஆன்மிகம்
Back
ஆன்மிகம்
செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்
போட்டோ
Back
போட்டோ
தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம்
வீடியோ
Back
வீடியோ
Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி
மற்றவை
Back
மற்றவை
தமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்
சினிமா
Back
சினிமா
செய்திகள் விமர்சனம் திரை மேதைகள்
உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff
Advertisement
Home
பொது
Prev Next
லைப் மிஷன் வீடு கட்டும் திட்டம்
பதிவு செய்த நாள்: நவ 26,2021 09:05
Share
மூணாறு : மூணாறு ஊராட்சியில் 'லைப் மிஷன்' எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு ஊராட்சிகள் மூலம் 'லைப் மிஷன்' திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. அத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்மூணாறு ஊராட்சியில் நிலம் இல்லாததால் திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை.அத்திட்டம் செயல்படுத்த வருவாய்துறையினர் நிலம் வழங்க வேண்டும் அல்லது அந்த நிதியைக் கொண்டு வேறு ஊராட்சியில் நிலம் வாங்கி திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் திருவனந்தபுரத்தில்வருவாய்துறை அமைச்சர் ராஜன், உள்ளாட்சிதுறை அமைச்சர் கோவிந்தன் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினர்.
மூணாறு : மூணாறு ஊராட்சியில் 'லைப் மிஷன்' எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில்
ஊடக தர்மம்
உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி.
தினமலர்
For technical contact :[email protected]
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். |
கோ. மன்றவாணன் பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள். தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள் என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன். கோவை மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம் […]
தொடுவானம் 195. இன்ப உலா
November 13, 2017
கதைகள்
இலக்கியக்கட்டுரைகள்
நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “
by admin On November 13, 2017 0 Comment
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர் நடராசன் நூலை வெளியிட்டார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் :தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் […]
மனவானின் கரும்புள்ளிகள்
November 13, 2017
தொடுவானம் 195. இன்ப உலா
November 13, 2017
கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்
November 12, 2017
கவிதைகள்
என் விழி மூலம் நீ நோக்கு !
by jeyabharathan On November 13, 2017 0 Comment
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால், சீக்கிரம் நம் காதல் முறிந்து போகும் வாய்ப்புள்ளது ! நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம், தீர்வு காண முடியும் நாம். சிந்தித்துப் பார் நீ என்ன சொல்கிறாய் என்று. நம் வாழ்நாள் மிகவும் குறைவு ! […]
திண்ணைவீடு
November 13, 2017
நண்பன்
November 13, 2017
அறிவியல் தொழில்நுட்பம்
பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !
by jeyabharathan On November 13, 2017 0 Comment
Posted on November 10, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம் ! பேரளவு பேய்மழை ஓரிடத்தில் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடத்தில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக் கானகத் தீக்கள் பற்றின ! வன விலங்குகள், மனிதர் புலப்பெயர்ச்சி ! விரைவாகக் கடல் மட்டம் ஏறும் போக்கைக் கூறும் துணைக்கோள் ! சூட்டு யுகப் புரட்சியில் உலகு மாட்டிக் கொண்டுள்ளது ! நாட்டு […]
மருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்கு
November 13, 2017
கலைகள். சமையல்
கடிதங்கள் அறிவிப்புகள்
அவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு
by admin On November 13, 2017 0 Comment
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். கருத்துரை இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான […]
நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “
November 13, 2017
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
திண்ணை பற்றி
திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை [email protected] க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.
பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.
தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்
சமஸ்கிருதம் தொடர் முழுவதும்
இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif
ட்விட்டரில் பின் தொடர
இதழ்கள்
Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஆகஸ்ட் 2019 (11) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 மார்ச் 2016 (12) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (10) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 மார்ச் 2016 (14) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 மார்ச் 2016 (16) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8)
பின்னூட்டங்கள்
S.SIVA KUMAR on இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?
K Balakumar on முகங்கள்… (இரயில் பயணங்களில்)
Ahamed Nizar on சிறை கழட்டல்..
Selva on முகங்கள்… (இரயில் பயணங்களில்)
Ram on முகங்கள்… (இரயில் பயணங்களில்)
Jeyadas.m on நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
S. Jayabarathan on என் பயணத்தின் முடிவு
Moulana SAK on சிறை கழட்டல்..
S. Jayabarathan on வெப்ப யுகக் கீதை
சுரேஷ் ராஜகோபால் on கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
ஸ்ரீதர் on திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்
S. Jayabarathan on நாமென்ன செய்யலாம் பூமிக்கு?
uppili on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்
M.Kannan Malusekaran on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்
Geethanjali on மலர்களின் துயரம்
Siragu ravichandran on கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……
balaiyer on பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
S. Jayabarathan on சாணி யுகம் மீளுது
S. Jayabarathan on ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
S. Jayabarathan on கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
Popular Posts
ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2 |
கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்ததால், பாதிரியார்கள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை அடுத்த மல்லப்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பே பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
திருமணத்திற்கு பிறகு இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க அந்த பெண் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பாவ மன்னிப்பு அறிக்கையிட்டார். பாவமன்னிப்பு கேட்ட பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.
மேலும் 3 பாதிரியார்களும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி. மேத்யூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிரியார்கள் 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ 2 நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பாதிரியார்களும் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதில், பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ என்பவர் கோழஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்றனர்.
அங்கு மறைந்திருந்த பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கோழஞ்சேரி தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவல்லா முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இன்னும் 2 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், முன் ஜாமீன் கோரி பாதிரியார்கள் சோனி வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே ஜார்ஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
Share:
Rate:
Previousகாவல்துறையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா : கனிமொழி கேள்வி
Nextகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை : ரஜினி உருக்கம்
About The Author
ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
Related Posts
‘தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமையை காக்கும் அரசு!
November 20, 2021
கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
May 13, 2021
சர்ச்சைக்குரிய பாப்ரி மஸ்ஜித் அயோத்தி நில பிரச்சனை வழக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஓத்திவைப்பு
May 10, 2019
கொரோனா பேரிடரில் CAA அமல்படுத்தும் பாஜக அரசு; குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்
May 30, 2021
Leave a reply Cancel reply
You must be logged in to post a comment.
Search for:
தினமும் திருக்குறள்
461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
- திருவள்ளுவர்
தினசரி வேலைவாய்ப்புகள்
Tweets by SplcoC
இரு மொழியில் வெளியாகும் தொழில்நுட்ப தரவரிசையில் முதலிடம் ஸ்பெல்கோ
https://www.splco.me
Special Correspondent FB Wing
1 hour 32 minutes ago
#pollution #air #india #supremecourt #delhi
Supreme Court lambasts Union Govt and sets 24-hr deadline on Delhi Air Pollution - Splco Voice of Democracy
Supreme Court on Thursday minced no words to bombord the Union government over the severe air pollution in the national capital and expressed concern that nothing was happening on the ground to improve the air quality. The top court questioned the utility of having a commission for air quality manag...
View on Facebook
Share
Special Correspondent FB Wing
1 hour 34 minutes ago
#வாசகர்கள், #பட்டா, #சர்வே, #நிலஅளவை, #தமிழ்நாடு,
காசில்லாமல் பட்டா பெற்றது எப்படி.. - ஸ்பெல்கோ
பட்டா வாங்க ஏழாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நான் தொடர்ந்து முயற்சி செய்திருந்தால், 70 நாள்களிலேயே இப்படி பட்டாவை வா...
View on Facebook
Share
தேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்
சாமனியனின் முரசொலியே ஸ்பெல்கோ
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ
மாதம் வாரியாக
மாதம் வாரியாக Select Month December 2021 (11) November 2021 (84) October 2021 (122) September 2021 (85) August 2021 (114) July 2021 (44) June 2021 (95) May 2021 (100) April 2021 (20) March 2021 (30) February 2021 (53) January 2021 (150) December 2020 (188) November 2020 (130) October 2020 (108) September 2020 (37) August 2020 (130) July 2020 (115) June 2020 (154) May 2020 (165) April 2020 (100) March 2020 (3) February 2020 (7) January 2020 (8) November 2019 (4) October 2019 (3) September 2019 (9) August 2019 (23) July 2019 (33) June 2019 (66) May 2019 (77) April 2019 (144) March 2019 (184) February 2019 (192) January 2019 (241) December 2018 (218) November 2018 (156) October 2018 (191) September 2018 (210) August 2018 (161)
பகுதிவாரியாக
பகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் கொரானா விண்வெளி இந்தியா ஆந்திரா உத்தரப் பிரதேசம் ஒன்றியம் கர்நாடகா காஷ்மீர் கேரளா டெல்லி தமிழ்நாடு தெலுங்கானா புதுச்சேரி மகராஷ்டிரா மேகாலயா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை ஐரோப்பா சீனா ரஷியா கருத்துக்கள் சவெரா தலையங்கம் வாசகர்கள் காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் வரலாறு கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை பாராளுமன்றம் போராட்டம் சமூகம் கலாச்சாரம் கல்வி சமையல் பெண்கள் வாழ்வியல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் தபால் துறை மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி
2016 ~18 காப்பக கோப்புகள்
2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)
தமிழ் ஸ்பெல்கோ டிரண்ட்ஸ்
அதிமுக அமெரிக்கா அரசியல் அரசுவேலைவாய்ப்பு இந்தியா உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஊழல் ஒன்றிய அரசு கல்வி காங்கிரஸ் காவல்துறை கேரளா கேளிக்கை கொரோனா கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ் சட்டம் சமூகம் சினிமா சென்னை ஜெயலலிதா டெல்லி டெல்லி சலோ தமிழக அரசு தமிழ்நாடு திமுக தேர்தல் நடிகர் நடிகை பாஜக பெண்கள் மத்திய அரசு மருத்துவம் மாணவர்கள் மு.க.ஸ்டாலின் மோடி விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம் வேலைவாய்ப்பு வேளாண் சட்டம் ஸ்பெல்கோ ஸ்பெல்கோமீடியா ஸ்பெஷல்கரஸ்பாண்டெண்ட் |
கத்திரிக்காய் முடியும் இருக்க உரிய முறையில் பாதுகாக்க ஒரு பெரிய எண் மிகவும் சுவையான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள். மிகவும் அடிக்கடி விடுமுறை அட்டவணை நீங்கள் ஒரு கண்டுபிடிக்க முடியும் பல்வேறு சிற்றுண்டி, அடிப்படையில் "ப்ளூஸ்".
கூடுதலாக, பல இல்லத்தரசிகள் செய்ய ஏற்பாடுகள் குளிர்கால கூடுதலாக இந்த காய்கறி என்று வழங்க முடியும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தேவையான வழங்கல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்டு முழுவதும்.
எனினும், சில மக்கள் இல்லை போன்ற சுவை மற்றும் மணம் கத்திரிக்காய் மற்றும் மறுக்க முழுமையான மற்றும் சுவையான உணவுகள். என்றால் உங்கள் வீட்டு மதிப்பிடாதீர்கள் "நீல", சமைக்க முயற்சி, அவர்கள் ஒரு casserole ஒன்று எங்கள் சமையல், மற்றும் அவர்கள் உறுதி செய்ய நீங்கள் கேட்க ய.
கட்டுரையின் உள்ளடக்கம்
கிரேக்கம் moussaka
பான் ரெசிபி சிசிலியன் இறைச்சி, கத்திரிக்காய், தக்காளி மற்றும் சீஸ்
மிகவும் சுவையான casserole, இறைச்சி மற்றும் காய்கறிகள் சீஸ் சாஸ்
கிரேக்கம் moussaka
சுட்ட "நீல" குறிப்பாக பாராட்டப்படுகிறது பிரதிநிதிகள் பால்கன் மற்றும் மத்திய கிழக்கு. குறிப்பாக, ஒரு டிஷ் eggplants இறைச்சி நிறைந்த பாரம்பரிய கிரேக்கம் சமையல். இருப்பது எந்த கிரேக்கம் உணவகம், இலவச உணர முடியும் பொருட்டு moussaka. உறுதியாக இருக்க நீங்கள் கொண்டு மிகவும் சுவையான மற்றும் சத்தான டிஷ் என்று தான் உங்கள் வாயில் உருகும்.
சமைக்க moussaka – ஒரு டிஷ் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சி அடுப்பில் சுடப்படுகின்றது – நீங்கள் வீட்டில்.
இதை செய்ய, பின்வரும் பயன்படுத்த எளிய செய்முறையை:
ஒரு பெரிய காய்கறி தலாம், மெல்லிய துண்டு பெரிய துண்டுகளாக்கி சேர்த்து அரை மணி நேரம் ஊற சூடான உப்பு நீர். நீங்கள் சமைக்க வேண்டும் moussaka விரைவில், வெறுமனே ஊற்றி கொதிக்க இந்த காய்கறி கொதிக்கும் நீர் கொண்டு. இந்த முன்-சமையல், கத்திரிக்காய், நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் குறைந்த கசப்பான மற்றும் இல்லை உறிஞ்சி அதிகமாக கொழுப்பு;
எடுத்து 2 சிறிய சுரைக்காய்-சீமை சுரைக்காய், தலாம் மற்றும் பெரிய விதைகள் மற்றும் வெட்டி மிகவும் பெரிய மெல்லிய துண்டுகள்;
சுமார் 600 கிராம் புதிய உருளைக்கிழங்கு பீல், முழுமையாக சுத்தம் மற்றும் மெல்லிய துண்டுகளாக வெட்டி;
தாவர எண்ணெய் வறுக்கவும், உருளைக்கிழங்கு துண்டுகள் வரை சிறிது Browning, பின்னர் மேலும் – சீமை சுரைக்காய் மற்றும், இறுதியாக, கத்திரிக்காய்;
300 கிராம் சீஸ் தேய்க்க ஒரு பெரிய grater மீது;
3-4 சிறிய தக்காளி ஒரு நல்ல கழுவி துண்டுகளாக வெட்டி;
ஒரு பேக்கிங் டிஷ் வைக்க தேவையான பொருட்கள் பின்வரும் வழியில்:
வறுத்த உருளைக்கிழங்கு, மேல் அது தேவை ஒரு சிறிய உப்பு மற்றும் மிளகு;
ஒரு கால் grated சீஸ்;
300 கிராம், துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி;
துண்டுகள் வறுத்த "ப்ளூஸ்" ஒரு சிறிய உப்பு சீசன் மற்றும் எந்த மசாலா மணிக்கு வேண்டும்;
ஒரு மெல்லிய அடுக்கு grated சீஸ்;
சீமை சுரைக்காய்-சீமை சுரைக்காய், மிளகு மற்றும் உப்பு;
grated சீஸ், பற்றி ஒரு காலாண்டில் அசல் அளவு;
மீண்டும், 300 கிராம், துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி;
மேல் கேட்கலாமா இருக்க வேண்டும் மூடப்பட்டிருக்கும் புதிய தக்காளி, வெட்டப்படுகின்றன.
ஒரு தனி கிண்ணத்தில் செய்ய சாஸ் "Bechamel" – உருக ஒரு பானை 100 கிராம் வெண்ணெய், படிப்படியாக நுழைய அதே 100 கிராம் மாவு, ஒரு மிக்சர் கொண்டு அடித்து. மெதுவாக ஊற்ற லிட்டர், புதிய பால், உப்பு மற்றும் ருசிக்க மிளகு சேர்க்க, 3 தாக்கப்பட்டு முட்டைகள். முற்றிலும் அனைத்து பொருட்கள் கலந்து மற்றும் மீண்டும், துடைப்பம் சாஸ் ஒரு கலவை. சமையல் இறுதியில் சேர்க்க சிட்டிகை ஜாதிக்காய் மற்றும், தேவைப்பட்டால், சிறிது உப்பு மற்றும் மிளகு;
மழை விளைவாக, பஃப் கேட்கலாமா கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இறைச்சி மற்றும் தக்காளி சாஸ் மற்றும் சீஸ் கொண்டு தெளிக்க. டிஷ் வைத்து preheated அடுப்பில் மற்றும் ரொட்டி போன்றவற்றை வேகவைத்து சுடுர, அரை மணி நேரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை கிடைக்கும்.
பான் ரெசிபி சிசிலியன் இறைச்சி, கத்திரிக்காய், தக்காளி மற்றும் சீஸ்
இந்த டிஷ் நம்பமுடியாத சுவையான மற்றும் சத்தான. கூடுதலாக, நீங்கள் சமைக்க முடியாது, அது இல்லாமல், எந்த கூடுதல் இறைச்சி பொருட்கள், என்று அது முற்றிலும் இழக்க மாட்டேன், அதன் மேல் முறையீடு. இன்னும், ஒரு பாரம்பரிய சிசிலியன் செய்முறையை பயன்படுத்த ஈடுபடுத்துகிறது துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி.
தயார் செய்ய டெண்டர் மற்றும் சுவையான casserole கத்திரிக்காய், இறைச்சி மற்றும் தக்காளி பயன்படுத்த பின்வரும் எளிய வழிமுறை:
2 நடுத்தர அளவிலான கத்திரிக்காய் சுத்தம் மற்றும் மெல்லிய துண்டுகளாக வெட்டி. நல்ல உப்பு போட்டு, ஒரு வடிகட்டி அல்லது சல்லடை ஊற்ற, சுத்தமான நீர் மற்றும் அதை விட்டு 20 நிமிடங்கள்;
சுமார் 600 கிராம் புதிய தக்காளி சேர்ப்பேன் கொதிக்கும் நீர், நீக்க, தோல்கள், கசக்கி சாறு, விதைகள் நீக்க மற்றும் வெட்டி சதை பெரிய துண்டுகளாக;
2 வெங்காயம் தலாம் மற்றும் இறுதியாக அறுப்பேன்;
மேலும் இறுதியாக அறுப்பேன் ஒரு சிறிய அளவு புதிய துளசி;
ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்ற 3 தேக்கரண்டி சூரியகாந்தி அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிது வறுக்கவும் வெங்காயம் இல்லாமல், அது காத்திருக்கும் போது கணம் அவர் blushed;
அதே கடாயில் தக்காளி சேர்க்க மற்றும் துளசி, உப்பு மற்றும் மிளகு பருவத்தை சுவை மற்றும் ஒரு சிறிய வெளியே வைத்து நடுத்தர வெப்ப மீது, அவ்வப்போது கிளறி;
துண்டுகள் கத்திரிக்காய் rinsed மீண்டும் குளிர்ந்த நீர், உலர்ந்த மற்றும் சிறிது வறுக்கவும் மற்றொரு பாத்திரத்தில் ஒரு சிறிய அளவு தாவர எண்ணெய்;
நன்றாக grater மீது தட்டி, சீஸ் 100 கிராம்;
ஒரு சிறப்பு படிவம், பேக்கிங் வைத்து அடுக்குகள் எதிர்கால casserole:
350 கிராம் பாஸ்தா, நல்லது முன்னுரிமை கொடுக்க வேண்டும் "குண்டுகள்";
மேல் பாஸ்தா வேண்டியிருந்தது நீக்க ஒரு பகுதியாக முன்னர் தயாரிக்கப்பட்ட காய்கறி சுவையூட்டிகள்;
தூவி மூன்றில் ஒரு பங்கு பற்றி, grated சீஸ்;
வைத்து 300 கிராம், துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீண்டும் ஊற்ற, ஒரு சிறிய சாஸ்;
மீண்டும் grated சீஸ் கொண்டு தெளிக்க;
அடுத்த இருக்க வேண்டும் "நீல";
மேல் இருந்து அவர்கள் வேண்டும் இருக்க தெளிக்கப்படும் எச்சங்கள் சீஸ்.
ஊற்ற டிஷ் சூடான தண்ணீர் என்று அது முற்றிலும் மூடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்கள், கவர் மற்றும் அடுப்பில் சுட்டுக்கொள்ள வேண்டும் preheated 180-200 டிகிரி, 40-50 நிமிடங்கள்.
மிகவும் சுவையான casserole, இறைச்சி மற்றும் காய்கறிகள் சீஸ் சாஸ்
இந்த டிஷ், ஒரு சந்தேகம் இல்லாமல், அனைவருக்கும் முறையீடு. இந்த கேட்கலாமா மிகவும் சுவையான மற்றும் சத்தான, ஆனால் சீஸ் சாஸ் கொடுக்கிறது இது ஒரு சரியான நேர்த்தியுடன்.
அது முயற்சி மற்றும் நீங்கள் வருத்தப்பட மாட்டேன் கழித்த நேரம் அதன் தயாரிப்பு:
கத்திரிக்காய் எடையுள்ள சுமார் 800-900 கிராம் மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை வைத்து ஒரு ஆழமான கிண்ணத்தில் மற்றும் உப்பு சேர்க்கவும். அதை நடத்த பற்றி 15-20 நிமிடங்கள், பின்னர் நீர் வாய்க்கால் ஒரு பிட் துவைக்க காய்கறிகள் மற்றும் வறுக்கவும் தாவர அல்லது ஆலிவ் எண்ணெய்;
250 கிராம் ஒல்லியான பன்றி இறைச்சி சிறு துண்டுகளாக வெட்டி மற்றும் சிறிது வறுக்கவும்;
இறைச்சி சேர்க்க 300 கிராம், இறுதியாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் 2 கேரட், நடுத்தர அளவு, ஒரு கரடுமுரடான grater மீது grated. அனைத்து பொருட்களிலும் சேர்த்து நன்கு கலந்து, உப்பு மற்றும் மிளகு பருவத்தை மற்றும் ஒரு சிறிய வறுக்கவும், பின்னர் கவர் மற்றும் சில நேரம் இளங்கொதிவா டெண்டர் வரை;
ஒரு தனி கிண்ணத்தில் நீங்கள் தயார் செய்ய வேண்டும், சீஸ் சாஸ். இந்த நோக்கத்திற்காக, பான் உருக வேண்டும் 50 கிராம் வெண்ணெய், சேர்க்க 1 தேக்கரண்டி மாவு. தொடர்ந்து கிளறி, ஊற்ற ஒரு பைண்ட் சூடான பால். ஒரு கொதி நிலைக்கு கொண்டு, அசை, வெப்பம் குறைக்க மற்றும் விட்டு அடுப்பில் ஒரு சில நிமிடங்கள். சேர்க்க 150 கிராம் சீஸ், அபராதம் grater மீது grated. தலையிட வரை பின்னர் வரை, அவர் இறுதியாக உருகிய. சுவை உப்பு சேர்க்க, ஜாதிக்காய் மற்றும் மசாலா. நாம் சாஸ் கொதிக்க மற்றொரு நிமிடம் மற்றும் வெப்ப இருந்து நீக்க;
எடுத்து ஒரு பேக்கிங் டிஷ் மற்றும் பரவல் அவளை கீழே கொண்டு படலம். வைத்து கேட்கலாமா பின்வரும் வழியில்:
பாதி கத்திரிக்காய்;
இறைச்சி, வெங்காயம் மற்றும் கேரட்;
புதிய தக்காளி வெட்டி, சுற்றுகள் (சுமார் 400 கிராம்);
இரண்டாவது பாதி "ப்ளூஸ்".
ஊற்ற சமைத்த உணவை கொண்டு சீஸ் சாஸ் மற்றும் அடுப்பில் சமைக்க. சுட்டுக்கொள்ள சுமார் 20-25 நிமிடங்கள் வரை மேல் அடுக்கு மூடப்பட்டிருக்கும் ஒரு கோல்டன் சிவந்த மேல்ஓடு.
Plugging மிகவும் ஒரு பிட் கற்பனை மற்றும் கற்பனை, நீங்கள் எளிதாக இருக்க முடியும், கொண்டு வர புதிய சமையல் பொருட்கள் கொண்டு, நீங்கள் வீட்டில் வேண்டும்.
எந்த விஷயத்தில், நிம்மதியா எந்த டிஷ் கத்திரிக்காய் மற்றும் இறைச்சி மாறும் அதிசயமாக ருசியான மற்றும் சத்தான மற்றும் மாற்ற முடியும் ஒரு முழு மதிய உணவு அல்லது இரவு உங்கள் குடும்பத்தினர்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | முறையான குழம்பு | Balaji's Kitchen
Previous article
சமைக்க கற்று பன்றி காதுகள்
Next article
சுவையான, ஆரோக்கியமான, எளிதாக எப்படி சமைக்க ஓரு கோழி அடுப்பில்?
நீ கூட விரும்பலாம்
5 வழிகளில் சமையல்
சிறந்த சமையல் கோழி ventricles
அவர்கள் எப்படி சமைக்க வேண்டும் சுவையாக இருக்க?
சிறந்த சமையல் கோழி இதயங்களை
தயார் ஒரு தேசிய ஜியோர்ஜியன் டிஷ்!
எப்படி சமைக்க வேண்டும் chakhokhbili கோழி: ஒரு கிளாசிக் செய்முறையை
கொஞ்சம் தந்திரங்களை தொழில்முறை சமையல்காரர்களுக்கு
சமையல் பல்வேறு நாடுகளில் உலக இரகசியங்களை சமையல்காரர்களுக்கு
மிகவும் ருசியான சமையல்
உணவில் சமையல் பன்றி இறைச்சி
பயன்படுத்த டெலி இறைச்சி
வறுத்த முயல் சமையல்
பிரபல இடுகைகள்
சமைக்க கற்று பன்றி காதுகள்
சூடான உணவு
சிறந்த சமையல் கோழி ventricles
சூடான உணவு
சமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்
சூடான உணவு
Khashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்
சூடான உணவு
Liverworts சுவையான சரியான டிஷ் தினசரி பட்டி மற்றும் பண்டிகை அட்டவணை
சூடான உணவு
ஒரு புதிய டிஷ் உங்கள் மெனு – கோழி கறி பல்வேறு சேர்க்கைகள்
சூடான உணவு
பிரிவுகள்
வாழ்க்கை
மகளிர் சுகாதார
வேலை மற்றும் வாழ்க்கை
உடல்நலம் மற்றும் அழகு
ஃபேஷன்
உளவியல்
நான் ஒரு அம்மா!
வசதியான வீடு
செல்ல பிராணிகள்
விளையாட்டு மற்றும் சுகாதார
கனவு விளக்கம்
கை செய்து
சமையல்
செய்திமடல்
உங்கள் மின்னஞ்சல் முகவரியை இருக்க முடியாது இந்த வெளியிட்டது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன
எங்களை பற்றி
ஆன்லைன் பத்திரிகை Womenos உருவாக்கப்பட்ட உள்ளது அழகான பெண்கள் யார் வெற்றி பெற வேண்டும் அனைத்து கோளங்கள் வாழ்க்கை மற்றும் எப்போதும் இருக்க நன்கு தகவலறிந்த. அது எளிதானது அல்ல இருக்க வேண்டும், ஒரு வெற்றிகரமான பெண் இன்று: நீங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது அழகாக இருக்க, சுவாரஸ்யமான இருக்கும், ஒரு ஆதரவு போது குடும்ப பிரகாசித்து நல்லிணக்கம் மற்றும் இயல்பையும். |
kim-jong-un: Latest kim-jong-un News & Updates, kim-jong-un Photos & Images, kim-jong-un Videos | Samayam Tamil | Page2
வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. |
தலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா? (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,214) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)
தேதிவாரியாக பதிவுகள்
September 2011
S
M
T
W
T
F
S
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
« Aug Oct »
Archives
Archives Select Month November 2021 (2) June 2021 (4) May 2021 (2) June 2018 (1) February 2018 (1) January 2018 (3) December 2017 (2) November 2017 (14) October 2017 (5) August 2017 (1) July 2017 (5) June 2017 (5) April 2017 (4) March 2017 (1) December 2016 (20) November 2016 (4) October 2016 (3) September 2016 (8) July 2016 (2) June 2016 (26) May 2016 (27) April 2016 (28) March 2016 (31) February 2016 (28) January 2016 (35) December 2015 (29) November 2015 (25) October 2015 (1) August 2015 (3) July 2015 (2) May 2015 (3) April 2015 (7) March 2015 (6) February 2015 (2) January 2015 (3) December 2014 (11) November 2014 (9) October 2014 (7) September 2014 (5) August 2014 (23) July 2014 (2) June 2014 (3) May 2014 (10) April 2014 (6) March 2014 (15) February 2014 (17) January 2014 (21) December 2013 (14) November 2013 (22) October 2013 (13) September 2013 (22) August 2013 (28) July 2013 (26) June 2013 (23) May 2013 (37) April 2013 (28) March 2013 (15) February 2013 (5) January 2013 (5) December 2012 (16) November 2012 (16) October 2012 (22) September 2012 (21) August 2012 (29) July 2012 (32) June 2012 (33) May 2012 (34) April 2012 (18) March 2012 (28) February 2012 (30) January 2012 (53) December 2011 (25) November 2011 (28) October 2011 (36) September 2011 (37) August 2011 (27) July 2011 (22) June 2011 (20) May 2011 (40) April 2011 (73) March 2011 (67) February 2011 (67) January 2011 (52) December 2010 (6) November 2010 (7) October 2010 (3) September 2010 (2) August 2010 (1) July 2010 (1) June 2010 (3) May 2010 (2) March 2010 (3) February 2010 (2) January 2010 (3) December 2009 (2) November 2009 (1) October 2009 (4) September 2009 (5) August 2009 (4) July 2009 (4) June 2009 (7) May 2009 (6) April 2009 (4) March 2009 (4) February 2009 (8) January 2009 (8) November 2008 (3) October 2008 (2) July 2008 (3) June 2008 (3) May 2008 (2) April 2008 (7) March 2008 (3) February 2008 (2) January 2008 (2) August 2007 (1) April 2007 (3) August 2006 (3) July 2006 (3) June 2006 (3) May 2006 (3) April 2006 (2) March 2006 (2) February 2006 (1) January 2006 (7) December 2005 (4) September 2005 (2) August 2005 (6) July 2005 (4) June 2005 (4) May 2005 (5) April 2005 (5) March 2005 (5) February 2005 (5) January 2005 (6) February 2003 (1)
Visitors since 22-3-13
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,677 முறை படிக்கப்பட்டுள்ளது!
உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்
Posted on 19th September, 2011
ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக்குள் பதுங்கிக் கிடக்கிறது, . . . → தொடர்ந்து படிக்க..
Hadeeths/Quran Search
புகாரி முஸ்லிம் குர்ஆன்
அல்குர்ஆன்
Search Arabic Quran by English
அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக
அல்குர்ஆன் தமிழில் தேடல்
ஹதீதில் தேட
தமிழில் தளத்தில் தேட:
பதிவுகளில் சில..
தமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்
மன்னிக்கப்படாத பாவம்!
உபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து ஒரு தொழில்!
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்
நகத்தில் அகம் பார்க்கலாம்!
வெளி நாட்டு கைக்குட்டை
கணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?
வெற்றிக்கு முன் வரும் தடைகள்!
Subscribe2
Leave This Blank: Leave This Blank Too: Do Not Change This:
Your email:
அறிவியல்
நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்!
கணித மேதை இராமானுஜன்
விண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்
குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??
பழங்காலத்தில் வானவியல்!
உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!
புரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு
தொப்புள் கொடி
வரலாறு
தனியே ஒரு குரல்
தோப்பில் முகம்மது மீரான்
10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை
எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி
வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்
பொட்டலில் பூத்த புதுமலர் 4
விவசாயிகள் என்ற விஞ்ஞானிகள்!
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்
UserOnline
11 Users Online
Feedjit Widget
"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்" |
மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
வைட்டமின்-டி உணவுகள்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.
வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.
வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.
நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.
நமது வழக்கமான உணவிலிருந்து வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். 3 காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி சத்தை பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி'யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி'யும் காணப்படுகிறது.
Related Tags :
Healthy Eating | Vitamin | உணவுமுறை | வைட்டமின்
Share Tweet Comments ()
அ-
அ+
×
Email this article to a friend
Recipient's Name
Recipient's Email Id
Your Name
Your Email Id
Message in details
Send
முதன்மை செய்திகள்
அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கனமழை நீடிப்பு... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மேலும் பொது மருத்துவம் செய்திகள்
குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்...
கொரோனாவும்.. காற்று மாசுபாடும்...
மாதுளை இலைகளும் மருந்தாகும்..
இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
துரித உணவை மறப்போம்... பழங்களை கொண்டாடுவோம்
தொடர்புடைய செய்திகள்
வருத்தம் தரும் வறுத்த உணவுகள்
உடல் எடை குறைப்பில் செய்யும் தவறுகள்
ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு
காலை உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா?
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் நார்ச்சத்து உணவுகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும்- பெண் சாமியார் பேட்டி
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
விட்ராதீங்க முதல்வரே... பேரரசு அறிக்கை
தமிழகத்திலேயே முதல் முறையாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற மாநகராட்சி பள்ளி சமையல் கூடம்
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு
தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
கவலைக்கிடமான நிலையில் சிவசங்கர் மாஸ்டர்... உதவிய பிரபல நடிகர்
புதிய வைரசால், இந்தியாவில் 3-வது அலைக்கு வாய்ப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
Follow @MaalaiMalar
Tweets by @maalaimalar
Top Tamil News
Breaking News
India News
World News
Tamilnadu News
District News
Sports News
Puducherry News
Sirappu Katturaigal
Tamil Cinema
Tamil Cinema Review
Tamil Cinema Preview
Tamil Cinema News
Tamil Cinema Gossip
Star Profiles
History of Tamil Cinema
Tamil Movies
Top Tamil Movies
Spirituality
Dosha pariharangal
Virathangal
Weekly Special
Slogans
Temples
Worship
Thirupaavai
Islam
Christianity
Wellbeing
Fitness and Yoga
Home Remedies
Health Food Recipe
Child care Tips
Natural Beauty Tips
Medicine for Womens
Safety Tips for Women
Cookery Receipes
Latest Technology
Latest Tech News
Latest Mobile
Tabs & Computers
Latest Gadgets
Tech Tips
Automobile
Automobile News
Bike
Car News
New Launch
Auto Tips/Leaks
Specials
T20 WorldCup
World Test Championship
Tokyo Olympics
India vs England
TNPL Cricket
IPL 2021
India vs New Zealand
மற்றவை
ஜோதிடம்
உண்மை எது
MM Apps
இந்தியா vs நியூசிலாந்து
தேர்தல் 2016
What’s in store for you?
Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.
Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.
You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.
Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.
We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.
Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens
If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu
Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.
Others
Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.
We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman
Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.
If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.
To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store |
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.
முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டிருந்த மக்கள், பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார்கள். அவர்களது போராட்டம் நியாயமானதுதான். அவர்களது கோரிக்கையும் நியாயமானதுதான். தொடர்ந்தும் அவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாமென அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு நகர சபைகளினால் கொண்டுவரப்படும் சுமார் 800 தொன் குப்பை கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் கொட்டப்படுகிறது. கொலன்னாவ மக்கள் அதற்கு எதிராக 20 வருடகாலமாக குரலெழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில்தான் கடந்த 6ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் ஏப்ரல் 9ம் திகதி சத்தியாக்கிரகம் நடைபெற்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த 500 போலிசார் ஊர் மக்களை ஓட ஓட விரட்டியடித்தனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பிரதேசமக்களால் கொழும்பு மாநகரசபைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தவிரவும் FC FR 218/2009 இலக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், 2 ஏக்கர் வட்டத்திற்குள் மாத்திரம் குப்பை கொட்ட அனுமதி வழங்கி 2009 ஏப்ரல் மாதம் 27ம் திகதி உயர் நீதிமன்றம் கட்டளையொன்று பிறப்பிக்கிறது.
ஆனால், கொழும்பு மாநகரசபையும், கொலன்னாவ நகரசபையும் அந்த நீதிமன்றக் கட்டளையை மதிக்காமல் 17 ஏக்கர் நிலத்திலும் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றன. 2009 நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்தும்படியே மக்கள் கேட்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் மீதொட்டமுல்ல பகுதியைத் தவிர, பக்கத்திலுள்ள 5 கிராமங்களின் மக்கள் இதனால் பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தஹம்புர, பன்சலஹேன, குருனியாவத்த, அவிசாவலை பாதை 101 தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இதற்கு 8 மாதங்களுக்கு முன்னர் குப்பைமேட்டிற்கு அருகிலுள்ள 160 வீடுகளை வலுக்கட்டாயமாக உடைத்து அங்கிருந்த மக்களை வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
அன்று அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லுந்தரமன்று. அன்று வெளியேற்றப்பட்ட ஒரு பெண்மணி 'ஜனரல" என்ற பத்திரிகைக்கு அளித்த தகவலில் இவ்வாறு கூறியிருந்தார்.
'இதோ பாருங்கள் இங்கே கிராம உத்தியோகத்தர் இருக்கிறார். இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இருக்கிறது. இராணுவம் இருக்கிறது. பொலிஸ் இருக்கிறது. எங்களுக்கு நடக்கும் அநியாயம் இவரகள் யாருக்கும் தெரிவதில்லை. மக்களை குடியேற்றிவிட்டு உறுதிப்பத்திரம் தருவதாக கூறிக்கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள். வரியும் அறவிட்டார்கள். சரியாக இருந்தால் அவர்கள் குப்பைமேட்டை அகற்றியிருக்க வேண்டும் கொழும்பு மாநகரை அழகுபடுத்துவதாகக் கூறி பிச்சைக்காரர்களை படுகொலை செய்த அரசாங்கம் இது. இப்படியெல்லாம் செய்து வறுமையை ஒழிக்க முடியுமா? நகர அபிவிருத்தி அதிகாரத்தை அவர் கையிலெடுத்தது இதற்காகவா?" (ஜனரல- 2012.10.28)
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றுவரை நிரந்தர வசிப்பிடமில்லாமல் இடத்துக்கிடம் தங்கி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்திற்குள் அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக உறுதியளித்து, அதுவரை வீட்டுக்கூலி என்ற வகையில் 60,000 ரூபா கொடுக்கப்பட்டிருந்தது. என்றாலும் அதற்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நகரசபையோ, வீடமைப்பு அதிகாரசபையோ, நகர்ப்புர அபிவிருத்தி அதிகாரசபையோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
குப்பைமேடு காரணமாக கழிவுகளோடு கிருமிகளும் பாடசாலை கட்டடத்திற்குள் வந்ததால். மீதொட்டமுல்ல ராஹ{ல வித்தியாலயம் மூடப்பட்டது. குப்பைகளின் துர்நாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் அடிக்கடி மயக்கமடைவதாகவும், நோய்வாய்ப்படுவதாகவும் மேற்படி பாடசாலையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். மூடப்பட்ட ராஹ{ல வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளில் அனுமதித்துள்ள போதிலும், அவர்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பைமேடு காரணமாக அந்தப் பாடசாலையிலும் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் பல்வேறு நோய்த்தாக்கங்களிற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தொற்றுநோய்கள், சருமநோய், சுவாசநோய் போன்றவை அங்கு பரவலாகக் காணப்படுகின்றன. தஹம்புர என்ற பகுதியில் மாத்திரம் டெங்கு நோயினால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். சிலர் புற்றுநோயாலும் மடிந்திருப்பதாக பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணப்படாத குழந்தைகள் மத்தியிலான புற்றுநோய் தாக்கமும் இங்கு காணப்படுகிறது. தவிரவும், விஷக்கிருமிகள் உடலுக்குள் நுழைந்தமையால் குடும்பஸ்தர்களும் மடிந்துள்ளனர். தாம் எதிர்கொண்டுள்ள இந்த அநியாயத்திற்கு தீர்வை பெற்றுத் தரும்படி கொலன்னாவ பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். ஆனால், புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு அரசாங்கம் வழமையான பரிசைக் கொடுத்திருக்கிறது.
அதுதான் பொலிசாரின் மனிதாபிமானமற்ற தாக்குதல். அந்தத் தாக்குதலால் அரசாங்கம் வென்றது. மீதொட்டமுல்ல மக்களில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வெற்றிபெற்ற அரசாங்கம் மீதொட்டமுல்லையில் மீண்டும் குப்பை கொட்டத் துவங்கியுள்ளது. நன்றாக அடிவாங்கிய மீதொட்டமுல்ல மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். என்றாலும் சுற்றுவட்டாரத்தில் வீசும் நாற்றத்தோடு அவர்களது தொலைபேசிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்தன. அதி மேதகு ஜனாதிபதியிடமிருந்து. அதில், 'உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்". என்றிருந்தது.
முந்தைய
அடுத்த
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
முன்னணி -01
போராட்டம் பத்திரிகை 01
போராட்டம் பத்திரிகை 02
போராட்டம் பத்திரிகை 03
போராட்டம் பத்திரிகை 04
போராட்டம் பத்திரிகை 05
போராட்டம் பத்திரிகை 06
போராட்டம் பத்திரிகை 07
போராட்டம் பத்திரிகை 08
போராட்டம் 05
பதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla!-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள். |
Aval Vikatan - 23 November 2021 - குழந்தைகளும் வள்ளியப்பாவும்! | memories of azha valliyappa - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
Subscribe to vikatan
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
குருப்பெயர்ச்சி பலன்கள்
கனமழை: அப்டேட்ஸ் New
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
அவள் விகடன்
ஆசிரியர் பக்கம்
நமக்குள்ளே...
என்டர்டெயின்மென்ட்
24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்
கவிதைகள்
லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
ஜோக்ஸ்
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 25 - பரிசு ரூ.5,000
லைஃப்ஸ்டைல்
உங்களுக்கான உள்ளாடைகள்... அளவு முதல் ஆரோக்கியம் வரை... முழுமையான தகவல்கள்!
24-ம் ஆண்டு கொண்டாட்டம்!
அவள் ONLINE
அனுபவங்கள் ஆயிரம்!
ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்... - அவசியம் அறிய வேண்டிய நிதித் திட்டமிடலின் அடிப்படை!
24 ஸ்பெஷல்
அன்பைப் பரிமாற அசத்தலான போட்டோ ஃபிரேம்!
சிங்கிள் ப்ளீட்... செம ஸ்டைல்... சாரி டிரேப்பிங் டிப்ஸ்
மஞ்சள் நீராட்டு விழா... தேவையா?!
இந்த இதழின் 2கே கிட்ஸ்...
2k kids: நாங்க சோஷியல் மீடியால இல்ல... நம்பலைன்னாலும் அதுதான் நெசம்!
2K kids: வீழ்வோம் என்று நினைத்தாயோ?!
2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!
மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!
கண்ணன் ஓவியங்கள் வரையும் ஜெஸ்னா சலீம்!
வினு விமல் வித்யா: மனைவியை விற்ற 17 வயது கணவன்... நாம் எங்கிருக்கிறோம்?
தன்னம்பிக்கை
பெண் முன்னேற்றம்... கேட்க வேண்டியதும், செய்ய வேண்டியதும்...
ரூ.50,000 முதலீடு... ஒன்றரைக் கோடி டர்ன் ஓவர்!
குழந்தைகளும் வள்ளியப்பாவும்!
24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்
ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா
ஹெல்த்
மனித உடலும்... 24 மணி நேரமும்!
தொடர்கள்
வெந்து தணிந்தது காடு - 6 - பட்டுக்கோட்டை பிரபாகர்
அவள் பதில்கள் - 26 - கமகமக்கும் கிராமத்து சமையல்... மணக்காத நகரத்து சமையல்... எங்கே கோளாறு?
குருப்பெயர்ச்சி பலன்கள்
பெண் உடலைப் பேசுவோம் - 5 - பூப்பெய்தாத பெண்கள்... காரணங்களும் தீர்வுகளும்!
‘குருவி தலையில் பனங்காய்’ வைக்காதீர்கள்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 6
செக் ஃப்ரம் ஹோம் - 6 - இருமலுக்கு இத்தனை காரணங்களா?
Published: 09 Nov 2021 6 AM Updated: 09 Nov 2021 6 AM
குழந்தைகளும் வள்ளியப்பாவும்!
அவள் விகடன் டீம்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
வள்ளியப்பா
- சுகன்யா
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். அந்தப் பகுதிக்குப் புதிதாகக் குடிவந்த பெண், ``வாசல்ல விளை யாடிகிட்டிருந்த என் மகனைக் காணலையே” எனப் பதறிப்போய் அக்கம்பக்கத்தில் கேட்க, இன்னொரு பெண்மணி, ``கவலைப்படாதம்மா. அதோ அசோக மரம் நிற்கிற வீட்டிலே போய்ப் பாரு. உன் மகன் இருப்பான்’’ என்றதும் அந்தப் பெண் ஓட்டமும் நடையுமாகச் சென்றார். அங்கு அவர் மகனுடன் 10, 15 குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். கதை சொல்லிக் கொண்டிருந்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. தன் குருவான கவிமணி பெயரில் சங்கம் ஒன்றைத் தோற்றுவித்து, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தை களுக்குக் கதையும் பாட்டும் சொல்வார் வள்ளி யப்பா. குழந்தைகளையும் சொல்ல வைப்பார்.
``குழந்தைகளின் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே எனது குறிக்கோள்’’ என வாழ்நாளில் பெரும்பகுதியைக் குழந்தை இலக்கியத்துக்கு அர்ப்பணித்த அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு தொடக்கத்தில் இருக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் பிறந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு நவம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியத்தைத் தனித்துறையாக வளர்த்தவர் வள்ளியப்பா. குழந்தை இலக்கியம் வளரவும், குழந்தை எழுத்தாளர்கள் பெருகவும் 1950-ல் `குழந்தை எழுத்தாளர் சங்க’த்தை நிறுவினார். இந்தியாவில் குழந்தை எழுத்தாளர்களுக்கென தொடங்கப்பட்ட முதல் சங்கம் இதுவே. தமிழிலும், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நூல்கள் வெளிவர முக்கிய காரணமாக இருந்தவர். குழந்தைகளுக்காக 60-க்கும் அதிகமான நூல்களையும், 1,000-க்கும் அதிகமான பாடல் களையும் எழுதியிருக்கிறார் அவர்.
குழந்தைகளை எளிதில் கவரும் அணில், பூனை, நாய், குதிரை, கிளி உள்ளிட்ட உயிரினங்களை அதிகம் பாடி யிருக்கிறார் வள்ளியப்பா. பெருந்தலைவர்களையும், சுற்றுலாத் தலங்களையும் எளிய நடையில், சந்த நயத்துடன் குழந்தை களுக்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளியப்பா. மழை அதிகம் தேவைப்படும் தமிழ்நாட்டில், `ரெயின் ரெயின் கோ அவே’ என்ற ஆங்கிலப் பாடல் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், மழையின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்த `வா மழையே வா’ என்று பாடினார்.
குழந்தைகளுக்கு வேடிக்கையான நகைச்சுவைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர் வள்ளியப்பா. `தென்னை மரத்தில் ஏறலாம்... தேங்காயைப் பறிக்கலாம், மா மரத்தில் ஏறலாம்... மாங்காயைப் பறிக்கலாம்’ என்று ஒவ்வொரு மரமாக எழுதியவர், இறுதியில் `வாழை மரத்தில் ஏறினால்... வழுக்கி வழுக்கி விழுகலாம்’ என்று முடித்திருப்பார்.
அழ.வள்ளியப்பாவின் மகள் தேவி நாச்சியப்பனிடம் பேசினோம், ``அப்பா மறைந்த 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதியை `குழந்தை இலக்கிய தின’மாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நிகழ்வில், குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வள்ளியப்பாவின் படைப்புகளைக் கலை நிகழ்ச்சிகளாக வழங்குவார்கள். இந்த ஆண்டு அப்பாவின் நூற்றாண்டு விழாவைக் குழந்தைகளோடு சிறப்பாகக் கொண்டாடத் திட்ட மிட்டிருக்கிறோம். அப்பா மறைவுக்கு முன்னர் பேசிய கடைசி மேடைப் பேச்சில், `இலக்கியத்துறை பட்டப் படிப்புகளில், குழந்தை இலக்கியமும் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும்’ என்றார்.
14.11.1956 அன்று டில்லியில் சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராகப் பணியாற்றினார் வள்ளியப்பா. நேரு, அவர் பிறந்த நாளில் புத்தகக் காட்சியைப் பார்வையிட வந்தபோது குழந்தை நூல்கள் பற்றிய அவரின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்.
பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புகள் துளிர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், பல்கலைக் கழக அளவில் குழந்தை இலக்கியத்தைப் பட்டப்படிப்பாக இடம்பெறச் செய்தால் குழந்தை இலக்கியம் தொய்வின்றி தொடர்ந்து வளரும். குழந்தைக் கவிஞரின் கனவும் நிறைவேறும்’’ என்றார்.
``தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க, எளிய நடையிலிருக்கும் வள்ளியப்பா வின் பாடல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது முக்கியம்’’ என்கிறார்கள் இக்காலத்துக் குழந்தை எழுத்தாளர்கள். அதுவும் குழந்தைகள், தொலைக்காட்சியே கதி எனக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில் வள்ளியப்பாவை நினைவுகூர்வது அவசியம். |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
கவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1) |
நாகராஜன் குடிக்கச்சொன்னால் நுவக்ரானையும் குடிப்பான் வெங்கடேஸ்வரலு. வெங்கடேஸ்வரலு இனி வெங்கு. நாகி (புரியுமென்று நினைக்கிறேன்) ஒரு வியாபாரி. இணைத்தொழிலாக கதை எழுதும் அறிவுஜீவி. எல்லா கதைகளும் போல் இங்கு வெங்கியின் தங்கை மங்கி மன்னிக்கவும் மங்கையர்கரசியை டாவினான் நாகி. அனுமார் போன்றதொரு பாத்திரம் இங்கு எழவில்லைஎன்றால் கதைக்கு பங்கம். எனவே அவன் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனை வெளக்கெண்ணை என்றால்தான் திரும்புவான். ஆக பாத்திரமும் பிரச்சனையும் முதல் நான்கு வரிகளில் தென்பட்டால் நல்ல கதைக்கு அறிகுறி. ஆனால் ஒன்று குறைகிறது. நீங்கள் நினைப்பது சரி. நிலம். நெய்தலுக்கும் மருததிற்கும் இடையில் ஒரு எல்லைப் பிரதேசம். பதினேழு காத தூரத்தில் குறுஞ்சி வேறு. ஆனால் இது பின் நவீன காலம். கதைக்கு போகலாம்.
முற்பகல்:
வெளிப்புற படப்பிடிப்பு:
மத்தியகோணம்:
நாகியை கோவத்துடன் மன்னிக்கவும் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் வெங்கு. சற்று நடுங்கிய நிலையில் வெளக்கெண்ணை. தெனாவெட்டாய் நாகி.
மங்கியின் நினைப்பை தொலைத்துவிடு.
இல்லையென்றால்.
நாகியை மறந்துவிடு.
இது சுலபம்.
வெளக்கெண்ணை சொலவதைக் கேளுங்கள்.
முடியாது. அவன் மறக்கவேண்டும். இல்லை மறக்கவேண்டும்.
முடியாது. மறக்க முடியாது. மறக்கவே முடியாது.
முடியும். முடியவேண்டும்.
முடியாது. முடியவே முடியாது.
மங்கியிடம் சொல்கிறேன். நாசமாய் போங்கள்.
வெயில் பற்றாமல் படப்பிடுப்பு ரத்து செய்யப்பட்டது.
**********************************************************************
உள்ளரங்கம்:
டாஸ்மாக் பெர்மிட்டேட் பார்:
தூர கோணம்(long shot)
விரும்பி அடிக்கும் கைகள் என்கிற எனது சிறுகதையைப் படித்தபின்னுமா என்னைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை வெங்கு. நான் ஒரு மேதை என்பதை நீ சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஆயிற்று பத்னேழு வருடங்கள். நீ சொன்ன பின் நீயே அதை வழிமொழியவில்லை. ஆனால் நான் ஒரு முழு அறிவு ஜீவி என்பதில் சந்தேகமுண்டோ.. வா கொண்ட்டாடுவோம் இந்த பதினேழாவது நினைவு நாளை: இது ஒரு கொண்டாட்டம். cheers for the women we lost and we love.
**********************************
அவன் ஒரு வியாபாரி என்று சொன்னேன். அவனுக்கு கணினி சாம்பிராணி செய்து விற்பது தொழில். கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் சொல்வான்: கடவுள் இருக்கிறார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்கிறது. என்னவென்றால், அவர் தனக்கான கல்லறையை தொடர்ந்து வனைந்து கொண்டிருக்கிறார். try and error method - இல் அவர் புனையும் கல்லறைக்கு தற்காலிகமாக பூமி என்று பெயர் வைத்திருக்கிறார். இதைக்கேட்டு ஒருமுறை வெங்கி சொன்னான்: எருமை கழிவு. (bull shit)
*************************************
மங்கி ஒரு செவிலி. ஒருமுறை university of Madras Dictionary - இல் NURSE என்பதன் விளக்கம் பார்த்து தனது தொழிலை மறந்தாள்; அதன் விளக்கம் இவ்வாறு இருந்தது: தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுத்தாய், குழந்தகைளை பேணி காப்பவள, நோயாளியை பேணி காப்பவள், இன தாய்ச்சி, தேனீ - எறும்பு முதலிய வகையினில் மரபு காக்கும் அலியினம், இனப்பெருக்க மாறுபாடுகளையுடைய உயிர்களிடையே பால் சார்பற்ற படிநிலை, காடு வளர நிழல் தரும் மரம், வளர்ப்பு நிலம். வினைத்தொகையில்; ஊட்டுதாய்க்கு உதவு, பாலூட்டி வளர், பேணி வளர், தாதியாக செயலாற்று, நோயாளிகளை கவனித்து பேணு. நோய் நொடி கவனித்து குணப்ப்படும்படி பணிவிடை செய். செடிகொடிகளைப் பேணு. தோட்டம் பாதுகாத்து வளர். கலை முதலியவற்றைப் பேணி ஆதரி. பகைமை - கவலை முதலியவற்றை மனதில் வைத்து பேணி வளரச்செய். தளராமல் பாதுகா. பரிவோடு கவனி. குழந்தையை பரிவோடு எடுத்தணைத்து பரிவு காட்டு. தழுவிக்கொஞ்சி விளையாடு. முழந்தாளைக் கட்டி அனைத்துக் கொண்டிரு. காலைத்தடவியவாறு உறுப்புகளை மிகு ஆதரவு காட்டி போற்றிப் பேணு. மேசைக் கோர்பந்தாட்டத்தில் எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாய் பார்த்து வை. கணப்பருகில் அணைவாய் அமர். வாக்காளர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு. முன் உந்து உலகத்தின் தொழில் வாய்ப்பில் பங்கு பெறும் நோக்குடன் அண்டி அனைத்து நிறுத்து. பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடன்நெருங்கிச் செல்.
******************************
இப்போது மங்கியும் நாகியும் ஆளுக்கொன்றாய் ஆட்டோ ஊட்டி மன்னிக்கவும் ஓட்டி பிழைக்கிறார்கள். திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் அவர்கள் சவாரிக்கு பேரம்பேசுவதை வெங்கு சாமியாக பார்த்துக்கொண்டிருக்கிறான். நுவக்ரான் குடித்தால் சாக மாட்டானென்று வேங்கியும் நாகியும் நம்பிய பொது ஆளுக்கொரு ஓல்ட்மங் ஆப்பை குடித்திருந்தார்கள்.
*****************************
நுவக்ரான் அவனைக்கொல்லும் முன் ஒரு சைக்கிள் காரன் தட்டிவிட்டு பொட்டில் அடிபட்டு செத்துப் போனான் வெங்கி.
****************************
director touch: பிற்பாடு மங்கியின் மகளுக்கு வெங்கி என்று பேர் வைக்கலாமா என்று associate அன்புவிடம் கேட்டதற்கு..
மூடிட்டு படுறா.. என்றார்.
***********
இரண்டு வருடங்கள், மூன்று மாதங்கள், பதினாலு நாட்களுக்கு முன்பு:
அண்ட வெடிப்பு.
நான்கு வருடங்களுக்கு பின் மங்கிக்கும் ஒரு மகன் பிறந்தான். வெளக்கெண்ணை அவனுக்கு அப்பாவாக acting கொடுத்தான்.
***************
சுபம். மிச்சத்தை வெண்திரையில் காணவும்.
************
Posted by adhiran at 11:17 PM
Labels: புனைவு
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Labels
கவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1) |
கவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1) |
காதல் வயப்பட்டால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியாவிட்டாலும் காதலன்கள்( ‘ன்’கள்தான் மரியாதையே வேண்டாம் அந்த அளவு டார்ச்சர்) நண்பர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது ஓரளவு தெரிந்திருக்கும்.
“ கை என்னா ஜில்லுன்னு இருக்கும் தெரியுமா மாப்ள.. ஐஸ்கட்டி மாதிரி”
இவர்களிடம் தர்க்கமே பண்ணக்கூடாது..மாறாக “ஐஸ் கட்டி மாதிரி இருந்தா ரொம்ப நேரம் பிடிக்க முடியாதே மாப்ள”என்று சொல்லிப்பாருங்கள். பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.
அதாவது, எதனோடும் ஒப்பிட்டு,ஆனாலும் அதைவிட அந்த காதலியின் அழகுதான் உயர்ந்தது என்பதில் உறுதியாய் இருப்பார்கள்.
“என்ன வேணா சொல்லு, உலகத்துலயே அப்படி ஒரு ஸ்வீட் வாய்ஸ் இருக்காது..ச்சான்ஸே இல்ல..பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்”
“என்னத்தயாவது சொல்லு.. அப்ப பாடகியா இருக்குறவங்களவிட உன்னோட ஆள் வாய்ஸ் ஸ்வீட்டா? நீ இந்த ஊரவிட்டுத் தாண்டுனது இல்ல..உலகத்துலயே என்ன உலகத்துலயே??”
“உனக்கு என்னடா தெரியும்..” என்று நட்பை முறித்துவிடுவார்கள்..எவள் குரலுக்காவோ நம் குரல்வளை ஒதுங்கும்..
அவங்கங்க ஆளுன்னா அப்படித்தான்.. சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்..
ஒரு பெண்ணின் கூந்தல் வாசம் பற்றி பாடிய சிவனை, நான் மேலே சொன்ன நண்பனைப் போல நக்கீரர் “எவன் சொன்னது”..என்ற ரேஞ்சில் எதிர் கேள்வி கேட்டு பொசுங்கிப் போனது கீழ்வரும் இந்தப் பாடல் மூலம் தான்..
ரசனையான ஆளாக இருந்தால் இந்த வரிகள் மிகப் பிடிக்கும்..
விளக்கம்..
“அங்கும் இங்குமாய் தேடித்தேடி தேன் பருகும் வண்டே, நீ பார்த்தவற்றை மறைக்காமல், பொய் சொல்லாமல் சொல். மயிலைப் போல அழகான,வரிசையான பற்களை உடைய, அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து வரும் நறுமணத்தைவிட அதிக வாசனை உள்ள மலரை நீ பார்த்திருக்கிறாயா என்று சொல்”
இங்கு சிறப்பு என்பது.. ஒரு பொருளைப்பற்றிய தெளிவான கருத்தை, அந்த பொருளை பற்றி நன்கு அறிந்தவர்களிடம் கேட்பது என்பதே..
மலர்களின் வாசம் என்பது மலர்விட்டு மலர் தாவும் வண்டு மட்டுமே நன்கு அறியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இங்கு தலைவியின் கூந்தல் மணம் எந்த மலரின் வாசத்தையும் விட சிறந்தது என்பதை கேட்க,வண்டை உபயோகித்திருப்பது புலவரின் புத்தியின் யுக்தி.
அந்தப் பாடல்
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது,கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று,அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
(காமம் செப்பாது: பொய் சொல்லாது, எயிற்று: பல், அரிவை:பெண், நறியவும்:வாசனை( நாற்றம்:வாசனை.)
தலைவனின் கூற்றாக குறிஞ்சித்திணையில் இறையனார் இயற்றியது என்பதை விட ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குனரால் “திருவிளையாடல்”படம் மூலம் புகழ் பெற்றது என்று கூறினாலும் தப்பில்லை. |
ரண்டாவது மதகு நூலின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒரு குதிரை வண்டி பயணம் சித்தரிக்கப்படுகிறது. வெள்ளைச் சேலை கட்டிய மீனாட்சி தான் இரு பயணங்களிலும் இடம்பெறுபவள். முதல் பயணம் தன் பெண்ணுக்காக தன் சகோதரனிடம் வரன் கேட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம். |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:05, 21 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
Enforcing Human Rights: Towards an Egalitarian Sri Lanka
நூலக எண் 6140
ஆசிரியர் Ratnajeevan, S.
நூல் வகை -
மொழி ஆங்கிலம்
வெளியீட்டாளர் International Centre for Ethnic Studies
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 119
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்கள்
நூல்கள் [11,827] இதழ்கள் [13,470] பத்திரிகைகள் [53,685] பிரசுரங்கள் [1,191] நினைவு மலர்கள் [1,524] சிறப்பு மலர்கள் [5,613] எழுத்தாளர்கள் [4,910] பதிப்பாளர்கள் [4,212] வெளியீட்டு ஆண்டு [186] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [3,161]
உங்கள் பங்களிப்புகளுக்கு
"https://noolaham.org/wiki/index.php?title=Enforcing_Human_Rights:_Towards_an_Egalitarian_Sri_Lanka&oldid=114476" இருந்து மீள்விக்கப்பட்டது |
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது. மேலும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய...
இந்தியா
நாளை குஜராத் பயணமாகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ரேவ்ஸ்ரீ - October 27, 2021
புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வீட்டுத்...
இந்தியா
நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை
ரேவ்ஸ்ரீ - September 5, 2021
திருவனந்தபுரம்: நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார். கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு ஒரு சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில்...
தமிழ் நாடு
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
ரேவ்ஸ்ரீ - July 27, 2021
சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,...
இந்தியா
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைது
ரேவ்ஸ்ரீ - June 25, 2021
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது முக்கியமான நடவடிக்கையாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்...
இந்தியா
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு
ரேவ்ஸ்ரீ - June 3, 2021
புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளிவந்த...
விளையாட்டு
ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு
ரேவ்ஸ்ரீ - May 23, 2021
மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சில...
இந்தியா
வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
ரேவ்ஸ்ரீ - May 21, 2021
புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி தனிநபர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், நிறுவனங்கள் நவம்பர் 30ம் தேதி வரையிலும் கணக்கு தாக்கல்...
தமிழ் நாடு
புதுச்சேரி தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ரேவ்ஸ்ரீ - March 11, 2021
புதுச்சேரி: புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் தேமுதிகவின்...
உலகம்
சீனா, பாகிஸ்தானை சமாளிக்க் அமெரிக்காவிடம் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு
ரேவ்ஸ்ரீ - March 10, 2021
புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்திய வான்வழி பாதுகாப்பை... |
Saipriya Deva : இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் விளம்பர படத்தில் சாய்பிரியா தேவா நடித்து வருகிறார். நடிகை சாய்பிரியா தேவா, ஏற்கனவே சிவலிங்கா நடித்திருந்த நிலையில், தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. View this post on Instagram A ...
Posted by Rasikan March 6, 2021
சிம்புவுக்கு வில்லனாகும் முன்னணி இயக்குனர்
கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’ திரைப்படம், தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். மேலும் நடிகை பிரியா ... |
November 27, 2021 பாகிஸ்தானுக்கு சீன ஆயுத ஏற்றுமதி பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு பாதிப்பு இந்திய கடற்படை தளபதி !!
November 27, 2021 2022ல் மேலதிக அஸ்திரா ஏவுகணைகளை பெற உள்ள இந்திய விமானப்படை மற்றும் கடற்படை !!
November 27, 2021 2022ல் இந்தியாவுக்கான் Ka226T ரக ஹெலிகாப்டர்களின் தரச்சோதனை நிறைவடையும் ரஷ்யா !!
November 27, 2021 பாராளுமன்ற நிலைக்குழு முன் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆஜர்; 31 உறுப்பினர்களில் 11 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு நாட்டின் பாதுகாப்பில் அரசியல்வாதிகளின் அக்கறை !!
November 27, 2021 கடுமையான காயத்திலும் தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்த ஹவில்தார் பழனி
November 27, 2021 தரமற்ற சீன இராணுவ உபகரணங்களால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வங்காளதேசம்
Day: February 3, 2021
கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்த பாக்
February 3, 2021
புதன் கிழமை அன்று பாகிஸ்தான் தனது கஸ்நாவி தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கியழிக்கும் ஏவுகணையை பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. 290கிமீ தூரம் வரை அணுவை சுமந்து சென்று இந்த பலிஸ்டிக் ஏவுகணை தாக்கும் என அந்நாட்டு இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் இராணுவத்தின் ஸ்ட்ரேடஜிக் பிரிவின் வருடந்திர போர்பயிற்சியின் இறுதி நிகழ்வாக இந்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு இராணுவத்தின் மீடியா பிரிவு கூறியுள்ளது. இந்த சோதனை ஸ்ட்ரேடஜிக் கமாண்டின் தளபதி லெப் […]
Read More
இந்தியாவின் புதிய CCM ஏவுகணை ஏரோ இந்தியாவில் அறிமுகம் !!
February 3, 2021
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய CCM ஏவுகணையை தயாரித்து உள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ரஷ்ய R73 ஏவுகணைக்கு மாற்றாக அமையும். மேலும் இதற்கு முன்னர் இந்திய விமானப்படை விமானங்கள் அந்தந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தி வந்தன, இதுவே பெரும் சவாலாக விளங்கியது. இனி எந்த விமானத்திலும் குறிப்பிட்ட சில வகை ஏவுகணைகளை பயன்படுத்தி கொள்ளும் நிலையை இந்த ஏவுகணை உருவாக்கி உள்ளது அதாவது பொதுவான சில ஆயுதங்களை […]
Read More
100 புதிய ராணுவ பள்ளிகள் திறக்க திட்டம் !!
February 3, 2021
கடந்த 1960ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் அவர்களுடைய முயற்சியால் ராணுவ பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 ராணுவ பள்ளிகள் சைனிக் ஸ்கூல் சொசைட்டியின் கீழ் இயங்கி வருகின்றன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது சுமார் 100 புதிய ராணுவ பள்ளிகளை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திறக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் நாட்டில் இன்னும் ஏராளமான ராணுவ அதிகாரிகளை உருவாக்க முடியும் என்பது வரவேற்க தகுந்த […]
Read More
தேஜஸ் வாங்குவதற்கான 48000 கோடி அளவிலான ஒப்பந்தம் கையெழுத்து
February 3, 2021
ஹால் நிறுவனத்திடம் இருந்து 48000 கோடிகள் செலவில் 83 தேஜஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. ஏரோ இந்தியா 2021ன் போது நனடபெற்ற இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒற்றை என்ஜின் கொண்ட பலபணி நான்காம் தலைமுறை போர்விமானம் தான் தேஜஸ் ஆகும்.கடந்த மாதம் நடைபெற்ற கேபினட் கமிட்டியின் போது 73 தேஜஸ் மார்க்1ஏ ரக விமானங்கள் மற்றும் பத்து மார்க்-1ஏ பயிற்சி விமானங்கள் வாங்க அனுமதி […]
Read More
இந்தியா மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக கையாள வேண்டும் !!
February 3, 2021
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா பாக் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றார். தற்போது பாக் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More
Recent Posts
பாகிஸ்தானுக்கு சீன ஆயுத ஏற்றுமதி பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு பாதிப்பு இந்திய கடற்படை தளபதி !! November 27, 2021
2022ல் மேலதிக அஸ்திரா ஏவுகணைகளை பெற உள்ள இந்திய விமானப்படை மற்றும் கடற்படை !! November 27, 2021
2022ல் இந்தியாவுக்கான் Ka226T ரக ஹெலிகாப்டர்களின் தரச்சோதனை நிறைவடையும் ரஷ்யா !! November 27, 2021
பாராளுமன்ற நிலைக்குழு முன் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆஜர்; 31 உறுப்பினர்களில் 11 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு நாட்டின் பாதுகாப்பில் அரசியல்வாதிகளின் அக்கறை !! November 27, 2021
கடுமையான காயத்திலும் தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்த ஹவில்தார் பழனி November 27, 2021
தரமற்ற சீன இராணுவ உபகரணங்களால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வங்காளதேசம் November 27, 2021
ஷாஹீன் 1-ஏ அணுஆயுத ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான் November 27, 2021
ஏர்பஸ் நிறுவனத்தின் ராணுவ விமானத்திற்கு அதிநவீன இந்திய தயாரிப்பு ரேடார்கள் !! November 27, 2021
நக்சல்களுக்கு ஆயுதம் விற்ற BSF கான்ஸ்டபிள் கைது, மிகப்பெரிய ஆயுத வியாபார கும்பலின் தலைவன் அதிர்ச்சி தகவல்கள் !! November 27, 2021
BSF மற்றும் பாக் ரேஞ்சர்களின் சந்திப்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் !! November 26, 2021 |
கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம்…. Read more »
Popular
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்! 9 Comments
திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி! 6 Comments
தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை!!! 5 Comments
Latest
தமிழறிஞர், இலக்கண உரையாசிரியர், தொல்காப்பிய உரைக்கு விளக்க நூல் எழுதியவர், ஐயா ஆ. பூவராகம் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! November 27, 2021
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் November 27, 2021
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம் November 27, 2021
இன்று தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் அவரை போற்றி கொண்டாடுவோம்!!! November 26, 2021 |
Home / Unlabelled / பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் உதயம் – அறிக்கை வெளியீடு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் உதயம் – அறிக்கை வெளியீடு
Jaffna Nets Wednesday, February 10, 2021 0
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், லியோ பாதிரியார், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். |
சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » ஆரோக்கியம் தரும் 30 உணவுகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print
- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -
ஆரோக்கியம் தரும் 30 உணவுகள்
Posted By admin On July 30, 2011 @ 11:05 am In இயற்கை,மருத்துவம் | Comments Disabled
நெல்லி பொடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, கறிவேப்பிலை (உருவியது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – ஒரு கட்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிது.
செய்முறை: நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் (இதுதான் ‘நெல்லி முள்ளி’). எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும். அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.
பயன்: கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவேப்பிலையும் இணைந்திருப்பதால், கருகரு கூந்தலுக்கு கட்டாயம் கேரன்டி. இளநரையையும் போக்கும்.
வெந்தயம் மிளகு பொடி
தேவையானவை: தோலுடன் முழு துவரை – கால் கப் (அது கிடைக்காவிடில், துவரம்பருப்பு கால் கப்), வெந்தயம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: துவரையையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் பாதி வறுபட்டுக்கொண்டிருக்கும்போதே, மிளகையும் சேர்க்கவும். அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். லேசான கசப்புச் சுவையுடன் இருக்கும் இந்தப் பொடியை, சாதத்தில் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பயன்: தினமும் இந்தப் பொடியை உணவில் சேர்த்துக்கொண்டால், பட்டுப் போன்ற ‘ஸில்க்கி’ கூந்தல் பளபளக்கும்.
‘டூ இன் ஒன்’ வெந்தயப் பொடி
தேவையானவை: வெந்தயம் – அரை கப், காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு.
செய்முறை: வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அதில் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருந்தால், இரண்டு நாளில் நன்கு முளைத்து விடும். வாணலியைக் காயவைத்து, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். புளியையும் அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுக்கவும். இவற்றோடு முளைகட்டிய வெந்தயத்தையும் போட்டெடுத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் லேசாக வெந்நீர் விட்டுக் கிளறினால் ‘இன்ஸ்டன்ட்’ துவையலாகிவிடும். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். சிறிது எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி தாளித்து, வெந்தயப் பொடியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றினால் ‘இன்ஸ்டன்ட்’ வெந்தயக் குழம்பு ரெடி.
பயன்: வெந்தயம் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. அத்துடன் கூந்தலில் ஏற்படும் பொடுகு, நுனி பிளவுபடுதல் போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயம் சிறந்த மருந்து.
நெல்லிக்காய் ஜாமூன் சிரப்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, வெல்லம் – ஒன்றே முக்கால் கப்.
செய்முறை: நெல்லிக்காய்களைக் கழுவித் துடைக்கவும். நோட்புக் தைக்கும் பெரிய ஊசியால், நெல்லிக்காய்களில் ஆங்காங்கே துளை இடவும். அல்லது, சுற்றிலும் கத்தியால், லேசாகக் கீறிவிடவும். ஈரமில்லாத பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் முதலில் மூன்று நெல்லிக்காய்களை போடவும். அடுத்ததாக வெல்லத்தூளைப் போடவும். பிறகு நெல்லிக்காய்களில் மூன்றைப் போடவும். மீண்டும் வெல்லத்தூள், நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேலே வெல்லம்வருவது போல முடிக்கவும். பிறகு, ஒரு சுத்தமான மெல்லிய துணியை பாட்டிலின் வாயில் கட்டி, பிறகு பாட்டிலை மூடி வைத்துவிடவும். இதை 3 வாரங்கள் கழித்துத் திறந்து பார்த்தால், வெல்லம் உருகி, நெல்லிக்காயின் சிரப் சேர்ந்திருக்கும். அதில் ஊறிய நெல்லிக்காய், ஜாமூன் போல சுவையாக இருக்கும். அந்த சிரப்பில் இருக்கிறது அவ்வளவு சத்து!
பயன்: ‘நெல்லிக்காய்’ காயகல்பம் போல. தலைமுடியில் தொடங்கி உடலின் பல பாகங்களை அழகுபடுத்துவது நெல்லிக்காய். இளநரையைத் தடுக்கும். பித்தத்தைப் போக்கும்.
வெந்தயக்கீரை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு, ஓமம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 3.
செய்முறை: வெந்தயக்கீரையைக் காம்பு கிள்ளி, அலசி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், ஓமம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி சாறெடுக்கவும். கோதுமை மாவில் இந்தச் சாறைக் கலந்து, வெந்தயக்கீரையையும் போட்டு, சிறிது வெந்நீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். (வெந்நீரின் சூட்டிலேயே வெந்தயக் கீரை வெந்துவிடும்). பிசைந்த மாவை, சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு வேகவைக்கவும். சப்பாத்தியை மீண்டும் மீண்டும் வேகவிட்டு, திருப்பிவிட்டு அப்பளம் போல வேகவிட்டு எடுத்து வைத்தால், தேநீருக்கு ஏற்ற சைட்-டிஷ்.
பயன்: தலைமுடி வறட்சி இல்லாமல் இருக்கும். பொடுகுத்தொல்லை இல்லாமல், கூந்தல் மிருதுவாக, பளபளப்பாக இருக்கும்.
நாவல்பழ ஜூஸ்
தேவையானவை: நாவல்பழம் (நீள் வடிவம்) – 10, பேரீச்சம்பழம் – 10, வெல்லத்தூள் – கால் கப், எலுமிச்சம்பழம் (விருப்பப்பட்டால்) – 1, உப்பு – சிறிதளவு.
செய்முறை: நாவல்பழத்தை இரண்டாகக் கீறி, விதை நீக்கவும். பேரீச்சம்பழங்களையும் விதையை எடுக்கவும். இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். வெல்லத்தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வெல்லத்தண்ணீர் ஆறியதும், நாவல்பழ விழுதைச் சேர்க்கவும். சிட்டிகை உப்புப் போட்டு, அருந்தலாம். விரும்பினால், எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய புதினாவை மேலே தூவலாம். மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும்.
பயன்: நாவல்பழம் கண்களுக்கு மிகவும் நல்லது. நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் பெற இந்த ஜூஸ் உதவும்.
வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
தேவையானவை: சுத்தம்செய்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – அரை கப், தயிர் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 5, மல்லித்தழை – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாழைப்பூவையும் வெள்ளரிக்காயையும் கலந்துகொள்ளவும். சிறிதளவு எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து வாழைப்பூ கலவையில் கொட்டிக் கலக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு, வாழைப்பூ கலவையில் தயிர், உப்பு, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். (குறிப்பு: இதற்கான தயிர் உறைய வைக்கும்போது, பாலை தண்ணீரில்லாமல் கெட்டியாகக் காய்ச்சி, துளி மோர் விட்டு உறைய வைக்கவேண்டும். அந்தத் தயிர்தான், வாழைப்பூ பச்சடிக்கு நன்றாக இருக்கும்.)
பயன்: கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையம் நீங்கும். கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகள் இல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வெள்ளரி விதை ஸ்பெஷல் பால்
தேவையானவை: வெள்ளரி விதை (கடைகளில் கிடைக்கும்), கசகசா – தலா கால் கப், பூவன் பழம் – 1, தேன் – 2 டீஸ்பூன், பால் – அரை கப், கார்ன்ஃப்ளேக்ஸ் – ஒரு கைப்பிடி.
செய்முறை: வெள்ளரி விதையையும் கசகசாவையும் சிறிது பாலில் ஊறவைத்து, அரையுங்கள். மீதிப் பாலைக் காய்ச்சி, அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக்கி, அதையும் பாலோடு சேர்த்துக் கிளறுங்கள். ஆறியதும் தேனை ஊற்றிக் கலந்து, பருகவும். விருப்பப்பட்டவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்து, ‘ஜில்’லென்றும் அருந்தலாம்.
பயன்: கண்ணுக்குக் கீழிருக்கும் கருவளையம் நீங்குவதற்கு, இந்தப் பால் பெரிதும் உதவும். வெள்ளரி விதையை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்வது நல்லது. அவ்வப்போது இந்த ஸ்பெஷல் பால் தயாரித்து அருந்தி, கருவளையம் நீங்கிய கண்களைப் பெறலாம்.
வெஜிடபிள் ஜூஸ்
தேவையானவை: வெள்ளரிக்காய் – 10 வில்லைகள், சுரைக்காய் – கால் கிலோ, இஞ்சி – ஒரு துண்டு, பூசணிக்காய் – கால் கிலோ, எலுமிச்சம்பழம் – 3, சர்க்கரை – கால் கப், மிளகு, சீரகப் பொடி – ஒரு சிட்டிகை, புதினா, மல்லித்தழை – தலா சிறிதளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, தனியாக அரைத்து சாறெடுக்கவும். காய்கள் மூன்றையும் தோல்சீவி, அரைத்து வடிகட்டி சாறெக்கவும். அதோடு சர்க்கரையைக் கலந்து வைத்துக்கொள்ளவும். இஞ்சிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு-சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை கலந்துகொள்ளவும். காய்கறிகளின் சாறையும் இஞ்சிச் சாற்றையும் கலந்து, தேவையானால் தண்ணீர் கலந்து அருந்தவும். இதை ஒரு முறை செய்து ஒரு வாரம் வரை ஃப்ரிச்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
பயன்: கண்களின் கீழ் வரும் கருவளையத்தைப் போக்குவதுடன், கண்களுக்குக் கீழே விழும் நீர்ச்சுரப்பை வடியச் செய்யும். தேவையற்ற ஊளைச்சதை குறையும்.
பொன்னாங்கண்ணி சூப்
தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை (ஆய்ந்தது) – ஒரு கப், வல்லாரை (ஆய்ந்தது) – ஒரு கப், தனியா – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – அரை டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இரண்டு கீரைகளையும் அலசி எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.
பயன்: கண்கள் பிரகாசமாகவும், ‘பளிச்’சென்று கண்களை எடுத்துக் காட்டவும் இந்த சூப்பைப் பருகலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த சூப் உதவி செய்யும்.
கேரட் தேங்காய்ப்பால் கீர்
தேவையானவை: கேரட் (பெரியது) – 2, தேங்காய்ப்பால் – அரை கப், பால் – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்தூள் – அரை கப், முந்திரிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தேங்காய்ப்பாலையும் பாலையும் கலந்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஏலத்தூள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து வைக்கவும் (ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்). கேரட்டை துருவி, மிக்ஸியில் போட்டு சாறு எடுக்கவும் (ஜூஸர் இருந்தால், அதில் எடுக்கலாம். சாறு நன்றாக இருக்கும்). இந்த கேரட் சாறை, காய்ச்சி வைத்திருக்கும் தேங்காய்ப்பாலுடன் கலந்து பரிமாறவும்.
பயன்: கண்களுக்கு நல்ல ஒளியையும் மேனிக்கு சிகப்பழகையும் தரும் இந்த கீர்.
சுண்டைக்காய் துவையல்
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் – அரை கப், பச்சை மிளகாய் – கால் கப், உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் (விரலிமஞ்சள் கிடைத்தால் நல்லது. அதையே ஒரு துண்டு வைத்துக்கொள்ளலாம்), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, வெந்தயம் – கால் டீஸ்பூன்.
செய்முறை: சுண்டைக்காயை காம்பு நீக்கி, நசுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படிச் செய்தால் விதைகள் வந்துவிடும். வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் (அல்லது) மஞ்சள், பெருங்காயம், புளி, உப்பு, வறுத்த வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபட்டிருக்கும்போது, சுண்டைக்காயையும் போட்டு அரைத்து பெருபெருக்கையாக எடுத்துவிடவும். சுவையாக இருக்கும் இந்தத் துவையல், ஆரோக்கியத்துக்கு அற்புத தோழன்.
பயன்: பருக்கள் வந்தால், சீழ் கோர்த்து முகத்தில் பள்ளமோ, வடுக்களோ வராமல் தடுக்கும்.
ஸ்டஃப்டு’ டொமேடோ
தேவையானவை: ஆப்பிள் தக்காளி – 4, இஞ்சி – ஒரு பெரிய துண்டு, ஓமம் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடி, மிளகுதூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள் தக்காளியை நான்காகக் கீறி (முழுவதுமாக, நான்கு துண்டுகளாக வெட்டிவிடக்கூடாது) வைத்துக்கொள்ளவும். இஞ்சி, ஓமம், மல்லித்தழை, மிளகு – சீரகத்தூள் எல்லாவற்றையும் நன்கு நைஸாக அரைக்கவும் (அம்மியில் அரைத்தால் மிக நன்றாக இருக்கும்). ஒவ்வொரு தக்காளிக்குள்ளும், அரைத்த மசாலாவை ‘ஸ்டஃப்’ செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து, ‘ஸ்டஃப்டு’ தக்காளியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன் எடுக்கவும். எல்லா தக்காளிகளையும் இதே போல செய்து, சூடாகப் பரிமாறவும். பிரெட், பூரிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
பயன்: ஆப்பிள் போன்ற கன்னம் பெற இந்தத் தக்காளி டிஷ் உதவும்.
‘த்ரீ இன் ஒன்’ ஜாம்
தேவையானவை: பெரிய சப்போட்டா – 3, மாதுளம்பழம் – 1, பேரீச்சை – 10, சர்க்கரை – அரை கப், சாரைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சப்போட்டாவைக் கழுவி, தோல் சீவி, விதை நீக்கவும். மாதுளையை உதிர்த்துக்கொள்ளவும். பேரீச்சையை விதை நீக்கவும். சப்போட்டாவையும் பேரீச்சை யையும் சிறு துண்டுகளாக்கி, மாதுளை முத்துக்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒற்றைக் கம்பிப் பதத்தில் பாகு வைக்கவும். அரைத்த விழுதை, சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறவும். பத்து நிமிஷம் கிளறியபின், ‘ஜாம்’ பதத்தில் சுருண்டு வரும். அப்போது சாரைப்பருப்பை தூவி இறக்கவும். இந்த ஜாமை, பிரெட், சப்பாத்தி ஆகியாவற்றுடன் சாப்பிடலாம். அல்லது, தினமும் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
பயன்: தோல் பளபளப்புக்கும், மினுமினுப்புக்கும் இந்த ஜாம் துணைபுரியும்.
புதினா பொடி
தேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் (கட்டிப் பெருங்காயமாக இருந்தால் – 1 கட்டி_), உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பெருங்காயத்தைப் போட்டு பொரிந்ததும் எடுத்துக்கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு, மிளகு வெடித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வாணலி சூடாக இருக்கும்போதே, புதினாவைப் போட்டு, அப்படியே ஒரு புரட்டி புரட்டி வைக்கவும். மிக்ஸியின் சிறிய ஜாரில் முதலில் உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொண்டு, பிறகு, அதோடு புதினாவையும் போட்டு அரைக்கவேண்டும். (குறிப்பு: மேலே சொன்ன முறையில் வறுத்து அரைத்தால்தான் பொடி நல்ல பச்சை நிறத்தில் வரும்). இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். ரசம் வைத்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் புதினாப்பொடி போடலாம். இன்னும், புலவு, பொரியல் போன்ற அயிட்டங்களில் தூவினால், சுவை ‘ஓஹோ’தான்.
பயன்: பருக்கள் தொல்லையிலிருந்து விடுபட, இந்தப் பொடி கைகொடுக்கும்.
உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்
தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், நாட்டுச்சர்க்கரை – முக்கால் கப், நெய் – கால் கப், ஏலக்காய் – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை, வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். மிக்ஸியில் போட்டு, ரொம்பவும் நைஸாக இல்லாமல் அரைக்கவும். சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடிசெய்யவும். அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும். அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும்.
பயன்: ‘உளுத்துப் போன உடம்புக்கு, உளுந்து’ எனப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். இடுப்பு வலுப்பெற உளுந்து மிகச் சிறந்த உணவு. உடல் வலிமை பெற்றுத் திகழும்.
மசாலா பால் பூரி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பாதாம் – 8, பிஸ்தா – 8, அக்ரூட் – 4, ஏலக்காய்தூள், குங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை, பால் – ஒரு கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பூரி பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாதாமை கொதிக்கிற நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை நீக்கவும். அதே தண்ணீரிலேயே பிஸ்தா, அக்ரூட்டை ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, பாதாம், பிஸ்தா அக்ரூட் மூன்றையும் ஏலப்பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தெடுக்கவும். அந்த விழுதை துணியில் கட்டிப் பிழிந்து (அல்லது) வடிகட்டியில் ஊற்றி பால் எடுக்கவும். ஒரு கப் பசும்பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, சர்க்கரை, குங்குமப்பூ போட்டு இறக்கவும். வடிகட்டி வைத்திருக்கும் பாதாம் பால், காய்ச்சிய பால் இரண்டையும் கலந்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். கோதுமை மாவைப் பிசைந்து, சிறு சிறு பூரிகளாகத் திரட்டவும். அல்லது பெரிய பூரியாகத் திரட்டி, ஒரு சிறிய பாட்டில் மூடியால் (சாஸ் பாட்டில் மூடி வடிவில்) சிறிய வட்டங்களாக வெட்டி எடுக்கவும். இந்தப் பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுத்து, தட்டில் அடுக்கவும். தயாராக இருக்கும் மசாலா பாலை பூரிகளின் மேல் விட்டுப் பரிமாறவும்.
பயன்: வாரம் ஒருமுறை செய்து சாப்பிடலாம். மார்வாடி குடும்பங்களில் மிக பிரபலமான இந்த பூரியில் சேர்த்திருக்கும் பால், சருமத்துக்கு பளபளப்பும் பொலிவும் தரும்.
அகத்திக்கீரை பருப்பு
தேவையானவை: அகத்திக்கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 8, துவரம்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (அல்லது) மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன். (பூண்டு வாசம் பிடிக்காதவர்கள் மிளகு, சீரகம் சேர்க்கலாம்).
செய்முறை: துவரம்பருப்பை, ரொம்ப மசிந்துவிடாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அகத்திக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்துகொள்ளவும். அதில் பாதியை பருப்போடு சேர்க்கவும். மீதிக் கீரையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் வேகவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, பருப்பு + கீரை கலவையை அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு (அல்லது) மிளகு, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைவேக்காடாக எடுத்து வைத்திருக்கும் அகத்திக் கீரையையும் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். இந்தக் கலவையை, பருப்பு + கீரையுடன் போட்டு, வெங்காயத்தையும் வதக்கி அதோடு சேர்த்து இறக்கவும். இதையே இன்னொரு விதமாகவும் செய்யலாம். சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், பூண்டு (அல்லது) மிளகு சீரகம் தாளித்து, தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, அரைவேக்காடாக எடுத்துவைத்த கீரையையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டிவிடவும். இதை, அப்படியே பருப்பும் கீரையும் கொதித்து, சேர்ந்தாற்போல வரும்போது அதோடு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பயன்: அகத்திக்கீரை, சருமத்தை பளபளப்பாக்க உதவும்.
பீட்ரூட் பன்னீர் ஜாம்
தேவையானவை: ‘பேபி பிங்க்’ நிற ரோஜாப்பூ – 10, பீட்ரூட் – 2, சர்க்கரை – கால் கப், ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன், உலர்ந்த திராட்சை – ஒரு டீஸ்பூன், ஒடித்த முந்திரி – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ரோஜா இதழ்களை உதிர்த்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவைத்து, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மூடி வைத்துவிடவும். ஒரு மணி நேரம் கழித்து, திறந்து, வடிகட்டினால், அரை டம்ளர் அளவுக்கு பன்னீர் கிடைக்கும். திராட்சை, முந்திரியை நெய்யில் வறுக்கவும். பீட்ரூட்டைக் கழுவித் தோல் சீவித் துருவவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். பன்னீர் மட்டுமே சேர்த்து அரைக்க வேண்டும் (தண்ணீரே சேர்க்கக் கூடாது). வாணலியில் லேசாக நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு கிளறி, ஏலத்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். இதை பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். கேரட்டிலும் இதே போல, பன்னீர் ஜாம் செய்யலாம்.
பயன்: ரோஜா போன்ற சிவந்த உதடுகள் பெற, இந்த ஜாமைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
உளுத்தம்பருப்பு இலை வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், சீரகம் – 1 டீஸ்பூன், அரை உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், எள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை மிக்ஸியில் போட்டு, கரகரவென அரைக்கவும். சீரகம், அரை உளுத்தம்பருப்பு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக, கரகரப்பாகப் பொடி செய்யவும். உடைத்து வைத்திருக்கும் உளுத்தம்பருப்பில், பொடி செய்த பொருட்களையும் போட்டு, எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது வெந்நீர் விட்டுப் பிசறி, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, அந்த மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, காயும் எண்ணெயில் போட்டு, மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும். மாவை அரைத்து வைத்துக்கொண்டால், மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ருசியான வடை இது. எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
பயன்: அழகிய, உறுதியான உடல் கட்டுக்கு உளுந்துதான் சிறந்த உணவு.
திரிகடுகம் ரசம்
தேவையானவை: கொள்ளு – அரை கப், சுக்கு – 10 கிராம், மிளகு – 10 கிராம், திப்பிலி – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்), புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பெருங்காயம் – அரை டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் கொள்ளைப் போட்டு, 5 நிமிடம் கொள்ளு வெந்ததும் அந்தத் தண்ணீரை வடித்துவைத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து, சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்ஸியில் ‘கரகர’ப்பாகப் பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு (கரைக்கக் கூடாது), அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். புளி கொதித்த தண்ணீரையும் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் கலந்து, அதோடு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும் (அதற்கு மேல் கொதித்தால் சுவை மாறிவிடும்). எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
பயன்: ஊளைச்சதை குறைந்து, உடல் பொலிவோடு திகழும்.
பொட்டுக்கடலை லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 5 டேபிள்ஸ்பூன், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், லவங்கம் – 4, ஏலக்காய் – 4.
செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். முந்திரியை வறுத்து, ஒடித்துக்கொள்ளவும். லவங்கம், ஏலக்காய் இரண்டையும் பொடிசெய்யவும். எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். நெய்யைக் காயவைத்து ஊற்றி, உடனே உருண்டை பிடியுங்கள். (குறிப்பு: லவங்கம் சேர்ப்பதால், பொட்டுக்கடலை மாவு வாய்க்குள், மேல் அன்னத்தில் ஒட்டாமல் தடுக் கும்).
பயன்: புரோட்டீன் சத்து நிறைந்த இந்த லட்டு, முகம் வெளிறி, உடல் மெலிந்து, புஷ்டி இன்றி காணப் படுபவர்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு போஷாக்கு தரும் உணவு.
மக்காச்சோள சுண்டல்
தேவையானவை: உதிர்த்த சோளமணிகள் – ஒரு கப், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயம் – அரை டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, மல்லித்தழை – சிறிது.
செய்முறை: சோளமணிகளை 2 கப் தண்ணீரில் போட்டு வேகவிடவும் (குக்கரில் வேகவைக்கக்கூடாது). 5 நிமிடத்தில் சோளம் வெந்துவிடும். தண்ணீர் வற்றிவந்ததும், அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம் போட்டுக் கிளறவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி அதன் மேலே போட்டு, பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறவும். குழந்தைகளுக்கு நல்ல வலு கொடுக்கும் அயிட்டம்.
பயன்: உடல் இளைக்க விரும்பி, டயட்டில் இருப்பவர்கள் தினமும் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக இந்த சுண்டலை சாப்பிடலாம்.
இஞ்சி அல்வா
தேவையானவை: இஞ்சி – 100 கிராம், வெல்லம் (பொடித்தது) – 2 கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 10, ஏலக்காய்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும். வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும். ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் நெய்விட்டுக் கிளறவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தொடர்ந்து கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
பயன்: ரத்தசோகையைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் தரும் இந்த அல்வா.
முள்ளங்கி பருப்பு மசியல்
தேவையானவை: முள்ளங்கி – 5, துவரம்பருப்பு – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 3, பச்சை மிளகாய் – 8, பெருங்காயம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: முள்ளங்கியை தோல்சீவி, துருவி, சாறு எடுத்துக்கொள்ளவும். அந்தச் சாறில் துவரம்பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து, சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அதில் கொட்டவும். இரண்டாகக் கீறிய பச்சை மிளகாயையும் உப்பையும் பருப்பில் கொட்டி, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் எலுமிச்சம்பழம் பிழிந்து, பாத்திரத்தை மூடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலையை மேலாகத் தூவிப் பரிமாறவும். சப்பாத்தி, சாதத்துக்கு அருமையான சைட் டிஷ்.
பயன்: இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதை குறைந்து, வயிறு உள்ளடங்கி, அழகாகும்.
அவரை வெந்தயக்கீரை கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய அவரைக்காய் (பட்டை அவரைக்காய்) – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், வெந்தயக்கீரை (காம்பு கிள்ளியது) – அரை கப், உப்பு – தேவையான அளவு. அரைக்க: தேங்காய் – ஒரு கீற்று, சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் வேகவிட்டு, பாதி வெந்துகொண்டிருக்கும்போதே, அவரைக்காயைப் போடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்தெடுக்கவும். அவரைக்காய் வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போடவும். எல்லாம் சேர்ந்து 2 நிமிடம் வெந்ததும், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை மேலாக தூவி, அடுப்பை அணைத்துவிடவும் (கீரையைப் போட்ட பிறகு, கொதிக்கவைக்க வேண்டாம்).
பயன்: அவரைக்காய் ஹீமோகுளோபினை அள்ளித்தரும் அமுதசுரபி. அதனால், அனீமிக் பிரச்னை இல்லாமல் உடல் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.
வாழைத்தண்டு நவதானிய கூட்டு
தேவையானவை: கொண்டைக்கடலை, மொச்சை, பாசிப்பயறு, முழு உளுந்து, துவரை எல்லாம் கலந்து – ஒரு கப், வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், துவரம்பருப்பு – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளி – சிறு நெல்லிக்காய் அளவு. வறுத்துப் பொடிக்க: தனியா – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை: பயறு வகைகளை இரவில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அவ்வப்போது மூட்டை யைக் குலுக்கிவிட்டு, தண்ணீர் தெளிக்கவும். மூன்றாவது நாள் நன்கு முளைத்துவிடும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட் களை வறுத்துப் பொடிக்கவும். வாழைத் தண்டையும், முளை கட்டிய பயறுகளையும் வேகவைத்து, அதோடு பருப்பையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, புளியைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு போட்டு, அரைத்த பொடியையும் போட்டுக் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வரும் போது, கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு இறக்கவும். (புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்).
பயன்: உடலில் சதை தொய்ந்து போகாமல், கட்டுடல் பெற இந்தக் கூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
பாகற்காய் இன்ஸ்டன்ட் ஊறுகாய்
தேவையானவை: பாகற்காய் – 2, எலுமிச்சம்பழம் – 4, உப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 10.
செய்முறை: பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.
பயன்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.
பெருஞ்சீரக டீ
தேவையானவை: டீத்தூள் – 2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை: பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகத்தையும் போட்டு, அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டி, சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
பயன்: எடை குறைப்பதற்கு
நன்றி: பலகணி.காம்
தொடர்புடைய ஆக்கங்கள்
30 வகை கூட்டு! 2/2 [1]
30 வகை மார்கழி விருந்து! 2/2 [2]
30 வகை பாரம்பரிய சமையல் 2/2 [3]
30 வகை கூட்டு! 1/2 [4]
மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2 [5]
30 வகை பாரம்பரிய சமையல் 1/2 [6]
Article printed from சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்: http://chittarkottai.com/wp
URL to article: http://chittarkottai.com/wp/2011/07/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-30-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
URLs in this post:
[1] 30 வகை கூட்டு! 2/2: http://chittarkottai.com/wp/2016/05/30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-22/
[2] 30 வகை மார்கழி விருந்து! 2/2: http://chittarkottai.com/wp/2016/12/30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-22/
[3] 30 வகை பாரம்பரிய சமையல் 2/2: http://chittarkottai.com/wp/2016/03/10123/
[4] 30 வகை கூட்டு! 1/2: http://chittarkottai.com/wp/2016/05/30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-12/
[5] மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2: http://chittarkottai.com/wp/2013/08/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7-2/
[6] 30 வகை பாரம்பரிய சமையல் 1/2: http://chittarkottai.com/wp/2016/02/30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-12/ |
பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!
நவம்பர் 4, 2011
பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!
பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.
மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள் அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.
கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].
வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].
மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].
இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!
வேதபிரகாஷ்
04-11-2011
[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம், அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=340779
[2] அவர்களது முழு கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்: http://goatmilkblog.com/2010/11/15/muslims-please-spare-the-animals-this-eid/
[3] www.goatmilkblog.com; அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.
[4] “Muslims have a duty both religiously and culturally to evolve with scientific and moral progress. The meaning behind Eid-ul-Azha will always stand, but in today’s world, we must look at things practically,” wrote Bina Ahmed and Farah Khan on goatmilkblog.com, a virtual hangout for Asian Muslims settled in the West.
http://zeenews.india.com/news/south-asia/pak-liberals-oppose-sacrifice-of-animals-on-eid_738929.html
[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation. www.pakistaniat.com
[6] In many parts of the world, the festivities of Eid-ul-Azha bring along with it an increase in illness. For example, according to the Daily Star newspaper in Bangladesh, the number of individuals being admitted to hospitals increases by about 10 percent during this time of year brought on by a gluttonous consumption of meat. http://newshopper.sulekha.com/meat-intake-during-eid-makes-dhaka-medicos-see-red_news_1127916.htm
[7] While it is true that some halal slaughterhouses try their best to ensure that the animals they slaughter are raised according to Islamic teachings, many are unaware of the origins of the animals that they sell to consumers, focusing instead only on the manner in which the animal is killed.
(http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&pagename=Zone-English-News/NWELayout&cid=1178724246679)
[8] Eating too much eat is not good for your health either. Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.
பிரிவுகள்: ஈத், ஒட்டக பால், கசாப்புக்காரத்தனம், காஃபிர், குரான், குரூரம், கொலை, சித்திரவதை, சுத்தம், சுன்னி, சூஃபி, ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தூய்மை, பக்ரீத், பலி, பலிக்கடா, பாகிஸ்தான், ரத்தம், வங்காள தேசம், வதை, ஷியா, ஹராம், ஹலால்
Tags: அசுத்தம், ஆடு, ஈத், ஒட்டகம், கொலை, சடங்கு, சுத்தம், ஜஹலால், பக்ரீத், பச்டு, பலி, மாமிசம், மிருகச்ம், ரத்தம், வதை, ஹராம்
Comments: 9 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்
முகமது இஸ்மாயில் இறந்த போது, உ… இல் பெரியாரும், இஸ்லாமும…
திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash
திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash
திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash
திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash
அண்மைய பதிவுகள்
ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?
திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!
தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!
வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?
காப்பகம்
காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6)
ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப்
பிரிவுகள்
பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (84) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (45) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (24) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அப்துல் அஜித் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (6) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (6) அசாதுதீன் ஒவைஸி (4) அசாம் (8) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (1) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (100) அடிப்பது (2) அடிமை (15) அடிமைத்தனம் (7) அடையாளம் (84) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (1) அதிக வட்டி (1) அதிமுக (17) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (26) அத்வானி (8) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (7) அன்சார் (9) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (25) அமாவாசையும் அப்துல்காருக்கும் (18) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (58) அமைதி என்றால் இஸ்லாமா (14) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (4) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (3) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (2) அயோத்யா (2) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (8) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய ஷேக்கு (9) அரேபியா (39) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (2) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (81) அல் – காய்தா (74) அல் – கொய்தா (76) அல் அர்பி (34) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (30) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (16) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (10) அல்-முஹாஜிரோன் (3) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (99) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (3) அல்லாஹ் (9) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (35) அழிப்பு (31) அழிவு (37) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (26) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (73) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (5) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (4) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (1) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (9) ஆதாரம் (5) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (8) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (3) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (7) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (10) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (13) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (4) இந்திய ஊடகங்கள் (3) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (63) இந்திய முஜாஹித்தீன் (69) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (7) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (29) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (2) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (32) இந்திய விரோதத் தன்மை (63) இந்திய விரோதம் (38) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (55) இந்தியத்தனம் (55) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2) இந்தியப் பிரச்சினை (3) இந்தியர்களை ஏமாற்றுதல் (69) இந்தியா (108) இந்தியாவின் மேப் (40) இந்தியாவின் வரைப்படம் (33) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (20) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (7) இந்து-முஸ்லிம் உரையாடல் (47) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (43) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (36) இந்துக்களின் உரிமைகள் (35) இந்துக்களைக் கொல்வது (35) இந்துக்கள் (72) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (26) இந்துக்கள் கொல்லப்படுதல் (28) இந்துக்கள் சித்திரவதை (17) இந்தோனேசியா (3) இன்பம் (4) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (1) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (8) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (5) இரண்டாம்மனைவி (6) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (3) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (6) இறைதூதர் (7) இறைத்தூதர் (7) இறைவன் (2) இலக்கியம் (2) இலங்கை (2) இலங்கை குண்டுவெடிப்பு (2) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (2) இஸ்லாமிய இறையியல் (46) இஸ்லாமிய சாதி (15) இஸ்லாமிய ஜாதி (14) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (26) இஸ்லாமிய நாடு (45) இஸ்லாமிய பிரச்சினை (5) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (13) இஸ்லாமியத் தீவிரவாதம் (110) இஸ்லாமியத் தீவிரவாதி (97) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (6) இஸ்லாமிஸ்ட் (3) இஸ்லாமும் இந்தியாவும் (81) இஸ்லாம் (104) இஸ்லாம் செக்ஸ் (4) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (3) ஈழம் (3) உக்கடம் (8) உக்கா (1) உடலின்பம் (6) உடலுறவு (9) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (6) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (14) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது ஜிஹாதி (2) உருது மொழி (18) உருவ வழிபாடு (13) உருவம் (2) உரூஸ் (5) உறவினர் (6) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (5) உளவாளி (6) உளவு (3) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (19) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (79) உள்ளூர் தீவிரவாத கும்பல் (35) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (2) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (9) எதிர்ப்பு (6) என்.ஐ.ஏ (2) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (1) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (1) எஸ்சி (2) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (38) ஐ.எஸ். தீவிரவாதிகள் (37) ஐ.எஸ்.ஐ (32) ஐ.டி.தீவிரவாதி (4) ஐஎஸ் (26) ஐஎஸ்ஐஎஸ் (41) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (37) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (9) ஐசில் (21) ஐசிஸ் (34) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (17) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (2) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (5) ஒஸாமா பின் லேடன் (12) ஓட்டு (25) ஓட்டுவங்கி (28) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (5) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (2) கஞ்சி (8) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (3) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (3) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (2) கற்பழிப்பு (29) கற்பழிப்பு ஜிஹாத் (14) கற்பு (25) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (62) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (4) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (151) காஃபிர் இந்தியர்கள் (109) காஃபிர்-மோமின் கூட்டணி (46) காஃபிர்கள் (117) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (19) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (17) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (1) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (2) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (13) கிலாபத் இயக்கம் (11) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (25) குண்டு தயாரிப்பு (48) குண்டு நேயம் (13) குண்டு வெடிப்பது (60) குண்டு வெடிப்பு (10) குண்டு வெடிப்பு வழக்கு (41) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (28) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (1) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (39) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (4) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (1) குழந்தை கற்ப்பழிப்பாளி (1) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (3) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (21) கேரள ஜிஹாதிகள் (22) கேரள தீவிரவாதம் (26) கேரள பயங்கரவாதம் (25) கேரள போலீஸார் (8) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (7) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (1) கொக்கோகம் (5) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (4) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (2) சகிப்புத் தனம் (3) சகிப்புத் தன்மை (5) சகிப்புத்தனம் (4) சகிப்புத்தன்மை (5) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (1) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (17) சட்டம் (17) சட்டம் மீறல் (16) சட்டவிரோதம் (1) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (3) சமரசப்பேச்சு (9) சமரசம் (3) சமஸ்கிருதம் (3) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூதி அரேபியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (2) சிரியா (7) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (34) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (2) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (2) சிறுவர் பாலியல் (4) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (1) சில்மிஷம் (2) சிவன் கோவில் தாக்கப்பட்டது (3) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (9) செக்ஸ் அடிமை (1) செக்ஸ் தொல்லை (4) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (10) ஜமா மஸ்ஜித் (2) ஜமாஅத் (14) ஜமாஅத்தார் (4) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (55) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (16) ஜஹல்லியா (15) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (19) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (1) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (43) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (3) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (3) ஜிஹாதி குருரக் குணம் (18) ஜிஹாதி கொலைக்காரர்கள் (36) ஜிஹாதி ஜேன் (5) ஜிஹாதி நேயம் (30) ஜிஹாதி வெறியாட்டம் (48) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (56) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (55) ஜிஹாதிகளுக்கு பணம் (61) ஜிஹாதித்தனம் (84) ஜிஹாதித்துவம் (85) ஜிஹாத் (162) ஜிஹாத் கையேடு (63) ஜிஹாத் தன்மை (62) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (2) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (10) டெட்டனேட்டர்கள் (13) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (10) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (2) தப்லீக் ஜமாஅத் (2) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (1) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (10) தமிழகத்து தீவிரவாதி (8) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (10) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (5) தமிழ் முஸ்லீம் (19) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (1) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (3) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (1) தமிழ்நாடு தவ்ஹீத் (4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (4) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (8) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (1) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (3) தற்கொலை குண்டு வெடிப்பு (5) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (23) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (4) தவ்ஹீத் (1) தவ்ஹீத் ஜமாஅத் (1) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (2) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (6) தீவிரவாத நிதியுதவி (3) தீவிரவாதத்திற்கு துணை போவது (7) தீவிரவாதம் (18) தீவிரவாதி (18) தீவிரவாதிகளுக்கு பணம் (17) தீவிரவாதிகள் (10) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (6) துருக்கன் (9) துருக்கர் (12) துருக்கி (9) துருஷ்க (4) துருஷ்கா (6) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (10) துலுக்கன் (13) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (11) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (18) தேசவிரோத செயல்கள் (2) தேசவிரோதம் (9) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (25) தேசிய புலனாய்வு இயக்குனர் (7) தேசிய புலனாய்வு துறை (9) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (6) தௌஹித் ஜமாத் (5) தௌஹீத் (5) தௌஹீத் ஜமாத் (5) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (1) நட்பு (2) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (3) நரபலி (4) நரம்பு (1) நரேந்திர மோடி (2) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (2) நாகூர் தர்கா (4) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுப் பற்று (6) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (1) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (29) பர்கா போராட்டம் (2) பர்தா (40) பர்தா அணிவது (25) பர்தா காக்கும் உடையா? (9) பர்தா மத-அடையாளமா? (11) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (6) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (15) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (35) பழமைவாதம் (48) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (3) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (9) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (4) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (1) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (2) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (10) பாலியல் தொல்லை (5) பாலியல் வன்முறை (9) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (2) பாஷாவின் மகன் (1) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (3) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (9) பிஜேபி-முஸ்லிம் (1) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (3) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (4) பிரச்சாரம் (4) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (8) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (50) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (5) பெண் உரிமை (6) பெண் உறுப்பு (1) பெண் கடமை (3) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (1) பெண்களை முன் நிறுத்துவது (1) பெண்கள் சுன்னத் (8) பெண்டாட்டி (1) பெண்ணல்ல (2) பெண்ணியம் (11) பெண்ணுரிமை (8) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (6) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (2) பேட்டரி கட்டைகள் (3) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (2) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (30) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (1) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (1) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (39) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (3) மதரசா (5) மதரஸா (13) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (9) மதவாதம் (13) மதவிமர்சனம் (5) மதவிரோதி (4) மதவெறி (14) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (9) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (5) மனநோய் (3) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (2) மனித நேய மக்கள் கட்சி (4) மனித நேயம் (6) மனித வெடிகுண்டு (7) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (3) மனிதநேய விற்பன்னர்கள் (1) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (1) மரண தண்டனை (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (1) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (1) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (7) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (1) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (24) முகமது (5) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (2) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது ரியாஷ் (2) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (1) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசிரி (1) முஜாஹித்தீன் (41) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (1) முற்றுகை (1) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (2) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (14) முஸ்லிம் அடிப்படைவாதம் (7) முஸ்லிம் கழகம் (2) முஸ்லிம் காலனி (4) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (7) முஸ்லிம் நகர் (1) முஸ்லிம் பிரச்சினை (7) முஸ்லிம் பெண்கள் (35) முஸ்லிம் பெண்கள் உரிமை (19) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (6) முஸ்லிம்கள் முற்றுகை (2) முஸ்லீமின் மனப்பாங்கு (3) முஸ்லீம் (30) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (5) முஸ்லீம் ஓட்டு வங்கி (19) முஸ்லீம் ஓட்டுவங்கி (19) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (2) முஸ்லீம் சட்டம் (22) முஸ்லீம் சாதி (6) முஸ்லீம் ஜாதி (5) முஸ்லீம் தன்மை (14) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (4) முஸ்லீம் பெண்கள் வேலை (5) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (6) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (4) முஸ்லீம் லீக் (12) முஸ்லீம்களிடம் ஊடல் (6) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (6) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (22) முஸ்லீம்களின் தீவிரவாதம் (20) முஸ்லீம்களின் வெறித்தனம் (20) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (4) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (1) முஸ்லீம்களை தாஜா செய்வது (5) முஸ்லீம்கள் (22) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (2) முஸ்லீம்தனம் (8) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (9) மூளை சலவை செய்வது (4) மூளைசலவை (9) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (4) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (1) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (2) மொஹர்ரம் (1) மொஹித்தீன் (1) மோகம் (1) மோசடி (5) மோசம் (4) மோடி (5) மோடி அரிசி (1) மோதல் (3) மோதிரம் (1) மோனிகா (2) மோமின் (3) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (2) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (9) ரம்ஜான் அரிசி (2) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (19) லவ்ஜிஹாத் (3) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (3) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (2) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (2) வக்ஃப் வாரியம் (2) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (2) வக்ப் (4) வக்ப் கம்பனி (2) வக்ப் கம்பெனி (2) வக்ப் மேம்பாடு (2) வக்ப் வாரியம் (2) வங்காள தேசம் (19) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (1) வஞ்சகம் (1) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (1) வட்டிக்குக் கடன் (1) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (15) வன்முறையில் ஈடுபடுவது (4) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (4) வழிபாடு (6) வாக்குறுதி (3) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (1) வாடகை வீடு (1) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (3) வாஹாபி இயக்கம் (3) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (6) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (4) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (13) விவாகம் (5) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (11) வெடி மருந்து (9) வெடிகுண்டு (19) வெடிகுண்டு பொருட்கள் (17) வெடிகுண்டுகள் (21) வெடிக்கச் செய்யும் கருவிகள் (10) வெடிபொருள் வழக்கு (7) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (1) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (2) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (4) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (1) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (1) ஶ்ரீலங்கா (1) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (5) ஷரீயத் (11) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (2) ஷியா (24) ஷியா சட்ட போர்ட் (4) ஷியா சட்டம் (12) ஷியா முஸ்லீம் சட்டம் (9) ஷியா வாரியம் (8) ஷியா-சுன்னி (18) ஷிர்க் (14) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (5) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (3) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (4) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (11) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (6) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (3) ஹஸன் (2) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (19) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (2) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (4) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (164) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7)
மின்னஞ்சல் சந்தாதாரராக....
Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 4,998 other followers
மின்னஞ்சல் முகவரி
Sign me up!
அண்மைய பதிவுகள்
ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?
திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை!
தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!
வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?
அதிகளவு சொடுக்குகள்
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
islamindia.files.wordpres…
நவம்பர் 2021
தி
செ
பு
விய
வெ
ச
ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
« அக்
Blog Stats
538,328 hits
முன்னணி இடுகைகள்
காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்
மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)
தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!
குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்!
துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)
இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா? – வீடு கொடுக்க அச்சப்படவேண்டிய அவசியம் என்ன? அந்த அச்சத்தை உருவாக்கியது யார்?
திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! |
“சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சிக்கன தினம் அக்டோபர் மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பசும்பொன் தேவர்
சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933ஆம் ஆண்டு நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.
காங்கிரஸில் இருந்து 1948ஆம் ஆண்டு விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1963ஆம் ஆண்டு தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.
ஹோமி ஜஹாங்கீர் பாபா
இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது (1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) எனப் பெயரிடப்பட்டது.
அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ஆம் ஆண்டு மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966ஆம் ஆண்டு மறைந்தார். |
© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம், |
Education: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!
Education
State and Central Board Education
Advertisement
MAHARASHTRA STD.XII HSC STD. XI FYJC STD. X SSC 5TH 6TH 7TH 8TH 9TH BOARD SOLUTIONS: 2019 2020 New Time table
ESSAYS DIALOGUE EXPANSION SPEECH LETTERS GRAMMAR WRITING SKILLS INFORMATION-TRANSFER LEAFLET REPORT APPEAL INTERVIEW VIEW AND COUNTERVIEW DATA INPUT SHEET OTHER BOARDS LATEST NEWS PRIVACY DISCLAIMER
TAMIL-NADU: 8TH 9TH 10TH 11TH 12TH
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக ஜித்தன் ரமேஷ் வெளியேறினார்.
இரண்டு பேர் எவிக்ஷன்
ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜோடி ஜோடியாய் விளையாடியதால் இந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக கூறினார். இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படவுள்ளார்கள் என்றும் கூறினார்.
யாராக இருக்கும்?
மேலும் அவர்களில் ஒருவர் இன்றே வெளியேற்றப்படுவார் என்றும் கூறினார் கமல். இதனால் எவிக்ட்டாக உள்ள அந்த இரண்டு பேர் யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.
யார் வெளியேறியது?
இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான படப்பிடிப்பு இன்று மதியமே நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும நபர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவியது.
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
அதன்படி பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாய் இருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆரியால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார் ரமேஷ்.
தப்பித்த ரமேஷ்
ஜித்தன் ரமேஷ் இரண்டு வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தப்பித்ததாக கூறிய கமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை விட சில ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற சம்யுக்தாவை வெளியேற்றினார்.
முதல் நபராய்
கால் டாஸ்க்கின் போது நிஷாவால் சேவ் செய்யப்பட்ட ஜித்தன் ரமேஷை ஆரி நாமினேட் செய்தார். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் முதல் நபராய் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜித்தன் கன்ஃபெஷன் ரூம்
இதுதொடர்பாக அறிவிக்க சோமை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமுக்கும் அனுப்பி வைத்தார் கமல். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருந்த ஜித்தன் ரமேஷை அங்கிருந்த கதவை திறந்து வெளியே செல்லும்படி கூறினார் பிக்பாஸ்.
கண்ணைக் கட்டி
இதனை தொடர்ந்து ஸ்டோர் ரூமில் இருந்த சோமை கண்ணை கட்டி கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருநுது வீட்டுக்குள் வந்தார் சோம். இதன் மூலம் இந்த வார எவிக்ஷனில் இருந்து சோம் தப்பித்து விட்டார்.
இரண்டாவது நபர்?
இரண்டாவது நபராக நாளைக்கான எபிசோடில் சோம சேகர் வெளியேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நாளைக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிஷாதான் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி
அர்ச்சனாவின் அன்புக்குரிய செல்லப்பிள்ளையான சோம் நாமினேஷனில் இருந்து தப்பித்தாலும், ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருப்பது அர்ச்சனா அணிக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். |
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Home » » மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"
மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்"
0 comments
நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம், தேர்வு அச்சம் நீக்க, மகிழ்ச்சியுடன் கல்வி கற்பிக்க, படைப்புத் திறனை மேம்படுத்த, நடமாடும் உளவியல் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
அதற்காக, பத்து நடமாடும் உளவியல் பயிற்சி மைய வேன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில், "டிவி", செய்முறைப் பயிற்சி, ஆலோசனை "சிடி"க்கள், உளவியல் ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் சென்டர்" என்ற பெயரில், நேற்று, நாமக்கல்லில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக் கல்வித்துறை (நாட்டுநலப்பணித் திட்டம்) இணை இயக்குனர் உஷாராணி, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, சி.இ.ஓ., குமார் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்தனர்
"மூன்று மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Home » » பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு
பள்ளிகளுக்கு அடிப்படை வசதி தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு
0 comments
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கழிவறைகள் கட்ட, ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.இதுகுறித்து கோவை தாட்கோ திட்ட உதவி பொறியாளர் பாட்ஷா கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி அமைத்தல், கழிவறை கட்ட தாட்கோ திட்டம் மூலம், ரூ.58 கோடி நிதியை அரசு நடப்பாண்டில் ஒதுக்கி உள்ளது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு, ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.மாவட்டத்தில் மலை மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பர்கூர், ஆசனூர், தலமலை, பெஜலட்டி, குத்தியாலத்தூர், கெத்தேசால், நகலூர், கொங்காடை, கிளத்தடி சோளகா, குட்டையூர், கத்திரிமலை, காக்காயனூர், சோளக்கனை, பத்திரிபடகு, காணக்கரையில் அமைந்துள்ள பள்ளிகளில் சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி வசதி, கழிவறை கட்டமைப்பு வசதிகள் கட்ட நிதி ஒதுக்கபட்டுள்ளது.எந்தெந்த பள்ளிகளுக்கு எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் தேவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. இப்பணி முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் முறைப்படி டெண்டர் விடப்படும். அதன்படி கட்டுமான பணி துவங்கி நடக்கும் என்றார். |
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Home » » புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
6 comments
வேடசந்துார், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.
திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து,
ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிப்.,22ல்
அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில்
தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.
← Newer Post Older Post → Home
6 Comments:
Unknown 2/26/2016 2:17 pm
இது தற்காலிக தீர்வு மட்டுமே
ReplyDelete
Replies
Reply
Anonymous 2/26/2016 5:02 pm
It is an irresponsible attitude of the Teachers Association. They should answer to the people forum, Why they have been spoiling 14 years, from the implementation year 2004.
ReplyDelete
Replies
Reply
Anonymous 2/26/2016 5:05 pm
It is an irresponsible attitude of the Teachers Association. They should answer to the people forum, Why they have been spoiling 14 years, from the implementation year 2004. First they had accepted this policy and alloweed deducting 10 % from their salary for the past 14 years. Now they stage dharna and demonstration for re-implementing the old pension scheme. What is this ?
ReplyDelete
Replies
Reply
Anonymous 2/26/2016 5:42 pm
பங்களிப்பு ஓய்வூதியம்நடைமுறைப் படுத்துவது ,அல்லது பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்வது அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்ற பாராளுமனறத்தில் அறிவித்த நிலையில் திரிபுரா கேரளா, மேற்க்கு வங்கம்,முதலான மானிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்கின்றன.ஆனால் அதிமுக சட்டம் கொண்டு வரும் முன்னரே புதிய ஓய்வூதியதிட்டத்திற்கு பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.இப்பொழுது வல்லுனர் குழு அமைக்க உள்ளது ஏமாற்று வேலை!
ReplyDelete
Replies
Reply
anitha 2/26/2016 5:52 pm
பங்களிப்பு ஓய்வூதியம்நடைமுறைப் படுத்துவது ,அல்லது பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்வது அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்ற பாராளுமனறத்தில் அறிவித்த நிலையில் திரிபுரா கேரளா, மேற்க்கு வங்கம்,முதலான மானிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்கின்றன.ஆனால் அதிமுக சட்டம் கொண்டு வரும் முன்னரே புதிய ஓய்வூதியதிட்டத்திற்கு பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.இப்பொழுது வல்லுனர் குழு அமைக்க உள்ளது ஏமாற்று வேலை!
ReplyDelete
Replies
Reply
anitha 2/26/2016 5:52 pm
பங்களிப்பு ஓய்வூதியம்நடைமுறைப் படுத்துவது ,அல்லது பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்வது அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்ற பாராளுமனறத்தில் அறிவித்த நிலையில் திரிபுரா கேரளா, மேற்க்கு வங்கம்,முதலான மானிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் தொடர்கின்றன.ஆனால் அதிமுக சட்டம் கொண்டு வரும் முன்னரே புதிய ஓய்வூதியதிட்டத்திற்கு பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.இப்பொழுது வல்லுனர் குழு அமைக்க உள்ளது ஏமாற்று வேலை! |
Tag: ICC World Cup 2019, Ind Vs Eng, இங்கிலாந்து அணி, இந்திய அணி, உலகக் கோப்பை 2019, உலகக்கோப்பை, நந்தகுமார் நாகராஜன் |
மாணவர்களின் பல்கலைக்கழக பட்டப்படிப்பை தாமதப்படுத்தக் கூடாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இன்று(25) இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில்இ மருத்துவப் பட்டப்படிப்பை 22 வயதிற்குள்ளும் ஏனைய பட்டப்படிப்புகளை 20 வயதிற்குள்ளும் முடிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன ஏலவே இது தொடர்பில் கவனம் செலுத்தி திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதுடன்இ காலதாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்களிடமிருந்து வருமான வரி அறவிடுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படும்.
அரச சேவையாளர்களின் வேதனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சுஇ அரசாங்க நிர்வாக அமைச்சுடன் இணைந்து வேதன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய அதனை தீர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Previous Post கடன்களை பெற்றுக் கொண்டதை தவிர அதன் மூலம் ஒன்றும் செய்யவில்லை: நல்லாட்சியை விளாசித் தள்ளிய மஹிந்த!
Next Post இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! சித்தார்த்தன் கோரிக்கை
News
வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
December 8, 2021
விஜயை சந்திக்க போகும் கார்த்தி ?? விஷயம் என்ன தெரியுமா?
July 16, 2021
அருண் விஜய்யின் தங்கச்சி ஸ்ரீதேவி மகளை பார்த்து இருக்கிறீர்களா?
July 16, 2021
ஜெர்மனியை புரட்டியெடுக்கும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 60 பேர் பலி…1300 பேர் மாயம்
July 16, 2021
கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை வேடிக்கை பார்க்க சென்ற 40 பேர் விழுந்த விபரீதம்
July 16, 2021
பிரேசில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி
July 16, 2021
ஒலிம்பிக் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பு
July 16, 2021
கிரிக்கெட் வாரிய எச்சரிக்கையை மீறிய ரிஷப் பண்ட்
July 16, 2021
Sri Lanka C News
Gossip Lanka English
Gossip Lanka Sinhala
Lanka Tamil News
JJ SRI LANKA TAMIL NEWS
JJ Sri Lanka Tamil News, popularly known as the most visited website in Sri Lanka, was launched in 2019 as a gossippond.com English gossip blog.
From the beginning, the content of those articles was talked about by many. The site was renamed gossippond.com in 2020 and was published.
JJ Sri Lanka Tamil News has become a regular site for readers as it investigates the day-to-day controversies of the country, along with readers’ conversations, and is a mirror that reveals information within the field of art and politics in Sri Lanka.
In February 2021, JJ Sri Lanka Tamil News was ranked among the 100 most visited websites in Sri Lanka according to the internationally acclaimed Alexa web rankings. From then until now, JJ Sri Lanka Tamil News has been able to maintain its position and maintain the trust of its readers.
JJ Sri Lanka Tamil News, which has made a significant contribution to the art of web publishing in Sri Lanka from time to time, was once a place for weekend newspapers to write new feature articles. At another time it was a place where alternative news brought news. Artists’ Birthdays were a memorable place to learn about funerals first. It was a place where you could learn more about social issues.
JJ Sri Lanka Tamil News creates dialogue in the country as it is a place that allows readers’ opinion without any restrictions. It is against this background that JJ Sri Lanka Tamil News has become one of the most searched applications on the internet with a large readership.
Related Posts
வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
December 8, 2021
நாடாளுமன்றில் தாக்குதல் முயற்சி: அரச, எதிர்க்கட்சி உறுப்பினரின் பெயரை முன்மொழிய ரணில் கோரிக்கை
December 8, 2021
மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
December 8, 2021
Leave a ReplyCancel Reply
Name *
Email *
Website
Add Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.
Post Comment
Trending now
வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
நாட்டின் சில பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் சாத்தியம்!
எரிவாயு கலவையில் மாற்றம் செய்ததாக லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவிப்பு!
தவறிழைத்த அரச அதிகாரிகள் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்! வடக்கு மாகாண ஆளுநர்
Sri Lanka C News
Gossip Lanka English
Gossip Lanka Sinhala
Lanka Tamil News
JJ SRI LANKA TAMIL NEWS
JJ Sri Lanka Tamil News, popularly known as the most visited website in Sri Lanka, was launched in 2019 as a gossippond.com English gossip blog.
From the beginning, the content of those articles was talked about by many. The site was renamed gossippond.com in 2020 and was published.
JJ Sri Lanka Tamil News has become a regular site for readers as it investigates the day-to-day controversies of the country, along with readers’ conversations, and is a mirror that reveals information within the field of art and politics in Sri Lanka.
In February 2021, JJ Sri Lanka Tamil News was ranked among the 100 most visited websites in Sri Lanka according to the internationally acclaimed Alexa web rankings. From then until now, JJ Sri Lanka Tamil News has been able to maintain its position and maintain the trust of its readers.
JJ Sri Lanka Tamil News, which has made a significant contribution to the art of web publishing in Sri Lanka from time to time, was once a place for weekend newspapers to write new feature articles. At another time it was a place where alternative news brought news. Artists’ Birthdays were a memorable place to learn about funerals first. It was a place where you could learn more about social issues.
JJ Sri Lanka Tamil News creates dialogue in the country as it is a place that allows readers’ opinion without any restrictions. It is against this background that JJ Sri Lanka Tamil News has become one of the most searched applications on the internet with a large readership. |
ஒரு மனிதரின் மரண தண்டனை குறித்த வழக்கு விசாரணை, படை வீரர்களின் குடியிருப்பில் நடைபெற்று வந்தது. அந்த மனிதர்…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்மதிப்புரை
ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள்
by சுநீல் கிருஷ்ணன் October 12, 2018
சுநீல் கிருஷ்ணன் October 12, 2018
“Eternity” he answered. “Believe it or not, it’s as real as shit.” – Island,…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது
கானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள்
by எம்.கோபாலகிருஷ்ணன் October 12, 2018
எம்.கோபாலகிருஷ்ணன் October 12, 2018
(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்மொழிபெயர்ப்பு
படமெடுத்தாடும் பாய்மரங்களும் மரக்கலக் கொத்தளங்களும் : திரைகடலோடிய சகாப்தங்களில் இந்தியப் பெருங்கடலும் சில வழக்கொழிந்த மொழிகளும் – அமிதவ் கோஷ்
by கால.சுப்ரமணியம் October 12, 2018
கால.சுப்ரமணியம் October 12, 2018
பாய்மரக்கலங்கள் ஓடியாடிய சகாப்தத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அராபியர், சீனர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், மலேயர், தென்னாசியாக்காரர் ஆகிய…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishReview
Poetic Sketches of the Invisible: Claudia Rankine’s ‘Citizen: An American Lyric’
by த. கண்ணன் October 12, 2018
த. கண்ணன் October 12, 2018
You have been watching tennis for many years. You remember Martina Navratilova and Chris…
0 FacebookTwitterWhatsappEmail
தமிழ்நாவல் பகுதி
ஆதிரை
by சயந்தன் October 12, 2018
சயந்தன் October 12, 2018
யாரோ கதவைத் தட்டுகிறார்கள். கனவை ஊடறுக்கிற ஒலி. இரண்டாவது தட்டலில் சத்தம் பலமாகக் கேட்டது. மலருக்கு விழிப்பு வந்துவிட்டது.…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishPolitics
Devadasis: Myths, Misconceptions and Complex Truths
by அரவிந்தன் கண்ணையன் October 12, 2018
அரவிந்தன் கண்ணையன் October 12, 2018
“Devadasis: Beyond Conventional Constructs” by B.C. Anish Krishnan Nayar published in Tamizhini on September…
0 FacebookTwitterWhatsappEmail
தமிழ்மதிப்புரை
சி. சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’
by பாலா கருப்பசாமி October 12, 2018
பாலா கருப்பசாமி October 12, 2018
‘ஆப்பிளுக்கு முன்’ சி. சரவண கார்த்திகேயனின் முதல் குறுநாவல். 2014ல் வெளிவந்த கிழக்குப் பதிப்பக வெளியீடான ‘குஜராத் 2002…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishOn FilmsReviving the Classics
Revolution through the Lenses – Lucía (1968) – Gokul Prasad
by கோகுல் பிரசாத் October 12, 2018
கோகுல் பிரசாத் October 12, 2018
One would stumble upon reading Humberto Solás’ interviews. Although this emblematic figure of Cuban…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது
வால்டேர் (பகுதி 1)
by இரா. குப்புசாமி October 12, 2018
இரா. குப்புசாமி October 12, 2018
வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில்…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishPhilosophy
The Mission and Message of the Saiva Mystic, Ramalinga Swamy
by Dr.Anand Amaladass October 12, 2018
Dr.Anand Amaladass October 12, 2018
Introduction Ramalinga Swamy of the nineteenth Century was a mystic, revolutionary thinker and a…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைதமிழ்பொது
பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)
by மானசீகன் October 12, 2018
மானசீகன் October 12, 2018
சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா.…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishPoetry
Unleashing the Darkness
by போகன் சங்கர் October 12, 2018
போகன் சங்கர் October 12, 2018
1. Silence rustle like a disturbed serpent. Makes one wonder, Where is it’s poison…
0 FacebookTwitterWhatsappEmail
கட்டுரைகவிதைதமிழ்
காலம் மறப்பினும் தமிழ் மறக்குமோ!
by ஸ்ரீரங்கம் மோகனரங்கன் October 12, 2018
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் October 12, 2018
காலத்திற்கு ஒரு விவஸ்தை என்பதில்லை. சமயத்தில் சிலரை விட்டுவிடலாம். ஆனால் தமிழ் தனக்குப் பங்களித்தவர்களை மறப்பதில்லை. யாரோ, எப்பொழுதோ…
0 FacebookTwitterWhatsappEmail
EnglishPhilosophy
Reflections about the Mind
by வி.அமலன் ஸ்டேன்லி October 12, 2018
வி.அமலன் ஸ்டேன்லி October 12, 2018
Unlike the physique our mind is intangible. But what we are is what our…
0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts
Artist of the month
Muralidharan Alagar
https://cuckooo.in/
படைப்புகளைத் தேட
அதிகம் வாசிக்கப்பட்டவை
அல்லேலூயாவும் எளிய தமிழ்ப்பிள்ளைகளும்
November 26, 2021
Editor’s Picks
November 18, 2020
நிரபராதம்
November 26, 2021
மடையான்
November 26, 2021
தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மை – பி.கே.பாலகிருஷ்ணன்
November 25, 2021
படைப்புகள்
படைப்புகள் Select Category English (109) Editor’s Picks (21) On Films (14) Philosophy (26) Poetry (7) Politics (22) Review (12) Reviving the Classics (7) Sports (4) Uncategorized (1) தமிழ் (523) கட்டுரை (219) கவிதை (32) குறுநாவல் (2) சிறுகதை (114) தலையங்கம் (2) திரைப்படக் கலை (45) நாவல் பகுதி (22) பொது (115) மதிப்புரை (96) மொழிபெயர்ப்பு (99)
முந்தைய இதழ்கள்
முந்தைய இதழ்கள் Select Month November 2021 (25) September 2021 (27) August 2021 (21) July 2021 (20) June 2021 (26) April 2021 (22) March 2021 (19) February 2021 (21) January 2021 (21) December 2020 (22) November 2020 (26) September 2020 (18) August 2020 (19) July 2020 (19) June 2020 (18) May 2020 (17) April 2020 (13) February 2020 (12) January 2020 (12) December 2019 (15) October 2019 (11) September 2019 (14) August 2019 (12) July 2019 (15) May 2019 (11) April 2019 (11) March 2019 (16) February 2019 (19) January 2019 (19) December 2018 (20) November 2018 (17) October 2018 (16) September 2018 (16) August 2018 (15) July 2018 (15)
எழுத்தாளர்கள்
Select Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (10)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (6)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகிய மணவாளன் (1)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆசை (3)ஆத்மார்த்தி (15)ஆர்.அபிலாஷ் (6)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (10)இல. சுபத்ரா (9)இளங்கோவன் முத்தையா (1)இறை.ச.இராசேந்திரன் (1)எம்.கே.மணி (14)எம்.கோபாலகிருஷ்ணன் (29)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (16)எஸ்.சிவக்குமார் (1)ஐ. கிருத்திகா (1)க. மோகனரங்கன் (5)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (11)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (6)கார்த்திக் பாலசுப்ரமணியன் (9)கால.சுப்ரமணியம் (8)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (34)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (3)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (4)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுதாகர் (1)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (4)செங்கதிர் (3)செந்தில் ஜெகன்நாதன் (2)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (18)தபசி (1)தர்மு பிரசாத் (5)தாமரை கண்ணன் (1)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (6)பாதசாரி (3)பாமயன் (2)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (4)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (5)பாலா கருப்பசாமி (11)பாலாஜி பிருத்விராஜ் (7)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (14)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (6)மருதன் (1)மனோஜ் பாலசுப்ரமணியன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (27)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)யூமா வாசுகி (1)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (16)விலாசினி (1)விஜயராகவன் (2)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெ.பிரான்சிஸ் கிருபா (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (4)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (3)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)ஹரீஷ் கணபதி (1) |
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க மத்திய மாநில அரசால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்ட மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் கரும்பு விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்திற்கு ஏற்றவாறு தேவைப்படும் கூடுதல் உபகரணங்களுக்கான தட்டு வடிகட்டி, மணல் வடிகட்டி, ஹைட்ரோ சைக்ளோன் வடிகட்டி, பிவிசி குழாய், நீர் சேமிக்கும் உப துணை குழாய் முதலியன 100 சதவீதம் மானியத்தில் சிறு / குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே, கரும்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் எந்தவித கூடுதல் செலவினம் இன்றி அமைத்து கொள்ளலாம். இது தொடர்பாக, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேளாண்மை துறை
தென்னையில் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்
2019-20ஆம் ஆண்டில் நெற்பயிருக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை
Tags: கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான தகவல்!
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Notify me of follow-up comments by email.
Notify me of new posts by email.
Search for:
Subscribe to Blog via Email
Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.
Join 111 other subscribers
Email Address
Recent Posts
கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்!
தார்ப்பாய்களுக்கு 50% மானியம்- விவசாயிகள் கவனத்திற்கு!
மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்!
சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்
Tags
பருத்திக்கான விலை முன்னறிவிப்பு அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்! இயற்கை பூச்சி விரட்டி! எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு எள் ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்! கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம்! கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் குறைந்த செலவில் கோடை கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு தமிழர்வேளாண்நாட்காட்டி தார்ப்பாய்களுக்கு 50% மானியம்- விவசாயிகள் கவனத்திற்கு! தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!" - விளக்கும் வேளாண் அதிகாரி பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஜுலை (2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பூச்சி பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு-வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் மக்கச்சோளத்திக்கான இடைக்கால விலை முன்னறிவிப்பு மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன்! மிளகாயை பயிர் விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள் |
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings...
Tuesday, 9 February 2021
மீண்டும் இணையும் இயக்குநர் சாம்
மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி, பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் !
“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற “மாறா” திரைப்படத்தினை தயாரித்த Pramod Films தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார்.
நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர். படத்தொகுப்பை ரூபன் செய்ய, கிருஷ்ணன் வெங்கட் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்கிறார்
பாலிவுட்டில் 40 க்கும் மேற்பட்ட வெற்றிபடங்களை தந்திருக்கும் Pramod Films நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இணையவழி குற்றங்கள் ( Dark Web) தான் இப்படத்தின் பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது.
பிரதீக் சக்தவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். |
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இளைஞர் பாராளுமன்றம் ஆகிவை ஒன்றிணைந்து குறித்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
Share
at 11/24/2021 07:02:00 AM
Tags: உள்ளூர்
No comments:
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
தமிழ்-தரம் 05
தமிழ்-பாகம்-01
தமிழ்-பாகம்-02
தமிழ்-பாகம்-03
தமிழ்-பாகம்-04
தமிழ்-பாகம்-05
தமிழ்-பாகம்-06
சுற்றாடல்-தரம் 05
சுற்றாடல்-பாகம்-01
சுற்றாடல்-பாகம்-02
சுற்றாடல்-பாகம்-03
சுற்றாடல்-பாகம்-04
கணிதம்-தரம் 05
கணிதம்-பாகம்-01
கணிதம்-பாகம்-02
கணிதம்-பாகம்-03
கணிதம்-பாகம்-04
கணிதம்-பாகம்-05
கணிதம்-பாகம்-06
நுண்ணறிவு-தரம் 05
நுண்ணறிவு-பாகம்-01
நுண்ணறிவு-பாகம்-02
நுண்ணறிவு-பாகம்-03
செய்திகளைத் தேட
செய்திகளைப் பெற
Like
Follow
Subscribe
அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
வாழைச்சேனையிலிருந்து காணாமல் போன மீன்பிடி படகு சென்னையில் கரையொதுங்கியுள்ளது!
வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்; 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகு இன்று சென்னை காசிமேடு பகுதியில் ...
அனைத்துப் பாடசாலைகளும் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பம்!
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்ற...
இலங்கைக்கு உரித்தான 'மெனிகே' எனும் பறவை 19,360 கி.மீ. பயணத்தின் பின்னர் நாடு திரும்பியது!
புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்து...
சம்மாந்துறையில் முதலாவது கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவானது!
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 1 கிராம சேவையாளர் பகுதியில் இன்று (2)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இன்று காலை...
நாட்டில் இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!
நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் சுகாதார தரப்பினராலும் இராணுவத்தினராலும் முன்னெ...
கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம்!
கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேம...
இன்று முதல் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!
கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இன்று முதலாம் திகதி முதல் எதி...
எந்த நேரத்திலும் நாடு மீண்டும் முடக்கப்படலாம் : சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்
நாட்டில் கோவிட் பரவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமை...
மது போதையில் இளைஞர் குழு அட்டகாசம்; ஒருவர் உயிரிழப்பு பிக்கு ஒருவருக்கு படுகாயம்!
யானைகளை விரட்டுவதற்கு பயன்படுத்தும் வெடில் இளைஞன் ஒருவனின் வயிற்றில் பட்டதில் சம்பவ இடத்திலே இளைஞன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெர...
ஒமிக்ரோன் திரிபு : இலங்கையின் நிலைவரம் மிகமோசமடையலாம் - சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரிக்கை
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்க...
Total Page Views
Facebook
அண்மைய செய்திகள்
செய்திக் காப்பகம்
செய்திக் காப்பகம் Dec 2021 (47) Nov 2021 (454) Oct 2021 (156) Sep 2021 (37) Aug 2021 (359) Jul 2021 (494) Jun 2021 (641) May 2021 (766) Apr 2021 (617) Mar 2021 (726) Feb 2021 (624) Jan 2021 (798) Dec 2020 (808) Nov 2020 (738) Oct 2020 (632) Sep 2020 (553) Aug 2020 (352) Jul 2020 (520) Jun 2020 (508) May 2020 (567) Apr 2020 (799) Mar 2020 (737) Feb 2020 (644) Jan 2020 (557) Dec 2019 (629) Nov 2019 (602) Oct 2019 (324) Sep 2019 (11) |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்,
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன், உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
நடிகர் சூர்யா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர் ஞானவேலும் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி உள்ளார். அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும் போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய்பீம் படம் எடுத்து சென்றுள்ளது.
தற்போது வறுமையால் வாடும் பார்வதிக்கு பொருளாதார உதவி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுகொண்டோம். அதனை ஏற்று தற்போது 15 லட்ச ரூபாய் வைப்பு நிதி வழங்கி அதற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஜெய்பீம் திரைப்படத்தை தமிழ்நாடு முதல்வர் பாராட்டியது மட்டுமல்லாமல் இருளர் சமூக மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே அவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்ட உள்ளதாகவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
From Around the web
Trending
Featured
About Us
Ciniexpress is a multimedia organization created in 2020 with the aim to please its audience, comprising various forms of entertainment that include news, movie reviews, audio launches, cinema news, crime news, lifestyle, health, and much more! |
Any ImprintAudio Media Inc (1)Heritage Publishing House (1)Thakitha Pathippagam (1)அகநாழிகை (18)அகநி (1)அகநி வெளியீடு (5)அகம் பதிப்பகம் (1)அடையாளம் (8)அணங்கு பெண்ணியப் பதிப்பகம் (1)அன்னம் (1)அன்னம் அகரம் (8)அன்னை முத்தமிழ் (6)அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம் (3)அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (2)அமுதா நிலையம் (6)அம்ருதா (3)அலைகள் வெளியீட்டகம் (1)அல்லயன்ஸ் (9)ஆகுதி-பனிக்குடம் பதிப்பகம் (1)ஆதி பதிப்பகம் (3)ஆழ்வார்கள் ஆய்வு மையம் (2)இனியநந்தவனம் பதிப்பகம் (1)இராசகுணா பதிப்பகம் (1)இஷா பப்ளிகேஷன்ஸ் (1)உமா பதிப்பகம் (6)உயிர்மை (63)உயிர்மை பதிப்பகம் (39)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (7)எதிர் வெளியீடு (7)எல் கே எம் (1)எழிலினி பதிப்பகம் (2)எழுத்து (1)எழுத்து பிரசுரம் (13)ஐந்திணை (7)ஓவியா பதிப்பகம் (1)கங்காராணி பதிப்பகம் (15)கண்ணதாசன் (10)கயல் கவின் பதிப்பகம் (3)கருப்புப் பிரதிகள் (3)கற்பகம் புத்தகாலயம் (46)கலைஞன் (1)கலைஞன் பதிப்பகம் (10)கல்பதரு பதிப்பகம் (1)கவிதா பப்ளிகேஷன் (49)கவிதா பப்ளிகேஷன்ஸ் (2)கவியரசன் பதிப்பகம் (1)காலச்சுவடு (119)காவ்யா (79)காவ்யா பதிப்பகம் (1)கிழக்கு (2)குகன் பதிப்பகம் (1)குமரன் (98)குமரன் பதிப்பகம் (2)குமுதம் (7)கெளரா ஏஜென்ஸிஸ் (3)கைத்தடி பதிப்பகம் (1)கொன்றை வெளியீடு (1)கொற்றவை வெளியீடு (1)க்ரியா (10)சங்கர் பதிப்பகம் (2)சந்தியா (4)சந்தியா பதிப்பகம் (69)சப்னா புக் ஹவுஸ் (1)சாகித்திய அகாடெமி (1)சாகித்திய அகாதெமி (4)சாகித்ய அகடாமி (1)சாகித்ய அகாடமி (1)சால்ட் (3)சால்ட் வெளியீடு (2)சிக்ஸ்த் சென்ஸ் (4)சுந்தர் பதிப்பகம் (2)சூரியன் பதிப்பகம் (1)சேகர் பதிப்பகம் (1)சொற்கள் வெளியீடு (1)ஜீவா பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (40)தங்கத் தாமரை (1)தங்கமீன் (4)தங்கமீன் பதிப்பகம் (1)தடாகம் வெளியீடு (1)தமிழினி (17)தமிழ் அலை (3)தமிழ் அலை பதிப்பகம் (3)தமிழ் ஜயா வெளியீட்டகம் (1)தமிழ்மண் (12)தமிழ்வெளி (4)தாமரை பப்ளிகேஷன்ஸ் (1)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (1)தாரணி பதிப்பகம் (1)தாரிணி பதிப்பகம் (2)திருமகள் (1)திருமகள் நிலையம் (22)தென்னிந்திய சைவ சித்தாந்தம் (1)தோழமை வெளியீடு (3)நகர்வு பதிப்பகம் (1)நக்கீரன் (18)நக்கீரன் வெளியீடு (1)நர்மதா பதிப்பகம் (11)நற்றிணை பதிப்பகம் (5)நாகரத்னா புக்ஸ் (5)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (33)நீலம் பதிப்பகம் (1)நூல்வனம் (1)நேஷனல் பப்ளிஷர்ஸ் (1)நோஷன் பிரஷ் (1)நோஷன் பிரஸ் (1)படி வெளியீடு (1)படிகம் வெளியீடு (1)படிவெளியீடு (1)பட்டாம்பூச்சி (1)பத்மா பதிப்பகம் (5)பரிசல் (3)பழனியப்பா பிரதர்ஸ் (5)பாரதி பதிப்பகம் (1)பாரதி புத்தகலாயம் (2)பாரதி புத்தகாலயம் (6)பாரி நிலையம் (25)பாவை (1)புலம் வெளியீடு (1)பூங்கொடி பதிப்பகம் (5)பூம்புகார் (3)பூம்புகார் பதிப்பகம் (1)பூவரசி பப்ளிகேஷன்ஸ் (1)பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் (1)பொன்னி பதிப்பகம் (7)போதிவனம் (8)மணற்கேணி (1)மணற்கேணி பதிப்பகம் (1)மணல்வீடு (4)மணிமேகலை (190)மணிமேகலை பிரசுரம் (2)மணிமேகலைப் பிரசுரம் (6)மணிவாசகர் பதிப்பகம் (86)மதி நிலையம் (2)மயிலை முத்துகள் (1)மலர்ச்சி (1)மாணிக்கவாசகம் (1)மித்ரா ஆர்ட்ஸ் (22)மீனா கோபால பதிப்பகம் (1)மீனாஷி பதிப்பகம் (1)முகவரி வெளியீடு (1)முத்தமிழ் பதிப்பகம் (1)முன்னேற்ற பதிப்பகம் (1)முல்லை பதிப்பகம் (3)மேக தூதன் (2)மேகா பதிப்பகம் (1)மேட்டா பதிப்பகம் (2)யாவரும் பதிப்பகம் (9)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (26)யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (2)ரூபா பப்ளிகேஷன்ஸ் (1)லாடம் வெளியீடு (1)ழகரம் வெளியீடு (1)வ உ சி (19)வ. உ. சி. நூலகம் (1)வனிதா பதிப்பகம் (1)வம்சி (13)வம்சி புக்ஸ் (1)வலம்புரி பதிப்பகம் (1)வளரி எழுத்துக் கூடம் (1)வாசகசாலை (7)வாசகன் பதிப்பகம் (1)வாசன் பதிப்பகம் (1)வாசி பதிப்பகம் (1)வானதி (2)வானதி பதிப்பகம் (20)வானவில் புத்தகாலயம் (1)வாலி பதிப்பகம் (5)விகடன் (10)விஜயா பதிப்பகம் (60)விடியல் (1)விடியல் பதிப்பகம் (2)விருட்சம் (1)விருட்சம் வெளியீடு (5)விழிகள் பதிப்பகம் (10)வீ கேன் புக்ஸ் (1)வெற்றிமொழி வெளியீட்டகம் (1)வேமன் பதிப்பகம் (8)வைரமுத்து புக்ஸ் (14)ஸீரோ டிகிரி (10)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (7)ஸ்ரீ செண்பகா (19)ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் (1)ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (1)
Author
Any AuthorA.K. பரந்தாமனார் (1)A.R. Venkatachalapathy (1)Akarshiya (1)Alari (1)Ananth (2)Anar (2)Anitha (1)Anna Akmathova (1)Ar.Apilash (1)Ayyappa Mathavan (1)Barati Navaneethan (1)Brammarajan (1)C. மோகன் (1)C.S. முருகேசன் (1)Che. Brinda (1)Cheran (3)Cibi Chelvan (1)Deepaselvan (2)Devandra Boopathi (3)Em.Es. (1)Ezilarasi (1)Gokula kannan (1)Isai (1)J.D. ஜெர்ரி (1)JeyanThi Sangkar (1)Ji.Murukan (1)K. முத்துக்கிருஷ்ணன் (2)K. வசந்தகுமாரன் (1)K.S. இளமதி (1)Kanimozhi (6)Kavitha (1)Kazaniyuran (1)Ke.S.Irathakirushnan (1)Kokulak Kannan (2)Kuvalaik Kannan (1)Latha (1)M. Navaz (1)M. வீரப்ப மொய்லி (1)M.A. Nufman, Yesurasa (1)M.D. முத்துக்குமாரசாமி (1)M.Yuvan (1)Maithili (1)Malaissami (1)Malathi Maithri (4)Manushya Puththiran (9)Marakathamani (1)Marija Sres (1)Mathangki (1)Mathumai (1)Mounan (1)Mu.Pushparajan (1)Mu.Suyampulingkam (1)MukunTh NAkarajan (2)N.T. Rajkumar (2)NAvin (1)Palai Nilavan (2)Payani (1)PazanIvel (1)Perumal Murugan (1)Perundevi (1)Pirammarajan (2)Purani (1)Puthuvai Ilavenil (1)R.ஆனந்தகுமார் (1)Ramesh (1)Ramesh - Prem (1)Ramesh Prethan (1)RameshPirem (1)Rani Thilak (2)Raththika (1)Ravikkumar (1)Ravikumar (1)S. Senthil Kumar (1)S. Thenmozhi (1)S. மதிவாணன் (1)S.SenThilkumar (1)S.ராமசாமி (2)Salma (2)SanThira (1)Saravanan (1)Saththiyan-Arayanan (1)Selcted by.Bala (1)Shaa (1)Solaikkili (1)Sugirtharani (2)Sugumaran (1)Sukumaran (4)Sundara Ramasamy (5)T. ஜெயராமன், ஆசை (1)Tha.Palakanesan (1)Thamizassi Thangkapandiyan (4)Thenmozi Dass (1)Thenral (1)Thevathassan (2)Thirumavalavan (1)Uma Makesvari (1)Uma Shakthi (1)V. மணிகண்டன் (1)V.I.S. ஜயபாலன் (1)V.T. ஜெயதேவன் (2)Va.Mu.Komu (1)Vaikkam Muhammad Basheer (1)Vasuthevan (1)Vinodhini (1)Yamuna RajenThiran (2)Yavanika Sriram (1)Yazini Munusami (1)Yuvan SanThirasekar (2)அ. அரசரெத்தினம் (1)அ. ஐரிஸ் (1)அ. சரவணராஜ் (1)அ. சுந்தரமூர்த்தி (2)அ. செளந்தரராஜன் (1)அ. வெண்ணிலா (1)அ.அழகையா (1)அ.ஏ. பார்த்திபன் (1)அ.கா. பெருமாள் (1)அ.வ. உத்திரக்குமரன் (1)அகரம் அமுதன் (1)அகிலன் சுரேஷ் (1)அசதா (1)அனந்தபத்மநாபன் (1)அனாமிகா (1)அனார் (2)அனிச்சம் (1)அனுராதாஆனந்த் (1)அன்னி தாமசு (1)அன்பாதவன் (1)அபி (2)அபுல் கலாம் ஆஸாத் (1)அப்துல் கையூம் (1)அப்துல்ரகுமான் (2)அமரன் (3)அமலன் ஸ்டோ ன்லி (1)அமுதன் (1)அமுதோன் (1)அய்யனார் விஷ்வநாத் (1)அய்யனார் விஸ்வநாத் (1)அய்யப்ப மாதவன் (4)அய்யப்பமாதவன் (2)அரசி (1)அரு. நாகப்பன் (1)அருணா (1)அருணாசுந்தரராசன் (1)அருண் (1)அருண்மதி (1)அருப்புக்கோட்டை செல்வம் (1)அருள் பழனியாண்டி (1)அறிவுமதி (4)அலைமுகம் ரிஷி (1)அழ. வள்ளியப்பா (2)அழகிய சிங்கர் (2)அழகிய பாண்டியன் (1)அழகிய பெரியவன் (3)அழகுநிலா (4)ஆ. முத்துசிவன் (1)ஆ.கோ. குலோத்துங்கன் (2)ஆ.பானு (1)ஆசை (3)ஆண்டன் பெனி (1)ஆண்டன்பெனி (1)ஆண்டாள் பிரியதர்ஷினி (2)ஆதவன் தீட்சண்யா (1)ஆதிரன் (1)ஆத்மா (1)ஆத்மார்தி (1)ஆத்மார்த்தி (5)ஆனந்தரவி (1)ஆனந்தி ராமகிருஷ்ணன் (1)ஆனந்த்-தேவதச்சன் (1)ஆயுதக்களத்தான் (1)ஆரா (1)ஆரூர் பாஸ்கர் (1)ஆரூர்தமிழ்நாடன் (1)ஆர். அபிலாஷ் (3)ஆர். பார்த்திபன் (1)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர்.சி. மதிராஜ் (5)ஆர்தர்ரைம்போ (1)ஆர்துர் ரைம்போ (1)இ. ராஜகுரு (1)இ.எஸ். லலிதாமதி (4)இ.நி. நந்தகுமாரன் (1)இ.ப. நடராஜன் (2)இசாக் (1)இசை (5)இசைக்கவி ரமணன் (1)இசைஞானி இளையராஜா (6)இந்திரா (1)இன்குலாப் (3)இன்னாசி (2)இன்பா சுப்ரமணியன் (1)இன்போஅம்பிகா (1)இயற்கையின்கோலங்கள் (1)இர.தாரணி (1)இரத்தினம் (1)இரவி (1)இரவி நந்தபாலா (1)இரா. இளங்குமரன் (2)இரா. எட்வின் (1)இரா. காமராசு (1)இரா. சின்னசாமி (1)இரா. பச்சியப்பன் (1)இரா. பழனிமுத்து (1)இரா. பேபி வேகா இசையமுது (1)இரா. மணிகண்டன் (1)இரா. மணிவேல் (1)இரா. மனோகரன் (1)இரா. மீனாட்சி (1)இரா. மோகன் (2)இரா. ரெங்கசாமி (1)இரா. வெங்கடேஷ் பிரபு (1)இரா.த. சக்திவேல் (1)இரா.தெ. முத்து (1)இராச செல்வம் (1)இராசு பவுன்துரை (1)இராஜகோபால் (1)இராம. திருவுடையான் (2)இராமகோபால் (2)இராமையா (1)இலக்கியத் தென்றல் அடியார் (2)இலா (1)இளங்கோ கிருஷ்ணன் (1)இளங்கோ கிருஷ்ணன் (3)இளம்பிறை (2)இளவாலை அமுது (1)இளையபாரதி (5)இளையராஜா (1)இவள் பாரதி (1)ஈரோடு இறைவன் (2)ஈரோடு தமிழன்பன் (4)ஈழவாணி (1)உடுமலை நாராயண கவி (1)உமா சௌந்தர்யா (1)உமா பதிப்பகம் (2)உமா மோகன் (2)உமையாள்மீனாட்சிசுந்தரம் (1)உரை கவிஞர் பத்மதேவன் (1)உஷா ராணி (1)ஊ.ல.இ. நடராசா (1)எதிரொலி விசுவநாதன் (1)என். சுரேஷ் (8)என்.பி.ராஜாராமன் (1)என்.விநாயகமுருகன் (1)எம். ஈசா (1)எம். சிவகுமார் (1)எம். சுரேஷ்குமார் (1)எம்.எம்.பைசல் (1)எம்.எஸ். சுப்புலட்சுமி (1)எம்.எஸ். தியாகராஜன் (1)எம்.ஏ.பி. (3)எம்.டி.வாசுதேவன் நாயர்-தமிழில்:சிற்பி (1)எல்டோராடோ (1)எல்லார்வி (1)எழில்வரதன் (1)எஸ். சண்முகம் (4)எஸ். சுரேஷ் (1)எஸ். செல்வகுமார் (1)எஸ். ஜே. சிவசங்கர் (1)எஸ். நாச்சியப்பன் (2)எஸ். ராஜேஸ்வரி (1)எஸ். ராமகிருஷ்ணன் (1)எஸ். வைதீஸ்வரன் (1)எஸ்.ஏ. பெருமாள் (1)எஸ்.கௌமாரீஸ்வரி (1)எஸ்.டி. விஜய் மில்டன் (1)எஸ்தர் (1)ஏ.ஜி. நாயகம் (2)ஏகாதசி (1)ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் (1)ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் (1)ஏர்வாடி ராதாகிருஷ்ணன் (1)ஐந்திணை பதிப்பகம் (1)க. இராமச்சந்திரன் (3)க. குழந்தைவேல் (1)க. சி. அம்பிகாவர்ஷினி (1)க. தங்கதாசன் (1)க. ரமேஷ் (1)க.இரா. சுப்பிரமணியன் (1)க.இராமசாமி (1)க.சி.பழனிக்குமார் (1)க.ஜெயபாலன் (1)க.நா. சுப்ரமணியம் (1)க.மோகனரங்கன் (1)கங்கை ஆறுமுகம் (1)கட்டளை ஜெயா (4)கணேசகுமாரன் (1)கணேசன் (2)கண்ணகி செல்வராஜ் (1)கண்ணதாசன் (1)கண்ணம்மா (1)கண்மணி குணசேகரன் (1)கண்மதி (1)கதிர்பாரதி (1)கந்தநாதன் (1)கனகராஜன் (1)கனிமொழி.ஜி (1)கனியன் செல்வராஜ் (1)கன்னியப்பன் (2)கபிலன் வைரமுத்து (1)கபீர் (1)கமலவேலன் (1)கமலா சந்திரன் (1)கயல் (3)கரிகாலன் (3)கரு.அழ. குணசேகரன் (1)கற்பகம் புத்தகாலயம் (6)கலக்கல் கந்தசாமி (1)கலயாண்ஜி (1)கலாப்ரியா (14)கலீல் ஜிப்ரான் (1)கலைச்சித்தன் (1)கலைஞன் பதிப்பகம் (3)கலைஞர் (இளையபாரதி) (1)கலைஞர் மு. கருணாநிதி (1)கலைமதி (1)கலைமதி ஆனந்த் (1)கல்கி (1)கல்பனா ரத்தன் (1)கல்யாணராமன் (1)கல்யாண்ஜி (15)கவாஸ்கர் விஸ்வநாதன் (1)கவி. வெ. நாரா (2)கவிக்கோ அப்துல் ரகுமான் (26)கவிஞர் P. சிவா (1)கவிஞர் அப்துல் ரஹ்மான் (1)கவிஞர் இரா.கருணாநிதி (1)கவிஞர் ஈரோடு தமிழன்பன் (8)கவிஞர் ஈழபாரதி (1)கவிஞர் கண்ணதாசன் (10)கவிஞர் கவிமுகில் (3)கவிஞர் சுப்பு ஆறுமுகம் (1)கவிஞர் சுரதா (30)கவிஞர் செல்லம் ரகு (1)கவிஞர் த. ஐயப்பன் (1)கவிஞர் தாமரை (1)கவிஞர் நா. முத்துக்குமார் (5)கவிஞர் பசுபதி (1)கவிஞர் பா.கிருஷ்ணன் (1)கவிஞர் பிறைசூடன் (1)கவிஞர் புவியரசு (2)கவிஞர் பெருமாள்ராசு (1)கவிஞர் மு. மேத்தா (3)கவிஞர் முத்துராமலிங்கம் (1)கவிஞர் வாலி (8)கவிஞர்.கா.வேழவேந்தன் (1)கவிஞர்இரவி (1)கவிஞர்இளவல்ஹரிஹரன் (1)கவிதா (1)கவிதாசன் (2)கவிதைக்காரன்இளங்கோ (1)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (3)கவிமதி (1)கவியரசர் முடியரசன் (6)கவியருவி கானதாசன் (1)கவியோகி நாச்சிகுளத்தார் (1)கா.வ. பரந்தாமன் (1)கார்த்திகேயன் (1)கார்த்திக் நேத்தா (1)கார்மேகம் நந்தா (1)காளிதாசர் (1)கி.தனவேல் (1)கி.வா. ஜகந்நாதன் (5)கிருஷ்ண பிரசாத் (4)கிருஷ்ணபாரதி (1)கு. சின்னப்ப பாரதி (1)கு. பாரதிமோகன் (1)கு. றஜீபன் (1)குகன் (1)குட்டி ரேவதி (13)குணா கந்தசாமி (1)குமரகுருபரன் (1)குமரநேசன் (1)குருவிக்கரம்பை சண்முகம் (1)குழ. கதிரேசன் (6)கெ.ஐயப்பபணிக்கர் (1)கே. இளமாறன் (1)கே. குமரன் (1)கே. ஜீவபாரதி (2)கே. நாராயணசாமி அய்யர் (1)கே. பார்த்திபன் (1)கே. பாலமுருகன் (1)கே.ஆர். பாபு (1)கே.எஸ்.சுப்ரமணியன் (1)கொ.மா. கோதண்டம் (1)கோ. எழில்முத்து (2)கோ. புண்ணியவான் (1)கோ. வசந்தகுமாரன் (2)கோ.எழில் (1)கோ.சாமானியன் (4)கோ.ராமகிருஷ்ணன் (1)கோ.வசந்தகுமரன் (1)கோ.வி. லெனின் (1)கோகிலா தங்கசாமி (1)கோசின்ரா (1)கோபால்தாசன் (1)கோபிநாத் (3)கோவி, லெனின் (1)கோவூர் தணிகைவேல் (1)கோவூர்தணிகை (1)க்ருஷாங்கினி (1)க்ருஷி (1)ச. சக்திவேல் (1)ச. சீனிவாசன் (1)ச. பூபேஷ் (1)ச. முருகானந்தம் (1)ச. ரதிமுருகன் (1)ச.து.சு. யோகியார் (1)சக்தி ஜோதி (10)சங்கர ராமசுப்ரமணியன் (1)சசிகலாபாபு (2)சச்சிதானந்தன்-தமிழில்:சிற்பி (1)சச்சின் (1)சண்முகசுந்தரம் (1)சதிரியன் (1)சத்யானந்தன் (3)சந்தியா (1)சந்தியா பதிப்பகம் (1)சந்திரகாந்தா முருகானந்தம் (1)சந்திரா தங்கராஜ் (1)சந்துரு (1)சமயவேல் (3)சம்யுக்தாமாயா (1)சரஸ்வதி நாகப்பன் (1)சல்மா (1)சஹானா (2)சா. தேவதாஸ் (1)சாகித்ய அகாடமி (2)சாந்தி மாரியப்பன் (1)சாமி சிதம்பரனார் (1)சாமி பழனியப்பன் (1)சாம்சன் (1)சாம்ராஜ் (1)சாய்இந்து (1)சாய்ராம் சிவகுமார் (1)சி. கிருஷ்ணமூர்த்தி (1)சி. சரவண கார்த்திகேயன் (1)சி. பாஸ்கர் (1)சி. பொன்னுசாமி (1)சி.ஆர். ரவீந்திரன் (1)சி.சரவணகார்த்திகேயன் (1)சி.சரவணகார்த்தியேன் (1)சி.ஜெயபாரதன் (1)சி.பன்னீர்செல்வம் (1)சித்தர் சிதம்பர சுவாமிகள், உரை: G.S. ஆனந்தன் (1)சியாமளாசசிகுமார் (1)சிறீசுக்கந்தராசா (1)சிற்பி (6)சிவ சூரிய நாராயணன் (1)சிவ. இளங்கோ (1)சிவகாமி (1)சிவகுமார் (1)சிவசு (1)சிவா (6)சீனு ராமசாமி (2)சீனுதமிழ்மணி (1)சு. செல்வக்குமரன் (1)சு. தமிழ்மதி (1)சு. வெங்கடேசன் (1)சு. வேதா இராமன் (1)சு.செல்வகுமாரன் (1)சுகதேவ் (1)சுகந்தி சுப்ரமணியன் (1)சுகந்திநாச்சியாள் (1)சுகிர்தராணி (2)சுகுணா மோகன் (1)சுகுமாரன் (2)சுஜந்தன் (1)சுஜாதா (3)சுடர் (3)சுந்தரம் (1)சுப. சந்திரசேகரன் (1)சுப்ரபாரதி மணியன் (1)சுப்ரமணிய செல்வா (1)சுமதிஸ்ரீ (1)சுரதா (2)சூ. நிர்மலாதேவி (1)செ. சீனிவாசன் (2)செ. ஞானன் (2)செ. நிலவு (1)செந்தமிழ்ச் செல்வி (1)செந்தி (1)சென்னிமலை தண்டபாணி (7)சென்றாயன் (1)செல்லமுத்து (1)செல்வகுமார் (1)செல்வசங்கரன் (2)செல்வராசா (1)செல்வராஜ் ஜெகதீசன் (3)செல்வேந்தன் (1)செளந்தர மகாதேவன் (1)செளந்தரா கைலாசம் (1)செழியன் (1)செவல்குளம் (1)சேதுபதி (2)சேத்திரபாலன் (1)சேரன் (2)சேஷாசலம் (7)சைதன்யா (1)சொ. கலைச்செல்வி (1)சொ. பத்மநாபன் (1)சொர்ணபாரதி (1)சொற்கோ கருணாநிதி (1)சோ. இரவீந்திரன் (1)ஜலாலுத்தின் ரூமி (1)ஜவஹர்லால் (1)ஜாசின் ஏ. தேவராஜன் (1)ஜான் சுந்தர் (2)ஜான்ஸிராணி (1)ஜாவர் சீதாராமன் (1)ஜி.சுந்தரேசன் (1)ஜி.பிராங்க்ளின்குமார் (1)ஜிதேந்திரன் (1)ஜீவன் பென்னி (1)ஜீவா (1)ஜெ. செல்வகுமாரி (1)ஜெ. ஜெயபாலன் (2)ஜெ. பிரான்சிஸ் கிருபா (5)ஜெ. முருகன் (1)ஜெ.பிரான்சிஸ் கிருபா (1)ஜெ.பிரான்சிஸ்கிருபா (1)ஜெகாதா (3)ஜெய ஜனனி (1)ஜெயகாந்தன் (1)ஜெயதேவன் (1)ஜெயந்தி (1)ஜெயந்தி சுரேஷ் (2)ஜெயபாரதிப்ரியா (1)ஜெயமணி (1)ஜெயவீரன் ஜெயராஜா (1)ஜெய்கணேஷ் (2)ஜே. மஞ்சுளாதேவி (1)ஜோ மல்லூரி (1)ஜோஸ்னா ஜோன்ஸ் (1)ஞா. மாணிக்கவாசகன் (1)ஞாநி (1)ஞானக்கூத்தன் (1)ஞானதேவன் (1)டாக்டர் க.மு.அ. அஹ்மது ஜீபையர் (1)டாக்டர் மு.பி. பாலசுப்பிரமணியன் (1)டி. கண்ணன் (1)டி. செல்வகுமார் (1)டி.என். இமாஜான் (1)டி.கே.சி. உரை (1)டி.ஜெயராமன் (1)டி.வி.எஸ்.மணியன் (1)டிகேபி காந்தி (1)த. கண்ணன் (7)த. கோவேந்தன் (1)த. திலிப்குமார் (1)த.எ. கணேசன் (1)த.சு. மணியம் (1)தங்கம் மூர்த்தி (2)தநாமகன் (1)தனசக்தி (1)தபசி (2)தபூ சங்கர் (13)தமிழச்சி (1)தமிழச்சி தங்கபாண்டியன் (1)தமிழன்பன் (1)தமிழமல்லன் (1)தமிழரசி (1)தமிழவன் கட்டுரைகள் 1 (1)தமிழிறைவன் (1)தமிழில்: V.R.M. செட்டியார் (2)தமிழில்: சுரா (1)தமிழில்: ஜெயமோகன் (1)தமிழில்: ப. கூத்தலிங்கம் (1)தமிழில்: வத்சலா விஜயகுமார் (1)தமிழ் (2)தமிழ் நாடன் (1)தமிழ்சத்யன் (2)தமிழ்நாடன் (1)தமிழ்மணவாளன் (1)தமிழ்முத்து (1)தரிசனப்பிரியன் (1)தர்மினி (1)தா. சந்திரசேகரன் (1)தா.ச. ராஜபாண்டியன் (1)தாகூர் (1)தாமரைகுளம்P.தர்மராஜ் (1)தாமோதரன் (1)தாயுமானவர் (1)தாரா கணேசன் (1)தாரா கணேஷ் (1)தாராபாரதி (1)தி.கு. இரவிச்சந்திரன் (1)தி.நெ.வள்ளிநாயகம் (1)தி.பரமேசுவரி (1)தி.மு.அப்துல் காதர் (2)தி.வ. தெய்வசிகாமணி (1)தியாரூ (4)திருக்குமரன் (1)திருமகள் நிலையம் (1)திருமலர் எம்.எம்.மீறான்பிள்ளை (1)திருலோக சீதாராம் (2)திருவேந்தி (2)திலகபாமா (4)திலீபன் கண்ணதாசன் (2)தீண்டாமை (1)தீபச்செல்வன் (3)தீபன் (1)து. சீனிச்சாமி (1)துரை. நந்தகுமார் (2)துரைமுருகன் (1)துவாரகை தலைவன் (1)தெ.சு. கௌதமன் (1)தென்றல்சிவக்குமார் (1)தேனம்மை லெஷ்மணன் (1)தேனரசன் (1)தேன்மொழி (1)தேன்மொழி தாஸ் (2)தேன்மொழிதாஸ் (1)தேவதச்சன் (1)தேவதட்சன் (1)தேவதேவன் (5)தேவரசிகன் (1)தேவிபாரதி (1)தைசாகுஇகெதா (1)தொ.மு.சி. ரகுநாதன் (1)தொகுப்பாசிரியர்:ஸ்ரீ.பிரசாந்தன் (1)தொகுப்பு - செல்வா கனகநாயகம் (1)தொகுப்பு: கவிஞர் சுரதா கல்லாடன் (1)தொகுப்பு: கவிஞர் மா. வரதராஜன் (1)தொகுப்பு: சண்முகசுந்தரம் (4)தொகுப்பு: டாக்டர் ஆறு. அழகப்பன் (1)தொகுப்பு: தமிழவன் (1)தொகுப்பு: பெ. முத்துலிங்கம் (1)தொகுப்பு: மானோஸ் (1)தொகுப்பு: வெ.இரா. நளினி (2)ந. ஜெயபாஸ்கரன் (1)ந. பச்சைபாலன் (1)ந. பாண்டுரங்கன் (1)நகுலன் (2)நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (1)நட. சிவக்குமார் (1)நடசங்கர் (1)நந்தா (1)நந்தாகுமாரன் (1)நன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் (1)நயவுரைநம்பிடாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் (2)நரன் (1)நர்மதா (2)நல்.செ. சிவலிங்கம் (1)நா. காமராசன் (4)நா. கிருஷ்ணமூர்த்தி (1)நா. முத்துக்குமார் (12)நா. வானமாமலை (1)நா.வே. அருள் (1)நாகரத்னா பதிப்பகம் (3)நாகூர் ரூமி (1)நாஞ்சில் பி.சி.அன்பழகன் (1)நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (2)நாரணோஜெயராமன் (1)நிகரன் (1)நித்தில் (1)நிம்மி சிவா (2)நிலவன் (1)நீலாவணன் (1)நெகிழன் (1)நெய்தல் (1)நெல்லை ஜெயந்தா (5)நெல்லை மீரான் (1)நெல்லைசு.முத்து (1)நெளஷத் (1)நேசமித்திரன் (5)ப. கல்பனா, பா. இரவிக்குமார் (1)ப. நிகரன் (2)ப. மருதநாயகம் (1)ப.கு.ராஜன் (1)பச்சியப்பன் (2)பச்சோந்தி (1)பஜீலா ஆசாத் (1)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1)பட்டுக்கோட்டை ராஜேந்திரன் (1)பதீக் (1)பத்மஜாநாராயணன் (1)பரந்தாமன் (1)பரமசிவன் (1)பரமன்பச்சைமுத்து (1)பரிணாமன் (2)பரிதி (1)பறம்பை செல்வன் (1)பழநிபாரதி (2)பழனி பாரதி (10)பழனிபாரதி (1)பழனியப்பா பிரதர்ஸ் (1)பழன் (1)பழமலய் (1)பா. அகத்திய நாடன் (1)பா. முகிலன் (1)பா. முத்துகிருஷ்ணன் (1)பா. விஜய் (34)பா.இரவிக்குமார் (1)பா.ராஜாராம் (1)பாபநாசம் குறள் பித்தன் (1)பாம்பாட்டி சித்தன் (1)பாரதி இராசபாரதி (1)பாரதி கவிதாஞ்சன் (1)பாரதி புத்தகாலயம் (1)பாரதி வசந்தன் (1)பாரதிதாசன் (15)பாரதிப்ரியன் (1)பாலா (3)பாலு மணிமாறன் (1)பாலைவன லாந்தர் (1)பாலைவனலாந்தர் (1)பாவண்ணன் (1)பி.இ. பாலகிருஷ்ணன் (1)பி.எஸ். இராமசாமி (1)பி.எஸ். கந்தநாதன் (1)பி.எஸ்.கே. செல்வராஜ் (1)பி.கே.சிவக்குமார் (1)பிச்சினிக்காடு இளங்கோ (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (1)பிரபஞ்சன் (1)பிரபு கங்காதரன் (1)பிரமிள் (1)பிரம்மராஜன் (2)பிரிய குமாரன் (1)பிருந்தா சாரதி (1)பிருந்தாசாரதி (3)பிரேம பிரபா (1)பிரேமாவதி (1)பிரேம் (2)பிறைசூடன் (1)பு.சி. ரத்தினம் (1)புதுமைத்தேனீ மா. அன்பழகன் (1)புதுவை இரத்தினதுரை (1)புலவர் குழந்தை (5)புலவர் சந்தான குருக்கள் (1)புலவர் செ. இராசு (1)புலவர் ம.அருள்சாமி (2)புலியூர் கேசிகன் (3)புவியரசு (5)புஹாரி (1)பூங்கா.பொன்னுச்சாமி (1)பூங்காற்று தனசேகர் (2)பூங்குழலி வீரன் (1)பூபாலன் (1)பூமா ஈஸ்வரமூர்த்தி (1)பூர்ணா (1)பெ. சிதம்பரநாதன் (1)பெ. பாலமுருகன் (1)பெரி. நீல. பழநிவேலன் (1)பெரியதம்பிப்பிள்ளை (1)பெரியப்பா (1)பெரு. இளங்கம்பன் (1)பெருந்தேவி (2)பேயோன் (1)பேரா.சு.சண்முகசுந்தரம் (1)பேரா.முனைவர்.க.ஜெயபாலன் (1)பேராசிரியர் தி.ரா. சீனிவாசரங்கன் (1)பேராசிரியர் பசுபதி (1)பொன். இரவீந்திரன் (1)பொன். ரவீந்திரன் (3)பொன்னண்ணா (1)பொன்னுசாமி (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (2)பௌத்த அய்யனார் (1)ப்ராணா (1)ப்ரியாராஜ் (1)ம. தவசி (1)ம. ரூபநாதன் (1)ம.இலெ. தங்கப்பா (1)ம.கண்ணம்மாள் (1)ம.ரா.போ. குருசாமி (1)மகரந்தன் (1)மகாகவி காளிதாசர் (5)மகாகவி பாரதியார் (17)மகுடேசுவரன் (4)மஞ்சுளா (1)மணவை பொன். மாணிக்கம் (2)மணிகாந்தன் (2)மணிபாரதி (1)மணிமேகலை பிரசுரம் (93)மணிவேந்தன் (1)மண் குதிரை (1)மதன் (1)மதிராஜ் (1)மதுசூதனன் (1)மதுமிதா (1)மதுரா (1)மதுரை இளங்கவின் (1)மனுஷி (1)மனுஷ்ய புத்திரன் (4)மனுஷ்யபுத்திரன் (3)மனுஷ்யப்புத்திரன் (13)மனோன்மணி சண்முகதாஸ் (1)மனோன்மணி மாணிக்கவாசகம் (1)மரபின்மைந்தன் முத்தையா (1)மரு.மனுகோத்தாரி (1)மறைமலை அடிகள் (1)மலர்சிதம்பரம்பிள்ளை (1)மலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி (1)மழயிசை (1)மஹதி (1)மஹாகவி (2)மா. அரங்கநாதன் (1)மா. காளிதாஸ் (1)மா. பாலமுருகன் (1)மா. புகழேந்தி (11)மா. வடிவழகன் (1)மா.கமலவேலன் (1)மாயாண்டி சந்திரசேகர் (1)மாலதி மைத்ரி (1)மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி (1)மாலன் (1)மித்ரா (1)மித்ரா வெளியீடு (12)மின்ஹா (1)மீரா (6)மு. அண்ணாமலை (1)மு. அய்யனார் (1)மு. ஆறுமுகம் (1)மு. குழந்தைவேலு (1)மு. கோபி சரபோஜி (1)மு. செல்லா (1)மு. தமிழ்க்குடிமகன் (1)மு. மாறன் (1)மு. முருகேஷ் (4)மு. ரமேஷ் (1)மு.கலைவேந்தன் (1)மு.மேத்தா (9)மு.வித்யாபெனோ (1)மு.வை. அரவிந்தன் (1)முகுந்த்நாகராஜன் (2)முடியரசன் (1)முதல்வன் (1)முத்தாலங்குறிச்சி காமராசு (1)முத்து மகரந்தன் (2)முத்துக்கண்ணன் (1)முத்துமாணிக்கம் (1)முத்துராசா குமார் (1)முத்துலட்சுமி ராகவன் (1)முத்துவேல் (1)முனியப்பராஜ் (1)முனிஷிப் வேதநாயகம் பிள்ளை (1)முனைவர் கா.வில்லவன் (1)முனைவர் கு. மோகனராசு (2)முனைவர் ச. அகத்தியலிங்கம் (1)முனைவர் ச. மெய்யப்பன் (2)முனைவர் ச.வே. சுப்பிரமணியன் (1)முனைவர் செ.வை. சண்முகம் (1)முனைவர் த. கனகசபை (2)முனைவர்.இரா.மனோகரன் (1)முனைவர்சுபாசு (1)முருகு சுந்தரம் (1)முல்லை பதிப்பகம் (1)முல்லை பி.எல். முத்தையா (1)மூவேந்தன் தமிழரசு (1)மெல்பேர்ன் மணி (1)மெளனன் (1)மோசே (1)மௌனன் யாத்ரிகா (5)ய.சு. ராஜன் (2)ய.சு. ராஜன், தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம் (1)யாத்ரா (1)யாழி (1)யுகன் (1)யுகபாரதி (1)யுவனிகாஸ்ரீராம் (1)யுவன் சந்திரசேகர் (2)யூமா வாசுகி (2)யெஸ். பாலபாரதி (1)யோகி (1)ரத்தின மூர்த்தி (1)ரமணன் (1)ரவணசமுத்திரம் நல்லபெருமாள் (1)ரவிஉதயன் (1)ரவிக்குமார் (1)ரவிசுப்பிரமணியன் (2)ரவிசுப்ரமணியன் (1)ரவிதாசன் (5)ரா. நாகப்பன் (2)ரா. ராஜேஸ்வரி (1)ரா.காசிநாதன் (1)ரா.ஸ்ரீனிவாஸன் (2)ராசி அழகப்பன் (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜ மார்த்தாண்டன் (1)ராஜலஷ்மி சீனிவாசன் (1)ராஜாசந்திரசேகர் (1)ராஜேஸ்வரி (1)ராஜ்குமார் (1)ராஜ்குமார் ஜெயராமன் (1)ராமலஷ்மி (1)ராஷ்மி (1)ரிஷி (1)றாம் சந்தோஷ் (1)லக்ஷ்மி மணிவண்ணன் (1)லதா (1)லதா அருணாச்சலம் (1)லதா ராமகிருஷ்ணன் (1)லஷ்மி இராமச்சந்திரன் (1)லஷ்மிமணிவண்ணன் (1)லாவண்யா சுந்தர்ராஜன் (2)லி.நெளஷாத் கான் (1)லிங்குசாமி (1)லீனாமணிமேகலை (1)லெனின் (1)வ. கலியபெருமாள் (1)வ. பரத்வாஜர் (1)வ.உ.சி. நூலகம் (1)வ.சிவசங்கரன் (1)வசந்தா கிருஷ்ணசாமி (1)வசுதேந்திரா (1)வசுமித்ர (1)வண்ணதாசன் (1)வண்ணநிலவன் (1)வயலை வாசு (1)வலம்புரி சோமநாதன் (1)வளவ. துரையன் (1)வள்ளிகண்ணன் (1)வா.மு. கோமு (1)வா.மு.சேதுராமன் (1)வாணி அறிவாளன் (1)வாணிதாசன் (1)வான்முகில் (1)வாமனன் (8)வி. டில்லிபாபு (1)வி.கே. சுப்பிரமணியன் (1)வி.பி. சிங் (1)விகடன் பிரசுரம் (1)விக்கி நவரட்னம் (1)விக்ரமாதித்யன் (10)விஜய் ரவிக்குமார் (2)விஜய்கங்கா (1)விஜி. ரத்தினம் (2)விடியல் பதிப்பகம் (1)வித்யா சங்கர் (1)வித்யாசாகர் (1)வினோதன் (1)விருட்சம் (1)விழி.பா. இதயவேந்தன், அன்பாதவன் (1)விவேகானந்த் செல்வராஜ் (1)வீ. சிவஞானம் (1)வெ. இறையன்பு I.A.S. (2)வெ. தேவராஜுலு (1)வெங்கடசுவாமிநாதன் (1)வெங்கட் சாமிநாதன் (1)வெங்கனூர் புகழேந்தி (1)வெள்ளியங்காட்டான் (1)வே.நி.சூர்யா (1)வேணிபர் சக்கரவர்த்தி (1)வேணுகோபால் (1)வேதநாயகம் பிள்ளை (1)வேதா (1)வை. கோவிந்தன் (1)வை. சுசீந்திரன் (1)வைகை வாணன் (2)வைகைச் செல்வன் (4)வைகைச்செல்வி (1)வைதீஸ்வரன் (1)வைரமுத்து (16)ஷக்தி (1)ஷங்கர் ராமசுப்ரமணியன் (2)ஷம்சுதீன் (1)ஷர்மிளா தேவி (1)ஷான் (1)ஸாக் ப்ரெவெர் (1)ஸ்டாலின்சரவணன் (1)ஸ்ரீ அரவிந்தர் (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (5)ஸ்ரீநேசன் (1)ஸ்ரீனி. விசுவநாதன் (1)ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (1)ஸ்ரீரங்கராஜபுரம் துளசி (1)ஸ்ரீலெஜா (1)ஸ்ரீஷங்கர் (1)ஹான்ஷான் (1)ஹெச்.ஜி. ரசூல் (1) |
என்னுடைய பௌத்த ஆய்வு தொடர்பாக 10 பிப்ரவரி 2019 நாளிட்ட (3.2.2019 அன்று வெளியான) காமதேனு இதழில் வெளியான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கும் திரு ஆசைத்தம்பிக்கும் நன்றியுடன். நீரோடிய காலம் ஆசை துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்! இந்து மதம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில் இ ந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பௌத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக இ ருந்த தஞ்சையிலும் பௌத்தத்தின் தாக்கம் இ ருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது. இ ந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பௌத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா.ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த சந்திப்பு இ து. நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம். "தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சியில் இ றங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் " என்றேன்.
14 comments
Read more
More posts
Powered by Blogger
முனைவர் பா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), (பி.1959, கும்பகோணம்), உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015), எழுதியுள்ள நூல்கள்- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் (மின்னூல் 2020), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020), 1993 முதல் 17 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு. |
"https://ta.wikinews.org/w/index.php?title=பகுப்பு:ஜூலை_27,_2017&oldid=46722" இருந்து மீள்விக்கப்பட்டது |
Thennakam Admin 17th October 2021 திருப்பூரில் தாவரவியல் முதுகலை ஆசிரியர்கள் (PG Teachers For Botany) பணியிடங்கள்2021-10-17T09:49:28+05:30 Dindigul, Erode, Freshers, Jobs, Karur, Kovai, Private Sector Jobs, Science, Teaching Jobs, Tiruppur
இந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும். https://play.google.com/store/apps/details?id=com.thennakam.velaivaippu |
பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் :
பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!
Search
⭕ E Books ( all std )
⭕ PGTRB STUDY MATERIALS
⭕ LESSON PLAN
⭕ IMPORTANT FORMS
⭕ Guide (ALL STD)
⭕ PRIMARY STUDY MATERIALS (NEW)
⭕ UPPER PRIMARY ( 6 - 9)
⭕ 10 STUDY MATERIALS
⭕ 11 STUDY MATERIALS
⭕ 12 STUDY MATERIALS
Aug 16, 2020
Home SSLC 10th Mark Sheet - பள்ளிகளில் நாளை முதல் விநியோகம்!
10th Mark Sheet - பள்ளிகளில் நாளை முதல் விநியோகம்!
Kalviseithi 7:58 AM SSLC,
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் (ஆக.17) விநியோகம் செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக் கொள்ள வேண் டும்.
இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை நாளை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின்தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Recommanded News
Tags # SSLC
Share This:
Facebook Twitter Google+ Pinterest Linkedin Whatsapp
Related Post:
SSLC
By Kalviseithi at 7:58 AM
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: SSLC
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Ads
RESTRICTED HOLIDAYS[RL]- 2021
Follow on Twitter
Like on Facebook
Subscribe on Youtube
Follow on Instagram
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Archive
Archive December (52) November (314) October (370) September (374) August (385) July (390) June (405) May (388) April (286) March (336) February (321) January (351) December (368) November (389) October (494) September (446) August (463) July (435) June (415) May (463) April (437) March (560) February (504) January (483) December (493) November (549) October (460) September (489) August (489) July (589) June (588) May (513) April (469) March (573) February (620) January (613) December (608) November (575) October (683) September (693) August (759) July (768) June (714) May (613) April (548) March (556) February (508) January (548) December (625) November (664) October (739) September (671) August (641) July (683) June (696) May (459) February (276) January (508) December (642) November (620) October (669) September (681) August (733) July (707) June (672) May (723) April (644) March (670) February (553) January (483) December (623) November (586) October (533) September (522) August (629) July (609) June (559) May (579) April (631) March (600) February (516) January (530) December (534) November (491) October (514) September (415) August (399) July (376) June (299) May (381) April (382) March (313) February (268) January (279) December (245) November (217) October (283) September (241) August (225) July (194) June (177) May (153) April (53) March (61) February (15) January (4) December (1) October (7) |
எந்த ஒரு சமுதாயமும் நல்வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை , அது மாறுவதற்கான சாத்தியம் இல்லை. (நபி மொழி)
கடந்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்வி விழிப்புணர்வு காணப்படுகிறது. கல்வியின் தேவை மற்றும் அவசரம் குறித்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்கள்கூட .ஆர்வத்துடன் ஆலேசித்துக் கொள்வது நம் கண்கூட கண்டு மகிழ முடிகிறது.
இந்த மாற்றத்திற்காக அடிப்படைக் காரணங்களில்…
i) முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :
(கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது. (நபிமொழி –முஸ்லீம்)
1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.
ii) சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன்- 58:11 )
இன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் “இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்”. என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.
iii) வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:
சமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய அவலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.
உலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. – இமாம் அல்ஜாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி.
இன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா ?
நாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா? இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா? இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா?
கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ கிளிக் செய்யவும்.
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
+ 43 = 48
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,523) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (485) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month December 2021 (2) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114) |
தேனை விட இனிப்பானது. பொதுவாக இயற்கையான தண்ணீர் இனிப்பாக இருக்கவே செய்யாது. இனிக்க வேண்டுமெனில் சீனி சேர்க்க வேண்டும். உப்பு குறைவாக இருக்கிற அல்லது உப்பே இல்லாத தண்ணீரை வேண்டுமானால் இனிப்பானது சுவையானது என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, மற்றபடி எந்தத் தண்ணீரிலும் இனிப்பு இருக்காது.
“(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்’ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்’ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா’ நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை.
ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 416,4609 4255)
நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக்கையானது), மேகமோ, நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும். யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்து சேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது.
அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சம அளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்த) “அம்மானு’க்கும் “அய்லா’வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட மதுரமானது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4608)
ஹவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரின் சுவை தேனை விட இனிமையாக இருக்கும். எனவே கவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரை நாம் உலகில் குடிக்கிற தண்ணீரைப் போன்று நினைத்து விடாமல், கவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரில் இனிப்பை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்று நம்ப வேண்டும். பாலை விட வெண்மையானது தண்ணீருக்கு எந்த நிறமும் கிடையாது. நிறமாற்றத்திற்கு சரியான எடுத்துக் காட்டு, உதாரணம் சொல்வதாக இருந்தால் அதற்குத் தண்ணீரைத்தான் சொல்வோம். அப்படியெனில் தண்ணீரின் நிறம் என்பது அதில் கலக்கின்ற பொருளின் தன்மையையும் வண்ணத்தையும் பொருத்துத்தான் ஏற்படும். களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருந்தால் சிவப்பு நிறமாக இருக்கும்.
சர்பத்தைக் கலக்கினால் அதன் கலருக்குத் தகுந்தவாறு மாறிவிடும். டீ தூளை கலந்தால் டீ தூளின் நிறத்துக்கு தண்ணீர் மாறிவிடும். எனவே தண்ணீரில் எதைக் கலக்கிறோமோ அதற்குத் தகுந்த வகையில் தனது நிறத்தைப் பிரதிபலிக்கும். அதேபோன்று எதுவும் கலக்காத தண்ணீருக்கு எந்த நிறமும் கிடையாது. கவ்ளுல் கவ்ஸர் தண்ணீர் கண்ணாடி போன்று இருக்கும். தண்ணீருக்குக் கீழுள்ளவைகளெல்லாம் தெரியும் என நினைத்துவிடக் கூடாது.
ஹவ்ளுல் கவ்ஸரைப் பொருத்தவரை அதன் நிறம் வெண்மையாக இருக்கும். அதுவும் பாலை விடவும் வெண்மையாக வெள்ளை வெளேறென இருக்கும். இன்னும் சில அறிவிப்புகளில் பனிக் கட்டியை விடவும் வெண்மையானது என பதிவு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க: முஸ்லிம் 416)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(“அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6579)
இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையின் மூலம் பெறப்படுகிற நறுமணங்களிலேயே சிறந்தது கஸ்தூரி மணம்தான். கஸ்தூரியின் மணம் அதிகமான நாட்களுக்கு இருக்கும். உணவும் பானமும் உள்ளத்தை ஈர்க்க வேண்டுமால் நல்ல சுவை மட்டும் இருந்தால் போதாது. மாறாக அதன் நிறமும் விரும்பத் தக்கதாக இருக்க வேண்டும். அதன் மனமும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். இம்மூன்று அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்றால்தான் அதிகமாக ஈர்க்கும் என்பதால் ஹவ்லுல் கவ்ஸர் நீரில் இம்முன்று அம்சங்களையும் அல்லாஹ் அமைத்துள்ளான். கவ்ஸர் தடாகத்தின் நீளம், ஒரு மாத காலத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்வோமோ அவ்வளவு தொலைவு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தியில் ஒரு மாதப் பயணத் தொலைவு என்றுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு நாளின் பயணத் தொலைவைத் தெரிந்தாக வேண்டும். இன்றைய காலத்தில் ஒரு நாளின் பயணத் தொலைவு என்றால் பல மாதிரி இருக்கிறது. பறக்கிற விமானத்தின் மூலம் பல ஆயிரம் கி. மீட்டரைக் கடக்க முடியும். தரையில் செல்கிற வாகனமாக இருந்தால் ஆயிரம் கி.மீட்டராவது சென்று விடமுடியும். இதை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. அப்படியெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இதை எப்படி புரிந்து சொன்னார்களோ அந்த அளவின் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.
ஒரு நாள் பயணம் என்பது, ஒரு மனிதன் தன் கால்களால் நடக்கிற அளவு அல்லது ஒட்டகத்தில் ஏறி பயணம் செய்கிற அளவைத்தான் குறிக்கும். ஏனெனில் நபிகள் நாயகம் காலத்தில் சைக்கிளோ இருசக்கர நான்கு சக்கர வாகனங்களோ பறக்கும் வாகனங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பயணம் செல்வது என்றால், பயணத்தை ஆரம்பத்ததிலிருந்து நிற்காமல் போய்க் கொண்டே இருப்பது என நினைத்துவிடக் கூடாது.
பயணத்திலேயே அவனது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடுகிற நேரத்தில் சாப்பிட வேண்டும். குடிக்கிற நேரத்தில் குடிக்க வேண்டும். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும். இவைகளுக்கான நேரத்தை ஒரு நாள் நேரத்தில் கழித்துவிட்டு மீத நேரத்தில் ஒரு மனிதன் எவ்வளவு நேரம் பயணிப்பானோ அவ்வளவு தூரம்தான் ஒரு நாளின் தூரமாகும்.
அன்றைய காலத்தில் ஒரு மனிதனின் ஒரு நாள் பயணத் தொலைவு இன்றை நாளின் மைல் கணக்கின்படி 30 மைல் தூரமாகும். அதாவது ஒரு நாளில் 8 மணி நேரத்தை தூக்கத்திற்கு பயன்படுத்தலாம். இன்னும் 8 மணி நேரத்தை சாப்பாடு, நிழலாடுவது, குடிப்பு வகைக்காக, ஓய்வு போன்றவைகளுக்கு ஒதுக்கலாம். மீதமுள்ள 8 மணி நேரத்தை நடப்பதற்குப் பயன்படுத்துவதுதான் சராசரியான பயணநேரமாகும். இப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 30 மைல் தூரம் ஒரு மனிதனால் நடக்க முடியும் என்பதுதான் ஒரு நாளின் பயணத் தொலைவாகும். இன்றைக்கும் கூட ஒரு மனிதனால் முப்பது மைல் தூரம் நடக்க முடியும்.
ஆக ஒரு நாளின் பயணத் தொலைவு 30 மைல் என்றால், ஒரு மாதத்தின் பயணத் தொலைவு கணக்கின் படி 900 மைல்களாகும். அப்படியெனில் கவ்ளுல் கவ்ஸரின் நீளம், 900 மைல் கொண்டதாகும். நபிகள் நாயகம் அவர்கள் அந்த நீளத்தின் அளவைச் சொன்னதைப் போன்றுதான் அதன் அகலத்தின் அளவையும் குறிப்பிட்டார்கள்.
அதாவது நீளம் எவ்வளவு தூரமோ அதைப் போன்ற அளவு அகலமும் கொண்டதாகும். இவ்வளவு பரப்பளவு கொண்ட நீர் தடாகத்தில் பல கோடிக்கணக்கான, இலட்சக் கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் பருகுவதற்கு வாய்ப்புகள் இல்லை என எவராலும் சொல்லவே முடியாது.
அல்லாஹ் போதுமானவன்.
உரை : பி.ஜைனுல் ஆபிதீன் எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்
source: http://onlinepj.com/deen_kula_penmani/2013-dkp/
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
56 − = 54
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,523) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (485) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month December 2021 (2) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114) |
பருப்புகீரை (PURSLANE) சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் ஒமேகா 3 எனும் அமிலம் இருக்கிறது. மேலும், இதனை கோழிக் கீரை என்றும் சொல்லப்படும்.
100 கிராம் பருப்பு கீரையில் இருக்கும் சத்துக்கள்
ஆற்றல் – 27 கிலோ கலோரிகள்
ஈரப்பதம் – 90 கிராம்
புரதம் – 2 கிராம்
கொழுப்பு – 1 கிராம்
தாதுச்சத்து – 2 கிராம்
நார்ச்சத்து – 1 கிராம்
கார்போஹைட்ரேட் – 3 கிராம்
கால்சியம் – 111 மி.கி.
பாஸ்பரஸ் – 45 மி.கி.
இரும்புச்சத்து – 15 மி.கி.
பருப்புக் கீரையின் மருத்துவ குணங்கள்
Advertisement
ஒமேகா 3 என்ற அமிலம் இதயத்தை பாதுகாக்கிறது, மாரடைப்பை தடுக்கிறது
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது
வறண்ட தோல் மாறி பளபளப்பாகும்.
ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கும்.
நகம் உடைதல், முடி கொட்டுதல் தடுக்கப்படும்.
கை கால் எரிச்சல், கல்லீரல் கோளாறுகள், வயிற்றுப் போக்கு, கண் நோய், தாய்ப்பால் சுரக்காமை, உடல் வீக்கம், சிறு நீர் நன்கு பிரியாமை, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.
பருப்புகீரையில் ஒமேகா 3, வைட்டமின் பி, கரோட்டீனும் அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை இது பாதுகாக்கிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு வேளைகளாவது பருப்புக் கீரை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பருப்புக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் குடல் புழுக்கள் அழியும். மலச்சிக்கல் நீங்கும். குடல் சுத்தமாகும். ஒல்லியானவர்கள் சதை போடுவார்கள். அதிகம் சதை போடாமல் இருக்க சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால், இரண்டு பிடி கீரையை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்தினால் போதும், வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
தாய்ப்பால் நன்கு சுரக்க பெண்கள் தினம் ஒருவேளை இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் நன்கு சுரக்கும். மேலும், மாதவிடாய் பிரச்சனைகளும், பித்தக் கோளாறும், உடல் வீக்கமும் குணமாகும்.
கை, கால் எரிச்சல், புண்கள், கொப்புளங்கல் ஏற்பட்டால் அந்த இடத்தில் இக்கீரையை நன்கு அரைத்து (தண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்), தடவி வந்ததால் பூரண குணமாகும்.
5 கிராம் இக்கீரையின் விதைகளை எடுத்து அரைத்து ஒரு டம்ளர் இளநீரில் கரைத்து குடித்தால் வெள்ளை நோய் குணமாகும் மற்றும் சிறுநீர் செல்லும் போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.
வாரம் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சிறப்பாக இயங்க வைத்து ரத்ததை சுத்தப்படுத்துகிறது. மேலும், தோலிற்கு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.
இக்கீரையில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்றவைகள் ஏற்படாது.
பருப்புக்கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், தக்காளி, மிளகு, பூண்டு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் மெலியும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள். பித்தப் பையில் கல் உள்ளவர்கள் உண்ணக்கூடாது. கபதேகிகள் இக்கீரையை குறைந்த அளவில் உண்டால் நல்லது. அதுவும் மிளகு அதிக அளவு சேர்த்து உண்பது நல்லது. |
பொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்
Sign in
முகப்பு
செய்திகள்
உலக செய்திகள்
தமிழகச் செய்திகள்
முக்கிய செய்திகள்
தாயக செய்திகள்
பொழுதுபோக்கு
சினிமா
விளையாட்டு
தொடர்கள்
பாடல்கள்
நிகழ்வுகள்
வரலாறு
வீரமறவர்
தமிழீழம்
இலங்கை
தமிழும், தமிழரும்
ஆன்மீகம்
கட்டுரை
மரண அறிவித்தல்கள்
Sign in
Welcome!Log into your account
your username
your password
Forgot your password?
Password recovery
Recover your password
your email
Search
Sign in / Join
Sign in
Welcome! Log into your account
your username
your password
Forgot your password? Get help
Password recovery
Recover your password
your email
A password will be e-mailed to you.
முகப்பு
செய்திகள்
உலக செய்திகள்
தமிழகச் செய்திகள்
முக்கிய செய்திகள்
தாயக செய்திகள்
பொழுதுபோக்கு
சினிமா
விளையாட்டு
தொடர்கள்
பாடல்கள்
நிகழ்வுகள்
வரலாறு
வீரமறவர்
தமிழீழம்
இலங்கை
தமிழும், தமிழரும்
ஆன்மீகம்
கட்டுரை
மரண அறிவித்தல்கள்
Home செய்திகள் பொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன்
செய்திகள்
தாயக செய்திகள்
முக்கிய செய்திகள்
பொறுப்புக்கூறலை குழிதோண்டிபுதைக்க இடமளிக்கவே முடியாது: சம்பந்தன்
By
newseditor
-
January 24, 2021
58
0
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை அரசு, தனது பொறுப்புக்கூறலைச் செய்யாது அதனைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றது. அதற்காகத் தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றவதற்காக இவ்விதமான காலதாமதப்படும் செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இலங்கையில் கடந்த காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளன.
குறிப்பாக, 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்வேறு அமர்வுகளை நடத்தி 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை அவரிடத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்தத் தருணங்களிலும் அதன் பின்னருமான காலத்தில் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாசு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.
இந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்குப் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும்.
இவ்வாறான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் காலத்தைக் கடத்தலாம் என்று கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எண்ணுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசு கருதுகின்றது.
எம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசு புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்தி தப்பித்து விட முடியாது. பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை” – என்றார்.
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
Previous articleஇலங்கை மீது பொருளாதார தடை வேண்டும்: ஐ.நா ஆணையாளர்
Next articleஅவசரமாக ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள்!
RELATED ARTICLESMORE FROM AUTHOR
நாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்!
அனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!
தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்கிறார் ஞானசார தேரர்!
மரண அறிவித்தல்கள்
மக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்!
செய்திகள் April 1, 2021
மூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு!
செய்திகள் January 29, 2021
திரு. சொக்கநாதன் பிரபாகரன்
மரண அறிவித்தல்கள் November 17, 2020
பாடல்களின் நாயகன் SPB காலமானார்!
உலக செய்திகள் September 25, 2020
DR. சுப்பையா புவிராஜசிங்கம்
மரண அறிவித்தல்கள் April 24, 2020
முன்னைய செய்திகள்
January 2021
M
T
W
T
F
S
S
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
« Dec Feb »
உலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media
எம்மைப்பற்றி
தொடர்புகளுக்கு
முக்கிய செய்திகள்
அனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!
முக்கிய செய்திகள் November 2, 2021
தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்கிறார் ஞானசார தேரர்!
முக்கிய செய்திகள் November 2, 2021
ஆறு ஆண்டுகளின் பின் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும்...
செய்திகள் November 1, 2021
விளையாட்டு
இலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்!
உலக செய்திகள் March 20, 2021
ஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...
செய்திகள் May 23, 2020
எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:
செய்திகள் May 21, 2020
Blog
About
Contact
© 2018 - 2019 தமிழ் நாதம். All rights reserved.
error: Thamil Naatham Content is protected !!
'); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })(); |
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன். |
3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
அந்திமழை மின்
இதழ்
அந்திமழை - இதழ் : 110
ஜெய்பீம்- நிஜமும் நிழலும்
பாரதிமணி- வாழ்க்கைக்குப் பின்னும்- அந்திமழை இளங்கோவன்
ஆணியே பிடுங்கவேண்டாம்!- பாமரன்
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்
அனுப்புநர்:
இந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்
செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்
பெறுநர்:
காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது
செய்தியை உள்ளிடவும்
அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்!
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழாவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்
அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்!
Posted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17 , 2021 08:18:42 IST
Latest Novels at Attractive Price
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழாவை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் பொன்விழாவை தொடங்கி வைக்கின்றனர். நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிடுகின்றனர்.
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன. |
3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
அந்திமழை மின்
இதழ்
அந்திமழை - இதழ் : 110
ஜெய்பீம்- நிஜமும் நிழலும்
பாரதிமணி- வாழ்க்கைக்குப் பின்னும்- அந்திமழை இளங்கோவன்
ஆணியே பிடுங்கவேண்டாம்!- பாமரன்
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்
அனுப்புநர்:
இந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்
செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்
பெறுநர்:
காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது
செய்தியை உள்ளிடவும்
சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதின.…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்
சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
Posted : சனிக்கிழமை, அக்டோபர் 16 , 2021 12:36:52 IST
Latest Novels at Attractive Price
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சிஎஸ்கே அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என்று பதிவிட்டுள்ளார். |
3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
அந்திமழை மின்
இதழ்
அந்திமழை - இதழ் : 110
ஜெய்பீம்- நிஜமும் நிழலும்
பாரதிமணி- வாழ்க்கைக்குப் பின்னும்- அந்திமழை இளங்கோவன்
ஆணியே பிடுங்கவேண்டாம்!- பாமரன்
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்
அனுப்புநர்:
இந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்
செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்
பெறுநர்:
காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது
செய்தியை உள்ளிடவும்
தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? சசிகலா விளக்கம்
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமாவரம் தோட்டத்திற்கு…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்
தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? சசிகலா விளக்கம்
Posted : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17 , 2021 19:59:05 IST
Latest Novels at Attractive Price
அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமாவரம் தோட்டத்திற்கு சென்ற சசிகலா அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார்.
அதில், "நம் கட்சியினர் யாரும் பொதுக்கூட்டத்தில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம். கண்போன போக்கிலே கால் போகலாமா, கால்போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்ற எம் ஜி ஆர் பாடல் இப்போது யாருக்கு பொருந்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இக்கட்டான சூழலிலும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி விட்டுத்தான் சென்றேன். நமக்கு ஒற்றுமைதான் முக்கியம் நீர் அடித்து நீர் விலகாது கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் அதிமுக என்னும் ஆல மரத்திற்கு எம்ஜிஆர் விதையாக இருந்தார், ஜெயலலிதா மழை யாக இருந்தார். என்னால் இந்த இயக்கத்திற்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட கூடாது" என்று தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தேன் என்றார். |
டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! See instructions here
latest post
கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு
குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி
“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” - ப.சிதம்பரம் விமர்சனம்
3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
*ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டு தண்டனை * மாநில செய்திகள்மகிழ்ச்சியான செய்தி..! மோசமான நேரம் முடிந்து விட்டது- சொல்கிறார் தமிழ்நாடு வெதர் மேன் * தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா? * அனுமதிக்காக காத்திருக்கும் மாநிலங்கள்
முகப்பு
கதிரோட்டம்
அரசியல்
இலங்கை
இந்திய அரசியல்
உலக அரசியல்
கனடா அரசியல்
மலேசிய அரசியல்
சமூகம்
இலங்கை சமூகம்
கனடா சமூகம்
இந்திய சமூகம்
சினிமா
விளையாட்டு
கிரிக்கெட்
புட்பால்
அறிவிப்பு
விழா
மரண அறிவித்தல்
விளம்பரம் செய்ய
தொடர்பு
Posted on December 8, 2016 by netultim2
டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது
புதுடெல்லி,
ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என -மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட் டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பழைய 500 ரூபாய் நோட்டு களை அத்தியாவசிய சேவை களுக்கு மட்டும் பயன்படுத்த மத்திய அரசு விலக்கு அளித்தது. அதன்படி மருத் துவ மனைகள், பெட் ரோல் பங்குகள், விமான நிலை யங்கள், உள்ளிட்ட அத்தி யாவசிய சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டு கள் பெறப்பட்டன.
போன் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி செலுத்துபவர்களும் இந்த சலுகையால் சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டனர். 9,10,11,-ந் தேதிகளில் இந்த விலக்கு இருந்த நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த மேலும் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று நவம்பர் 24-ந் தேதி வரை பழைய ரூ-500 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கால நீட்டிப்பு செய்தது.
ஆனால் 24-ந் தேதிக்கு பிறகும் மக்களிடம் பண புழக்கத்தில் சகஜ நிலை ஏற்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பழைய ரூ-.500 நோட்டுக்களை டிசம்பர் 15-ந் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு பொது மக்கள் பயன்படுத்தலாம் என்று மேலும் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டு களை பயன்படுத்தும் கால அவகாசத்தில் மத்திய அரசு இன்று திடீரென மாற்றம் செய்தது
பழைய 500 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய சேவைகளுக்கு டிசம்பர் 15-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 2- ந்தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த 3-ம் தேதி (சனிக்கிழமை) முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் எங்குமே செல்லுபடி ஆகாது. டிசம்பர் 31-ந் தேதி வரை அவற்றை வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும்.
“டிசம்பர் 3-ந் தேதி முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் நிரப்ப இயலாது, விமான நிலையங்களில் டிக்கெட் பெற இயலாது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ரயில், மெட்ரோ ரயில்,பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் செல்லும் என்ற அறிவிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. |
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பிடென் இந்திய நேரப்படி ஜனவரி 20ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு பதவியேற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்பு உறுதிமொழியை வாசிக்க, கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மீது கை வைத்து உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் ஜோ பிடென்.
அவரோடு துணை அதிபராக இந்திய ஜமைக்கா வம்சாவழியினரான கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபரானதும் பேசிய பிடென், “ஒரு கலகக்கார கும்பல் மக்களின் விருப்பத்தை நசுக்கிவிட முடியும் என்று நினைத்த சில நாட்களுக்குப் பிறகு நாம் இங்கே நிற்கிறோம். அது நடக்காது, இன்று இல்லை, நாளை இல்லை, எப்போதும் நடக்காது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நமக்கு முன்னாள் ஏராளமாக இருக்கின்ற நிலையில், நேரத்தை வீணாக்கப் போவதில்லை. அமெரிக்க மக்களுக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகள், உடனடியாக நிவாரணங்களை அதிபர் என்ற முறையில் மேற்கொண்டு அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன்.
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்கும்” என்று கூறியுள்ளார் அதிபர் ஜோ பிடென்.
முன்னதாக புதிய அதிபர் பதவியேற்பதற்கு சில மணி நேரம் முன்புவரை வெள்ளை மாளிகையிலேயே இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ஃப்ளோரிடாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது இறுதிக் கருத்துகளில், டிரம்ப், “நான் அமெரிக்க மக்களை நேசிக்கிறேன். இதுவரை எனக்குக் கிடைத்தது மிகச் சிறந்த கௌரவம். நான் விடைபெற விரும்புகிறேன், ஆனால், அது நீண்ட காலத்துக்கு அல்ல. நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடெனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். |
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை
பரதநாட்டிய அரங்கேற்றம்: மேரி மார்கரெட் 1980 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
நூலகம்:769 (← இணைப்புக்கள்)
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
"https://noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/பரதநாட்டிய_அரங்கேற்றம்:_மேரி_மார்கரெட்_1980" இருந்து மீள்விக்கப்பட்டது |
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:
வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.
குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு
(நடப்பு | முந்திய) 21:41, 1 செப்டம்பர் 2021 Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) . . (826 எண்ணுன்மிகள்) (+23)
(நடப்பு | முந்திய) 23:04, 29 டிசம்பர் 2020 Janatha (பேச்சு | பங்களிப்புகள்) . . (803 எண்ணுன்மிகள்) (+803) . . ("{{சிறப்புமலர்| நூலக எண் =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
குறிக்கோள் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துவிடக்கூடாது. அது எல்லாருக்கும் புரியும்படி எளிதானதாக இருக்க வேண்டும். கதை சொல்லும் முறையில் வேண்டுமானால், நீங்கள் அறிவுஜீவி என்று நிரூக்கலாம்.
ஆனால் குறிக்கோளையே மிகவும் அறிவுஜீவித்தனமாக அமைத்தால், எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்று பார்வையாளர்கள் குழம்பி விடுவார்கள். குறிக்கோளில் கோட்டை விட்ட படத்திற்கு உதாரணம், ஆளவந்தான்.
மனநிலை தவறிய நந்து, தன் தம்பியை மணக்கப் போகும் ஹீரோயினை தன் சித்தியின் மறுபிறவி(? அல்லது ஆவி அல்லது ஏதோவொன்று!) என்று கருதிக்கொள்கிறான். அதனால் ஹீரோயினைக் கொன்று, தம்பியைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்கிறான். குறிக்கோளே ஒரு கற்பனையின் அடிப்படையில் அமைவது முதல் பிரச்சினை. ‘நல்ல டாக்டர காட்டுங்கப்பா’ என்று தான் நமக்குத் தோன்றியதே ஒழிய, நந்து ஜெயிக்க வேண்டும் என்று தோன்றவில்லை, தோன்றினால் நமக்கும் ஒரு டாக்டரைத் தேட வேண்டியிருக்கும்!
இப்போது நாம் முன்பு படித்த ஒரு பாயிண்ட் ஞாபகம் வருகிறதா? இந்த கதையின் நாயகன் யார்? ஹீரோ தன் மனைவியை ஒரு சைக்கோவிடம் இருந்து காப்பாற்றப் போராடுகிறான் என்பதே தம்பி கமலின் பார்வையில் வரும் ஒன்லைன். அதனுடன் நாம் ஐக்கியமாக முடியும்.
ஆனால் ஒரு கற்பனைக் காரணத்துக்காக, நியாயமற்ற குறிக்கோளுடன் அலையும் ஒருவனுடன் நாம் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதிலேயே நாம் கதையில் ஒன்ற முடியாமல் விலகிவிட்டோம். அதையும் சகித்துக்கொண்டு பார்த்தால், கிளைமாக்ஸ் இப்படி வருகிறது:
அவ்வப்போது வரும் அம்மா(கற்பனை உருவம்), திடீரென வந்து ‘டாய், அவ உன் சித்தி இல்லைடா’ என்று சொல்கிறது. நம்மைப் போலவே கமலும் பேஸ்த் அடித்து ‘ஏம்மா, முதல்லயே சொல்லலை? சொல்லியிருந்தா இந்தப் படத்தையே எடுத்திருக்க மாட்டேனே? குறிக்கோள்லயே கை வைச்சுட்டயே?’ என்று கேட்கிறார். அதற்கு மம்மியின் பதில் அற்புதமானது : ‘நீ கேட்கலியே’. (சூப்பரப்பு!)
எந்த குறிக்கோளை மையப்படுத்தி இரண்டரை மணிநேரம் படம் ஓடியதோ, அதையே காலி செய்துவிட்டது அந்த பதில். படம் பார்த்தவர்கள், காதில் ரத்தம் வடிய வெளியே ஓடிவந்தார்கள்.
எல்லா சூப்பர்ஹிட் படங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, சிம்பிளான குறிக்கோள் தான். தமிழில் வந்த சிறந்த ஆக்சன் படங்கள் என்ற பட்டியலில் இயக்குநர் தரணியின் தில், தூள், கில்லி ஆகிய மூன்றுமே இடம்பெறும். அந்த மூன்று படங்களிலும் குறிக்கோள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
தில் படத்தின் ஹீரோவின் லட்சியம், போலீஸ் ஆவது. அவன் வாழ்வதே அதற்காகத் தான். காதலா, லட்சியமா என்று வரும்போது, லட்சியமே பெரிது என்று முடிவெடுக்கிறான். அந்த லட்சியத்துக்கு வில்லனால் இடையூறு வரும்போது, படம் பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அது ஒரு எளிமையான குறிக்கோள் தான் இல்லையா?
தூள் படத்தில் ஊரை நாசமாக்கும் கெமிக்கல் ஃபேக்டரியை மூடி, ஊரைக் காப்பாற்றுவது தான் ஹீரோவின் வேலை. படிக்காத கிராமத்து ஆளாக ஹீரோ கேரக்டரைப் படைத்தது சுவாரஸ்யத்தைக் கூட்டும் முதல் முரண்பாடு. அவன் அரசு இயந்திரத்தை எதிர்த்து, தனது குறிக்கோளை எப்படி அடைகிறான் என்று சுவாரஸ்யமாகச் சொன்னது படம். மிகவும் சிம்பிளான, எல்லோருக்கும் புரியும் குறிக்கோள்.
கில்லி படத்தில் ஹீரோயினை காப்பாற்றும் வழக்கமான குறிக்கோள் தான். இதிலும் வேலைவெட்டியற்ற ஒரு இளைஞன், எப்படி அதிகாரவர்க்கத்தை வெல்கிறான் என்று சொல்லி இருப்பார்கள். ஆந்திரா மசாலா என்றாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எந்திரன் படத்தில் சைண்டிஸ்ட் ரஜினி, ரோபோ ரஜினியை உருவாக்குகிறார். அது வில்லன் ரோபோவாக ஆகிவிடுகிறது. அதை சைண்டிஸ்ட் அழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஆனால் அங்கே ரஜினியின் அத்தியாவசியத் தேவை, ஐஸ்வர்யா ராயை ரோபோவிடம் இருந்து மீட்டெடுப்பது தான். அந்த தேவை தான், படத்துடம் நம்மை ஒன்ற வைத்தது. இல்லையென்றால், சைண்டிஸ்ட்டுக்கும் நமக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?
எந்திரனில் அந்த அடிப்படைத் தேவை இல்லையென்றால் ‘இந்த ஆளை யாரு ரோபோல்லாம் பண்ணச் சொன்னா? வேண்டாத வேலையைப் பண்ணிட்டு குத்துதே, குடையுதேன்னு அழுதா எப்படிய்யா?’ என்று தான் கேட்டிருப்போம். ஆனால் காதலியைக் காப்பாற்றுதல் எனும் தேவை வந்தபிறகு, ‘தலைவா..ரொம்ப வருசமாப் போராடி ஐஸ் கிடைச்சிருக்கு..விட்றாதே’ என்று சயிண்டிஸ்ட்டுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்தோம்.
தமிழில் வந்த, வருகின்ற படங்களைக் கவனியுங்கள். குறிக்கோள் என்ற அம்சம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். குறிக்கோள் புரியும்படியும் லாஜிக்கலாகவும் அதே நேரத்தில் சிம்பிளாகவும் இருக்கிறதா என்று பாருங்கள்.
இப்போது உங்கள் ஒன் லைனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் குறிக்கோள், மனிதனின் அடிப்படைத் தேவையா என்று பாருங்கள். இல்லையென்றால், அப்படி ஒரு தேவையை கூடுதலாக உருவாக்குங்கள்.
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)"
Posted by செங்கோவி at 8:34 PM 15 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: திரைக்கதை
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
15 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Thursday, June 26, 2014
ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்
டிஸ்கி: இந்த வாரம் ரம்ஜான் ஆரம்பிப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு இங்கே புதுப்படம் ரிலீஸ் ஆகாது; தியேட்டர்களுக்கு லீவ். எனவே புதுப்பட விமர்சனம் படித்துவிட்டு, திருட்டு சிடியில் பார்க்கும் அன்பர்கள் பொறுத்தருளவும்!
ஹாலிவுட்டில் படம் செய்ய ஹிட்ச்காக்குடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஹாலிவுட் போகும்முன் நச்சென்று ஒரு படத்தை பிரிட்டிஷ் சினிமாவுக்குக் கொடுப்போம் என்று முடிவு செய்தார் ஹிட்ச்காக். கதை மேல் இருந்த நம்பிக்கையால் அறிமுக ஹீரோ, பிரபலமில்லாத ஹீரோயினுடன் களமிறங்கி எடுத்த படம் The Lady Vanishes. அதுவரை பிரிட்டிஷ் சினிமாவின் வசூல் ரிகார்டை முறியடித்தது இந்தப் படம்.
தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. காணாமல் போன ஒரு லேடியைத் தேடுவது தான் படத்தின் ஒன்லைன். பனிச்சரிவால் ஒரு ரயில் கிளம்புவது தடைபடுகிறது. அந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டிய ஹீரோயின் (Margaret Lockwood) மற்றும் பலரும் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். ஒரு வயதான லேடி மிஸ்.ஃப்ராய்(Dame May Whitty) மற்றும் ஹீரோ (Michael Redgrave)வை ஹீரோயின் அங்கே சந்திக்கிறார். வழக்கம்போல் ஹீரோவுடன் மோதல். அந்த ட்ரெய்னில் பயணம் செய்யும் இரு காமெடியன்களும் அங்கே தங்குகிறார்கள். அந்த இரவில் ஒரு கிடாரிஸ்ட் அங்கே கொலைசெய்யப்படுகிறார். அது யார் கவனத்திற்கும் வருவதில்லை.
அடுத்த நாள் ட்ரெய்ன் கிளம்பும்போது, மிஸ்.ஃப்ராய் தலையைக் குறிவைத்து மேலிருந்து போடப்பட்ட பூந்தொட்டி ஹீரோயின் தலைமேல் விழுகிறது. மிஸ்.ஃப்ராய் உதவியுடன், அந்த வலியோடு ட்ரெய்னில் ஏறும் ஹீரோயின் மயக்கமாகிறாள். விழித்துப் பார்த்தால் லேடியைக் காணவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் எல்லோரும் ‘நீ மட்டும் தான் வந்தாய்..லேடி யாரும் வரவில்லை’என்று சாதிக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் வந்த குழப்பமோ என்று ஹீரோயினே நம்பும் அளவிற்கு எல்லாரும் நாடகமாடுகிறார்கள். அதே ட்ரெய்னில் பயணிக்கும் ஹீரோ முதலில் ஹீரோயினை நம்ப மறுத்தாலும், பின்னர் நம்புகிறார். லேடிக்கு என்ன ஆனது என்பதை ஹீரோவும் ஹீரோயினும் இணைந்து கண்டுபிடிப்பதே மீதிப் படம்.
Ethel Lina White என்பவர் எழுதிய The Wheel Spins எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு Sidney Gilliat மற்றும் Frank Launder ஆகியோரால் எழுதப்பட்டது இந்தப் படத்தின் திரைக்கதை. ஹிட்ச்காக் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்பந்தம் ஆகும்போதே திரைக்கதை தயாராக இருந்தது. ஆனாலும் ஆரம்ப ஹோட்டல் சீகுவென்ஸையும், இறுதி கிளைமாக்ஸ் சீனையும் மாற்றி எழுதினார் ஹிட்ச்காக். நாவலில் அந்த லேடி ஒரு அப்பாவி என்று மட்டுமே வரும்; படத்தில் லேடி ஒரு நல்ல கேடியாக வருவார். அதே போன்றே ஹீரோயினுக்கு தலையில் அடிபடுவதும் நாவலில் கிடையாது; படத்தின் கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்தது அந்த சீன்.
இரண்டாம் உலகப்போருக்கான முஸ்தீபுகள் தொடங்கிய நேரம் அது. பிரிட்டிஷ் சென்சார், ஜெர்மனி பற்றி சினிமாக்களில் எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தார்கள். எனவே Secret Agent படம் போன்று வெளிப்படையாக ஜெர்மனியை வில்லன் நாடாக சித்தரிக்காமல் ‘ஒரு நாடு’ என்று பொத்தாம்பொதுவாக படம்பிடித்தார்கள்.
படத்தின் முதல் அரைமணி நேரம், அந்த ட்ரெய்னில் பயணிக்கப்போகும் பயணிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஹிட்ச்காக். கிரிக்கெட் பைத்தியங்களான இரு காமெடியன்களும் (Naunton Wayne & Basil Radford-பின்னாளில் பிரபலமான காமெடி ஜோடியாக ஆனார்கள்) தன் ரகசியக் காதலியுடன் பயணிக்கும் ஒரு பாரிஸ்டரும் எதிலும் இன்வால்வ் ஆக விரும்புவதில்லை. எனவே லேடி ஹீரோயினுடன் வந்தார் என்று தெரிந்தும் அவர்கள் பின்னர் வாய் திறப்பதில்லை. எதிலும் இன்வால்வ் ஆகும் ஜாலி கேரக்டராக அறிமுகம் ஆகும் ஹீரோ தான், ரயிலில் ஹீரோயினுக்கு உதவ முன்வருகிறார். முதல் அரைமணி நேரம் சீரியஸ்னெஸ் இல்லாமல், ஜாலியான பொழுதுபோக்குப் படமாகவே நகர்கிறது. எந்த கேரக்டர் என்ன மாதிரி ஆட்கள் என்று ஜாலியாகவே நமக்கு உணர்த்திவிட்டு, ரயிலில் அவர்களுடன் நம்மையும் ஏற்றுகிறார் ஹிட்ச்காக்.
அங்கே ஆரம்பிக்கிறது சஸ்பென்ஸ் விளையாட்டு. ஹீரோயினுடன் லேடி வந்ததை நாம் அறிவோம். எனவே ஹீரோயின் போன்றே நாமும் ‘எங்கே அந்த லேடியை’ என்று தேட வைத்துவிடுகிறார் ஹிட்ச்காக். ட்ரெய்னில் ஒரு மேஜிக் குரூப்பும் பயணம் செய்வது, லேடி மறைந்ததை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. வில்லனிடமே ஹீரோவும் ஹீரோயினும் உதவி கேட்டு சிக்கலில் மாட்டுவதும் சஸ்பென்ஸைக் கூட்டுகிறது. படம் முழுக்க வரும் நக்கலான, ஜாலியான வசனங்கள் தான் படத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருக்க வேண்டும். ‘நான் தான் மினிஸ்டருக்கு ப்ரைன் சர்ஜரி செய்த டாக்டர்’ என்று டாக்டர் சொல்ல, அதற்கு ஹீரோ ‘ஓ..Did you find anything?'என்று கேட்பது நக்கலோ நக்கல்.
சஸ்பென்ஸை எப்படி படிப்படியாக கூட்டிக்கொண்டு செல்வது என்பதற்குச் சிறந்த உதாரணம், இந்தப் படம். லேடி அறிமுகம் ஆகிறார் - மறைகிறார்-ஹீரோயினை யாரும் நம்பவில்லை-ஹீரோயின் தான் சொன்னது உண்மை என்று நிரூபிக்கிறார்-லேடி திரும்புகிறார்-ஆனால் அதே லேடி இல்லை-இப்போதும் ஹீரோயினை யாரும் நம்புவதில்லை-ஹீரோ நம்புகிறார்-தேடுகிறார்கள்-வில்லனிடமே உதவி கேட்கிறார்கள் என ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் கதையில் ஒரு திருப்பம் வந்துகொண்டே இருக்கிறது. எனவே தான் ரயிலைவிட படம் வேகமாகச் செல்கிறது.
எடிட்டிங் டெக்னாலஜியான Dissolve-ஐ கதைக்குப் பொருத்தமாக இதில் பயன்படுத்தியிருப்பார்கள். ஹீரோயின் தலையில் அடிபட்ட மயக்கத்தையும் குழப்பத்தையும் விளக்க, Dissolve பொருத்தமாக இருக்கும். மதுக்கோப்பையில் வில்லன் எதையோ கலந்து தர, அதைக் குடிக்காமல் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக்கொள்ளும் காட்சியை முடிந்தவரை விஷுவலாகவே கொண்டு சென்றிருப்பார் ஹிட்ச்காக். அந்த கோப்பைகளும் கேரக்டர்கள் போல் நடித்திருக்கும்.
பின்னாளில் ஹிட்ச்காக்கிற்கு பெரும் புகழ் வாங்கித்தந்த இரு படங்களின் விதை, அவருக்கே தெரியாமல் இங்கே போடப்பட்டிருக்கும். மந்திரவாதியை அடித்து, பாக்ஸில் போட்டு மூடிவிட்டு ஹீரோவும் ஹீரோயினும் அதன்மேல் அமர்ந்து பேசும் காட்சி வரும். அது பின்னர் Rope படத்தின் மெயின் தீம் ஆக ஆனது. அதே சீனில் பறவைகள் ஹீரோயினை அட்டாக் செய்வதாக வரும். அது ஹிட்ச்காக்கின் இன்னொரு மாஸ்டர்பீஸான The Birds படத்தின் தீம்.
படத்தின் ஹீரோ மைக்கேல் ஒரு நாடக நடிகராக இருந்தவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்க மிகவும் தயங்கியவர். ஆனாலும் ஹிட்ச்க்காக் கைபட்டபின், பிரபலமான ஹீரோவாக ஆனார். அதே போன்றே அதுவரை சுமாரான படங்களிலேயே நடித்துவந்த ஹீரோயின் மார்கரெட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது இந்தப் படம்.
வழக்கம்போல் படத்தின் அடிநாதமான சீக்ரெட்டை Maccuffin பாணியில் ஒன்றுமில்லாததாக ஆக்கியிருப்பார் ஹிட்ச்காக். நாவலை விஷூவலாக்க என்ன செய்ய வேண்டும், திரைக்கதையை விறுவிறுப்பு குறையாமல் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும், ஒவ்வொரு சீனிலும் எப்படி சுவாரஸ்யத்தைக் கூட்டுவது என்பதை இதுவரை எடுத்த படங்களின் மூலம் கற்றுத் தேர்ந்திருந்தார் ஹிட்ச்காக்.
எனவே பிரபல இயக்குநர் எனும் மரியாதையுடன் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் விதி அவரை மீண்டும் பிரிட்டிஷ் சினிமாவிற்கே கூட்டி வந்தது. அதுபற்றி அடுத்த படம் பற்றிய பதிவில் பார்ப்போம்.
Torrent Link: http://kickass.to/the-lady-vanishes-1938-bluray-720p-h264-t6593519.html
Youtube Link: http://www.youtube.com/watch?v=w1J0pUURCj8
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்"
Posted by செங்கோவி at 10:24 PM 12 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: ஹாலிவுட், ஹிட்ச்காக்
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
12 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Tuesday, June 24, 2014
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)
10.குறிக்கோளும் அடிப்படைத் தேவையும்
ஒரு படம் எதைப்பற்றியது என்று தீர்மானிப்பது இந்த குறிக்கோள் தான். ஹீரோவை பார்வையாளர்களுடன் ஒருங்கிணைப்பதும் குறிக்கோள் தான். ஏதோ ஒரு நோக்கம், அதை நிறைவேற்றுவதற்காக ஹீரோ செய்யும் செயல்கள், அதற்கு எழும் தடைகள் என்று திரைக்கதையை நீங்கள் பின்னுவதற்கு முன், சில அடிப்படை விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஹீரோவின் குறிக்கோள் என்பது ஒரு எளிய சாமானியனும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். ’செவ்வாய் கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே காமா கதிர்களும் பீட்டா கதிர்களும் பாய்கின்றன. விண்வெளி வீரனான ஹீரோ, காமாக்கதிர்களை ஒழித்து..........’ என்ற ரேஞ்சில் ஒரு குறிக்கோளை உருவாக்கினால், சாமானிய ரசிகன் மண்டை காய்ந்துபோவான். நானே கூட’ காமா காமான்னு சொன்னாங்கய்யா..ஆனா ஒரு சீன்கூட இல்லை. என்ன படம் எடுக்காங்க’ என்று விமர்சனம் எழுதலாம். எனவே எளிமையான குறிக்கோளை உருவாக்குங்கள்.
அதற்காக ஹீரோ காலேஜில் படிக்கிறான். அரியர் இல்லாமல் டிகிரி முடிப்பதே அவன் குறிக்கோள் என்று வைத்தால், சப்பையாக இருக்கும். குறிக்கோள் என்பது புரிந்துகொள்ள எளிமையானதாக, அடைவதற்கு கஷ்டமானதாக இருக்க வேண்டும். ’ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுகிறான். (சரி, அதுக்கென்ன?) ஆனால் ஹீரோயினுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. (அய்யோ..அப்புறம்)’ எனும் அஜித்தின் காதல் மன்னன் படத்தின் ஒன் லைனை இதற்கு உதாரணாமக் கூறலாம். ஹீரோன்னா ஹீரோயினை லவ் பண்ணத்தான் செய்வான் என்று எளிதாக புரிந்துகொள்ளவும் முடிகிறது. அதே நேரத்தில் அங்கே ஒரு பிரச்சினையும் பூதாகரமாக நிற்கிறது.
அரதப் பழசான குறிக்கோளாகக்கூட இருக்கலாம். ஆனால் அதைச் சுற்றி நீங்கள் எழுப்பும் தடைகளும், முரண்பாடுகளும் புதியதாக இருக்க வேண்டும்.
குறிக்கோளை நிறைவேற்றப் போராடும் ஹீரோவுக்கு அந்த குறிக்கோள் அத்தியாவசியமான தேவையாக இருக்க வேண்டும். இதை விரிவாகப் பார்ப்போம். மனிதனின் அடிப்படைத் தேவையாக உணவு, உடை, உறைவிடம் சொல்லப்படுகிறது. திரைக்கதை உலகிலும் சில அடிப்படைத் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை :
காதல்
செக்ஸ்
பாசம்
உயிர்பயம்/ தப்பிப்பிழைத்தல்
பணம்
அன்பிற்கு உரியவர்களை/நாட்டை காப்பாற்றுதல்
பழிக்குப் பழி
கௌரவம்
இந்த தேவைகள் அனைத்துமே பார்வையாளனின் உனர்ச்சிகளுடன் எளிதில் ஒன்று கலக்கக்கூடியவை. எப்படி ஹீரோவுடன் பார்வையாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியமோ, அதே போன்றே குறிக்கோளுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு இந்த அடிப்படைத் தேவைகள் உதவும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பில்லாவின் கூட்டத்தை மொத்தமாகப் பிடிப்பதே பாலாஜி(பிரபு)வின் குறிக்கோள். அதற்கு ரஜினி(அஜித்) உதவுகிறார். இதோடு மட்டும் விட்டால், பெரிதாக ஈர்ப்பு ரசிகர்களுக்கு வராது. எனவே பாலாஜி(பிரபு) கேரக்டர் சாகடிக்கப்படுகிறது. இப்போது பில்லாவாக நடிக்கப்போனவர், தான் பில்லா அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதை நம்பாத போலீஸ் துரத்துகிறது. நம்பிய பில்லாவின் ஆட்களும் துரத்துகிறார்கள். ரன் லோலா ரன்!...உயிர்பயம், தப்பிப்பிழைக்க வேண்டிய தேவை அங்கே உருவாக்கப்படுகிறது. வெறுமனே குறிக்கோளுடன் ஹீரோ போவதற்கும், அடிப்படைத் தேவையுடன் குறிக்கோளை நோக்கிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா?
இப்போது இரண்டாம் உலகம். அங்கே ஹீரோ ஆர்யாவுக்கு அடிப்படைத் தேவை என்று ஏதும் இல்லை. ஹீரோயின் அனுஷ்கா செத்தாயிற்று. இனி உயிர்பயமோ, காதலோ. யாரையும் காப்பாற்றும் அவசியமோ எதுவும் இல்லை. உயிருள்ள பிணம் தான் அந்த ஹீரோ கேரக்டர். காதல் பூ பூக்க வைக்க, ஆர்யா முயற்சிக்க காரணமே அங்கே இல்லை. அது கடவுளின் பிரச்சினை. ஆர்யாவின் பிரச்சினை இல்லை. எனவே அது நம் பிரச்சினையும் இல்லை. யார் வீட்டு இழவோ தான்.
காதல் பூ பூக்க வைத்தால், இறந்து போன அனுஷ்காவை மீட்டுத் தருவேன் என்று கடவுள் சொல்லியிருந்தால், ஆர்யாவிற்கு ஒரு குறிக்கோள் கிடைத்திருக்கும். இரண்டாம்பாதி படத்திற்கும் உயிர் வந்திருக்கும்!
ஆகவே ஒரு குறிக்கோளை உருவாக்கும்போது, அதில் ஹீரோ வெற்றியடையாவிட்டால் ஹீரோவின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று ரிஸ்க்கிற்கு ஆளாகும்படி திரைக்கதை அமைக்க வேண்டியது அவசியம். ’வந்தால் மலை..’ ரேஞ்சில் ஒரு குறிக்கோளை ஹீரோவுக்கு கொடுத்தீர்கள் என்றால், பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது. செய் அல்லது செத்துமடி போன்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயம். அது தான் ஹீரோவுக்குத் தேவையான மோட்டிவேசனைக் கொடுக்கும்.
அடுத்த வீட்டில் அண்டா திருடுவது கூட குறிக்கோள் தான். ஆனால் அடுத்த வீட்டுக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? அடுத்த வீட்டு அண்டா தான் வேணுமா? கிடைக்கலேன்னா என்ன ஆகும்? என்ன அடிப்படைத் தேவையை அங்கே உண்டாக்கலாம் என்று யோசித்தால், ஒருவேளை ஒரு பயங்கரமான கதை உங்களுக்குக் கிடைத்துவிடலாம்!
அடுத்த வாரம் சில வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்கள் எப்படி குறிக்கோளை அடிப்படைத் தேவையுடன் அமைத்து ஜெயித்தார்கள் என்று மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம். அதன்பின் ஒன்லைனின் மூன்றாவது அங்கமான வில்லனை நோக்கி நகர்வோம்.
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)"
Posted by செங்கோவி at 8:46 PM 20 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: திரைக்கதை
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
20 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Sunday, June 22, 2014
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)
9.கதாநாயகனை ஆக்டிவேட் செய்யுங்கள்
ஹீரோவைப் பற்றிய முந்தைய பதிவுகளில் சொன்னது போல், உங்கள் கதையின் நாயகன் யார் என்று தெளிவாகிவிட்டீர்களா? அடுத்து ஹீரோவின் குணத்திலும் சூழ்நிலையிலும் முரண்பாடுகளை உருவாக்க முடிந்ததா? நல்லது. முதல்பகுதியைக் காப்பாற்ற அவை போதும். இப்போது ஹீரோ கேரக்டர் இறுதிவரை எப்படி செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்.
நாம் ஏற்கனவே பார்த்தபடி, பார்வையாளர்கள் ஹீரோவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதிவரை அந்த பிணைப்பை முறிக்காமல் கொண்டு செல்வது, நம் முன் இருக்கும் அடுத்த சவால். அதற்கு ஹீரோ எப்போதும் ஆக்டிவ் வாய்ஸிலேயே இருக்க வேண்டும். அதென்ன ஆக்டிவ் வாய்ஸ் என்கிறீர்களா? சரி, தமிழ் இலக்கணப் பாடத்தை ஒருமுறை மீண்டும் பார்த்துவிடுவோமா?
ஒரு செயலானது இருவகைகளில் செய்யப்படலாம். ஒன்று செய்வினை, மற்றொன்று செயப்பாட்டு வினை. திருவள்ளுவரை விட்டால் இதை விளக்க நல்ல ஆள் கிடையாது. எனவே…..
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் -- இது செய்வினை (ஆக்டிவ் வாய்ஸ்). இங்கே திருவள்ளுவரே ஹீரோ (Noun-ஐ ஹீரோன்னு தமிழ்ல சொன்னா தப்பா?). அவரே செயலையும் செய்கிறார்.
திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது - இது செயப்பாட்டு வினை (பேசிவ் வாய்ஸ்) - இங்கே திருக்குறள் தான் ஹீரோ. ஆனால் செயலைச் செய்தது திருவள்ளுவர் திருக்குறள்(ஹீரோ) மீது வள்ளுவர் ஆதிக்கம் செலுத்துகிறார். திருக்குறள் டம்மியாக ஆகிவிடுகிறது.
ஒரு படத்தில் ஹீரோ தான் எல்லாச் செயல்களையும் செய்பவராக, முக்கிய முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். கதைப்படி அது முடியாதென்றால், அந்த முக்கிய முடிவை முழுக்க ஏற்றுக்கொண்டு செயல்படுத்துபவராக இருக்க வேண்டும். இதற்கு இரு உதாரணங்களைப் பார்ப்போம்.
பில்லாவில் பாலாஜி(பிரபு) தான் முக்கியமான முடிவை எடுக்கிறார். அதற்கு ஆரம்பத்தில் தயங்கினாலும், துணிந்து இறங்கி செயல்படுத்துவது ரஜினி(அஜித்) தான். அதனால் தான் அந்த படம் இன்றளவும் வெற்றிகரமான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. அதே போன்று இரண்டாம் உலகத்தைப் பார்ப்போம்.
இரண்டாம் உலகம் படத்தின் கதை என்ன? இரண்டாவது உலகத்தில் காதல் இல்லை. பெண்கள் எல்லாரும் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதைத் தடுக்க அங்கே காதல் மலர வேண்டும் என்று முடிவு செய்கிறார் இரண்டாவது உலக கடவுள். அதற்கு பூமியில் இருந்து காதல் எக்ஸ்பெர்ட்(?) ஆர்யாவைக் கொண்டு வருகிறார். காதல் மலர்கிறது.
அதன்பிறகு ஆர்யா ஆக்டிவாக ஒன்றுமே செய்வதில்லை. கடவுளின் விருப்பப்படியே கடத்தல் நடக்கிறது. கடவுள் எதிர்பார்த்தபடியே ஆர்யா-2 காப்பாற்ற வருகிறார். அந்த ஆர்யா-2வைத் தேடி அனுஷ்கா-2ம் வருகிறார். துணைக்கு பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆர்யா-1. அனுஷ்காவிற்கு சாப்பாடு கொண்டுவருவது, பனியில் பயணப்படும் அனுஷ்காவிற்கு பேச்சுத்துணைக்கு வருவது ஆகிய இரண்டு வேலைகளை மட்டுமே ஆர்யா செய்கிறார்.
பில்லா பாலாஜி கேரக்டரும், இரண்டாம் உலகம் கடவுள் கேரக்டரும் ஒன்று தான். இருவருமே ஹீரோவின் உதவியை நாடுகிறார்கள். பில்லாவில் என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்வது என்று எல்லாமே பில்லாவால் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகம் ஆர்யாவிற்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
படம் பார்த்த எல்லாரும் அதையே சொன்னார்கள் ‘என்னென்னவோ நடக்குய்யா..ஆனா என்ன நடக்குன்னு தான் தெரியலை’. நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஹீரோவுடனே பார்வையாளர்கள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். முதல்பாதியின் ஆர்யாவுடன் ஐக்கியமான பார்வையாளர்கள், இரண்டாம்பாதியில் தேமேயென்று ஆர்யா அலைவதால் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள்.
அதனால் தான் திரைக்கதையின் விதிகளில் ஒன்று சொல்கிறது, ஹீரோ செய்வினை(ஆக்டிவ் வாய்ஸ்) யிலேயே இருக்க வேண்டும் என்று. இல்லையென்றால், படத்திற்கு செய்வினை வைத்தது போல் ஆகிவிடும். ஒரு காரியத்திற்கான காரணகர்த்தா யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த காரணத்தைப் புரிந்து, செயல்படுத்துபவனாக ஹீரோ இருக்க வேண்டியது அவசியம்.
இப்போது உங்கள் ஒன் லைனை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஹீரோ ஆக்டிவ்வாக இருப்பாரா? இல்லையென்றால் பில்லா ஸ்டைலில் ஹீரோவை ஆக்டிவ் ஆக்குங்கள். 60 கோடி ஸ்வாஹா ஆகாமல் தப்பிக்க, இந்த ஒரு திரைக்கதை விதி உதவும்!
சரி, இப்போது திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது தோன்றும் ஒரு குழப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கதையை எந்த ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது? அப்படி குறிப்பிட்ட ஹீரோவை மனதில் வைத்து எழுதுவது சரியா? என்பது போன்ற குழப்பங்கள் ஆரம்பத்தில் தோன்றும்.
நடிகரைத் தேர்ந்தெடுப்பது இயக்குநரின் வேலை தான். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர் என்று தனியாக ஆள் இல்லாமல் இயக்குநரே எல்லாவற்றையும் செய்வதால், இந்தக் குழப்பம் நமக்கு வருகிறது. எனவே குறிப்பிட்ட நடிகரை மட்டுமே மனதில் வைத்து எழுதாமல் இருப்பது நல்லது. ஆனாலும் முதல் முயற்சி செய்பவர்களுக்கு, கேரக்டரை மட்டுமே வைத்து எழுதுவது கஷ்டமாக இருக்கலாம், குறிப்பாக இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு.
எனவே அவர்கள் டாப் ஹீரோக்களை மனதில் வைத்து எழுதலாம். ஆக்சன் மூவி என்றால் எமது சாய்ஸ், ரஜினி தான். அவரது இமேஜ் அதிக உத்வேகத்தைக் கொடுக்கும். நடிப்புத் திறமையைக் கொட்ட வேண்டிய கேரக்டர் என்றால் கமல் தான். இன்றைய ஹீரோக்கள் எல்லாருமே இவர்களை காப்பி அடிப்பவர்கள். எனவே அந்த ஐகான்களை மனதில் வைத்தால், பின்னாடி கிடைக்கிற நடிகருக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு ரஜினியைவிட அஜித்/விஜய்யோ, கமலை விட சூர்யா/விக்ரமோ சரியாகத் தோன்றினால், எமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனாலும் முதலிலேயே சொன்னபடி, நடிகர்களை நினைக்காமல், கேரக்டர்களை மட்டுமே வைத்து எழுதப் பாருங்கள்.
திரைக்கதை எழுதும்போது வரும் இன்னொரு பிரச்சினை, ஹீரோவையும் உங்களைப் போன்றே(அவ்வ்!) படைப்பது. நீங்கள் திருமணம் ஆனவரென்றால், ஹீரோவையும் அப்படி படைக்கவே ஆர்வம் எழும். நீங்கள் ஒரு மூடி டைப் என்றால், ஹீரோவையும் அப்படியே படைக்க எண்ணுவீர்கள். செல்வராகவன் போன்ற சில இயக்குநர்கள், அப்படிச் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருவது இளைஞர் கூட்டம் தான். அவர்கள் வெளியே போய் நன்றாக இருக்கிறது என்று சொன்னபிறகே, மற்ற கூட்டம் வரும்.
எனவே ஹீரோ-ஹீரோயின் அவர்களுக்கு ஏற்றவர்களாக இருப்பது, கமர்சியல் சினிமாவிற்கு அவசியம். அதனால்தான் 40 வயதுக்கு மேல் ஆனாலும், நம் ஹீரோக்கள் 25 வயது வாலிபனாகவே வருகிறார்கள். இன்றைக்கு அஜித் அதை உடைக்க முயற்சிக்கிறார். முதல் படத்திலேயே உங்களுக்கு அஜித் கால்ஷீட் கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட கதையை நீங்கள் முயற்சி செய்யலாம், வாழ்த்துகள்!
ஓகே, ஹீரோவுக்கான அடிப்படைப் பண்புகளைப் பற்றி ஓரளவு பார்த்துவிட்டோம். ஒன் லைன் எழுதத் தேவையான மூன்று விஷயங்களில் ஒன்றான ஹீரோவை இதுவரை பார்த்துவிட்டோம். அடுத்து இரண்டாவது முக்கிய விஷயமான குறிக்கோள் பற்றிப் பார்ப்போம். ஒன் லைனில் தெளிவாகிய பிறகே, கதை நோக்கி நகர்வோம். அதன்பிறகே, திரைக்கதை எனும் ரியல் ஷோ!
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)"
Posted by செங்கோவி at 4:46 AM 9 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: திரைக்கதை
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
9 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Saturday, June 21, 2014
தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்
சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு மனது விரைப்பாகவே இருக்கும். எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். பிறகு மனது சொய்ங்கென்று பழைய நிலைமைக்கே போய் விடும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வித மனநிலையை நமக்கு உண்டாக்கக்கூடியவை. அந்தவகையில் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடும். எதையும் கேஷுவலாக அணுகும் Tongue-in-cheek மனநிலை சுஜாதாவைப் படித்த சிலநாட்களுக்கு இருக்கும்.
இயக்குநர் கேபிள் சங்கரைப் பார்க்கும்போதெல்லாம் தினமும் இந்த மனிதர் காலையில் ஒரு சுஜாதா நாவலைப் படித்துவிட்டுத்தான் வெளியில் வருகிறாரோ என்று தோன்றுகிறது. எப்போதும் கலகலப்புடன், அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும் உற்சாகத்துடன் வலம் வரும் மனிதர் அவர். நம்மை மாதிரி சொங்கிகளுக்கு அது பெரிய ஆச்சரியம் தான். அவரைப் பார்த்த இரண்டு முறையும் மனிதர் ஃபுல் எனர்ஜியுடன் இருந்தார். நண்பர்களைக் கேட்டால், ’அவர் எப்போதுமே அப்படித்தான்..இத்தனைக்கும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று வியப்பைக் கூட்டுகிறார்கள்.
அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, நான் ஆசைப்பட்டது அந்த கொண்டாட்ட மனநிலையை படத்திலும் மனிதர் கொண்டுவர வேண்டுமே என்று தான். இப்போது தொட்டால் தொடரும் படத்தில் இடம்பெறும் ‘பாஸு..பாஸு’ பாடலைக் கேட்டபோது, என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பாடல் இங்கே:
நாட்டு நடப்பையும் மனசாட்சியை ஆஃப் செய்துவிட்டு அலையும் பிஸி மனிதர்களான நம்மையும் திட்டுவது தான் பாடலின் கரு. அதை வேறு யாராவது செய்திருந்தால், இணையப் புரட்சியாளர்கள் பதிவைப் படித்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியிருப்பார்கள். ஆனால் கேபிளார் இந்தப் பாடலை மெல்லிய நக்கலுடன் கொடுத்திருப்பதால், நான் மேலே சொன்ன கொண்டாட்ட மனநிலையே நமக்குக் கிடைக்கிறது. ஆண்டனி தாசனின் குரல், பாடலுக்கு ஒரு புது கலரைக் கொடுக்கிறது.
‘யாருக்கும் ஈவு இல்லை..இரக்கம் இல்லை பாஸு..பாஸு’ என்று ஆரம்பிக்கும் பாடல் மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கிறது. ‘நியூசெல்லாம் ஸ்கேம் தானே..போச்சு நம்ம காசு, காசு’ என பாடல் முழுக்கவே சமூகக் கிண்டல் கொட்டிக்கிடக்கிறது. வழக்கமான இசையமைப்புப் பாணியைப் பின்பற்றாமல், ஜூஸ் ஸ்டைலில்..அது ஜூஸா, ஜாஸா..ம்ஹூம், இதற்கு மேல் நாம் இசை நுணுக்கத்தை ஆராய்ந்தால், பி.சி.சிவன் ஃபீல் பண்ணுவார். அது ஜூஸோ ஜாஸோ, நம்மை மாதிரி சாராசரி ஆட்களுக்கும் பிடிக்கும் வகையில் ’பாட்டு நல்லாயிருக்கு’ என்பது தான் இங்கே பாயிண்ட்!
நமது யூத் கேபிளாருடன் உண்மையான யூத்களான கார்க்கி பாவாவும் பி.சி.சிவனும் இணைந்து, ரகளையான பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். ’யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே’ என்பதற்கிணங்க, படம் எப்படி இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக இந்தப் பாடல் இருக்கிறது. இந்தப் பாடலில் தொனிக்கும் ‘கேபிளார் எனர்ஜி’ படத்திலும் இருந்தால், படம் சூப்பர் ஹிட் தான். வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க... "தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்"
Posted by செங்கோவி at 11:40 AM 5 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: சினிமா
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
5 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Friday, June 20, 2014
வடகறி - திரை விமர்சனம்
அதாகப்பட்டது... :
சன்னி லியோன் நடித்திருக்கிறார் எனும் ஒரே ஒரு செய்தியினால் எதிர்பார்க்கப்பட்ட படம். சோலாவாக ஜெய் ஹிட் அடித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவரும் இந்தப் படத்தை எதிர்பார்த்திருந்தார். என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.
ஒரு ஊர்ல..:
ஒரு நல்ல போன் வாங்க முடியாமல் கஷ்டப்படும் ஜெய், ஒரு ஐபோனை கண்டெடுக்கிறார். அந்த ஐபோனிற்கு வரும் ஒரு கால் அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார், கூடவே ஸ்வாதியுடன் காதலில் எப்படி வீழ்கிறார் என்பதே கதை.
உரிச்சா....:
படம் செம ரகளையாக ஆரம்பிக்கிறது. டைட்டில் போடும் முன்பே காமெடிப்பட்டாசு வெடிக்கிறார்கள். ஓல்டு மாடல் நோக்கியா போனை வைத்துக்கொண்டு ஜெய் கஷ்டப்படுவதும், அதிலிருந்து மீள ஒரு கொரியன் செட் வாங்கிவிட்டு ஊரையே ரணகளப்படுத்துவமாக முதல்பாதி முழுக்க காமெடியில் கலக்குகிறார்கள்.
ஸ்வாதி செட் ஆகாது என ஸ்வாதியின் ஃப்ரெண்டை ரூட் விடுவதும், அடுத்து ஸ்வாதியே ஜெய்க்கு கிடைப்பதும் ஜாலியான எபிசோட். இன்றைய மிடில் க்ளாஸ் இளைஞனின் லைஃபை இயக்குநர் அனுபவித்துச் சொல்லியிருக்கிறார். ஜெய்யின் அப்பாவித்தனமும் அதற்குச் சரியாக சூட் ஆகிறது. கீழே கிடந்த ஐபோனை திருப்பிக்கொடுப்போம் என்று ஜெய் போகும்போது, பிரச்சினை ஆரம்பிக்கிறது. பெரிய சிக்கலில் மாட்டிவிட்டார் எனும் சூழலில் இடைவேளை.
பெரிய ஆக்சன் த்ரில்லராக அடுத்து படம் மாறப்போகிறது என்று ஆவலுடன் உட்கார்ந்தால், சிக்ஸர் அடிக்க வேண்டிய இடத்தில் டக் வைத்து விளையாடுகிறார்கள். பெரிய வில்லனாக அறிமுகம் ஆகும் தயாளனையும் கொஞ்ச நேரத்தில் சப்பை ஆக்கிவிடுகிறார்கள். ரவி ஷங்கர் என்று படம் முழுக்க பில்டப் செய்யப்படும் மெயின் வில்லன், கிளைமாக்ஸில் வரும்போது இதற்கா இந்த பில்டப் என்று சலிப்பே வந்துவிடுகிறது. வில்லன்களிடம் சிக்கிய ஹீரோ பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், பதட்டமாக சென்னையைச் சுற்றிச் சுற்றி வருகிறாரே ஒழிய பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட், அது தான்.
இயக்குநர் சரவண ராஜனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமரும், புதுமையாக காட்சிகளை அமைக்கும் திறமையும் இருக்கிறது. முதல்பாதிவரை ஒரு சூப்பர் ஹிட் படத்தைப் பார்க்கிறோம் என்றே தோன்றியது. இரண்டாம்பாதியில் நம்மை சுற்றலில் விட்டதால், படம் ஓகே கேட்டகிரி என்று மட்டுமே சொல்ல முடிகிறது. நல்ல வலுவான வில்லனை இறக்கி, அடித்து விளையாடி இருக்கலாம். ஜாலியாக இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!
ஜெய்:
அப்பாவி வேடத்திற்கு ஜெய்யை விட்டால் பொருத்தமான ஆளில்லை. அவரது குரலும் அந்த கேரக்டர்க்கு பொருத்தமாக இருக்கிறது. கொடுத்த கேரக்டரை தன்னால் முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் கொரியன் செட்டை வைத்து அவர் ஊரையே கலக்குவதும், ஸ்வாதியின் அண்ணனுடன் டென்சனுடன் பேசும் காட்சியும் அருமை.
ஸ்வாதி:
நீண்டநாட்களுக்குப் பின் ஜெய்யுடன் சேர்ந்திருக்கிறார். க்ளோசப்பில் முகம் முத்திப்போனது தெரிந்தாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பு. இடைவேளைக்குப் பின் வழக்கமான லூசுப் பெண் ஹீரோயினாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனாலும் ரொம்ப நாளைக்கு அப்புறம் அவருக்கு இது நல்ல படம் தான்.
RJ பாலாஜி:
மனிதர் சரவெடி வசனங்களால் படம் முழுக்க பட்டாசு கொழுத்துகிறார். ‘கலாக்கா காலை மிதிச்ச மாதிரி’ போன்று வந்துவிழும் ஒன்லைன்களுக்கு தியேட்டரே அதிர்கிறது. வில்லன்கள் பிடியில் சிக்கியபின், அவர்களுக்கே ஃப்ரெண்ட் ஆவது ரகளை. (ஆனால் அது தான் படத்தின் சீரியஸ்னெஸ்ஸைக் குறைக்கிறது.) இனி அதிகப்படங்களில் நண்பன் கேரக்டரில் இவரைப் பார்க்கலாம்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பையாக முடியும் இரண்டாம்பாதி
- இப்படிச் செய்யலாமே என நாமே யூகிக்கிற விஷயங்களை ஜெய் செய்யாமல் விட்டுவிட்டு, கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மீண்டும் வந்து செய்வது. இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக ஹீரோ கேரக்டரைப் படைத்திருக்கலாம்
- ஸ்வாதியின் ஃப்ரெண்டில் சூசைடு அட்டெம்ப்ட் காமெடி அல்ல. அதற்கு ஜெய் & ஸ்வாதியும் பொறுப்பு. ஆனால் அதைக் காமெடியாக அப்ரோச் செய்ததை ரசிக்க முடியவில்லை
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- படம் முழுக்க வரும் காமெடி வசனங்கள் + பாலாஜி
- ஜெய் + ஸ்வாதி காதல் காட்சிகள்
- யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் இருந்து ஏனோ விலகிவிட, அறிமுக இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வினின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ஓகே தான்
- ஐ போனை வைத்து உருவாக்கப்பட்ட பாடல் காட்சி
- அண்ணனாக வரும் அருள்தாஸின் நடிப்பும் எம்.ஜி.ஆர் பற்றிய வசனங்களும்
பார்க்கலாமா? :
முதல்பாதிக்காவும் காமெடிக்காகவும் பார்க்கலாம்.
(அதுசரி, சன்னிலியோன் என்ன ஆச்சுன்னு கேட்கிறீங்களா? அடப்போங்கய்யா..வழக்கம்போல் குவைத் சென்சார்ல அந்தப் பாட்டை கட் பண்ணிட்டாங்க!)
மேலும் வாசிக்க... "வடகறி - திரை விமர்சனம்"
Posted by செங்கோவி at 1:05 AM 24 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: சினிமா, விமர்சனம்
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
24 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Tuesday, June 17, 2014
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)
8.கதாநாயகனும் குணாதிசயமும்
உங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின் நாயகர் யார் என்பதில் கோட்டை விட்டீர்கள் என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஏனென்றால் அந்த கேரக்டர் தான், ஆடியன்ஸ் உங்கள் கதைக்குள் நுழையும் நுழைவாயில். மேலும் எந்த கேரக்டரை நாயகராக அமைத்தால், சுவாரஸ்யமான திருப்பங்களையும் சீன்களையும் உண்டாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே கதை நாயகரை முடிவு செய்ய வேண்டும்.
திரைக்கதை என்பது ஒரு ஹீரோ பல தடைகளைத் தாண்டி, தன் குறிக்கோளை அடையும் பயணமே ஆகும். அந்த பயணத்தில் முரண்பாடுகளை அதிக அளவு உருவாக்க வேண்டும். அப்போது தான் படம் பார்ப்போருக்கு சுவார்ஸ்யம் குறையாமல் இருக்கும். ஹீரோவின் குணாதிசயங்களிலேயே முரண்பாடுகளை உருவாக்கலாம். ஹீரோவின் சூழ்நிலையில் முரண்பாட்டைக் கூட்டலாம். இதை மீறி ஹீரோ எப்படி ஜெயிப்பார் என்ற யோசனையில் ஆடியன்சை ஆழ்த்துவது அவசியம்.
முதல்மரியாதையில் சிவாஜி ராதாவுடன் இணைய வேண்டும். ஆனால் சிவாஜி யார்? ஊரில் மரியாதைக்குரிய மனிதர். ராதா பின்னால் போனால், மரியாதை அடி வாங்கும். செய்வாரா? அவர் மனைவியோ ராட்சசி. அவள் சும்மா விடுவாளா? படத்தின் முதல்பாதியில் இந்த முரண்பாடுகள் எழுப்பும் கேள்விகளே நம்மை படத்துடன் ஒன்றவைக்கின்றன.
அவ்வாறு இல்லாமல், ஒரு பொறுக்கி-அவனுக்கு அன்பான மனைவி-அவனுக்கு ராதா மேல் காதல் என்றால் நமக்கு பெரிய ஆர்வம் ஏதும் வந்துவிடாது. சிவாஜி நல்லவராக இருப்பது தான் அந்த காதலுக்கு முதல் பிரச்சினை. அவர் முதலில் தன் மனசாட்சியை மீறி, காதலை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது மனப்போராட்டம் தெளிவாக நமக்கு காட்டப்படுகிறது. மனைவியை மீறுவதைவிடவும் பெரிய கஷ்டம், அவர் தன் மனசாட்சியை சமாதானப்படுத்துவது தான்.
எனவே ஹீரோவின் குறிக்கோள் என்னவோ, அதற்கு தடையை ஹீரோவின் குணத்தில் ஆரம்பித்து சுற்றுச்சூழல், வில்லன் என எல்லாப் பக்கமும் கொண்டுவர வேண்டும்.
இதற்கு மற்றொரு உதாரணம், பாண்டிய நாடு திரைப்படம். அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதே ஒன் லைன். நாம் பல படங்களில் பார்த்த ஒன் லைன் தான் இது. அந்த ஹீரோ கேரக்டரின் குணாதிசயத்தைப் பாருங்கள். பயந்த சுபாவம் உள்ள, அடிதடிக்குப் பழக்கமில்லாத, யாரும் அடித்தாலும் வாங்கிவிட்டு வருகின்ற ஒரு சாமானிய கதாபாத்திரம். பழி வாங்குதல் எனும் குறிக்கோளிற்கு முரண்பாடான கேரக்டர் இல்லையா? அது தான் படத்தினை நாம் ரசித்துப் பார்க்க காரணமாக ஆனது.
சினிமாவின் அடிப்படை பலம், படம் பார்ப்பவன் ஹிரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தான். தியேட்டரின் இருட்டில், அவன் தன்னை ஹீரோவாகவே நினைத்துக்கொள்கிறான். அப்படி அவன் நினைப்பதற்கு ஏற்றவகையில், ஹீரோ கேரக்டரை உருவாக்குவது அவசியம்.
வேற்றுகிரகத்தில் இருந்து வரும் பயங்கர சக்தியுள்ள ஏலியன் தான் ஹீரோ என்றால், நம் ஆட்கள் யார் வீட்டு எழவோ என்று தான் படம் பார்ப்பார்கள். பாண்டிய நாடு ஹீரோவை எடுத்துக்கொண்டால், அவன் நம்மைப் போன்ற சராசரி மனிதனைப் பிரதிபலிக்கும் கேரக்டர். ஆரம்பக் காட்சிகளிலேயே, ஹீரோவுடன் நாம் ஒன்றிவிடுகிறோம்.
குறிக்கோளுக்கு முரண்பாடு ஏற்படுத்தும் குணாதிசயம், பார்வையாளனை அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவினால் நமக்கு வேலை எளிது. திரைக்கதையின் ஆரம்பத்திலேயே ‘இவன் நம்ம ஆளு’ என்ற எண்ணத்தை படம் பார்ப்போர் மனதில் ஹீரோ கேரக்டர் உருவாக்கிவிட வேண்டும். அதை உருவாக்க, யதார்த்தமான கேரக்டராக மட்டுமே அது இருக்க வேண்டும் என்பதில்லை.
நல்லவன் என்ற பிம்பத்தை எல்லாருமே ரசிக்கிறார்கள். அந்த பிம்பத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளவே மக்கள் விரும்புவார்கள். இதை ப்ளேக் ஸ்னிடர் ‘Save the Cat’ என்கிறார். ஒரு ஹீரோ கேரக்டர் ஒரு சாதாரண பூனையைக் காப்பாற்றினாலே போதும், இவன் நம்ம ஆளு என்ற எண்ணம் சராசரி ரசிகனுக்குத் தோன்று விடும். அந்த ஹீரோ கேரக்டருடன் ரசிகன், ஐக்கியம் ஆகிவிடுவான் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.
இது நமக்குப் புதிய விஷயம் அல்ல. இந்தக் காட்சியை நினைவுகூறுங்கள். ஒரு வயதான பெரியவர், ஒரு மாட்டுவண்டியில் லோடு ஏற்றிக்கொண்டு, தானே அதை இழுத்துக்கொண்டு தள்ளாடி வருகிறார். அப்போது மிஸ்டர்.எக்ஸ், ஓடி வந்து அந்த வண்டியை வாங்கி பெரியவருக்கு உதவுகிறார். இது ஒரு பாடல் காட்சியில் வரலாம், தனிக்காட்சியாகவும் வரலாம். அந்த மிஸ்டர்.எக்ஸ் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே?
ஆம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் அவர். Save the Cat பாலிஸியை ப்ளேக் ஸ்னிடருக்கு முன்பே ஃபாலோ செய்து, படத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக ஆக்கியவர் அவர்.
ப்ளேக் ஸ்னிடர் பாலிசிப்படி, நீங்கள் ஹீரோவை பார்வையாளனுடன் இத்தகைய சிறிய விஷயங்கள் மூலம் இணைக்காவிட்டால், அதன்பிறகு அந்த ஹீரோ என்ன செய்தாலும் வேஸ்ட் தான்.
சேது படத்தின் ஆரம்பக்காட்சிகளில் காலேஜில் ரவுடித்தனம் செய்பவராக வருவார் விக்ரம். ஆனால் ஊமைப்பெண்ணின் பாவாடையை ஒருத்தன் அவிழ்க்கவும் ஓடிப்போய் ;ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை என்றபடியே கட்டிவிடுவார். அந்த காட்சியில் விக்ரமின் நண்பர்கள் தான் அவிழ்த்தவனை அடிப்பார்கள். ஆனால் விக்ரம் நம் மனதில் ஆழமாக ஊடுருவி விடுவார். அதன்பின் அவர் அபிதாவைக் கடத்திக்கொண்டு போய் மிரட்டினாலும், நாம் அதைத் தவறு என்று நினைப்பதில்லை. Save the cat பாலிசியின் பவர் அப்படி! அதனால் தான் ப்ளேக் ஸ்னிடர், திரைக்கதை பற்றிய தன் புத்தகத்திற்கு Save the cat என்று பெயர் வைத்தார்.
ஹீரோ எவ்வளவு கெட்ட பழக்கங்களைக் கொண்டவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒருவிதத்தில் ரசிகன் ஹீரோவுடன் சிங்க் ஆக, வாய்ப்பு இருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எத்தனை கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் வேஸ்ட் தான்.
எனவே ஹீரோவின் கேரக்டர், ரசிகனை இம்ப்ரஸ் செய்யும் அதே நேரத்தில் குறிக்கோளுக்கு முரண்பாட்டைக் கூட்டுவதாக அமைகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)"
Posted by செங்கோவி at 11:24 PM 10 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: திரைக்கதை
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
10 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Sunday, June 15, 2014
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)
7. இன்னும் கொஞ்சம்…கதை நாயகர் பற்றி..
மறுமணம் பற்றி நினைக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய படங்கள், முதல் மரியாதையும் முந்தானை முடிச்சும். முதலாவது குரு பாரதிராஜாவின் மாஸ்டர்பீஸ். இரண்டாவது சிஷ்யர் பாக்கியராஜின் மாஸ்டர்பீஸ். இதுவரை பார்த்த ஒன்லைன் மற்றும் கதையின் நாயகர் கான்செப்ட்டைக் கொண்டு இந்தப் படங்களை இன்று அலசுவோம்.
முதல் மரியாதையின் கதை என்ன?
கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்ணான பொன்னாத்தா, காதல் என்ற பெயரில் ஒருவனிடம் ஏமாந்து வயிற்றில் பிள்ளையுடன் நிற்கிறாள். குடும்ப கௌரவம் காக்க,மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏழை மலைச்சாமி பொன்னாத்தாவை மணக்கிறார். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தன் குழந்தையாகவே எண்ணி வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கிறார். ஆனாலும் பொன்னாத்தா மலைச்சாமியை மதிப்பதே இல்லை. அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வரும் குயிலியுடன் மலைச்சாமிக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே அவளின் அன்பினால், காதலாக ஆகிறது.
பொன்னாத்தாவுக்கு விஷயம் தெரிய வந்து, அவர்களைப் பிரிக்க முற்படுகிறாள். அதே நேரத்தில் பொன்னாத்தாவின் காதலன் அவளைத் தேடி அந்த ஊருக்கு வர, மலைச்சாமியின் குடும்ப கௌரவத்தைக் காக்க குயிலி அவனைக் கொன்றுவிட்டு, ஜெயிலுக்குப் போகிறாள். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் மலைச்சாமி, பெயிலில் வரும் குயிலியைப் பார்த்துவிட்டு மனநிறைவுடன் இறக்கிறார். குயிலியும் அவர் பிரிவு தாளாது மரணமடைய, வாழ்க்கையை அடுத்த உலகிலாவது மகிழ்ச்சியுடன் வாழ, அந்த உன்னத காதல் ஜோடி நம்மிடமிருந்து விடை பெறுகிறது! (நன்றி: www.tamilss.com – தமிழில் ஒரு உலக சினிமா தொடர்!)
முதல் மரியாதை கதை இரண்டு தலைமுறைகளாக நடக்கும் பெரிய கதை. பொன்னாத்தாவின் காதல் முதல் பொன்னாத்தா மகளின் கல்யாணம்/குழந்தை வரை அந்தக் கதை பேசுகிறது. இந்தக் கதையின் நாயகராக மூன்றுபேரைத் தேர்ந்தெடுக்க முடியும்.
வடிவுக்கரசி
ராதா
சிவாஜி
பொன்னாத்தாவை கதையின் ஹீரோ(யின்) ஆகக் கொண்டால், ஒன்லைன் இப்படி வரும் :
குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி பொன்னாத்தாவின் காதல், அவள் பெற்றோரால் மறுக்கப்படுகிறது. வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். ஆனாலும் அவள் கணவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்கவில்லை. காதலனை நினைத்தே வாழ்கிறாள். காதலனுடன் சேர்வாளா?
(இந்த ஒன்லைன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால், காதலன் நல்லவன் ஆக வேண்டும். அந்த காதல் விவரிக்கப்பட வேண்டும். கணவன் டம்மியாகவோ வில்லனாகவோ ஆக வேண்டும். அப்புறம் அது முதல்மரியாதையாக இருக்காது, அந்த ஏழு நாட்கள் ஆகிவிடும்!)
குயிலினை மையப்படுத்தினால்..
ஏழைப் பெண்ணான குயில், தன் தந்தையுடன் வாழ இடம்தேடி ஒரு கிராமத்திற்குச் செல்கிறாள். அவளுக்கு உதவும் அந்த ஊர்ப்பெரியவர் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதையும்தாண்டி அந்தக் காதல் ஜெயித்ததா?
(முதல்மரியாதை கதையைவே பெரிய மாற்றமின்றி இந்த ஆங்கிளில் சொல்லிவிடலாம். ராதாவின் பின்புலம் பற்றிய காட்சிகளை அதிகப்படுத்த வேண்டிவரும். ராதா ஏன் வயதானவரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது பின்புலக் காரணம் சொல்ல வேண்டிவரும்.)
மலைச்சாமியை மையப்படுத்தினால்..
ஊர்ப்பெரியவரான மலைச்சாமிக்கு மனைவியுடன் சுமூக உறவில்லை. அந்த ஊருக்குப் பிழைக்க வரும் குயில் மேல் அவருக்குக் காதல் வருகிறது. அந்தக் காதல் ஜெயித்ததா?
(இதைத்தான் பாரதிராஜா எடுத்துக்கொண்டார்.)
எனவே இந்தக் கதையைச் சொல்ல இரு வாய்ப்புகள் உண்டு. பாரதிராஜா சிவாஜியின் கோணத்திலேயே சொல்லும் ஆப்சனை எடுத்துக்கொண்டார். அதனாலேயே படம் சிவாஜியிடம் ஆரம்பிக்கிறது.
ஹீரோ : சிவாஜி
குறிக்கோள் : காதல்/அன்பு
வில்லன்: திருமணம்/கௌரவம்
பெர்ஃபெக்ட்..இல்லையா? (படம் டிராஜடி வகை என்பதால், முடிவு ஹீரோவின் தோல்வி!)
மறுமணத்தில் விருப்பமில்லாத ஹீரோவைக் கொண்ட முந்தானை முடிச்சு படத்தை எடுத்துக்கொள்வோம்.
மனைவியைப் பறிகொடுத்துவிட்டு கைக்குழந்தையுடன் இருப்பவர் பாக்கியராஜ். ஒரு கிராமத்திற்கு வாத்தியாராகச் செல்கிறார். அந்த ஊர் நாட்டாமையின் மகள் ஊர்வசி. ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் வைப்பாட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுத்துப்போயிருக்கும் அவருக்கு, மனைவி இறந்தும் வேறுபெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத ஹீரோ மேல் காதல் வருகிறது.
‘இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ எனும் சத்தியத்தின் காரணமாகவும், ‘சித்தி வந்தால் பையனை கொடுமைப்படுத்துவாள்’ எனும் பயத்தின் காரணமாகவும் பாக்கியராஜ் மறுக்கிறார். ஆனாலும் அவர் தன்னிடம் தவறாக நடந்ததாகப் பழிசுமத்தி, அவரை மணம் முடிக்கிறார் ஊர்வசி. அதனால் பாக்கியராஜ் அவருடன் ‘சந்தோசமாக’ வாழ மறுக்கிறார். இறுதியில் ஊர்வசியின் அன்பினாலும் தியாகத்தாலும் மனம் மாறி, பாக்கியராஜ் அவரை ஏற்றுக்கொள்கிறார்.
இந்தக் கதையில் இரண்டே முக்கியக் கேரக்டர்கள் தான். அவர்களின் பார்வையில் ஒன்லைன் அமைத்தால்…
பாக்கியராஜ்: இன்னொரு திருமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன் இருக்கும் ஹீரோவின் மேல் ஹீரோயின் காதல் கொள்கிறாள். ஹீரோ ஏற்றுக்கொண்டாரா? (அதாவது..ஹீரோ தோற்றாரா?)
ஊர்வசி : தன் தந்தை உட்பட பெரும்பாலான ஆண்கள் மனைவி இருக்கும்போதே வைப்பாட்டி வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு நொந்துபோகும் ஹீரோயின், சுத்தமான ஆம்பிளையைத் தான் கல்யாணம் செய்வேன் என்ற ‘உயர்ந்த’ குறிக்கோளுடன் இருக்கிறாள். அப்படி ஒரு ஆணை சந்திக்கிறாள். ஆனால் அவரோ மறுமணம் செய்வதில்லை எனும் வைராக்கியத்துடன்(கவனிக்க..அது குறிக்கோள் அல்ல!) இருக்கிறார். அவர் மனதை ஹீரோயின் வென்றாரா?
இந்த இரண்டு ஆப்சனில் எது நன்றாக இருக்கிறது? முதலாவதில் ஹீரோவிடம் குறிக்கோளே இல்லை, அது ஒரு தற்காப்பு வைராக்கியம் தான். இரண்டாவதில் ஹீரோயினிடம் இருப்பது தான் குறிக்கோள். கதையின் வில்லன், ஹீரோவின் வைராக்கியம். இந்தக் கதையின் நாயகி ஊர்வசி தான். அதனாலேயே படம், ஊர்வசியின் பார்வையிலெயே நகர்கிறது.
படம் ஆரம்பிக்கவுமே, ஊர்வசி கேரக்டர் நமக்கு விளக்கப்படுகிறது. அவர் ஒரு தைரியமான, விளையாட்டுத்தனமான புத்திசாலிப்பெண். அவருடைய ஒரே குறிக்கோள் ‘ஒரு வைப்பாட்டி..கிப்பாட்டி வைக்காமப் பார்த்துக்கணும்’ என்று காமெடியாக காட்சிகளிலும் பாடலிலும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு தான் ஹீரோவே படத்தில் எண்ட்ரி ஆகிறார், படம் ஆரம்பித்து 18 நிமிடங்கள் கழித்து!
படம் முழுக்க அட்டாக் செய்வது ஊர்வசி தான். காதல்-பொய்ப்பழி-காமம்-அன்பு-தியாகம் என ஐந்து விதங்களில் அதே வரிசையில் ஊர்வசி அட்டாக் செய்கிறார். பாக்கியராஜின் வேலை அதைத் தடுப்பதும், இறுதியில் தோற்பதும் தான்.
கதாசிரியர்-திரைக்கதையாசிரியர்-இயக்குநர்-ஹீரோவாக இருந்தும், பாக்கியராஜ் ஏன், தான் பின்வாங்கி ஹீரோயினை முக்கியப்படுத்தினார் என்று புரிகிறதா? அது புரிந்ததென்றால், அவரை ஏன் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடுகிறோம் என்பதும் புரிந்துவிடும்.
(செவ்வாய்..தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)"
Posted by செங்கோவி at 7:00 PM 13 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: திரைக்கதை
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
13 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
Newer Posts Older Posts Home
தொடர்புக்கு:
[email protected]
மின்னஞ்சலில் பெற:
Enter your email address:
Delivered by FeedBurner
Labels
Facebook (43)
Mechanical Engineering (12)
Movies to Learn (1)
Piping (5)
tamilss.com (1)
அரசியல் (42)
அனுபவம் (45)
ஆன்மிகம் (15)
இலக்கியம் (14)
ஈழம் (2)
காந்தி (6)
குடும்ப நிர்வாகம் (2)
குழாயியல் (8)
குறும்படம் (6)
கோலிவுட் (31)
சமூகம் (31)
சிறுகதை (4)
சினிமா (216)
சினிமா ஆய்வுகள் (49)
சூப்பர் ஸ்டார் (5)
திரைக்கதை (88)
தேர்தல் ஸ்பெஷல் (18)
தொடர்கள் (54)
நகைச்சுவை (41)
பிராமணீயம் (10)
புனைவுகள் (1)
பொது (3)
பொருளாதாரம் (7)
பொறியியல் (29)
மற்றவை (70)
மன்மதன் லீலைகள் (2)
முருக வேட்டை (44)
வலைப்பூ (3)
வள்ளுவம் (4)
விமர்சனம் (107)
ஸ்பெக்ட்ரம் (4)
ஹாலிவுட் (23)
ஹிட்ச்காக் (20)
முந்தைய சில பதிவுகள்...
இதுவரை ...
► 2020 (2)
► June (1)
► April (1)
► 2019 (1)
► August (1)
► 2018 (19)
► December (4)
► October (1)
► September (4)
► August (1)
► July (1)
► June (4)
► April (4)
► 2017 (34)
► December (3)
► November (1)
► October (4)
► September (3)
► August (1)
► July (2)
► June (3)
► May (2)
► April (6)
► February (9)
► 2016 (52)
► September (4)
► July (6)
► June (6)
► April (2)
► March (25)
► February (4)
► January (5)
► 2015 (66)
► December (3)
► November (8)
► October (8)
► September (4)
► August (1)
► July (8)
► June (7)
► May (5)
► April (6)
► March (2)
► February (9)
► January (5)
▼ 2014 (108)
► December (6)
► November (9)
► October (4)
► September (3)
► August (15)
► July (13)
▼ June (15)
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)
ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)
தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்
வடகறி - திரை விமர்சனம்
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)
முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்
ஹிட்ச்காக்கின் Young and Innocent (1937) - விமர்சனம்
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-6)
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-5)
உன் சமையல் அறையில்... - திரை விமர்சனம்
ஹிட்ச்காக்கின் Sabotage (1936) - விமர்சனம்
திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-4)
► May (9)
► April (9)
► March (5)
► February (12)
► January (8)
► 2013 (52)
► December (9)
► November (13)
► October (9)
► August (6)
► July (1)
► March (5)
► February (5)
► January (4)
► 2012 (84)
► December (6)
► November (5)
► October (7)
► September (16)
► August (10)
► July (8)
► June (16)
► May (8)
► April (8)
► 2011 (149)
► December (3)
► November (12)
► October (12)
► September (11)
► August (18)
► July (11)
► June (9)
► May (10)
► April (13)
► March (19)
► February (18)
► January (13)
► 2010 (10)
► December (10)
பின் தொடரும் நண்பர்கள்...
மனதைத் தொட்ட பூக்கள்
வகுப்பறை
Devotional: ஆன்மிகம்: அருள்மிகு கொடுங்குன்றநாதர் கோவில், பிரான்மலை
10 hours ago
மனசு
நூல் விமர்சனம் : மலையாளத் திரையோரம்
2 weeks ago
உணவுஉலகம்
1 month ago
!!@#$%நல்ல நேரம்!!##**#@!
லக்கினமும். தொழிலும் ; மேஷம் லக்னம்
2 months ago
!♔ மதியோடை ♔!
நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்...
3 months ago
|கீதப்ப்ரியன்|Geethappriyan|
இதா இவிட வரே (இதோ இங்கு வரை)|1978 | மலையாளம் | P.பத்மராஜன்
4 months ago
! தமிழ்வாசி !
வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...
7 months ago
மெட்ராஸ்பவன்
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
8 months ago
....பயணம்....!
Sweet Mango Tea by Swajith
1 year ago
கோகுல் மனதில்
மாஸ்க் மட்டுமே போதுமா?
1 year ago
நான் பேச நினைப்பதெல்லாம்
என்னதான் முடிவு?
2 years ago
தனி மரம்
வசந்தம் வருமா?!!!
2 years ago
வானம் தாண்டிய சிறகுகள்..
செல்லக்குட்டி
2 years ago
மின்னல் வரிகள்
நினைவுக் குறிப்பிலிருந்து....
3 years ago
சிரிப்பு போலீஸ்
உயிர் இருக்குது
4 years ago
வினையூக்கி
முனைவர். வினையூக்கி
4 years ago
மிடில் கிளாஸ் மாதவி
வெண்டைக்காய் புளி குத்தின கறி!
4 years ago
ஸ்டார்ட் மியூசிக்!
பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்
5 years ago
ரஹீம் கஸாலி
தொடரி- தடம் புரண்டதா?
5 years ago
nanparkal/நண்பர்கள்
முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி
5 years ago
மனதில் உறுதி வேண்டும்.
ரஜினி முருகன்- கதகளி விமர்சனம்
5 years ago
ரோஜாப்பூந்தோட்டம்...
நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.
5 years ago
நாற்று - புரட்சி எப்.எம்
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!
6 years ago
AKASIYAM
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)
6 years ago
இரவு வானம்
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
8 years ago
மைந்தனின் மனதில்...
தனுஷின் "அம்பிகாபதி"-விமர்சனம் மட்டுமல்ல..!
8 years ago
பாலாவின் பக்கங்கள்
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
8 years ago
நா.மணிவண்ணன்
பத்தினி
8 years ago
நிகழ்வுகள்
இவள்!
9 years ago
அகாதுகா அப்பாடக்கர்ஸ்:
மாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]
9 years ago
கடம்பவன பூங்கா
ராதிகாவும் என் புதுக்காரும்-கலா!! கலா.!!...கலக்கலா...!!
9 years ago
டக்கால்டி
வர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்
9 years ago
வந்தேமாதரம்
இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்
9 years ago
கொஞ்சம் வெட்டி பேச்சு
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
9 years ago
பங்கு மார்கெட்
2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )
9 years ago
உரைகல்
ஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....
9 years ago
அன்பு உலகம்
நான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே
10 years ago
ஹைக்கூ அதிர்வுகள்
சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))
10 years ago
தொப்பி தொப்பி
கொக்கா மக்கா- 19/102010
11 years ago
வீடு
காட்டான்
டெரர் கும்மி
கோவைநேரம்
சிறகுகள்
துஷ்யந்தன்
Show 10 Show All
எனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright!. Simple theme. Powered by Blogger. |
சுழற்சி முறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் பிரதேசவாதங்களுக்கு ஒருபோதும் அஞ்சி- அடிபணிந்து தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டாது என்றும் அவர் கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபை ஆளும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பு இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார். அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது; “என்னிடம் உறுதியளித்தபடி தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியை இராஜினாமா செய்வார் என நான் நம்புகின்றேன். இதன் மூலம் கட்சியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் தனக்கிருக்கும் செல்வாக்கை சிராஸ் இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும்.
மேயர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதற்கு மேயர் சிராஸ் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டு இங்கு எதையும் பேச முடியாது. கட்சியின் தீர்மானத்தில் அனைவரும் உறுதியாக இருப்பதே அவசியம்.
நிச்சயம் அவர் ராஜினாமா செய்தாக வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அவர் ராஜினாமா செய்யா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கட்சி பார்த்துக் கொள்ளும்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு கட்சியின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அமைச்சர் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கட்சியின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைமைத்துவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கல்முனை மாநகர சபை மு.கா. உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் இதில் பங்கு பற்றவில்லை.
கல்முனை மாநகர சபை பிரதி மேயர் நிசாம் காரியப்பர், உறுப்பினர்களான பிர்தௌஸ், பஷீர், நிசார்தீன், பரக்கத்துல்லாஹ், முஸ்தபா, உமர் அலி, அமீர் ஆகியோர் பங்குபற்றி தமது கருத்துகளை தெரிவித்தனர்.
உறுப்பினர்கள் ஏ.எம்.றகீப் மற்றும் எம்.சாலிதீன் ஆகியோர் சமூகமளிக்க முடியாமைக்கான காரணத்தை அறிவித்து இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று உறுப்பினர் ஒருவர் மெட்ரோ மிரருக்கு தெரிவித்தார். |
விளம்பரக் குறியீட்டைக் கொண்டு 15% இனிய தளத்தை அனுபவிக்கவும் பிளாக்ஸ் அவுட்டோர் ரீடெயில் லிமிடெட் என வர்த்தகம் செய்யப்படும் இந்நிறுவனம் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பியூரியை தலைமையிடமாகக் கொண்டது மற்றும் இங்கிலாந்தின் மிகப்பெரிய வெளிப்புற சில்லறை விற்பனையாளர் ஆகும். பிளாக்ஸ் 2012 இல் நிர்வாகத்திற்குச் சென்றார், அதை ஜேடி ஸ்போர்ட்ஸ் ஃபேஷன் பிஎல்சி வாங்கியது. இந்த குழு மில்லெட்ஸ் மற்றும் அல்டிமேட் வெளிப்புறங்களையும் கொண்டுள்ளது.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 2 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 25% வரை சேமிக்கவும் பிளாக்ஸில் 10% தள்ளுபடி ஜூலை 13, 2021-ல் காலாவதியாகும். கறுப்பர்கள் வெளிப்புறங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், எனவே உங்கள் குழந்தைகளுக்கு நன்கு தயாரிக்கப்பட்ட, நீடித்த மற்றும் ஸ்டைலான ஆடைகளை நீங்கள் தேடுகிறீர்களானால், மேலும் பார்க்க வேண்டாம்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 18 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 10% வரை சேமிக்கவும் 30% வரை தள்ளுபடி. ஆன்லைன் ஒப்பந்தம். ஜனவரி 4, 2026. ஜூன் 6, 2021 வாரம்: அகாடமி ஹாட் டீல்கள் & கூப்பன் குறியீடுகள். ஆன்லைன் ஒப்பந்தம். ஜனவரி 4, 2026
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 11 மணிநேரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படிகளில் 10% வரை தள்ளுபடி செய்யுங்கள் பிளாக் ஹில்ஸ் & பேட்லேண்ட்ஸ் சுற்றுலா சங்கம் (605) 355-3700 (தகவல் மையம்) (888) 945-7676 (முன்பதிவு தகவல்)
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 18 மணிநேரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் 10% வரை தள்ளுபடி செய்யுங்கள் பிளாக்ஸ் அவுட்டோர் ரீடெயில் லிமிடெட் (t/a "பிளாக்ஸ்") ஒரு தரகராக செயல்படுகிறது மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி வழங்குநர்களிடமிருந்து நிதியை வழங்குகிறது. பேபால் கடன் என்பது பேபால் (ஐரோப்பா) S.à.rl et Cie, SCA, 22-24 பவுல்வர்ட் ராயல் L-2449, லக்சம்பேர்க்கின் வர்த்தக பெயர்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 7 மணிநேரம்
வட முகம் பெண்கள் கட்டுரை II பார்கா வாங்குதலில் 15% வரை சேமிக்கவும் 3 தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும், $ 15 சேமிக்கவும்- கூப்பன் குறியீடு: pick3. பின்வருவனவற்றில் ஏதேனும் 3 ஐத் தேர்ந்தெடுத்து $ 15 தள்ளுபடியைப் பெறுங்கள்: பிளாக்பேர்ட், பிளாக்பேர்ட் எக்ஸ்எல்சி, ரிட்ஜெர்னர், டார்ப், அண்டர்கில்ட், டாப் கிவில்ட். —————————. முழு மாத, $ 40.00-கூப்பன் குறியீடு சேமிக்கவும்: முழு அளவு. ஒவ்வொரு 4 வகைகளிலிருந்தும் ஒரு பொருளை வாங்கி $ 40 தள்ளுபடி பெறுங்கள். ஹம்மாக் (BB, XLC, அல்லது RR மட்டும் ...
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 16 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 15% வரை சேமிக்கவும் இணையம் முழுவதும் சமீபத்திய ஃபிராங்கின் கிரேட் அவுட்டோர்ஸ் ஒப்பந்தங்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இப்போதே, கூப்பன்அன்னி ஃப்ராங்க்ஸ் கிரேட் அவுட்டோர்ஸ் தொடர்பாக மொத்தம் 14 ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, இதில் 3 தள்ளுபடி குறியீடு, 11 ஒப்பந்தம் மற்றும் 1 இலவச கப்பல் ஒப்பந்தம் ஆகியவை அடங்கும். சராசரியாக 22% தள்ளுபடிக்கு, கடைக்காரர்களுக்கு ஏறத்தாழ 30% தள்ளுபடி கிடைக்கும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 16 மணிநேரம்
ஐரிஸ் 500 டென்ட் தூங்குகிறது 5. வவுச்சர் கோட் மூலம் பிளாக்ஸின் வெளிப்புறத்திலிருந்து £ 230 மட்டுமே mygreenoutdoors.com ஆகஸ்ட் 30 இல் 💰 2021% வரை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. மிகக் குறைந்த விலையில் MyGreenOutdoors இல் பெரும் சேமிப்பைப் பெறுங்கள். Couponannie.com இல் வரையறுக்கப்பட்ட நேர ஒப்பந்தங்களுடன் பணத்தை சேமிக்கவும். அனைத்து குறியீடுகளும் சரிபார்க்கப்பட்டன.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 12 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 15% தள்ளுபடியைப் பெறுங்கள் அனைத்து வேலை டிக்கின் விளையாட்டு பொருட்கள் விளம்பர குறியீடுகள் & கூப்பன்கள் - ஜூலை 20 இல் $ 2021 வரை சேமிக்கவும். நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை உள்ளடக்கிய பொருட்களை வழங்குகிறது. நீங்கள் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ, தனிமையாகவோ அல்லது குழு விளையாட்டாகவோ அனுபவித்தாலும், டிக்ஸ் ஸ்போர்டிங் கூட்ஸ் உங்களுக்கு ஏதாவது கிடைக்கும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 6 மணிநேரம்
விளம்பர குறியீட்டைக் கொண்டு 15% தள்ளுபடி செய்யுங்கள் மின்னஞ்சல் பதிவு மூலம் எந்த ஆர்டருக்கும் 10% தள்ளுபடி. 7/01/21 அன்று சரிபார்க்கப்பட்டது நேற்று 11 முறை பயன்படுத்தப்பட்டது. சலுகையைப் பெறுங்கள். விவரங்கள்: சமீபத்திய செய்திகள், சிறப்பு விளம்பரங்கள் மற்றும் பிரத்தியேக நிகழ்வுகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்க கந்தர் வெளியில் இருந்து மின்னஞ்சல்களுக்கு பதிவு செய்யவும்! + விவரங்கள் மற்றும் விலக்குகளை காட்டு.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 10 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 20% சேமிக்கவும் கூப்பன் கோட் மூலம் கூடுதல் $ 15 தள்ளுபடி ஆர்டர்கள் $ 99+ எடுத்துக் கொள்ளுங்கள். நினைவு நாள் விற்பனை உங்கள் கார்ட்டில் செக் அவுட்டில் உள்ளிடவும் அல்லது சரிபார்க்கவும், உங்கள் ஆர்டரில் $ 15 அல்லது $ 99 க்கு மேல் கழிக்கப்படும் $ 30 க்கு மேல் உங்கள் ஆர்டரில் இருந்து கழிக்கப்படும். ஆஃபர் காலாவதியாகும் நேரம் 175:11 pm ET 59/5/31. $ 21 தள்ளுபடி $ 30+ சலுகை ஆன்லைனில் செல்லுபடியாகும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 11 மணிநேரம்
உங்கள் வாங்கியதில் 20% சேமிக்கவும் Ers30% சலுகை ஒப்பந்தங்களுடன் turners.com இல் சேமிக்கவும் மற்றும் ஆகஸ்ட் 2021 இல் டர்னரின் வெளிப்புறத்திலிருந்து சமீபத்திய இலவச ஷிப்பிங் கூப்பன்கள், விளம்பர குறியீடுகள் மற்றும் தள்ளுபடிகளைக் கண்டறியவும். அனைத்து குறியீடுகளும் சரிபார்க்கப்பட்டன. பிரத்தியேக & புதிய சலுகைகள் தினமும் couponannie.com இல் சேர்க்கப்படுகின்றன.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 1 மணிநேரம்
தள்ளுபடி குறியீட்டைக் கொண்டு 20% தள்ளுபடி செய்யுங்கள் எரிவாயு நிலையங்களில் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு டாலருக்கும் 2 புள்ளிகள். VISA ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா இடங்களிலும் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு டாலருக்கும் 1 புள்ளி. $ 2,500 அகாடமி வெகுமதி அட்டைக்கு 25 புள்ளிகள் மீட்கப்படுகின்றன. உங்கள் கணக்கைத் திறந்த 1000 நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய பிறகு 60 போனஸ் புள்ளிகள். கடையில் உங்கள் முதல் வாங்குதலுக்கு $ 15 தள்ளுபடி, அல்லது நீங்கள் $ 15 தகுதி பெற்றால் $ 15 அறிக்கை கடன் ...
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 5 மணிநேரம்
உங்கள் வாங்கியதில் கூடுதல் 15% தள்ளுபடியைப் பெறுங்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெளிப்புற சிறப்பை வழங்கி, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் ஜார்ஜியா மாநிலங்கள் முழுவதும் நன்கு அறியப்பட்ட தென்னிந்திய வெளிப்புற சில்லறை விற்பனையாளர்களில் ஒருவரான கிரேடிஸ் அவுட்டோர்ஸ், நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விரிவான ஆன்லைன் மூலம் கிடைக்கும் கடை
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 2 மணிநேரம்
தள்ளுபடி குறியீட்டைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கோடுகளில் 15% தள்ளுபடி செய்யுங்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளவை, RetailMeNot.com இன் பயனர்களால் தரவரிசைப்படுத்தப்பட்ட சில சிறந்த வெளிப்புற கூப்பன்கள், தள்ளுபடிகள் மற்றும் விளம்பரக் குறியீடுகளைக் காணலாம். கூப்பனைப் பயன்படுத்த, கூப்பன் குறியீட்டைக் கிளிக் செய்தால், கடையின் செக் அவுட் செயல்பாட்டின் போது குறியீட்டை உள்ளிடவும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 21 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 25% வரை சேமிக்கவும் அகாடமி ஸ்போர்ட்ஸ் + அவுட்டோர்ஸ் அகாடமி ஸ்போர்ட்ஸ் + அவுட்டோர்ஸ் பற்றி ஆர்தர் கோச்மேன் 1938 இல் நிறுவப்பட்டது. தேசிய தள்ளுபடி கடைகளின் இந்த சங்கிலி விளையாட்டு பொருட்கள் மற்றும் வெளிப்புற பாகங்கள் வழங்குகிறது. 2011 இல், கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் & கம்பெனி இந்த நிறுவனத்தின் சில்லறை கடைகளை வாங்கியது. அகாடமி ஆண்டு வருவாயில் $ 4.9 பில்லியனுக்கும் அதிகமாக உருவாக்குகிறது.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 16 மணிநேரம்
தகுதியான பொருட்களில் கூடுதலாக 15% தள்ளுபடி கிடைக்கும் ராம்சே அவுட்டோர் கூப்பன் காலாவதி தேதியை அமைக்கும்போது தற்போது கிடைக்கும் ராம்சே வெளிப்புற விளம்பர குறியீடுகள் முடிவடைகின்றன. இருப்பினும், சில ராம்சே வெளிப்புற ஒப்பந்தங்கள் ஒரு திட்டவட்டமான இறுதித் தேதியைக் கொண்டிருக்கவில்லை, எனவே ராம்சே வெளிப்புறத்தில் விளம்பரப் பொருட்களுக்கான சரக்கு தீர்ந்துவிடும் வரை விளம்பரக் குறியீடு செயலில் இருக்கும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 18 மணிநேரம்
Or 15 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஆர்டர்களில் 299% தள்ளுபடியைப் பெறுங்கள் அகாடமி ஸ்போர்ட்ஸ் + அவுட்டோர்ஸ் பிளாக் ஃப்ரைடே விற்பனை நீங்கள் அகாடமி ஸ்போர்ட்ஸ் + அவுட்டோர்ஸ் கூப்பன்களை ஆண்டின் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம், கருப்பு வெள்ளியின் போது அவை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும், இது பொதுவாக நன்றி செலுத்துவதற்கு முன் வார இறுதியில் தொடங்கி சைபர் திங்கட்கிழமைக்கு அடுத்த செவ்வாய் இரவு வரை தொடரும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 18 மணிநேரம்
விளம்பர குறியீடு மூலம் 10% தள்ளுபடி வரை அனுபவிக்கவும் பிரபலமான அடிடாஸ் வெளிப்புற விளம்பர குறியீடுகள் & விற்பனை. தள்ளுபடி. விளக்கம். காலாவதியாகிறது. 50 சதவீதம் தள்ளுபடி. 50% ஆஃப் 2015 ஹியாங்கிள் க்ளைம்பிங் ஷூ. -. 50 சதவீதம் தள்ளுபடி. 50% தள்ளுபடி ஐந்து பத்து டீஸ், டாங்கிகள் மற்றும் ஹூடிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 10 மணிநேரம்
நீங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தும்போது 20% வரை சேமிக்கவும் BlackOvis.com is THE home for Solid.Hunting.Gear If your hunting passion is western big game, midwest whitetail, sheep hunting, waterfowl, upland or a mix of everything, BlackOvis is where you'll find hunting gear that performs and stands up to the demands of your hunt.
குறியீடு பெற
Blacks Outdoors
சரிபார்க்கப்பட்ட 1 மணிநேரம்
ExoSpecial > Merchants (B) > Blacks Outdoors
Blacks Outdoors is rated 4.6 / 5.0 from 243 reviews.
நிபந்தனைகள்: எக்ஸோஸ்பெஷல் கூப்பன் குறியீடுகள் மற்றும் நுகர்வோர் பணத்தை சேமிக்க உதவும் சிறப்பு சலுகைகளை கண்காணிக்கிறது. எங்கள் இணையதளத்தில் வணிகர்களிடமிருந்து வாங்குவதற்கு எங்கள் கூப்பன்கள் அல்லது இணைப்புகளை நீங்கள் பயன்படுத்தும்போது நாங்கள் கமிஷன் பெறலாம். அனைத்து வர்த்தக முத்திரைகளும் அந்தந்த உரிமையாளர்களின் சொத்து.
முகப்பு வியாபாரிகள் மொழிகள் தனியுரிமை விதிமுறை தொடர்பு
பதிப்புரிமை © 2021 ExoSpecial. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
COPY
கூப்பன் குறியீடுகளையும் சிறப்பு சலுகைகளையும் தானாகவே கண்டுபிடித்து பயன்படுத்த எங்கள் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
Google Chrome
Mozilla Firefox
Microsoft Edge
Opera Browser
செயல் தேவை
இந்த ஒப்பந்தத்தை அணுக எங்கள் உலாவி நீட்டிப்புகளில் ஒன்றை நிறுவ வேண்டும். கீழே உள்ள விருப்பங்களிலிருந்து உங்கள் உலாவியைத் தேர்ந்தெடுத்து, நீட்டிப்பை நிறுவவும், பின்னர் உங்கள் ஆர்டருடன் தொடரலாம். |
நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.
சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.
2009 இனஅழிப்புக்கு பிறகு இந்த உண்மை இன்னும் ஆழமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அரசியலுக்குள் மக்களை இழுத்து சென்று நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்க முற்படுகிறது இந்த கும்பல்கள்.
தேர்தலை புறக்கணிப்பதற்கும், பங்கெடுப்பதற்கும் தமக்கென்று சில நியாயங்களை உருவாக்கிக் கொண்டு பதவி கதிரைகளை நோக்கி நகர முற்படுகிறார்களே ஒழிய மக்களுக்கான அரசியலை வென்றெடுக்க இங்கு யாரும் தயாராக இல்லை.
கட்சி அமைப்பு வேறுபாடின்றி இங்கு அனைவருமே தம்மை இதில் பங்காளியாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் விழிப்பாக இருக்க வேண’டிய தருணம் இது.
மே 18 என்பது நாம் வீழத்தப்பட்ட நாளாக இருந்தபோதும் மறுவளமாக தமிழீழம் என்ற நடைமுறை அரசிற்கான உலக அங்கீகாரத்திற்கு அடித்தளமிட்ட நாளாகவும் அது இருக்கிறது.
எனவே மே18 செய்தியின் கனதியை கவனமாக உள்வாங்கி தேர்தல் அரசியல் மாயைக்குள் இருந்து மக்களை மீட்டெடுத்து மக்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைக்க வேண்டிய அரசியல்வாதிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் பதவி கதிரைகளுக்காக தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்து போராட்டத்தையும் வரலாற்றையும் மடைமாற்றுவது அதியுச்ச துரோகமாகவே வரலாற்றில் பதிவாகிறது
மக்களே மிக அவதானமாக இருங்கள். கட்சி வேறுபாடுகளின்றி தமிழ் அரசியல்வாதிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.
அவர்கள் பொது எதிரியான சிங்களத்தை விடுத்துவிட்டு தமக்குள்ளாகவே போடும் குடுமி சண்டைகளும் அவதூறுகளுமே இதற்கு போதுமான சாட்சியங்களாகும்.
அவர்களது பினாமிகளும், அடிவருடி லெட்டர்பாட் அமைப்புக்களும் விடும் குழப்பகரமான – தெளிவற்ற அறிக்கைகளும் இதற்கு மேலதிக வலு சேர்க்கின்றன.
எனவே மக்கள் இந்த தேர்தல் மாயைக்குள் உங்களை புதைத்து கொள்ளாமல் வேறு வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
மே 18 இற்கு பிறகு தமிழ்த்தேசத்தை நிர்முலம் செய்யும் புலிநீக்க அரசியலை செய்ய புகுந்த மேற்குலக -பிராந்திய சதி வலையமைப்பு தற்போது மிச்சம் மீதியாகவுள்ள – செயற்திறனற்றிருந்தாலும் கொள்கையளவில் ஒரு பேசும் சக்தியாகவுள்ள ‘கூட்டமைப்பு’ அரசியலை உடைக்க தலைப்பட்டுள்ளது.
அதுதான் இந்த தேர்தல் கூத்து.
தேர்தல் அறிவிக்கபட்ட காலப்பகுதியை வைத்தே இதை சுலபமாக கணித்து கொள்ளலாம்.
ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நேரத்தில் இனஅழிப்புக்கு வெள்ளையடித்து ‘மலரும் சனநாயகம்’ என்ற பெயரில் சிங்களத்தை காக்கவும் ஐநாவை நோக்கிய மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும் மேற்படி கூட்டணி செய்த சதிதான் இந்த தேர்தல்.
இதற்கு நமது தமிழ் அரசியல்வாதிகள் உடந்தை என்பதுதான் இதன் பின்னாலுள்ள பேருண்மையாகும்.
ஆனால் பிராந்திய – மேற்குலக சதியை புரிந்து கொள்ளாமல் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள்ளேயே மோதி தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது “தேர்தல் அரசியலினாலும் அரசியல்வாதிகளினாலும் தமக்கு ஏதும் நடக்கப்போவதில்லை” என்ற இறுதி முடிவுக்கு மக்களை உந்தி தள்ளும். விளவாக மக்கள் போராட உந்தப்படுவார்கள். அது மக்கள் – மாணவர் புரட்சிக்கான அடித்தளமாக இருக்கும்.
அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களையும் நம்பி ஆயுதங்களை மவுனித்த போராளிகள் அடுத்த கட்ட நகர்வு குறித்து சிந்திக்க வழி பிறக்கும் என்ற தெளிவு பிறக்கவும், இந்த தேர்தல் வழி செய்யப்போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்கவில்லை.
எனவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் புலிகள் விட்டு சென்ற இடத்தை சரியாக நிரப்பும் மாற்று தமிழ்த்தேசிய அரசியல் இயக்கமொன்றின் தேவையை மக்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தல் அரசியலை தவிர்த்து அதை தாயகத்தில் கட்டியெழுப்ப ஒன்று திரளுமாறு மக்களுக்கும், மாணவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.
மாவீரர்களின் தியாகங்களை மதித்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் வழியில் நின்று தாயகத்தை மீட்டெடுக்க உறுதியெடுப்போம்.
ஈழம்ஈநியூஸ்.
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
Previous articleமிக முக்கியமான வரலாற்றுக் கடமையாற்ற வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
Next articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி
eelamenews
RELATED ARTICLESMORE FROM AUTHOR
செய்திகள்
தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்
செய்திகள்
ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்
செய்திகள்
கொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது
ஆசிரியர் தலையங்கம்
உலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்
ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 12, 2020
0
தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்
ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 8, 2020
0
முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்
ஆசிரியர் தலையங்கம் eelamenews - April 30, 2019
0
EDITOR PICKS
ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்
January 12, 2021
தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்
July 31, 2020
ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்
July 31, 2020
POPULAR POSTS
ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்
January 12, 2021
ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்
July 31, 2020
தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்
June 8, 2020
POPULAR CATEGORY
செய்திகள்3831
பன்னாட்டு செய்திகள்472
ஆய்வுகள்388
உலகம்203
கேள்வி பதில்கள்155
ஆசிரியர் தலையங்கம்124
நேர்காணல்கள்39
அறிக்கைகள்7
எம்மைப் பற்றி
ஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.
தொடர்புகளுக்கு: [email protected]
சமூக வலைத் தளங்கள்
© Copyright © 2019 ஈழம் செய்திகள்
'); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })(); |
500 வருடத்திற்குமுன் இறந்துபோன பெண், மம்மி வடிவில் கண்டெடுப்பு! அதிசய, ஆச்சரியத் தகவல் 500 வருடத்திற்குமுன் இறந்து போன பெண், மம்மி வடிவில் கண்டெடுப்பு! அதிசய, ஆச்சரியத் தகவல் 500 வருடத்திற்கு முந்தைய பெண் மம்மி அர்ஜென்டினாவின் லூலைலி கோ (llullaillaco) எனற எரிமலை பகுதியில் ஒரு குகையில் (more…)
Read More
SHARE
Mar162011 by V2V AdminNo Comments
ஈமச்சடங்கில் விநோதங்கள் (எச்சரிக்கை – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் காண்க•) (செய்தி & வீடியோ)
மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி. பிறப்புக்கும் இறப்புக் குமான சிறு இடைவெளியில் வே ண்டுமானால் நம் வாழ்க் கையை நாம் தீர்மானித்துக் கொள் ளலாம். ஆனால் நம் தொடக் கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப் பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என் பதை அவன் சுற்றமோ, நட்போ தான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிட ங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும் பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்! எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் (more…)
Read More
SHARE
Mar92011 by V2V AdminNo Comments
சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமை யானதாகக் கருதப்படும் பெண் மம்மி யொன்று கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகா ணத் தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக் கும் பணியி ல் ஈடுபட்டிருந்த பணியாளர் களே இதனை முதலில் கண்டு ள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப் பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய் ச்சியாளர்கள் தெரி விக்கி ன்றனர் இந்த மம்மியில் அணிவிக் கப் பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பி டுகின்றனர். இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு (more…)
Read More
SHARE
சங்கு – அரிய தகவல்
Search for:
Advertisement
Categories
Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)
Recent Comments
Karan on தலைப்புச் செய்திகள்
Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள்
Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்…
Prabhakaran S on விபரீதத்தின் உச்சம் – மரணம் அனுப்பிய தூதுவன் கபம் – ஓரலசல்
Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி
த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன?
p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்படி?- செய்முறை காட்சி – வீடியோ
Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்
Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .
V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்
Archives
Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58) |
Pasumai Vikatan - 25 November 2016 - “கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!” | Pasumai Vikatan Agriculture Exhibition - Pasumai Vikatan - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
பசுமை விகடன்
ஆசிரியர் பக்கம்
முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து..!
கார்ட்டூன்
மகசூல்
நாட்டுக்கம்புக்கு நல்ல விலை... குவிண்டால் 4,500 ரூபாய்!
நாட்டு நடப்பு
5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்... நிறைவான வருமானம் தரும் மீன் வளர்ப்பு!
விவசாயிகளைக் காவு வாங்கும் வறட்சி... டெல்டா விவசாயிகளின் சோகம்!
காணும் இடமெல்லாம் கானகம்... வாழும் இடமெல்லாம் வனம்!
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”
அறிக்கைப் போர் நடத்தும் அரசியல்வாதிகள்... அலட்சியப்படுத்தும் ஆலைகள்...
கால்நடை வளர்ப்புக்கு... எங்ககிட்ட வாங்க!
கால்நடைகளுக்கும் செயற்கைக் கால்... அரசு மருத்துவரின் அர்ப்பணிப்பு!
“நிலத்தை வித்துட்டு பணத்தையா திங்க முடியும்..!” - பாடம் சொல்லும் படம்!
26 மாடுகள்... ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்!
தொடர்கள்
மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 4
பஞ்சகவ்யா! - 18 - தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்!
“இயற்கை விளைபொருட்களுக்கு தரம் முக்கியம்!” - ஒரு நாள் விவசாயி! பருவம்-2
சிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை! - 4
சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - 4
நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?
சந்தை
பசுமை சந்தை
அறிவிப்பு
தண்டோரா
பசுமை ஒலி
ஹலோ வாசகர்களே...
Published: 10 Nov 2016 5 AM Updated: 10 Nov 2016 5 AM
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”
Vikatan Correspondent
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
“கெண்டை மீனுக்கு எப்போதும் கிராக்கிதான்!”
கண்காட்சிஜி.பழனிச்சாமி - படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய வல்லுநர்களின் உரை வீச்சுகள் இங்கே இடம்பெறுகின்றன.
மண் நல்லது வேண்டும்!
செப்டம்பர் 10-ம் தேதி, இரண்டாம் நாள் அமர்வில் முதல் நபராக மேடையேறிய, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செந்தூர்குமரன், ‘தோட்டக்கலைப் பயிர்கள் பராமரிப்பு நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.
“விவசாயத்தின் முதல் படி மண்தான். மண் சரியில்லை என்றால் விவசாயம் ஜெயிக்காது. பயிர்களுக்கு உயிர் ஆதாரம் மண்தான். ஒரே தொழில்நுட்பத்தையே கடைப்பிடித்தாலும் நிலத்துக்கு நிலம் மகசூல் அளவு மாறுபடுவதற்குக் காரணம், மண் வள மாறுபாடுகள்தான். அடிப்படை சரியில்லை என்றால் எதுவும் சரியாக இருக்காது. விதை உறங்கி உயிர் பெறும் இடம் மண்தான். அதனால், மண் வளம் மிகவும் அவசியம். மண்ணின் தன்மை அறிந்து செய்யாத விவசாயம், புண்ணின் தன்மை அறிந்து செய்யாத சிகிச்சைக்குச் சமம். மண்ணை வளப்படுத்த இயற்கை உரங்கள் இடுவது அவசியமானது. ஏக்கருக்கு 12 டன் இயற்கை உரங்களை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் சுண்டு விரல்கூட மண்ணில் எளிதாகப் புகும் அளவுக்கு மண் பொலபொலப்பாக இருக்கவேண்டும். மண்ணை இளக்கி பொலபொலப்பாக்குவது, இயற்கை உரங்களால்தான் முடியும். பயிரின் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாகப் பரவக் காற்றோட்டம் உள்ள இடைவெளி மண்ணுக்குள் தேவை. அதேபோல கோடை உழவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மண்ணுக்கு அடியில் வாழ்ந்து வேர்களைத் தாக்கி சேதப்படுத்தக்கூடிய பூச்சி புழுக்களைக் கோடை உழவின் மூலம் அழிக்கலாம்.
உன்னதமான உயிர் உரங்கள்!
அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர் உரங்கள்... தண்டு அழுகல், வேர் அழுகல் நோய்த் தாக்குதல்களைத் தடுத்து செடிகளைக் காப்பாற்றுகின்றன. 1 கிராம் மண்ணில் 5 லட்சம் கோடி நுண்ணுயிரிகள் உள்ளன. அவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், தீமை செய்யும் நுண்ணுயிரிகள் இரண்டுமே உண்டு. நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், வேர்களைப் பலப்படுத்தி, மண்ணை வளப்படுத்தும். தீமை செய்யும் நுண்ணுயிரிகள் வேர்களை அழிக்கும். மண் வளத்தைக் கெடுக்கும். தீமை செய்யும் நுண்ணுயிரிகளை எதிர்த்து நின்று பயிர்களைக் காப்பாற்றுவதுதான் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வேலை.
இடைவெளி அவசியம்!
அதேபோல, நடவின்போது, சரியான இடைவெளி இருக்க வேண்டும். நெருக்கி நடவு செய்தால், எந்தப் பயிரிலும் அதிக மகசூலைப் பெற முடியாது. குழித்தட்டு முறையில் நாற்றாங்கால் அமைத்து நடவு செய்யும்போது, சாகுபடி நாட்கள் குறைவதுடன் அதிக மகசூல் பெற முடியும். நடவு செய்த நாளில் இருந்து வளர்ச்சியடைபவை, குழித்தட்டு நாற்றுகள்தான். மேட்டுப்பாத்தியில் விடப்படும் நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஒரே சீரான வளர்ச்சி இருக்காது. மேட்டுப்பாத்தி நாற்றுகளின் வளரும் தன்மை, நடவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். குறிப்பாக, காய்கறிப் பயிர்களுக்குக் குழித்தட்டு நாற்றாங்கால் முறை மிகவும் ஏற்றது. இம்முறையில், வழக்கமான அளவில் மூன்றில் ஒரு பங்கு விதை இருந்தாலே போதுமானது.
வேம்பு... கவனம்!
எந்தச் செடியாக இருந்தாலும் நடவு செய்த 15 நாட்கள் வரை பூச்சி, நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. அதற்குப் பிறகுதான் ஆரம்பமாகும். ஆனால், இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பதுதான் சிறந்தது. தொடர்ச்சியாக மூலிகைப் பூச்சி விரட்டியை பயன்படுத்திச் செடிகளைக் காப்பாற்றலாம். ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுப்பது உகந்தது. வேப்பிலைச்சாறு, அதன் எண்ணெய் எல்லாம் அமிர்தம் போன்றது. ஆனால், அளவுக்கு மிஞ்சக்கூடாது. வேம்பு சார்ந்த பொருட்களில் இரண்டாம் நிலை வேதியியல் கூறுகள் உள்ளதால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால், செடிகள் கருகிவிடும்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள நேரம் மகரந்தச்சேர்க்கை நடக்கும் நேரம் என்பதால், அந்த நேரத்தில், செடிகள் மீது பூச்சிவிரட்டி போன்றவற்றைத் தெளிக்கக்கூடாது. அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பூச்சி விரட்டி தெளிக்க உகந்த நேரம். அதேபோலப் பூக்கள் இருக்கும் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. செடிகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியின் போதுதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். விசைத்தெளிப்பான் மூலம் தெளிப்பவர்கள், செடிகளுக்கு 7 அடி தூரத்துக்குப் பின்னால் இருந்துதான் தெளிக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தின் அறிவியலை ஆழமாகப் புரிந்துகொண்டால், ரசாயன விவசாயத்தின் ஆபத்தில் இருந்து மாற வழி கிடைக்கும். முன்பு, பல ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால்தான் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல்லாண்டுகள் வாழும் மரப்பயிர்களுக்கு 3 ஆண்டுகளும், நெல், காய்கறிகள் போன்ற குறுகிய காலப்பயிர்களுக்கு 2 ஆண்டுகளும் இயற்கை விவசாயம் செய்து வந்தால் ‘அபிடா’ நிறுவனம், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் இயற்கை விவசாயச் சான்று கொடுக்கிறது” என்றார்.
கெண்டை மீனுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு!
அடுத்ததாகப் பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு குறித்து உரையாற்றினார், தூத்துக்குடி மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் கணேசன். “ஆடு, மாடு, கோழி... என ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து லாபகர விவசாயம் செய்து வருகிறார்கள் விவசாயிகள். தற்போது, மீன் வளர்ப்பும் ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்று வருகிறது. இன்றைய சூழலில், உள்நாட்டுப் பகுதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பு எளிதான தொழிலாக விளங்குகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்க்க முடியும். வெள்ளிக்கெண்டை, ரோகு, மிர்கால், ஜிலேபி கெண்டை, சாதா கெண்டை, கட்லா, புல் கெண்டை, முரல்ஸ், கேட்பிஷ், விறால் போன்ற ரகங்கள் பண்ணைக்குட்டை மீன்வளர்ப்புக்கு ஏற்றவை. இவற்றில் கெண்டைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு இருக்கும்.
லாபம் தரும் கூட்டு மீன் வளர்ப்பு!
களிமண் பாங்கான நிலம், மீன்குட்டை அமைக்க மிகவும் ஏற்றது. மற்ற வகை மண் சார்ந்த இடங்களில் குட்டை அமைக்கும்போது, அடிப்பகுதியில் முக்கால் அடி உயரத்துக்குக் களிமண் நிரப்பினால், தண்ணீர் பூமிக்குள் செல்லாது.
மீன் வளர்க்க குறைந்த பட்சம் 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலாவது குளம் அமைக்க வேண்டும். கூட்டு மீன் வளர்ப்புதான் அதிக லாபம் தரக்கூடியது. வெவ்வேறான உணவுப் பழக்க வழக்கங்களையும் வெவ்வேறான வளர்ச்சி விகிதத்தையும் கொண்ட பல்வேறு வகையான கெண்டை மீன்களை ஒரே குளத்தில், ஒரே சமயத்தில் வளர்ப்பதுதான் கூட்டு மீன் வளர்ப்பு. ஒரே குளத்தில் வளரும் மீன்கள், மேல் அடுக்கு, நடு அடுக்கு, கீழ் அடுக்கு ஆகிய மூன்று அடுக்குகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. மேல்மட்டத்தில் வளரும் மீன்கள் தாவர உணவுகளையும், நடு மட்டத்தில் வளரும் மீன்கள் பிராணி மிதவைகளையும், அடிமட்டத்தில் இருக்கும் மீன்கள் மட்கிய கழிவுகளையும் உணவாக எடுத்துக்கொள்கின்றன.
கெண்டை மீன்கள், வேகமாக வளரக்கூடியவை. பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் தன்மை உள்ளவை. ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மீன் குஞ்சு என்கிற விகிதத்தில் 1,000 சதுர மீட்டர் குளத்தில் 1,000 மீன் குஞ்சுகளை விடலாம். சாதா கெண்டை மீன்கள் குளத்தின் கீழ் அடுக்கில் வளரக்கூடிய ரகம். புழு பூச்சிகள், தண்ணீருக்கடியில் உள்ள சிறுதாவரங்கள், படர் பாசிகள், மட்கிய பொருட்கள் ஆகியவற்றை உண்ணக்கூடியவை.
நம் நாட்டு மீன்களில் முக்கியமானது கட்லா. இதைத் தோப்பா மீன் என்றழைக்கிறோம். இதுவும் வேகமாக வளரக்கூடியது. ஒரே ஆண்டில் இரண்டு கிலோ எடை வரை வளரும். ரோகு மீன்களும் விரைவான வளர்ச்சி கொண்டவை. சுவையானவை. தண்ணீரின் நடுமட்டத்தில் வளரக்கூடியது. மிர்கால் ரகம், அடிமட்டத்தில் வளரக்கூடியது. படர் பாசிகள், மட்கும் பொருட்கள் ஆகியவற்றை உண்ணக்கூடியது. ஜிலேபி கெண்டை, அதிகமான குஞ்சுகளை உற்பத்தி செய்யக்கூடிய இனம். பல நூறு மீன்குஞ்சுகள் ஒன்று சேர்ந்து அடர்த்தியாக வசிக்கக் கூடியது. மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. இறால் பண்ணைகளில் இறால்களுக்கு உணவாக ஜிலேபி கெண்டை குஞ்சுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அதிக விலை கிடைக்கும் விறால்!
அதிக விலை கிடைக்கக்கூடிய மீன் இனம், விறால். ஒரு கிலோ 600 ருபாய் வரைகூட விலை போகும். இவை, செதில்கள் மூலம் சுவாசிப்பவை. சுண்டுவிரல் அளவு மீன்குஞ்சுகளைத் தேர்வு செய்து குளத்தில் விட வேண்டும். அடர் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் விறால் குஞ்சுகள்தான் ஆரோக்கியமானவை. 2 சதுர மீட்டருக்கு 1 விறால் குஞ்சு வீதம் குளத்தில் விட வேண்டும். இவற்றுக்குக் குளிர்காலத்தில் நோய்த் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வேப்பிலையைப் பொடி செய்து, சம அளவு மஞ்சள் தூள் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பண்ணைக் குட்டைக்குள் தெளித்து நோய்களைத் தடுக்கலாம்.
சாணம்... கவனம்!
வாளியில் தண்ணீர் விட்டு தண்ணீரைக் கைகளால் சுற்றி விட்டு அதில் மீன் குஞ்சுகளை விட்டால்... தண்ணீரின் சுழற்சியின் எதிர்ப்பக்கத்தில் நீந்தும் மீன்குஞ்சுகள் தரமானவை. அந்தக் குஞ்சுகளைத்தான் வளர்ப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும். மீன் குளத்துக்குள் குறிப்பிட்ட இடைவெளியில் சாணக் கரைசலை ஊற்றி வந்தால், அதன் மூலம் தாவர நுண்ணுயிரிகள் உருவாகும். அவற்றை மீன்கள் சாப்பிடும். ஆனால், அளவுக்குஅதிகமாகச் சாணக்கரைசலை ஊற்றினால், மீன்களின் சுவாசம் தடைப்படும். தவிடு, பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் கலந்தும் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்” என்ற கணேசன் மானியங்கள் குறித்தும் விளக்கினார்.
மானியங்கள் உண்டு!
“மத்திய, மாநில அரசுகள் மீன் வளர்ப்புக்கு மானியங்கள் வழங்குகின்றன. குளம் வெட்ட இரண்டு லட்ச ரூபாய் வரை மானியம் உண்டு. மீன் குஞ்சுகள் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், மீன் வலை மற்றும் கட்டுமரம் வாங்க 50 சதவிகித மானியமும் உண்டு. 1,200 குவிண்டால் அளவுக்கு மதிப்புக்கூட்டிய மீன் உணவுத் தொழிற்சாலை அமைக்க 20 சதவிகித மானியம் உண்டு.
புதுக் குளம் வெட்ட மற்றும் பழைய குளத்தைப் பராமரிக்க... பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு 20 சதவிகித மானியமும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு 25 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க 10 சதவிகித மானியம் உண்டு. சொந்த நிலம் அல்லது 10 ஆண்டுக் காலத்துக்குப் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம் வைத்திருப்பவர்கள் மானியம் பெறத் தகுதியானவர்கள்.
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையிலும் பண்ணைக்குட்டை அமைக்க மானியம் கொடுக்கப்படுகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் நன்னீர் அதிகம் உள்ளதால், இங்கு அலங்கார மீன் குஞ்சுகள் நன்றாக வளரும். இவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது” என்றார்.
மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...
உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமல்ல... உண்பவர்களுக்கும் பலன்!
கண்காட்சிக்கு வந்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த தனலட்சுமி, “இயற்கை விவசாயம் செஞ்சிட்டு இருக்கேன். அது சம்பந்தமான நிறைய தகவல்களை இந்தக் கண்காட்சி வாயிலா தெரிஞ்சிட்டேன். இயற்கை விவசாயிகள் பலர் ஒண்ணாச் சேர்ந்து அமைப்பு தொடங்கி ‘உயிர் ஆர்கானிக்’ங்கிற பெயர்ல விற்பனை அங்காடி அமைச்சிருக்காங்க. நான் உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயக் காய்கறிகளை அதுமூலம் சிரமம் இல்லாமல் விற்பனை செய்றேன். கருத்தரங்கில், உழவர் உற்பத்தியாளர் கம்பெனி குறித்து விரிவா தெரிஞ்சுகிட்டேன். பசுமை விகடனின் இந்தக் கண்காட்சி உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமில்லாம உண்பவர்களும் பயனுள்ளதாக இருக்கு” என்றார். |
Junior Vikatan - 01 July 2020 - எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!|Sathankulam police atrocities - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
ஜூனியர் விகடன்
அலசல்
இ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்
சொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்?
பணம் பந்தியிலே... பழங்கள் குப்பையிலே! - கோயம்பேடு பகீர் - 7
ஓய்வுபெற இரண்டு வாரங்கள்... சர்ச்சை பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்! - ஃபாலோ அப்
டெல்லிக்குப் போன காசி!
கழுகார்
மிஸ்டர் கழுகு: அதிரடி காட்டிய கனிமொழி... ஆத்திரத்தில் ஆளும் அரசு!
கழுகார் பதில்கள்
அரசியல்
ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்!
இரு அவைகளும் பா.ஜ.க வசம்... ஒவ்வொன்றாக நிறைவேறப்போகின்றனவா ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்கள்?
‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க!’’ - அப்பாவு...
சமூகம்
ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா?
உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு - எதிர் வினைகள் என்ன?
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!
அசைவம் அத்தியாவசியம் இல்லையா?
தொடர்கள்
ஜெயில்... மதில்... திகில்! - 35 - வைகோவின் பொடா நாள்கள்!
கலை
மிஸ்டர் மியாவ்
Published: 27 Jun 2020 6 AM Updated: 27 Jun 2020 6 AM
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!
பி.ஆண்டனிராஜ்இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்
சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா ஊரடங்கு காலத்தில், இரவு-பகல் பாராமல், உயிரைப் பணயம்வைத்து காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் காவல் துறையினர்.
பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம், வழக்கம் போலவே கொரோனாவையும்கூடப் பணம் பார்க்கும் ஒரு விஷயமாகக் கையில் எடுத்துக்கொண்டு சில கறுப்பு ஆடுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், தேவையில்லாமல் பொதுமக்களை அடித்து நொறுக்குவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன. இந்நிலையில், `தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் இருவரின் உயிர்கள் காவல்துறையினரின் அத்து மீறலால் பறிபோய்விட்டன’ என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் குலைநடுங்க வைத்துள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும் அவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 8 மணிக்கு அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண்டும். ஜூன் 19-தேதி இரவு, ஜெயராஜ் கடையை அடைக்க தாமதமாகியிருக் கிறது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த போலீஸார், ஜெயராஜை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட பென்னிக்ஸும் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அன்று இரவே இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் சாத்தான்குளம் போலீஸார்.
நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் 20-ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். 21-ம் தேதி இரவு, மயங்கிய நிலையிலிருந்த பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். 22-ம் தேதி அதிகாலையில் பென்னிக்ஸ் இறந்துவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜெயராஜை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரும் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இறந்துபோன சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்தவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்கு வர மறுத்துச் சாலையில் உருண்டு புரண்டதில் உடலில் காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டிருப்பது உறவினர் களையும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. ‘காவல்துறையினர் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதால் தான் இருவரும் இறந்துபோயினர்’ என ஜெயராஜின் உறவினர்களும் வர்த்தகர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். அமெரிக்காவில் போலீஸாரால் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் சாத்தான்குளம் சம்பவத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பதிவிடுவது தமிழகக் காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
போராடியபோது...
சாத்தான்குளம் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் துரைராஜ், ‘‘ஜெயராஜும் அவரின் மகனும் அமைதியான சுபாவம் உடையவர்கள். அன்னிக்கு ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணனும் ரகுகணேஷும், `கடையைச் சீக்கிரம் அடைச்சுட்டுப் போய்யா...’னு சொன்னாங்க. ‘அடைச்சுக்கிட்டுதானே சார் இருக்கேன். இன்னும் நிறைய கடைகள் அடைக்கா மத்தானே இருக்கு’ என்று ஜெயராஜ் சொன்னார். உடனே அவரை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க. அப்பாவைக் கூப்பிட வந்த பென்னிக்ஸிடம் பக்கத்துக் கடைக்காரங்க விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. உடனே அவரும் ஸ்டேஷனுக்குப் போயிருக்கார். அங்கே அவரோட அப்பாவை போலீஸ்காரங்க அடிக்கிறதைப் பார்த்ததும், ‘அடிக்காதீங்க சார்’னு கத்தியிருக்கார். உடனே பென்னிக்ஸையும் அடிச்சுத் துவைச்சிருக்காங்க. அந்தச் சமயத்தில் வணிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஸ்டேஷனுக்குப் போனோம். ஆனா, எங்களை உள்ளேயே விடலை. கொஞ்சம் நேரம் கழிச்சு ஜெயராஜையும் பென்னிக்ஸையும் ஜீப்ல ஏத்திட்டுப் போனாங்க. அப்போ அவங்களால நடக்கவே முடியலை. அந்த அளவுக்குக் கொடூரமா அடிச்சிருந்தாங்க” என்று வருத்தப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜெயராஜின் உறவினர்களிடம் பேசினோம். ‘‘ஜெயராஜுக்கு மூணு மகள்கள். பென்னிக்ஸ் ஒரே மகன். அவனுக்கு 31 வயசாகுது. மூணு மகள் களுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டுது. பென்னிக்ஸுக்கு போன மாசம்தான் நிச்சயம் பண்ணினாங்க. டிசம்பர்ல கல்யாணம் வெக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.
ஹென்றி டிபேன், அருண்பால கோபாலன்
ஜெயில்ல அடைச்ச மறுநாள் பென்னிக்ஸோட நண்பர்கள் அவனைப் பார்க்கப் போயிருக்காங்க. அப்போ, ‘எங்களை நிர்வாணமாக்கி, ஏழெட்டு பேர் சேர்ந்து சுத்தி நின்னு கம்பால அடி அடினு அடிச்சாங்க. நாங்க கதறி அழுதும், இரக்கமே காட்டாம அப்பாவை வயித்துலேயே பூட்ஸ் காலால மிதிச்சாங்க. என்னோட ஆசனவாய்ல லத்தியாலயே குத்தினாங்க. ஆணுறுப்புல லத்தியைவெச்சு அடிச்சதுல என்னால சிறுநீர் கழிக்க முடியலை. மலம் கழிக்க முடியலை. ஆசனவாய்லருந்து ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கு’னு சொல்லி அழுதிருக்கான்’’ என்றனர்.
ஜெயராஜின் மனைவி ஜெயராணி, “எந்த வம்புக்கும் போகாத என் வீட்டுக்காரரையும் மகனையும் போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுட்டாங்க. `அடி தாங்க முடியாம அவங்க அலறுன சத்தம் சத்தம் தெரு முழுக்கக் கேட்டுச்சு’னு சொல்றாங்க. அந்த அளவுக்குக் கொடூரமா அடிச்சிருக்காங்க. இப்படி அடிச்சுக் கொல்ற அளவுக்கு அப்படி என்ன செஞ்சுட்டார்? போலீஸ்காரங்க கடை அடைக்கச் சொன்னதுக்கு ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினது அவ்வளவு பெரிய குத்தமா?’’ என்று கதறினார்.
இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் டாக்டர் சரியாகப் பரிசோதிக்காமல் மருத்துவச்சான்று கொடுத்துள்ளார். நீதிபதியிடம் இருவரையும் நேரில் ஆஜர்படுத்தவில்லை. நேரில் ஆஜர்படுத்தியிருந்தால், போலீஸின் டார்ச்சரை அவர்கள் சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். எஃப்.ஐ.ஆரில் ‘இருவரும் தரையில் புரண்டதால் உடலில் காயம் ஏற்பட்டது’ எனப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சிறையில் அடைக்கும் முன்பு ஜெயிலர் காயங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கப்பட வில்லை. தூத்துக்குடி எஸ்.பி-யான அருண்பால கோபாலன், தந்தை-மகன் கொலைக்குக் காரணமான போலீஸார்மீது எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. கலெக்டர்தான் இரு எஸ்.ஐ-க்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தவறு செய்த அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
எஸ்.பி-யான அருண்பால கோபாலன், ‘‘சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் இரு எஸ்.ஐ-க்கள், இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக் கின்றனர். ஆய்வாளர் உள்ளிட்ட மற்ற காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் விசாரணைக்குப் பின்னர்தான் முழு உண்மையும் தெரியும்’’ என்றார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை உடற்கூராய்வு செய்து முடித்த நிலையில், ‘எஸ்.ஐ-க்கள் மற்றும் காவலர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்யாதவரை உடலை வாங்க மாட்டோம்’ என்று ஜெயராஜின் உறவினர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். அதன்பிறகு, ‘இவ்வழக்கில் நீதிபதிகள் உரிய நீதியைப் பெற்றுத்தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்ன ஜெயராஜின் உறவினர்கள் இருவரின் உடல்களையும் பெற்று அடக்கம் செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாகவே, காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பலரும் கை கால்கள் உடைந்து, கட்டுப்போட்டபடிதான் வெளியில் வருகிறார்கள். ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்’ என்று நீதிமன்றங்களிலேயே கதை சொன்னது போலீஸ். போலீஸ் காவலுக்கு அனுப்பும்போது, ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துடாம பார்த்துக்கணும்’ என்று நீதிபதிகளே சொல்லும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. இந்நிலையில், ‘உயிர்களையே பறிக்கிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டும் சேர்ந்திருப்பது, காவல்துறைமீதான களங்கக் கறையை விரிவடையவே செய்துள்ளது. தற்காலிகப் பதவிநீக்கம், இடமாற்றம் போன்ற கண்துடைப்பு வேலைகளால் இந்தக் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது. தவறிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள்தான் இப்போதைய தேவை!
இன்னொரு லாக்-அப் மரணம்?
`இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒரு லாக்-அப் மரணம் நடந்தது’ என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ‘பேய்க்குளத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக, குற்றவாளியின் தம்பி மகேந்திரன் என்பவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கும் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடித்து உதைத்ததில் காவல்நிலையத்திலேயே மகேந்திரன் இறந்துவிட்டார். மகேந்திரனின் குடும்பத்தை மிரட்டி, இந்த விஷயம் வெளிவராமல் செய்துவிட்டனர். மகேந்திரனுக்கு 28 வயதுதான் இருக்கும்’ என்கிறார்கள்.
ஜூன் 25-ம் தேதி கோவில்பட்டி சிறையிலிருந்து ராஜா சிங் என்ற விசாரணைக் கைதி உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சாத்தான்குளம் பனைகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில் ஆசனவாயில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கொடூர விசாரணை ஸ்டைல்!
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எந்தப் புகாராக இருந்தாலும் அடித்துவிட்டுத்தான் விசாரணையே நடத்துவார் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். சில தினங்களுக்கு முன்பு மதபோதகர் ஒருவரையும், உடனிருந்த ஏழு பேரையும் அடித்து நொறுக்கியுள்ளனர் இந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக டி.ஐ.ஜி-யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் இரு காதுகளிலும் ஓங்கி அடிப்பார்களாம். ஆணுறுப்பு, விலாப் பகுதி, ஆசனவாய்ப் பகுதிகளில் லத்தியால் குத்தி சித்ரவதை செய்வார்களாம். அடி வாங்கியவர்கள் மயங்கி விழுந்தால் தண்ணீரை ஊற்றி எழுப்பி, அனைவரும் சேர்ந்து ரவுண்டுகட்டி அடித்துத் துவைப்பார்களாம். இப்படி விசாரணைக்குச் சென்று வந்தவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆகுமாம்.
காவல்துறையை எச்சரித்த உயர் நீதிமன்றம்!
ஜூன் 23-ம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை மூன்று மருத்துவர்கள்கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவுசெய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
மேலும், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி வருவதால், ஜூன் 24-ம் தேதி இதைப் பொதுநல வழக்காகக் கருதி தாமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு 24-ம் தேதி காலை வழக்கை விசாரிக்கத் தொடங்கியபோது, ‘‘காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் மரணமடைவது அடிக்கடி நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம்’’ என்று சொன்னதோடு, ‘‘வழக்கு விசாரணையில் தமிழக
டி.ஜி.பி-யும், தூத்துக்குடி எஸ்.பி-யும் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் 12:30 மணிக்கு ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். ஒரு மீட்டிங்கில் இருந்ததால், டி.ஜி.பி-க்கு பதிலாக தென்மண்டல ஐ.ஜி ஆஜரானார். விசாரணையின்போது, போலீஸார்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ‘‘இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தீவிரமாகக் கண்காணிக்கும். தற்போது இந்த வழக்கை விசாரித்துவரும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர், சுதந்திரமாக விசாரணை நடத்துவார். அந்த விசாரணையில் இந்த நீதிமன்றம் தலையிடாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர் நீதிபதிகள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
murder
controversy
police
death
Coronavirus
lock down
பி.ஆண்டனிராஜ்Follow
பத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.
இ.கார்த்திகேயன்
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் "சிறந்த மாணவராக" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.
எல்.ராஜேந்திரன்Follow
18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று. |
Diesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63!' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை | For the first time in delhi diesel price crossed rs 80 mark - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 25 Jun 2020 2 PM Updated: 25 Jun 2020 2 PM
Diesel Price: `19 நாள்கள்; லிட்டருக்கு ரூ.10.63!' -டெல்லியில் ரூ.80-ஐக் கடந்த டீசல் விலை
தினேஷ் ராமையா
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
பெட்ரோல், டீசல் விலை
டெல்லியில் தொடர்ந்து 19 நாள்களாக விலையேற்றம் செய்யப்பட்டது. முதல்முறையாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐக் கடந்திருக்கிறது.
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், தனிநபர் வாகனப் பயன்பாடும் வெகுவாகக் குறைந்தது. இதனால், பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் திடீரெனப் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்தநிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், கூடுதல் நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியது.
பெட்ரோல், டீசல்
ஊரடங்கால் பெட்ரோல், டீசல் விலைமாற்றம் செய்யப்படுவதை பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் மாத மத்தியில் நிறுத்தின. இதனால், 82 நாள்களாக விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்கப்பட்டு வந்தன. ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் வாகனப் பயன்பாடு ஓரளவுக்கு அதிகரித்தது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலையைப் பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த 7ம் தேதி முதல் மாற்றியமைக்கத் தொடங்கின.
அதன்படி, தொடர்ந்து 19வது நாளாக விலையேற்றப்பட்டதால், தலைநகர் டெல்லியில் முதல்முறையாக டீசல் விலை ரூ.80-ஐக் கடந்தது. இந்த விலையேற்றத்தால், நேற்று முதல்முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமானது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76 என்ற விலையில் விற்கப்பட்ட நிலையில், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.79.88-க்கு விற்கப்பட்டது.
Also Read
Petrol Price:`18-வது நாளாக விலையேற்றம்’- டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை அதிகம்!
இந்தநிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 19வது நாளாக டீசல் விலையை ஏற்றின. 14 காசுகள் விலை உயர்ந்த நிலையில், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.02 என்ற விலையில் விற்கப்படுகிறது. பெட்ரோல் விலையில் நேற்று மாற்றம் செய்யப்படாத நிலையில், இன்று 16 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.92 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை
டெல்லியில் தொடர்ச்சியாக 19 நாள்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.63 என்ற அளவிலும், பெட்ரோல் விலை ஒருநாளைத் தவிர 18 நாள்கள் உயர்த்தப்பட்ட நிலையில், லிட்டருக்கு ரூ.8.66 என்ற அளவிலும் விலை அதிகமாகியிருக்கிறது. மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மற்ற மாநிலங்களில் டீசல் விலை பெட்ரோல் விலையை விடக் குறைவாக இருக்கும் நிலையில், டெல்லியில் வாட் வரியை மாநில அரசு உயர்த்தியது. இதனால், அங்கு பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று ஏற்றம் கண்டிருக்கின்றன. பெட்ரோல் 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.18 என்ற விலையில் விற்கப்படுகிறது. டீசல் 52 காசுகள் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.77.29 என்ற விலையில் விற்பனையாகிறது. |
ப.சிதம்பரம் கைது விவகாரம்... எல்லாமே புதுசு... ஆனா, ஒண்ணு மட்டும் ரொம்பப் பழசு! |Delhi High Court Quotes from a 2017 Order to Deny Bail to Chidambaram - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 21 Nov 2019 5 PM Updated: 21 Nov 2019 5 PM
ப.சிதம்பரம் கைது விவகாரம்... எல்லாமே புதுசு... ஆனா, ஒண்ணு மட்டும் ரொம்பப் பழசு!
ஜெனிஃபர்.ம.ஆ
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை என இரு தரப்பிலிருந்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
அமலாக்கத்துறையினரின் கஸ்டடியிலிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். நம் தலைவர்களுக்குச் சிறைக் கம்பிகள் ஒன்றும் புதிதில்லைதான். ஆனால் இவர் விஷயத்தில் மட்டும் நிறையவே புதுமைகள் இருக்கின்றன. சுவர் ஏறிக் குதித்த சி.பி.ஐ தொடங்கி, இந்தக் கைது நடைமுறையா அல்லது பழிவாங்கலா என்ற சூடான விவாதங்கள் எல்லாம் தொடர்ந்து, சி.பி.ஐ வழக்கில் திஹார் சிறையிலிருந்த அவரை விசாரணை முடிந்த கையோடு அங்கிருந்தே அமலாக்கத்துறை கைது செய்தது வரை எல்லாமே புதுசுதான். ஆனால், இவர் ஜாமீன் மறுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மட்டும் பழசிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் இப்போது மிகப்பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
ப.சிதம்பரம்
2007-ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் சிதம்பரம். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை என இரு தரப்பிலிருந்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த எதிர்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இது மட்டுமல்ல, கவனிக்கப்பட வேண்டிய செய்தி, நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் அளித்த 41 பக்கத் தீர்ப்பில், குறிப்பிட்ட சில பகுதிகள் அமலாக்கத் துறையின் எதிர்மனு மற்றும் வேறு ஒரு தீர்ப்பிலிருந்து அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக `Wire’ பத்திரிகை கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
Delhi High Court
எதிர்மனுதாரரான அமலாக்கத் துறையின் மனுவில் இடம்பெற்றிருக்கும் அதே வாக்கியங்களும் பாராக்களும் இல்லாமல், குறைந்தபட்சம் வாக்கியங்களையாவது மாற்றி அமைத்திருக்கலாம் என்று, தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
Also Read
``கோயில் நிலத்தை ஆக்கிரமித்தாரா ராமதாஸ்?''- ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டும் பா.ம.கவினரின் பதிலும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் எழுதிய தீர்ப்பில், அமலாக்கத் துறையின் எதிர் மனுவில் உள்ள வாசகங்கள் மட்டுமல்லாது, 2017 ஆம் ஆண்டு வேறொரு ஜாமீன் மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பின் வரிகளும் அப்படியே இடம் பெற்றிருக்கின்றன. அமலாக்கத் துறைக்கும் ரோஹித் டாண்டன் என்பவருக்கும் இடையேயான வழக்கில், நீதிபதி S.P.கார்க் கொடுத்த தீர்ப்பில் `15.11.2016 முதல் 19.11.2016 வரை 31.75 கோடி ரூபாய் வரை 8 வங்கிக் கணக்குகளில் கோடக் மஹிந்திரா பேங்க் கிளைகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேதி, தொகை என எதையும் மாற்றாமல் அப்படியே அதே வாசகங்கள், நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் எழுதிய இந்தத் தீர்ப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த வாசகங்களுக்கும் ப.சிதம்பரத்தின் வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் விஷயம்.
வழக்கு
Pixabay
இது மட்டுமல்ல இதே ரோஹித் டாண்டன் வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்தும் இரண்டு பாராக்கள் ப.சிதம்பரம் வழக்கின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை இறுதியாக இரு பக்கங்கள் கூடுதலாக இணைந்து தீர்ப்பு வெளியாகி இருந்தால், இதை நீதிமன்ற அலுவல் பிழை (Clerical error) என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 41 பக்கத் தீர்ப்பின் இடையிடையே, வாக்கிய தொடக்கத்தில் மட்டும் சிறு மாற்றத்தோடு இடைச்செருகலாக இப்படிப் பல பகுதிகள் வெட்டி ஒட்டப்பட்டிருப்பது, நீதி வழங்குதலில் இருக்கும் கவனப்பிழையையே காட்டுகிறது.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து விளக்கம் கொடுத்திருக்கும் நீதிபதி கெயிட், `இந்தத் தீர்ப்பு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது கிடையாது. மேற்கோள் காட்டுவதற்காக மட்டுமே டாண்டன் வழக்கை தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இந்த வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே என்று ஒரு சாரார் உறுதியாகக் கூறிக்கொண்டிருக்க, நீதித்துறையின் நடுநிலைமை கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய இந்தியச் சூழலில், தேசமே உற்றுநோக்கும் ஒரு வழக்கின் தீர்ப்பில் இத்தகைய பிழைகளும் கவனக் குறைபாடுகளும் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ப.சிதம்பரம்
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது, அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
karti chidambaram
p. chidambaram
supreme court
high court
cbi
inx media case
bail
enforcement department
enforce directorate
ஜெனிஃபர்.ம.ஆ
Advocate by Profession. Journalist by Passion. Interests: Writing / Reading / Travelling Writes: International and National Politics / Social Affairs / Legal Issues |
கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தின் பாகமாக அனைத்து அமெரிக்க பள்ளிகளும் மூடப்பட வேண்டும்! - World Socialist Web Site
பட்டியல்தேடுக
சமீபத்தியதுசுயவிவரம்
தமிழ்
தொடர்புகொள்ள|பற்றி|
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)
பட்டியல்தேடுக
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)
சமீபத்தியதுசுயவிவரம்
முன்னோக்குகள்
தொழிலாளர் போராட்டங்கள்
கலை & கலாச்சாரம்
வரலாறு
சமூக சமத்துவமின்மை
ஏகாதிபத்திய எதிர்ப்பு
); }
நான்காம் அகிலம்
சோசலிச சமத்துவக் கட்சி
IYSSE
WSWS பற்றி
தொடர்புகளுக்கு
முன்னோக்கு
கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தின் பாகமாக அனைத்து அமெரிக்க பள்ளிகளும் மூடப்பட வேண்டும்!
Socialist Equality Party (US)
10 September 2021
facebook icon
twitter icon
whatsapp icon
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்கா எங்கிலும் மழலையர் முதல் 12ம் வகுப்புவரையான (கே-12) பள்ளிகளை மீண்டும் திறந்திருப்பது பேரழிவுகரமாக இருக்குமென்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளதுடன், கோவிட்-19 பெருந்தொற்று மிகப்பெரியளவில் அதிகரிக்க அது எரியூட்டி வருகிறது. ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி, ஏழு நாட்களின் நாளாந்த புதிய நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை இப்போது 137,270 ஆக உள்ளது, இது கடந்தாண்டு தொழிலாளர் தினத்தில் இருந்த சராசரியை விடவும் மூன்று மடங்கிற்கும் அதிகமாகும். கடந்த மாதத்தில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பள்ளிகளை மீண்டும் திறந்துள்ள பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஏனைய நாடுகளிலும் அதிகரிப்புகள் இருக்கின்றன, அதேவேளையில் தடுப்பூசி இடும் விகிதங்கள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இந்த பெருந்தொற்று எங்கேயுமே அகற்றப்படும் நிலைமைக்கு அருகில் இல்லை.
மிகவும் அச்சமூட்டும் வகையில், செப்டம்பர் 2 இல் முடிவடைந்த வாரத்தில் 251,781 குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி குறிப்பிடுகிறது. இந்த பெருந்தொற்று தொடங்கியதற்குப் பின்னர், இதுவே குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச அளவாகும், மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த அளவை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
ஆகஸ்ட் 26, 2021 அன்று வடக்கு டகோட்டாவின் வாட்ஃபோர்ட் நகரில் உள்ள ஃபாக்ஸ் ஹில்ஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கதவை அதிபர் பிராட் ஃபோஸ் திறந்து வைத்திருக்கிறார். (AP Photo/Matthew Brown)
கோவிட்-19 நோய்தொற்றுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இந்த உலகளாவிய கொள்கை, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்,” தீவிர பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முற்றிலுமாக ஒழித்தல் என கோவிட்-19 பெருந்தொற்றுக்காக எழுந்துள்ள மூன்று மூலோபாயங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் இந்த வைரஸை உலகம் முழுவதும் ஒழிக்கும் ஒரு பரந்த மூலோபாயத்தின் பகுதியாக எல்லா பள்ளிகளையும் உடனடியாக மூட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் பேரழிவு தெளிவுபடுத்துகிறது. இந்த மூலோபாயம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், வெகுஜனங்களுக்கு தடுப்பூசிகள், பயணக் கட்டுப்பாடுகள், முகக்கவசம் அணிதல், அனைவருக்கும் பரிசோதனை, நோயின் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் என இவற்றின் மூலம் முற்றிலுமாக இதை ஒழிக்க முடியும் என்பதை இந்த மூலோபாயம் நிரூபிக்கிறது. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை சுமார் 15.2 மில்லியனாக இருக்கலாம் என்ற எக்னோமிஸ்ட் இதழின் சமீபத்திய மதிப்பீடு, தொழிலாள வர்க்கத்திடையே இந்த மூலோபாயத்தைப் பிரபலப்படுத்த வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிடுகிறது.
பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்
கோவிட்-19 நோய் பாதிக்கும் வகையில் 40 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை, சரியான காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகளில் நடைமுறையளவில் நெருக்கமாக ஒன்று கூட்டி, பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறந்திருப்பது, ஆளும் வர்க்க பிரிவுகள் முன்னெடுத்துள்ள 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தின் மிகவும் கொடூரமான வெளிப்பாடாகும். இளைஞர்களுக்கு வேகமாக நோய்தொற்று ஏற்படுத்துவதன் மூலம் மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படும் பிரிவுகளை 'பாதுகாக்க' முடியும் என்ற மோசடி வாதத்தின் அடிப்படையில், இந்த மூலோபாயம் நடைமுறையில் சமூகத்தில் அனைவரையும் வைரஸிடம் ஒப்படைப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழப்பதையும் ஏற்றுக் கொள்கிறது.
பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் அமெரிக்காவில் குழந்தைகள், கல்வியாளர்கள் மற்றும் பரந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் சமூக குற்றத்தின் அளவைப் பின்வரும் விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன:
• தெற்கு மாநிலங்களில் குழந்தையர் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்ற நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச சராசரியாக 365 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
• கடந்த மாதம், கோவிட்-19 ஆல் 73 குழந்தைகள் உயிரிழந்தனர், இது இந்த பெருந்தொற்று ஆரம்பித்ததற்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட குழந்தை இறப்புகளிலேயே அதிகபட்ச அளவாகும்.
• இந்த கல்வியாண்டில் இதுவரையில் 197 க்கு அதிகமான எண்ணிக்கையில் பள்ளி பணியாளர்கள் உயிரிழந்திருப்பதை #SchoolPersonnelLostToCovid என்ற ட்வீட்டர் பக்கம் பதிவு செய்துள்ளது, இதில் பெரும்பான்மை ஆகஸ்டில் நிகழ்ந்துள்ளது.
• பல கல்வியாளர்களும் இந்த கல்விப் பருவத்தில் டெக்சாஸ் வாகோ, ஜோர்ஜியா புல்லொச் உள்ளாட்சி, புளோரிடா போல்க் உள்ளாட்சி மற்றும் இன்னும் பலவற்றில் ஒரே பள்ளியில் அல்லது மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
• மியாமி-டேட் கவுண்டி பொது கல்வித்துறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 15 கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சமீபத்திய 100 நாளுக்குள் கோவிட்-19 ஆல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
• பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் உத்தரவு நீக்கப்பட்ட டெக்சாஸில், ஆகஸ்ட் 29 இல் முடிந்த வாரத்தில் கோவிட்-19 ஆல் 27,353 மாணவர்கள் பரிசோதனையில் நோய்தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 51 சதவீதம் அதிகமாகும்.
ஒரு தலைமுறை இளைஞர்கள் அறியப்படாத நீண்ட கால விளைவுகளோடு நோய்க்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கோவிட் ஆல் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்டகால நோய் பற்றிய உலகின் மிகப் பெரிய ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள், கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளான குழந்தைகளில் 4 சதவீதத்தினருக்கு 15 வாரங்களுக்குப் பின்னர் மிகவும் பொதுவான சோர்வு மற்றும் தலைவலிகளுடன் அந்த வைரஸூடன் தொடர்புடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.
நோய்த்தொற்று அதிகரிப்பு, மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளும் பள்ளிகளை மீண்டும் திறப்பதை முற்றிலும் குழப்பமானதாக ஆக்கியுள்ளது. 35 மாநிலங்களில் குறைந்தபட்சம் 1,000 பள்ளிகள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் காரணமாக இந்த பள்ளி கல்வியாண்டை தொலைதூர கற்றலுக்கு மாற்ற வேண்டியிருந்ததாக தரவு சேவை நிறுவனம் பர்பியோ குறிப்பிடுகிறது. கென்டக்கியில், அனைத்து பள்ளி மாவட்டங்களில் ஐந்தில் ஒன்றை மூட வேண்டியிருந்தது, பல வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள பல மாநிலங்களிலும் ஒப்பீட்டளவில் இதேபோன்ற புள்ளிவிபரங்களே இருக்கின்றன.
பள்ளிகளை மீண்டும் திறப்பதை 'பாதுகாப்பாக' செய்ய முடியும் என்றும், இது முற்றிலும் குழந்தைகளின் கல்வி மற்றும் உணர்வுரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தவே செய்யப்படுகிறது என்றும் அரசியல்வாதிகளும், ஊடகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் கூறும் கூற்றுக்கள் எரிச்சலூட்டும் பொய்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை இந்த உண்மைகள் தெளிவுபடுத்துகின்றன.
கே-12 பள்ளிகளை மீண்டும் திறப்பதானது, தீவிரத்தைக் குறைப்பதற்கான எந்தவித இன்றியமையா நடவடிக்கைகளும் இல்லாமல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நேரடி வகுப்புகளுக்காக மீண்டும் திறப்பதோடும் ஒத்துப்போகிறது. அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதங்களைக் கொண்டுள்ள டியூக் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் இன்னும் பல பள்ளிகளிலும் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வடக்கு கரோலினாவின் அப்பலாச்சியன் மாநில பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டமை, அப்பகுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்ச மட்டத்திற்கு அதிகரிக்க பங்களிப்பு செய்துள்ளது. தொழிலாளர் தின வார இறுதியில் பார்த்தவாறு, பத்தாயிரக் கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் நிரம்பிய கால்பந்து மைதானங்கள் தவிர்க்க முடியாதபடி பாரியளவில் நோய்தொற்று பரப்பும் நிகழ்வுகளாக ஆகியிருந்தன, இது எண்ணற்ற புதிய நோயாளிகள் மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் எப்போதும்போல் பொருளாதாரரீதியாகத் தான் உள்ளது, இது பெற்றோரை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பெருநிறுவனங்களின் தேவைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலையில், பைடெனின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் பிரையன் டீஸ் குறிப்பிடுகையில், 'குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பள்ளிகள்' இல்லாததே இப்போதிருக்கும் 'தொழிலாளர் பற்றாக்குறைக்கு' பின்னால் உள்ள பிரதான காரணிகளில் ஒன்று என்று அப்பட்டமாக கூறினார். பள்ளிகளின் திறப்பு, வேலைவாய்ப்பற்றோருக்கான பெடரல் சலுகை வெட்டுகளுடனும் மற்றும் வெளியேற்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நிறுத்தம் நீக்கப்படுவதுடனும் சேர்ந்து வருகிறது. இது பாதுகாப்பற்ற பள்ளிகளுக்குக் குழந்தைகளையும் அனுப்பி, அவர்களும் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கு திரும்பாவிட்டால் வீடற்ற நிலைமை மற்றும் வறுமைக்கு உள்ளாக வேண்டியிருக்குமென மில்லியன் கணக்கான குடும்பங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
அரிசோனா, அர்கன்சாஸ், அயோவா, ஓக்லஹோமா, புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ் மற்றும் உற்றா உள்ளடங்கலாக குடியரசுக் கட்சி தலைமையிலான மாநிலங்களின் பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் ஆணையை நீக்குவதிலிருந்து 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயம் கொடூரமாக எடுத்துக்காட்டப்படுகிறது, இந்த மாநிலங்கள் குழந்தைகள் உள்ளடக்கி நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களாகும். இந்த பள்ளிகளில், இந்த கல்வியாண்டு தொடங்கி மூன்று மாதங்களுக்குள் சுமார் 91 சதவீத மாணவர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்றும், நோயாளிகளின் அதிவேக அதிகரிப்பின் காரணமாக முதல் மாத முடிவிலேயே பெரும்பாலான மாணவர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்றும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட ஒரு விஞ்ஞான ஆய்வு மதிப்பிட்டது.
பள்ளிகளில் தணிப்பு நடவடிக்கைகள்: நோய்தடுப்பு சிகிச்சையுடன் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்'
தீவிர பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கைகளுக்கான இரண்டாவது பெருந்தொற்று மூலோபாயமானது, முகக்கவசங்கள் அணிவதனாலும், பணியாளர்களுக்கும் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி இட தகுதியான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலமாகவும் பள்ளிகளை மீண்டும் 'பாதுகாப்பாக' திறக்கலாம் என்ற பொய்யான வாதத்தை முன்வைக்கிறது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு' ஒரு மாற்றீடாக தணிப்பு நடவடிக்கைகளுக்கான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றாலும், யதார்த்தத்தில் அந்த மூலோபாயத்தின் கூர்மையான பகுதிகளைச் சற்று மழுங்கடித்து அதே மூலோபாயத்தின் ஒரு மாற்று வடிவமாக மட்டுமே இது இருக்கிறது.
இந்த கொள்கை தவிர்க்க முடியாமல் மில்லியன் கணக்கான குழந்தைகளைப் பாதிக்கும் என்பதும், கோவிட்-19 பரவலை ஆழப்படுத்தும் என்பதும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் 'தணிப்பு நடவடிக்கைகளுடன்' பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஊக்குவிக்கும் ஊடகப் பிரதிநிதிகளுக்குத் தெரியும். மருத்துவமனைகள் மற்றும் பிற சமூக சேவைகளின் பற்றாக்குறை மிதமிஞ்சி நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக மட்டுமே அவர்கள் இதை மெதுவாக செய்ய முற்படுகிறார்கள். தீவிரப் பரவலைத் தடுப்பதற்கான அவர்களின் தணிப்பு முயற்சிகள் வைரஸுக்கு எதிரானதல்ல, மாறாக 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளின் விளைவுகளுக்கு எதிராக இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, இந்த பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி தான் மொத்த தீர்வு என்ற வாதம் தடுப்பூசிகளின் செயல்திறன் பண்புகளைச் சார்ந்தது, இப்போதைக்கு அவை அந்தளவுக்கு கிடையாது. 12 வயதுக்குக் கீழ் உள்ள எல்லா குழந்தைகளும் உள்ளடங்கலாக மக்களின் கணிசமான பகுதிக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக தொடர்ந்து அந்த வைரஸ் பரவிக் கொண்டிருப்பதானது இன்னும் வெகுவாக பரவக்கூடிய மற்றும் தடுப்பூசிக்கு எதிரான புதிய வகைகள் பரிணமிப்பதற்கான நிலைமைகளை தோற்றுவிக்கிறது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுகிறது என்பதோடு அவர்களும் வைரஸைப் பரப்புகிறார்கள், டெல்டா வைரஸ் வகையின் வெளிப்பாடு 'நோய்தொற்றுக்களின்' அதிகரிப்பில் ஒரு 'திருப்புமுனையை' ஏற்படுத்தி உள்ளது, முன்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களும் நோய்வாய் படுகிறார்கள் மற்றும் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது என்பதும் இதில் உள்ளடங்கும்.
தடுப்பூசி ஒரு சக்தி வாய்ந்த கருவி தான் என்றாலும், புதிய நோய்தொற்றுகளை விரைவாக பூஜ்ஜியமாக குறைப்பதையும், அவ்விதத்தில் கோவிட்-19 ஐ ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த மூலோபாயத்திலிருந்து அது துண்டிக்கப்பட்டுள்ளது, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பிற பரவல் தடுப்பு தணிப்பு நடவடிக்கைகள், நோய்த்தடுப்பு கவனிப்பைத் தவிர வேறொன்றுமில்லை.
'தணிப்பு நடவடிக்கைகள்' உடன் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மிகவும் குரல் கொடுப்பவர், அமெரிக்க ஆசிரியர் சம்மேளனத்தின் (AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன் ஆவார், இவர் கடந்த மாதம் அமெரிக்கா எங்கிலும் 20 மாநிலங்களில் இந்த கொலைபாதக கொள்கையை ஊக்குவிக்க 'அனைவரையும் பள்ளிக்குத் திரும்பச் செய்யும்' பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார். தொழிலாளர் தினத்தன்று வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண அறிக்கையில், AFT உறுப்பினர்கள் 'புதிய பள்ளி கல்வியாண்டில் நேரடி வகுப்புகளுக்குத் திரும்ப இருப்பதைக் குறித்து சந்தோஷப்படுவதாக' வைன்கார்டன் கூறினார்.
'இந்த டெல்டா வகை பள்ளிகளைத் திறந்து விடவும், அவை அனைவருக்கும் பாதுகாப்பானதாக, ஆரோக்கியமானதாக, வரவேற்பதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்குமான நம் தீர்மானத்தை மாற்றிவிட வில்லை. ஆனால் தடுப்பூசிகள், முகக்கவசங்கள், காற்றோட்ட வசதி, கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளி, பரிசோதனைகள் மற்றும் வெடிப்பு ஏற்பட்டால் அதற்கான தெளிவான வழிமுறைகள் என நம் பள்ளி சமூகங்களைப் பாதுகாக்க வைக்க அது நமக்குத் தெரிந்த கருவிகளை இன்னும் சிறப்பாக பயன்படுத்த செய்துள்ளது,” என்று அந்த பெண்மணி எழுதினார்.
பெரும்பாலான கல்விசார் மாவட்டங்கள் ஏற்கனவே மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், அறிக்கையை எழுதியிருந்த வைன்கார்டனுக்கு, பெரும்பாலான பள்ளிகளில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்பது நன்றாகவே தெரியும். தடுப்பூசிகள் கட்டாயம் ஆக்கப்படவில்லை, முகக்கவசங்கள் அவ்வபோது அணியப்படுகிறது, 30,000 க்கும் அதிகமான அமெரிக்க பள்ளிகளில் பழைய கால காற்றோட்ட அமைப்பு வசதிகளே உள்ளன, பல பள்ளிகளில் சவர்காரம் மற்றும் கைத்துடைக்கும் துணிகள் கூட இல்லை, 30 அல்லது அதற்கு அதிகமான மாணவர்களுடன் வகுப்பறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை, போதுமானளவுக்குப் பரிசோதனைகளும் கிடையாது.
கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே கொள்கையின் அடிப்படையாக மற்றும் இலக்காக இருக்க வேண்டுமென பல விஞ்ஞானிகளும், சாமானிய தொழிலாளர்களும், பெற்றோர்களும், பொது சுகாதாரத் துறையில் சம்பந்தப்பட்டவர்களும் தனிப்பட்டரீதியில் நம்புகிறார்கள். ஆனால் அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் அளப்பரிய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அவர்கள், இந்த சரியான மற்றும் அவசியமான கொள்கையை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது என நினைக்கிறார்கள். சிறந்த நோக்கங்கள் இருந்தாலும் கூட, தீவிரப் பரவலைக் குறைக்கும் தணிப்பு நடவடிக்கை மூலோபாயத்திற்கே பின்வாங்கி, காற்றோட்ட வசதி, சமூக இடைவெளி, நாளாந்த பரிசோதனை, நோயின் தடம் அறிதல் மற்றும் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த நடவடிக்கைகளின் தொகுப்புக்கே அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்கள் அதை நியாயப்படுத்த முயன்றாலும் கூட, இந்த அணுகுமுறை தவறானதே.
முடிந்த வரை உயிர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் கூட, தணிப்பு மூலோபாயத்திற்கு எந்த விதத்திலும் பின்வாங்குவது தவறானது என்பதோடு, பள்ளிகளில் வைரஸ் பரவலைக் குறித்த விஞ்ஞானபூர்வ யதார்த்தத்தைத் தவிர்க்கிறது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடையே இந்த வைரஸை இல்லாது ஒழிக்கும் மூலோபாயத்தைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலையும் பாரிய நனவையும் அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே, இந்த பெருந்தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தில் பள்ளி மூடுவது வகிக்கும் பாத்திரம்
பள்ளிகள் வைரஸ் பரவலின் முக்கிய மையங்களாக நீண்ட காலமாக அறியப்பட்டுள்ளன. கோவிட்-19 க்கு இது வேறு விதமாக இல்லை என்பதை ஜனவரியில் வெளியான ஓர் ஆய்வு எடுத்துக்காட்டியது. 10 இல் இருந்து 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 30-49 வயதுடைய பெரியவர்களிடையே இருந்த நோயாளிகளின் அதிகரிப்பை விட அதிகமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், அதாவது பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்கள் பெற்றோருக்கு நோய்தொற்றை ஏற்படுத்துகிறார்கள், இதற்கு எதிர்மாறாக இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.
கோவிட்-19 பரவுவதற்கு மனித உடலைப் பயன்படுத்துகிறது என்பதோடு, அது பரவும் எல்லா வழிகளையும் துண்டிப்பதன் மூலமாக மட்டுமே அதை ஒடுக்க முடியும் என்பதே அகற்றுதல் - முற்றிலுமாக ஒழித்தல் மூலோபாயத்தின் அடிப்படை விதியாகும். இதற்கு, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல், பயணக் கட்டுப்பாடுகள், பாரிய பரிசோதனை, முகக்கவசம் அணிதல், நோயின் தடம் கண்டறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் பாரிய தடுப்பூசிகளுடன் சேர்ந்து பிற அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளும் அவசியப்படுகின்றன.
ஆகஸ்ட் 22 இல் நடத்தப்பட்ட உலக சோசலிச வலைத் தள இணையவழி கூட்டத்தில் பேசிய கால்கரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் மால்கோர்சாட்டா காஸ்பெரோவிச் (Malgorzata Gasperowicz), தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகள் இருந்திருந்தால் 2020 தொடக்கத்தில் 37 நாட்களிலேயே புதிய நோயாளிகளை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்திருக்கும், மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார். டெல்டா மாறுபாட்டின் பரவலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவரது மாதிரி வடிவம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தடுப்பூசிகளோடு சேர்ந்து தீவிரமான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமாக இரண்டே மாதங்களில் அந்த வைரஸை அகற்ற முடியும் என்று மதிப்பிடுகிறது. இதன் பரவலை நிறுத்த தடுப்பூசிகள் மட்டுமே போதுமானது இல்லை என்று வலியுறுத்திய அவர், 'அதை நிறுத்த, அதன் வேகத்தைக் குறைக்க நம் கருவிப்பெட்டியில் நாம் வைத்திருக்கும் அனைத்தும் நமக்குத் தேவைப்படுகிறது,' என்றார்.
1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு பரந்த சமூகமான சீனாவிலும், நியூசிலாந்திலும் பிற நாடுகளிலும், மேலே குறிப்பிடப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் தொகுப்பைப் பயன்படுத்தியதன் மூலம், வைரஸை அகற்றும் மூலோபாயம் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. கோவிட்-19 ஐ அகற்றிய பின்னர், இந்த நாடுகள் இப்போது சர்வதேச பயணத்தின் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட டெல்டா மாறுபாடு மீண்டும் வெடித்திருப்பதை எதிர்த்துப் போராடி வருகின்றன.
சீனாவின் மிக சமீபத்திய வெடிப்பு குவாங்ஜோவில் சர்வதேச பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, அந்த ஹோட்டலில் 42 வயதான தொழிலாளர் ஜ்சூ, பரிசோதனையில் கோவிட்-19 நோய்தொற்றுக்கு ஆளாகி இருந்தார், சீனாவில் அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் செய்யப்படுவதைப் போல, உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். சுற்றியுள்ள பகுதிகளில் பாரியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது, சனிக்கிழமை நள்ளிரவுக்குள் சேகரிக்கப்பட்ட 92,185 மாதிரிகள் அனைத்தும் எதிர்மறையாக இருந்தன. ஜ்சூ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா, நியூசிலாந்து மற்றும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களின் விடையிறுப்பு இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும் என்பதைக் காட்டுகிறது. அவை செயல்படுத்திய அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள், கிட்டத்தட்ட மொத்த அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் விவரிக்கும் விதத்தில், எந்த வகையிலும் 'எதேச்சதிகாரம்' அல்ல. மாறாக, கோவிட்-19 ஐ அகற்ற சமூகத்தின் ஆதார வளங்களைத் திரட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அவை எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஓர் உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இது மேற்கொள்ளப்பட்டால், இந்த பெருந்தொற்றை விரைவிலேயே ஒழித்து விட முடியும்.
இந்த முற்றிலும் ஒழிக்கும் மூலோபாயம், பொது சுகாதார முறையைத் தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் ஒன்றுசேர்கிறது. கடந்தாண்டில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குக் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் காட்டிய கோபம் வேண்டுமென்றே தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியால் நசுக்கப்பட்டது, என்றாலும் அது அலபாமா, டென்னசி, ஹவாய், ஜோர்ஜியா மற்றும் இன்னும் பல மாநிலங்களில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள், மருத்துவ விடுப்புகள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் மூலமாக அபிவிருத்தி அடைய தொடங்கி உள்ளது. அந்த வைரஸை முற்றிலுமாக ஒழிக்கும் மூலோபாயத்தைச் செயல்படுத்துவதில் இந்த எதிர்ப்பு ஒருமுனைப்பட வேண்டும்.
பல தசாப்தங்களாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் பொதுக் கல்விக்குக் குழிபறித்து, பிற்போக்குத்தன்மை மற்றும் தனிநபர்வாதத்தை வளர்த்ததன் மூலம், இப்போது மில்லியன் கணக்கானவர்கள் தடுப்பூசி மீது ஐயறவு கொள்ளும் நிலைமைகளை உருவாக்கி உள்ளது. இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானத்தையும், கோவிட்-19 ஐ முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்பதையும், அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதையும் மக்களிடையே கல்வியூட்ட எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும்.
பெருநிறுவன இலாபங்களுக்காக அதன் பலிபீடத்தில் பல மில்லியன் உயிர்களின் தியாகம், நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். ஆளும் உயரடுக்குகளின் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கை மற்றும் தீவிர பரவலை குறைக்கும் தணிப்புக் கொள்கைகள் ஆகியவற்றைத் ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைக்காமல் மாற்ற முடியாது. நாட்டின் மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதற்கு பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குத் தயாரிப்பு செய்யப்பட வேண்டும்.
ஆசிரியர் சங்கங்கள் மற்றும் இரு பெரு வணிகக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட சாமானிய குழுக்கள், இலாபங்களை விட தொழிலாளர்களின் உயிருக்கு முன்னுரிமை வழங்க அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உலகளவிலும் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களை உடனடியாக மூடவும், அத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் போதிய ஆதாரவளங்களை வழங்கவும் மற்றும் உயர்தரமான தொலைதூர கல்வி வழங்கவும் போராடுவதற்கு, ஒவ்வொரு பள்ளிக்கல்வி மாவட்டத்திலும் மற்றும் அண்டைப் பகுதியிலும் இந்த வலையமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும். உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றி இறுதியில் முழுமையாக ஒழிக்க சாமானிய குழுக்கள் என்ற வடிவத்தில் மட்டுமே அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கும்போது, இத்தகைய ஒரு இயக்கம் தொழிற்சாலை மற்றும் நாடெங்கிலும் வேகமாக பரவும்.
மேலும் படிக்க
கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி
24 August 2021
இங்கிலாந்து அரசாங்கம்: ஆண்டுக்கு 50,000 கோவிட்-19 மரணங்கள் "ஏற்கத்தக்கவை"
29 August 2021
அடுத்த மூன்று மாதங்களில் ஐரோப்பாவில் 236,000 கோவிட்-19 இறப்புக்கள் நிகழும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது
2 September 2021
பள்ளிகளை மீளத் திறப்பதை எதிர்க்கவும்: குழந்தைகள் மற்றும் கல்வியாளர்களின் வாழ்க்கை முக்கியம்!
3 September 2021
Contact us
Related Topics
Find out more about these topics:
கொரோனா வைரஸ் பரவல்முன்னோக்குகள்சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)கல்விசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்அமெரிக்காவிஞ்ஞானம்சுகாதார பராமரிப்பு |
இந்த மாதம், இரண்டு ஆண்டுகளில் 675,000 அமெரிக்கர்களைக் கொன்ற 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயை தாண்டி, COVID-19 உத்தியோகபூர்வமாக அமெரிக்க வரலாற்றில் ஒரு கொடிய தொற்று நோயாக மாறியது.
அமெரிக்கா முழுவதும் தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சோகமான மைல்கல் வருகிறது. செவ்வாய்க்கிழமை 2,152 பேர் இறந்த பின்னர், 2,228 அமெரிக்கர்கள் புதன்கிழமை COVID-19 க்கு தங்கள் உயிரை இழந்தனர். Worldometers.info படி, இந்த கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில், அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 700,000 ஐ எட்டியிருக்கும்.
செப்டம்பர் 21, 2021, செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில், கோவிட்-19 இல் இறந்த அமெரிக்கர்களை நினைவுகூரும் வகையில், கலைஞர் சுஸான் ப்ரென்னன் ஃபிர்ஸ்டன்பேர்க்கின் 'அமெரிக்காவில்: நினைவில் கொள்ளுங்கள்,' இன் ஒரு பகுதியாக இருக்கும் வெள்ளை கொடியின் மத்தியில் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். (AP Photo/Patrick Semansky)
அமெரிக்காவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் அமெரிக்கா வெறும் 4.2 சதவிகிதம் மட்டுமே உள்ளது, ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 4.7 மில்லியன் இறப்புகளில் 14 சதவிகிதம் ஆகும்.
தொற்றுநோயின் மறைக்கப்பட்ட எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட மிக அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட் -19 இறப்புகளில் ஏறத்தாழ 35 சதவிகிதம் கணக்கிடப்படவில்லை, அதாவது அமெரிக்காவில் உண்மையான இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, இது சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) இன் சமீபத்திய ஆய்வோடு ஒத்துப்போகிறது.
Annals of Internal Medicine இல் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் கோவிட்-19 க்கு 9.1 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையை இழந்துள்ளது. 'கோவிட்-19 வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டுமல்ல, இளைய மற்றும் ஆரோக்கியமான குழுக்களுக்கும் ஒரு தொற்றுநோய் என்பதை எங்கள் முடிவுகள் நிரூபிக்கின்றன' என்று ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
COVID-19 தொற்றுநோயைப் போன்ற ஸ்பானிஷ் காய்ச்சலின் பேரழிவு தாக்கம், மனித உயிர்களைப் பாதுகாப்பதை இலாபத்திற்கு அடிபணியச் செய்த ஆளும் வர்க்கத்தின் நனவான முடிவின் விளைவாகும்.
ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் கன்சாஸ் (Kansas) மாநிலத்தில் தோன்றியது, ஆனால் அது உலகம் முழுவதும் பரவி, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதித்தது. இது முதலாம் உலகப் போரின் அகழிகளில் பரவியது, அவற்றின் சுகாதாரம் மற்றும் போதுமான மருத்துவ பராமரிப்பு இல்லாததால் மிகவும் அறியப்பட்டது.
நோயின் பெயர், 'ஸ்பானிஷ் காய்ச்சல்', இது, இந்த நோயின் இருப்பு பற்றி மக்களுக்கு தெரியாமல் இருக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளை பிரதிபலித்தது. போர்க்கால தணிக்கை, இந்த நோயைப் பற்றி தீவிரமான மற்றும் நேர்மையான அறிக்கைகளை தடைசெய்தது, ஆனால் ஸ்பெயினில் உள்ள பத்திரிகைகள் அதன் பரவலை அறிவித்தது, இது தவறான பெயருக்கு வழிவகுத்தது.
காய்ச்சலின் கொடிய தன்மையை நன்கு அறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்சன், தொற்றுநோய் குறித்து எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடவில்லை. தி கிரேட் இன்ஃப்ளூயன்சா (The Great Influenza) வின் ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஜோன் எம். பாரி குறிப்பிட்டார், 'தொற்றுநோய்க்கு ஒரு கூட்டாட்சி பதிலை நிர்வகிக்கும் வகையில், எந்த ஒரு தலைமைத்துவமும் இல்லை அல்லது வெள்ளை மாளிகையிலிருந்து எந்த வழிகாட்டுதலும் இல்லை. வில்சன் போர் முயற்சியில் கவனம் செலுத்த விரும்பினார். எதிர்மறையான எதுவும் மன உறுதியையும், போர் முயற்சியையும் காயப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய், ஏகாதிபத்திய வெற்றிக்கான போரை நடத்துவதற்காக பெருங்கடல்கள் முழுவதும் துருப்புக்களை திரட்டிய போருடன் நெருக்கமாக தொடர்புடையது. துருப்புக்கள், குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் துருப்புக்களைப் பாதித்த பேரழிவுகரமான எண்ணிக்கை இருந்தபோதிலும், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் வைரஸ் இன்னும் உயிர்களைக் கொன்றது.
ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய்க்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர், மனித சமூகம் புறநிலை ரீதியாக COVID-19 ஐ நிறுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் மிகவும் சிறப்பாக தயாராக உள்ளது. கோவிட்-19 க்கு எதிரான மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் வெறும் 10 மாதங்களில் உருவாக்கப்பட்டன. தகவல்தொடர்பு மற்றும் தகவல்களின் புரட்சிகள் பாதிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்புகள் பற்றிய விரிவான அறிவைப் பெறச் சாத்தியமாக்கியுள்ளது. பயனுள்ள மற்றும் பாதுகாப்பான சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் உடனடியாகக் கிடைக்கிறது.
எவ்வாறாயினும், முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் உயிர்களைக் காப்பாற்றவும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தக் கருவிகளின் பகுத்தறிவு பயன்பாட்டைத் தடுத்துள்ளன. கோவிட்-19 இலிருந்து இறப்புகள் பெருமளவில் அதிகரித்திருந்தாலும் கூட, அமெரிக்க ஆளும் வர்க்கம் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது. இது நோயின் பாரிய மீள் எழுச்சி என நிபுணர்கள் கணிப்பதற்கு வழிவகுத்தது.
தொற்றுநோயை ஒழிக்க இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவம் வெகுஜன மரணத்தை 'வழமையாக்கியது'.
உலக சோசலிச வலைத் தளம் டிசம்பர் 2020 ல் எழுதியது:
“மனித வாழ்வை' விட 'பொருளாதார ஆரோக்கியத்திற்கு' முன்னுரிமை கொடுத்து, அவ்விரண்டையும் ஒப்பிடத்தக்க இயல்நிகழ்வாக கையாள்வதென்ற இந்த முடிவு, வர்க்க நலன்களில் வேரூன்றிய இந்த முடிவில் இருந்து தான், உயிரிழப்புகளை வழமையாக்குவது எழுகிறது. அரசியல் ஸ்தாபகம், செல்வந்த தட்டுக்கள் மற்றும் ஊடகங்களால் இந்த ஒப்பிடுதலும் முன்னுரிமைப்படுத்தலும் நியாயமானதென ஏற்றுக் கொள்ளப்பட்டதும், பாரிய மரணங்கள் தவிர்க்கவியலாதவையாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள் என்பது மாலை செய்தி மற்றும் முக்கிய ஊடகங்களில் அரிதாகவே தெரிவிக்கப்படுகிறது. இந்த இறப்புகள், மனித வாழ்க்கையின் தேவையற்ற வீணாகக் கருதப்படாமல், அவை வாழ்க்கையின் ஒரு பாகமாகக் கருதப்படுகின்றன.
ஏனென்றால், முழு அமெரிக்க அரசியல் அமைப்பும் COVID-19 க்கு சமூக ரீதியாக அவசியமான மற்றும் விஞ்ஞானபூர்வமான பதிலை நிராகரித்துள்ளது: அதன் ஒட்டுமொத்த அழிப்பை. அமெரிக்க ஆளும் வர்க்கம் மக்கள் தொற்றுநோயுடன் 'வாழ' கோரியுள்ளது.
தொழிலாள வர்க்கம் இந்த வெகுஜன மரணக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் மற்றும் எதிர்க்க வேண்டும்! முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள், வைராலஜிஸ்டுகள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், ஒழிப்பு மூலோபாயத்திற்காக அது போராட வேண்டும். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், அதற்கு கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். அதாவது: பள்ளிகளை மூடுவது மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தி; தடுப்பூசிகளுடன் இணைந்து வெகுஜன சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல். வைரஸை ஒருமுறை அழிக்க, இவை அனைத்தும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இது, ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய்க்கான சூழலாக இருந்த முதல் உலகப் போரின் காலத்தைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தேவைப்படுகிறது. இந்த கொடிய நோயை ஒழிக்க ஒரு போராட்டத்தை நடத்தும் ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே.
மேலும் படிக்க
உலக சோசலிச வலைத் தளமும், 2020 நெருக்கடியும்
21 December 2020
“அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம்:” COVID-19 பரவுவதை ஊக்குவிக்க வெள்ளை மாளிகை முயன்றதாக மின்னஞ்சல்கள் காட்டுகின்றன
20 December 2020
தொற்றுநோயும், உயிரிழப்புகளை வழமையாக்குவதும்
11 December 2020
Contact us
Related Topics
Find out more about these topics:
கொரோனா வைரஸ் பரவல்முன்னோக்குகள்ஐக்கிய-அமெரிக்காவட அமெரிக்காமருத்துவம் மற்றும் உடல்நலம்சுகாதார பராமரிப்புவிஞ்ஞானம்தொழிலாளர் போராட்டம் |
மாலி நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் இராணுவத்தின் கிளர்ச்சிப் படைப் பிரிவு ஒன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இராணுவச் சதிப் புரட்சி இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் பூபக்கர் கெய்த்தா(Ibrahim Boubacar Keïta), பிரதமர் பூபோ சீசீ (Boubou Cissé) ஆகிய இருவரும் இராணுவக் கிளர்ச்சிக் குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இவர்களது கைதுகளை அடுத்து தலைநகர் பமக்கோ (Bamako) படைகளது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. .கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக நகரில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. அரச வானொலியின் வழமையான சேவைகள் நின்றுபோயுள்ளன.
கடந்த 2018 இல் இரண்டாவது தடவையாக தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி கெய்த்தாவை பதவி விலகக் கோரி கடந்த பல மாதகாலமாக அங்கு எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்திவந்தன. அந்த நிலையிலேயே தற்போது இராணுவக் குழு ஒன்று ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு உள்ளது.
மாலி நாட்டின் அரசமைப்பு வழிமுறைகளுக்குப் புறம்பாக ஆட்சியை கவிழ்க்க அங்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் தனது நாட்டின் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸின் முன்னாள் காலனித்துவ நாடான மாலியின் நிலைவரம் குறித்து அதிபர் மக்ரோன் பிராந்திய நாடுகளின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு வருகின்றார் என எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிரான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரெஞ்சுத் துருப்புக்களில் பெரும் பங்கினர் மாலி நாட்டில் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாலியின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புச்சபை புதனன்று அவசரமாகக் கூடி ஆராயவுள்ளது. மாலி மக்கள் தங்களது ஜனநாயகக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்று ஐ. நா. செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மாலியின் ஜனாதிபதி இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தெடார்பாக அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சியையும், நாடாளுமன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். மேலும், தான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பள பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராணுவ வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம் – Kumarathasan Karthigesu முகநூல்..
.
Related
Spread the love
Tweet
You may also like
இலங்கை • பிரதான செய்திகள்
பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல்
இலங்கை • பிரதான செய்திகள்
கோப்பாயில் டிப்பர் விபத்து – ஒருவர் படுகாயம்!
இலங்கை • பிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
இலங்கை • பிரதான செய்திகள்
குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பேர்த்தியும் கைது!
இலங்கை • பிரதான செய்திகள்
சிறி VS டக்ளஸ் – பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் – டக்ளஸ் – அரசின் கால்களை நான் கழுவுபவன் அல்ல நான் – சிறிதரன்!
இலங்கை • பிரதான செய்திகள்
கிண்ணியா பிரதேச செயலகம் முற்றுகை! 17 பேர் மீட்கப்பட்டனர்!
Add Comment
Click here to post a comment
Leave a Reply Cancel reply
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
கோண்டாவில் புகையிரத நிலைய களஞ்சிய சாலை உடைத்து திருட்டு
கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்!
Comment
Recent Posts
பருத்தித்துறை மாவீரா் தின ஏற்பாடுகளிலும் படையினரால் அச்சுறுத்தல் November 23, 2021
கோப்பாயில் டிப்பர் விபத்து – ஒருவர் படுகாயம்! November 23, 2021
வல்வெட்டித்துறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு November 23, 2021
குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பேர்த்தியும் கைது! November 23, 2021
சிறி VS டக்ளஸ் – பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் – டக்ளஸ் – அரசின் கால்களை நான் கழுவுபவன் அல்ல நான் – சிறிதரன்! November 23, 2021
Global Tamil News
Most Popular
வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…
0 Views
அலரி மாளிகையை விட்டு வெளியேற ரணிலுக்கு காலக்கெடு – அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இல்லை :
0 Views
நீர்வேலியில் கோவிலில் வைத்து வாள்வெட்டு மேற்கொண்டவர்களுக்கு விளக்கமறியல்
0 Views
Most Discussed
அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் |
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
Log in
Username:
Password:
I forgot my password
Log in automatically
Or
Top posters
Admin
தோழன்
ஜவாஹிரா
மருத்துவன்
yazer arafath
Dr.S.Soundarapandian
ram_soft2003
yasar arafath
thamizhan
machavallavan
Ads
No ads available.
படை தேமலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
ஆயுர்வேத மருத்துவம் :: அறிவுப்புகள்-ANNOUNCEMENT :: கேள்விகள்-QUESTIONS
Page 1 of 1
படை தேமலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:34 am
கேள்வி : ஐயா என் உடல் முழுவதும் படை போன்று (தேமல் என்று சொல்கிறார்கள்) நிறய இருக்கிறது ஊசி, மாத்திரை, களிம்பு எதுவும் பலன் அளிக்கவில்லை. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-ஆர். தேவராஜ் மன்னார்குடி.
பதில் : இரத்தத்தில் அசுத்தமான மேகநீர் கலப்பதனால் சர்ம நோய்கள் வருகிறது. ஆங்கில மருத்துவத்தில் இரத்த்த்தை சோதித்து NEGATIVE என்பர். அதாவது ரத்தத்தில் கோளாறு ஒன்றும் இல்லை என்பர். பல ஊசிகள் மருந்து கொடுத்தும் பலன் இராது. நோய் இன்று போய் நாளை வரும்.
எந்த வித சரும நோய் இருந்த போதிலும் கீழ்கண்ட எண்ணெய்யை தயார் செய்துகொண்டு காலை வெரும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு 2 அவுன்ஸ் பசும் பாலில் அல்லது வென்னீரில் விட்டு 2,3 மாதங்கள் சாப்பிடவும். வருடக்கணக்கில் இருந்தால் வருஷத்துக்கு ஒரு மாதம் வீதம் எண்ணெயை சாப்பிடவேண்டும்.
.
பத்தியம் : உடலுரவு, நல்லெண்ணை, கடுகு புலால் கூடாது. கடுமையான நோய் இருப்பின் புளியையும் தள்ளிவிடவேண்டும்.
.
வெள்ளருகு சாறு, வெள்ளை வெங்காய சாறு, வல்லாரை சாறு, சீமை அகத்தி சாறு, தேங்காய் பால், விளக்கெண்ணை,
இதை ஒவ்வொன்றிலும் ஒரு லிட்டர் எடுத்து எல்லாவற்றையும் கலந்து மண் பாத்திரத்திலிட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எரிக்கவும்.
நெய் காச்சும் பக்குவத்தில் அதாவது சிடுசிடுப்பு அடங்கியதும் இறக்கிவிடவும். மேற்கண்ட சாறுகளில் ஏதாவது கிடைக்காவிடில் அதை விட்டு மற்ற சாறுகளை கலந்து காய்ச்சிக்கொள்ளவும்.
Admin
Admin
Posts : 1697
Points : 4763
Reputation : 11
Join date : 15/09/2010
Like
Dislike
ஆயுர்வேத மருத்துவம் :: அறிவுப்புகள்-ANNOUNCEMENT :: கேள்விகள்-QUESTIONS
Page 1 of 1
Jump to: Select a forum||--அறிவுப்புகள்-ANNOUNCEMENT| |--என்னை பற்றி-ABOUT ME| |--தொடர்புக்கு-CONTACT| |--உறுப்பினர்கள் அறிமுகம்-MEMBERS ITNTRODUCTION| | |--பொதுவான உறுப்பினர்கள்| | |--மருத்துவ உறுப்பினர்கள்| | | |--கேள்விகள்-QUESTIONS| |--இலவச ஆலோசனைக்கான விண்ணப்பம்-CONSULTATION FORM| |--பொதுவான அறிவிப்புகள்-GENERAL ANNONCEMENT| |--ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம்| |--அடிப்படை தத்துவங்கள்-BASIC PRINCIPLES| | |--AYURVEDIC BASIC PRINCIPLES-ENGLISH| | | |--நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT| | |--பொதுவானவை -GENERAL TREATMENTS| | | |--GENERAL TREATMENTS -ENGLISH| | | | | |--நுரையீரல் சார்ந்த நோய்கள்-RESPIRATORY SYSTEM DISEASES| | |--வயிறு சார்ந்த நோய்கள் -GASTRO INTESTINAL TRACT & DIGESTIVE SYSTEM DISEASES| | |--நரம்பியல் நோய்கள் -NEUROLOGICAL DISASES| | |--இதய & இரத்த ஓட்ட நோய்கள் -HEART ,CIRCULATORY SYSTEM DISEASES| | |--நாளமில்லா சுரப்பி நோய்கள் -ENDOCRINE SYSTEM DISEASES| | |--சிறுநீரகம் சார்ந்த நோய்கள் -UROLOGICAL SYSTEM DISEASES| | | |--ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY| | |--AYURVEDIC MEDICINE & INDICATIONS-AYURVEDIC PHARMACY-ENGLISH| | | |--எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES| | |--MUSCULO SKELTON DISEASES-VATHA VYAADI -ENGLISH| | | |--சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE| | |--KAYA CHIKICHA -GENERAL MEDICINE-ENGLISH| | | |--மர்மம் & வர்மம் MARMA & VARMA CHIKICHA| | |--MARMAM & VARMAM -ENGLISH| | | |--பஞ்ச கர்ம சிகிச்சைகள் -PANCHA KARMA| | |--PANCHA KARMA -ENGLISH| | | |--ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM| | |--RASAYANAM , VAAJEEKARANAM -AYURVEDIC APHRODISIAC -ENGLISH| | | |--நோய் அணுகா விதி & யோகா & யோகா சிகிச்சைகள் SWASTHA VRUTTHAM & YOGA| | |--SWASTHA VRUTTHAM & YOGA -ENGLISH| | | |--பெண்கள் & குழந்தைகள் நலம் - STHREE ROGAM & KOWMARA BRUTHYAM| | |--STHREE ROGAM & KOWMARA BRUTHYAM -GYNECOLOGY & PEDIATRCIS-ENGLISH| | | |--தோல் நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DERMATALOGY| | |--AYURVEDIC DERMATALOGY -ENGLISH| | | |--குழந்தை இன்மைக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் -INFERTILITY AYURVEDIC TREATMENT| |--மனம் உள்ளம் சார்ந்த நோய்கள்-MAANASEEKA ROGA-AYURVEDIC PSYCHIATRY| | |--MANASA ROGA -AYURVEDIC PSYCHIATRY-ENGLISH| | | |--ஆயுர்வேதம் & மாற்றுமுறை மருத்துவம் சாந்த புத்தகங்களின் தரவிறக்கம் -BOOKS DOWNLOAD| |--ஆயுர்வேதத்தின் சிறப்புகள் & பொதுவானவை (கட்டுரைகள்..)| |--குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION| |--மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS| |--ஆயுர்வேத மூலிகைகள் -AYURVEDIC HERBALS| | |--Ayurvedic and herbals-English| | | |--ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் & பயன்கள்| |--அறிவை வளர்க்கும் மூலிகைகள்-HERBS FOR CONCENTRATION & INTELIGENCE| |--ஆண்மை வளர்க்கும் மூலிகைகளின் தொகுதி-APHRODISIAC HERBS-SEXUAL HERBS| |--பூ காயுடன் மூலிகை படங்கள் & அரிய மூலிகைகளின் கண்காட்சி -HIGH RESOLUTION HERBAL PICTURES| |--த்ரவ்ய குணம் -DRAVYA GUNAM -AYURVEDIC HERBS -PHARMACOGNACY| | |--DRAVYA GUNA-PHARMACOGNACY-ENGLISH| | | |--மூலிகைகளின் தொகுதி -PHARMACEUTICAL GROUPS OF HERBS| |--மூலிகை சமையல் -HERBAL KITCHEN| |--சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE| |--அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA| |--சித்தர்கள் -SIDDHARKAL| |--சித்த மருந்துகள் -SIDDHA MEDICINES| |--சித்த மருத்துவத்தின் தனி தன்மை -Individuality of siddha medicine| |--ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE| |--ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE| |--இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY| |--அக்குபஞ்சர் ACUPUNCTURE| | |--ACUPUNCTURE-ENGLISH| | | |--இயற்கை மருத்துவம் NATUROPATHY| |--எளிய வைத்திய குறிப்புகள் (அழகு குறிப்புகள் ,பாட்டி வைத்தியம் ..) HOME REMEDIES| |--மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD| |--யுனானி மருத்துவம் UNANI MEDICINE| |--ஆங்கில மருத்துவம்-ALLOPATHY| |--இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE| |--இயன் முறை மருத்துவம் -PHYSIOTHERAPY| |--ஆரோக்கிய உணவுகள் -FOOD & NUTRITION| |--இயற்கை விவசாயம் -ORGANIC FARMING| |--இது உங்கள் பகுதி -IT IS FOR U| |--பொது அறிவு பகுதி -GENERAL INFORMATIONS| |--மருத்துவம் சார்ந்த விவாதக்களம்-DISCUSSION AND DEBATE| |--மருத்துவம் சார்ந்த கவிதைகள்-POEMS FOR HEALING| |--மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES| |--Competitive Exams Questions and Answers-தகுதி தேர்வு வினா விடைகள்|--தோழியின் பக்கங்கள் ..| |--சித்த இராச்சியம் தோழி| |--பணம் சம்பாதிக்கலாம் வாங்க..| |--வேலை வாய்ப்பு| |--சிறுதொழில்| |--தன்னம்பிக்கை -personality development| |--பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX |--ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை & பாலியல் விஷயங்கள்-AYURVEDA -INDIAN MEDICINES FOR SEX |--பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX |
中文 日本語 한국어 اردو فارسی עברית தமிழ் српски језик العربية ภาษาไทย Ελληνικά Български македонски Český Dansk Deutsch Eesti English Español Français Hrvatski Indonesia Italiano Latviešu Magyar Nederlands Norsk Polski Português Português (br) Pyccкий Română Slovenčina Suomi Svenska Tϋrkçe Tiếng Việt
Toggle navigation
Just Landed
வழிகாட்டிகள்
சமுதாயம்
velaigal
kudiyiruppu
siru vilambarangal
Directory
Loginபதிவு செய்யவும்
இந்தியா
List a company
Directory
Jobs
Job portals
JobGrin
Job portals அதில் இந்தியா
Rajkot, 360001
India Show map
+91 8 905 009 955
Go to website
முகவரி: Rajkot, 360001, India Get directions
JobGrin.Co.In - India's most popular job portal focusing on providing the most efficient resources to employers and the best job to job seekers within India. JobGrin is headquartered in Gujarat and provides services to their clients all over in India.
More than 5 million people have registered on the JobGrin. Today, JobGrin provides opportunities in all fields such as; IT, Marketing, Agriculture, Management, Customer Service, Engineering, Legal, Networking, and much more.JobGrin connects job seekers and recruiters by accurately matching candidate profiles to the relevant job openings.
Printரிப்போர்ட் சரியாகபயன்படுத்த்ப்படவில்லை
Share on Facebook
Share on twitter
Share on LinkedIn
நண்பருக்கு அனுப்பவும்
JobGrinக்கு ஒரு செய்தி அனுப்பவும்
ஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)
செய்தி அனுப்பவும்
செய்தி அனுப்பவும்
+91 8 905 009 955
Go to website
trigger
×
Try Paypal
Some of users are having trouble paying with our bank ING with valid card details. We recommend you try your credit card with PayPal (you do not need an account) as this has solved the problem for many people. |
குரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....
Tuesday, September 2, 2008
தூரப்போ....
குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.
"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.
குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...
அதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.
வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.
பல வருடங்கள் கடந்தது...
ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.
'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.
பிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."
பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.
தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.
யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.
நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.
வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.
முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.
தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.
பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.
தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.
"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.
பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...
"தூரப்போ"....
அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.
-------------------------ஓம்--------------------------
குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...
தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?
Posted by ஸ்வாமி ஓம்கார் at 12:40 PM
Labels: உபதேசம், குரு, குருவை தேடி, மந்திர ஜபம்
9 comments:
Anonymous said...
நகைசுவை இழையோடும் பக்தி பரவசம். நன்றி சுவாமி ஓம்கார்.
அன்பன்
ரமேஷ்
September 2, 2008 at 3:57 PM
ஸ்வாமி ஓம்கார் said...
எனது இனிய ரமேஷ் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு நன்றி.
நவீன யுகத்தில் உண்மையை கூற நகைச்சுவை தேவைப்படுகிறது...
உங்கள் அன்பன்
சுவாமி ஓம்கார்
September 2, 2008 at 4:33 PM
Anonymous said...
very good,I really enjoyed.
ARANGAN ARULVANAGA.
ANBUDAN.
K.SRINIVASAN.
September 2, 2008 at 4:53 PM
RAHAWAJ said...
அருணகிரிக்கு முருகன் சொன்னது போல் “சும்மா இரு” என்று
August 20, 2010 at 8:06 AM
ambur said...
arumaiyana kadhai with some moral value.
August 21, 2010 at 7:10 PM
Naveen said...
//குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...//
மிகவும் அருமையாக மாயியை தூர போக சொன்நீரிகள் சுவாமி !!!
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவே ஒம்!!!
October 21, 2012 at 5:43 PM
Gopalsamy Ponnuraj said...
அருமையான தகவல்!
October 4, 2017 at 2:50 PM
N. Ramakrishnan said...
தூரப்போ குக ஸ்வாமிகளின் குருபக்தியே , உண்மையான ஞானமும் பக்தியுமாகும்.
November 9, 2018 at 8:56 AM
N. Ramakrishnan said...
தூரப்போ குக ஸ்வாமிகளின் குருபக்தியே , உண்மையான ஞானமும் பக்தியுமாகும். குருவின் மீது ஒரு சிஷ்யனுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை இருக்க வேண்டுமென
அறிவிலிக்கும் சுலபமாகப் புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது. சொல்லும் செயலும் குருவின் பார்வை ஒன்றினாலேயே ஐக்கியப்பட்டுவிடமுடியும் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம்.நன்றி. |
"https://noolaham.org/wiki/index.php/நிறுவனம்:கிளி/_தம்பகாமம்_உப்புக்கேணி_பிள்ளையார்_கோயில்" இருந்து மீள்விக்கப்பட்டது |
[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] தலைநகரான [[தீபை]] நகரத்தில் உள்ள [[கர்னாக்]] கோயிலில் [[அமூன்]], மூத் மற்றும் கோன்சு கடவுள்களை மக்கள் வழிபட்டனர்.
கையில் [[ஆங்க் (எகிப்தியச் சின்னம்)|ஆங்க்]] திறவுகோலுடன் கூடிய மூத் கடவுள்கடவுளின் தலையில் இரட்டை மணிமகுடம், [[கழுகு|கழுகை]] தாங்கிய உலகின் சக்தியாக சித்தரிக்கப்படுகிறார். மூத் கடவுளின் வழிபாடு உச்சநிலையில் இருக்கையில், எகிப்தின் [[பார்வோன்]]கள், மூத் கடவுளின் வழிபாட்டை ஆதரித்தனர். [[ஒபெத் திருவிழா]] போன்ற முக்கிய விழாக்களின் போது மூத் தாய்க் கடவுளின் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மூத் தெய்வத்திற்கான கோயில், [[தீபை]] அருகே உள்ள [[கர்னாக்]]கில் உள்ளது.
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தில்]] (கிமு 2686 – கிமு 2181) [[அமூன்]] கடவுளின் துணையாக மூத் தெய்வம் வழிபடபட்டது. [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] (கிமு 1550 – 1077) ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆட்சியில் கோயில்களில் [[அமூன்]], '''மூத்''' தெய்வங்களுடன் [[இரண்டாம் ராமேசஸ்]] சிற்பங்கள் நிறுவப்பட்டது. [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தில்]] (கிமு 664 - கிமு 332) மூத் தெய்வத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, [[மேல் எகிப்து]] பகுதியில் உள்ள [[தீபை]] நகரத்தின் காவல் தெய்வம் என்ற நிலைக்குச் சென்றது.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. pp. 153–155, 169</ref> |
பெயின்ட் அல்லது மைக்குரோசாபுட்டு பெயின்ட் அல்லது எம். எசு. பெயின்ட் அல்லது பெயிண்டுபிரசு (Paint அல்லது Microsoft Paint அல்லது MS Paint அல்லது Paintbrush) என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள எளிய வரைகலைப் பூச்சு மென்பொருள் ஆகும்.[1] விண்டோசு இருமி வரைபடம் (ஒரு நிற இருமி வரைபடம், 16 நிற இருமி வரைபடம், 256 நிற இருமி வரைபடம், 24-இருமி இருமி வரைபடம் ஆகிய சேமிப்பு வகைகளில் .bmp, .dib ஆகிய நீட்சிகளுடன்), ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம் (பெயின்ட் மென்பொருளில் அசைவூட்டம், ஒளி புகாநிலை ஆகியவை இன்றியே வரைகலைப் பரிமாற்ற வடிவத்தைத் திறக்கவோ சேமிக்கவோ முடியும். அத்துடன், பெயின்ட் மென்பொருளின் விண்டோசு 98 பதிப்பு, விண்டோசு 95 நிகழ்நிலைப்படுத்தற்பதிப்பு, விண்டோசு என். தி. 4.0 பதிப்பு ஆகியவை கூட வரைகலைப் பரிமாற்ற வடிவத்தை ஏற்பதில்லை.), பெயரத்தகு வலையமைப்பு வரைகலை (ஒளிக்கசிவு அலைவரிசையின்றி), இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு (பல்பக்க ஏற்பின்றி) ஆகிய சேமிப்பு வகைகளில் அமைந்த கோப்புகளைப் பெயின்ட் திறக்கவுஞ்சேமிக்கவுஞ்செய்யும். பெயின்ட் மென்பொருளை நிற முறையிலோ இரு நிறக் கறுப்பு வெள்ளை முறையிலோ பயன்படுத்த முடியும். இம்மென்பொருளில் சாம்பலளவீட்டு முறையில்லை. பெயின்ட் மென்பொருள், அதனுடைய எளிமை காரணமாக, விரைவாக விண்டோசின் தொடக்கப் பதிப்புகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்றாக இடம்பெற்று, கணினியொன்றில் வரைவதைப் பலருக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.
பொருளடக்கம்
1 வரலாறு
1.1 தொடக்கப் பதிப்புகள்
1.2 விண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை
1.3 விண்டோசு விசிட்டா
1.4 விண்டோசு 7
2 வசதிகள்
2.1 விண்டோசு விசிட்டா
2.2 விண்டோசு 7
2.3 மொத்தமாக
3 மேற்கோள்கள்
வரலாறு[தொகு]
தொடக்கப் பதிப்புகள்[தொகு]
விண்டோசின் முதற்பதிப்பான விண்டோசு 1.0இலேயே பெயின்ட் மென்பொருளின் முதற்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அது சீசாவுட்டுக் கூட்டு நிறுவனத்தின் பி. சி. பெயிண்டுபிரசு மென்பொருளின் உரிமம் பெற்ற பதிப்பாக இருந்தது. பின்னர், விண்டோசு 3.0இல் இம்மென்பொருளின் பெயர் பெயிண்டுபிரசு என்று மாற்றப்பட்டாலும் விண்டோசு 95இலும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மறுபடியும் இதனுடைய பெயர் பெயின்ட் என்றே பயன்படுத்தப்படுகின்றது.[3] மேற்கூறிய பதிப்பு மைக்குரோசாபுட்டு பெயின்ட் கோப்புகளையும் இருமி வரைபடக் கோப்புகளையும் மட்டுமே ஏற்றது.
விண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை[தொகு]
விண்டோசு 95இல் பெயின்ட் மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு எக்கு. பி. வரை அப்பதிப்பின் படவுருக்களும் நிறத்தட்டுமே பயன்படுத்தப்பட்டன. விண்டோசு 95இலும் விண்டோசு என். தி. 4.0இலும் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் பதிப்பில் Colors எனும் பட்டியில் Save colors, Get colors ஆகிய தெரிவுகளைப் பயன்படுத்தி நிறத்தட்டுக் கோப்புகளைச் (.pal) சேமிக்கவோ நிறங்களின் தனிப்பயன் தொகுதியை ஏற்றவோ கூடியதாகவிருந்தது. படிமங்களின் நிற ஆழம் படவணுவுக்கு 16 இருமிகளாகவோ உயர்நிறமாகவோ (64 கிலோ நிறங்கள்) இருந்தால் மட்டுமே இத்தெரிவுகளைப் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது.
விண்டோசு 98, விண்டோசு 2000, விண்டோசு மில்லேனியம் ஆகிய இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் மைக்குரோசாபுட்டு ஆபிசு அல்லது மைக்குரோசாபுட்டு உவோட்டோடிரா போன்ற இன்னொரு மைக்குரோசாபுட்டுச் செயலியால் தேவையான மைக்குரோசாபுட்டு வரைகலை வடிகட்டிகள் நிறுவப்பட்டிருந்த நிலையிலே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளிலே கோப்புகளைச் சேமிக்கக்கூடியதாகவிருந்தது. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு மில்லேனியம் (விண்டோசு 2000 பதிப்பு விண்டோசு மில்லேனியத்திற்கு முதலே வெளியிடப்பட்டது.) பதிப்பிலிருந்து பெரிய படிமங்கள் திறக்கப்பட்டாலோ ஒட்டப்பட்டாலோ பயனரைக் கேட்காமலேயே வடிவமைக்கும் திரையின் அளவு தானியங்கு முறையில் பெரிதாகும் வசதி சேர்க்கப்பட்டது.
விண்டோசு எக்கு. பி. இயங்குதளத்திலும் அதற்குப் பிற்பட்ட விண்டோசு இயங்குதளங்களிலும் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் பதிப்புகள் வரைகலைக் கருவி இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெயின்ட் மென்பொருளிலேயே இன்னுங்கூடிய வரைகலை வடிகட்டிகளை வேண்டாமல் ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு, பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளில் படிமங்களைச் சேமிக்க முடிகிறது. மேலும் படிம வருடியிலிருந்தோ இலக்க முறைப் படக்கருவியிலிருந்தோ படிமங்களை உள்ளிடும் வசதியும் பெயின்ட் மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெயின்ட் மென்பொருளின் வரைகலைக் கருவி இடைமுகப் பதிப்பால் 24-இருமி ஆழமுள்ள படிமங்களையே கையாள முடியுமென்பதால் ஒளிக்கசிவு அலைவரிசை ஒளிபுகாநிலைக்கான ஏற்பு இன்னும் வழங்கப்படவில்லை.
விண்டோசு விசிட்டா[தொகு]
விண்டோசு விசிட்டாவில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் கருவிப் பட்டைப் படவுருக்களும் நிறத்தட்டும் மாற்றப்பட்டன.[4] அத்துடன், 10 தடவைகள் வரையில் செயல்தவிர்த்தற்செயன்முறையையும் செய்யும் வசதி வழங்கப்பட்டதுடன், நுனிவெட்டுதல் வசதி, பெரிதாக்கும் வழுக்கி ஆகிய வசதிகளும் இணைக்கப்பட்டன. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு விசிட்டாப் பதிப்பு இயல்பாகவே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு வடிவமைப்பில் படிமங்களைச் சேமித்தது. அத்துடன் அப்பதிப்பிற்பயன்படுத்தப்படும் இழப்புச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைத் தரப்படாததால் படிமத்தின் தரம் நயநுணுக்கமாகக் குறையும் வாய்ப்பும் உள்ளது.
விண்டோசு 7[தொகு]
விண்டோசு 7இல் பெயின்ட் மென்பொருளின் இடைமுகம் ஆபிசு 2010 பாணியிலமைந்த நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றப்பட்டது.[5] அத்துடன், மேலும் இயல்பான ஓவியத்தைத் தருவதற்காகப் பெயின்ட் கருவிகளில் பல்வேறு சாயல்களில் வேறுபட்ட ஒளிபுகாநிலைகளைக் கொண்ட பல்வகைப்பட்ட கலைநயத் தூரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன.[6] பெயின்ட் மென்பொருளின் இப்பதிப்பில் உண்மைநிலையை மேம்படுத்துவதற்காக, எண்ணெய்த் தூரிகையும் நீர்நிறத் தூரிகையும் பயனர் மீண்டும் ஒரு முறை சொடுக்கும் வரை சிறிது தூரத்துக்கே வரையும் தன்மை கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன (ஓவியத் தூரிகையில் நிறப்பூச்சு முடிந்ததாக ஒரு மாய உணர்ச்சியை இது உருவாக்குகின்றது.). அத்துடன், வேறொரு கருவி தெரிவு செய்யப்பட்டு, வரைகலை பரவப்படும் வரையில் தன்விருப்பமாக மறு அளவிடக்கூடிய வடிவங்களையும் கொண்டுள்ளது. இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.) உள்ளதுடன், இப்பதிப்பு அவற்றைப் பெயரத்தகு வலையமைப்பு வரைகலை வடிவமாக இயல்பு நிலையிற்சேமிக்கிறது. ஒரு வடிவத்தை வரைந்த பின்னர், அதனைப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்குவதற்கான தெரிவும் விண்டோசு 7இன் பெயின்ட் மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் குறிப்பிட்ட உரையைக் காட்டுவதற்குப் போதிய இடமில்லாத உரைப் பெட்டிகளினுள்ளும் பெரிய உரையை ஒட்ட முடிகின்றது. தேவைப்பட்டால் உரைக்குப் பொருத்தமான அளவில் உரைப் பெட்டியைப் பெரிதாக்குவதன் மூலமோ மறு அளவிடுவதன் மூலமோ உரைப் பெட்டியினுள் உரையைப் பொருத்த முடியும். ஆனால், விண்டோசு 7இற்கு முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் மென்பொருட்களோ பயனரொருவர் உரைப் பெட்டியினுளுள்ள இடத்தை விடக் கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளும் உரையை ஒட்ட முயன்றால் பிழைச் செய்தியொன்றைக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய பதிப்புகளில் 100%இலும் கூடுதலாகக் காட்சியைப் பெரிதாக்கியவுடன் சாளரத்தை உருட்ட முடியாமல் நீண்ட காலமாக இருந்து வந்த பாதிப்பை விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பு ஓரளவு சரிசெய்திருக்கின்றது. ஆனாலும் பெருப்பித்த காட்சியில் உரையை உள்ளிடும்போது பெருப்பித்த காட்சிக்கு அப்பாலுள்ள பகுதிக்குச் சுட்டி மூலமோ விசைப்பலகை மூலமோ திரையையோ உரையையோ நகர்த்த முடியாது. ஏனெனில், அப்போது உரைச் சாளரம் தொகுத்தல் முறையில் உள்ளதால் உருள்பட்டிகள் செயலிழந்திருக்கும்.
வசதிகள்[தொகு]
விண்டோசு விசிட்டா[தொகு]
விண்டோசு விசிட்டாவின் பெயின்ட் பதிப்பு அதற்கு முந்தைய பதிப்புகளைப் பெரிதும் ஒத்திருந்தாலும் அப்பதிப்பில் செயல்தவிர் ஆளியை பத்துத் தடவைகள் வரையில் சொடுக்க முடியும் (முன்பு மூன்று தடவைகளே சொடுக்க முடியும்.). அத்துடன், அப்பதிப்பு நிறத்தட்டில் இடமிருந்து வலமாகப் பின்வரும் 28 நிறங்களைக் கொண்டுள்ளது: கறுப்பு, சாம்பல்-80%, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், தங்கம், மஞ்சள், எலுமிச்சை, பச்சை, நீலப் பச்சை, நீலம், கருநீலம், நாவல், தாழை மலர், நீலம்-சாம்பல், நீலம் (மெல்லியதாகச் சாம்பல்), வெளிர் நீலப் பச்சை, இடலைப் பச்சை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் (வெளிர் நிறம் கூட), வெளிர் மஞ்சள், வெளிர் செம்மஞ்சள், குருதிச் செந்நிறம், பழுப்பு, சாம்பல்-25%, சாம்பல்-25% (வெளிர் சாம்பல்), வெள்ளை
விண்டோசு 7[தொகு]
விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பானது முகப்பு, காட்சி, உரை ஆகிய தத்தல்களின் கீழ் இடமிருந்து வலமாகப் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது.[7] இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் மென்பொருளில் படிமங்களை ஆக்கவோ படிமங்களில் மாற்றங்களைச் செய்யவோ முடியும்.
முகப்பு
நகலகம்
ஒட்டு
ஒட்டு
இதிலிருந்து ஒட்டு
வெட்டு
நகலெடு
படிமம்
தேர்ந்தெடு
வடிவங்கள் தேர்வு
செவ்வகத் தேர்வு
கட்டற்ற தேர்வு
விருப்பங்கள் தேர்வு
எல்லாம் தேர்ந்தெடு
தேர்வைத் தலைகீழாக்கு
நீக்கு
ஒளிஊடுருவக்கூடிய தேர்வு
நுனிவெட்டு
மறு அளவிடு
சுழற்று
வலதுபுறமாக 90° சுழற்று
இடதுபுறமாக 90° சுழற்று
180° சுழற்று
செங்குத்தாக திருப்பு
கிடைமட்டமாக திருப்பு
கருவிகள்
பென்சில்
வண்ணத்தால் நிரப்பு
உரை
அழிப்பான்
வண்ணத் தேர்வு
உருப்பெருக்கி
பிரஷ்கள்
பிரஷ்
காலிகிராஃபி பிரஷ் 1
காலிகிராஃபி பிரஷ் 2
ஏர்பிரஷ்
ஆயில் பிரஷ்
கிரேயான்
மார்க்கர்
சாதாரண பென்சில்
வாட்டர்கலர் பிரஷ்
வடிவங்கள்
வடிவப் பெட்டி
தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு வளைக்கோட்டை வரைகிறது.
ஓவல்
செவ்வகம்
வட்ட செவ்வகம்
பலகோணம்
முக்கோணம்
செங்கோண முக்கோணம்
டைமண்ட்
ஐங்கோணம்
அறுகோணம்
வலதுபுற அம்பு
இடதுபுற அம்பு
மேல்நோக்கிய அம்பு
கீழ்நோக்கிய அம்பு
நான்கு புள்ளி நட்சத்திரம்
ஐந்து புள்ளி நட்சத்திரம்
ஆறுபுள்ளி நட்சத்திரம்
வட்ட செங்கோண கால்அவுட்
ஓவல் கால்அவுட்
முகில் கால்அவுட்
இருதயம்
மின்னல்
வெளிவரை
வரைவெல்லை இல்லை
திட வண்ணம்
கிரேயான்
மார்க்கர்
ஆயில்
இயல்பான பென்சில்
வெளிர்வண்ணம்
நிரப்பு
நிரப்பு இல்லை
திட வண்ணம்
கிரேயான்
மார்க்கர்
ஆயில்
இயல்பான பென்சில்
வெளிர்வண்ணம்
அளவு
1px
3px
5px
8px
வண்ணங்கள்
வண்ணம் 1
வண்ணம் 2
வண்ணத் தட்டு
கறுப்பு
சாம்பல்-50%
அடர் சிவப்பு
சிவப்பு
ஆரஞ்சு
மஞ்சள்
பச்சை
டர்க்கோய்ஸ்
இன்டிகோ
பர்ப்பிள்
வெள்ளை
சாம்பல்-25%
பழுப்பு
ரோஸ்
தங்கம்
வெளிர் மஞ்சள்
எலுமிச்சை
வெளிர் டர்க்கோய்ஸ்
நீலம்-சாம்பல்
தாழம்பூ
வண்ணங்களைத் திருத்து
காட்சி
பெரிதாக்கு
இன்னும் பெரிதாக்கு
இன்னும் சிறிதாக்கு
100%
காண்பி அல்லது மறை
வரைகோல்கள்
கம்பிக்கோடுகள்
நிலைப் பட்டி
காட்சி
முழுத்திரை
சிறு உருவம்
உரை
நகலகம்
ஒட்டு
வெட்டு
நகலெடு
எழுத்துரு
எழுத்துருக் குடும்பம் (எ-டு: Calibri)
எழுத்துரு அளவு (எ-டு: 11)
தடித்த
சாய்ந்த
அடிக்கோடு
அடித்தம்
பின்புலம்
இருட்டு
ஒளிஊடுருவுதன்மை
வண்ணங்கள்
வண்ணம் 1
வண்ணம் 2
வண்ணத் தட்டு
கறுப்பு
சாம்பல்-50%
அடர் சிவப்பு
சிவப்பு
ஆரஞ்சு
மஞ்சள்
பச்சை
டர்க்கோய்ஸ்
இன்டிகோ
பர்ப்பிள்
வெள்ளை
சாம்பல்-25%
பழுப்பு
ரோஸ்
தங்கம்
வெளிர் மஞ்சள்
எலுமிச்சை
வெளிர் டர்க்கோய்ஸ்
நீலம்-சாம்பல்
தாழம்பூ
வண்ணங்களை மாற்று
[8]
விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பின் பணியிடத்தில் 20 நிறங்கள் உள்ளன. முகப்பு என்ற தத்தலின் கீழ் வண்ணங்கள் பகுதியில் அமைந்துள்ள இயல்புநிலை நிறங்கள் இடமிருந்து வலமாகப் பின்வருமாறு: கறுப்பு, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலப் பச்சை, கருநீலம், நாவல், வெள்ளை, சாம்பல்-25%, பழுப்பு, குருதிச் செந்நிறம், தங்கம், வெளிர் மஞ்சள், எலுமிச்சை, வெளிர் நீலப் பச்சை, நீலம்-சாம்பல், தாழை மலர். அத்துடன், வண்ணங்களைத் திருத்து என்னும் பகுதியிலுள்ள நிறத் தட்டிலுள்ள நிறங்களை உள்ளிடுவதனூடாக மேற்கூறிய நிறங்களுக்குக் கீழேயும் மேலும் பத்து நிறங்களைக் கொண்டு வர முடியும்.
பெயின்ட் மென்பொருளில் ஓவியரொருவரால் வரையக் கூடிய படத்துக்கு எடுத்துக்காட்டொன்று
மேலும் கட்டுப்பாட்டு விசையுடனும் மாற்று விசையுடனும் பேரெழுத்து Iஐ அழுத்துவதனூடாகப் படிமத்தின் நிறங்களை நேர்மாறாக்க முடியும்.
மொத்தமாக[தொகு]
உதவிக் கோப்பிற்குறிப்பிடப்படாத முத்திரை முறை, செல்தட முறை, ஒழுங்கான வடிவங்கள், படங்களை நகர்த்துதல் ஆகிய சில மறைக்கப்பட்ட செயற்பாடுகளையும் பெயின்ட் கொண்டுள்ளது. முத்திரை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயனர் தேர்ந்தெடு என்ற தெரிவின் மூலம் படிமத்தின் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டு விசையை அழுத்திக் கொண்டு, திரையின் இன்னொரு பகுதிக்கு நகர்த்திப் படியெடுக்க முடியும். இதன்போது குறிப்பிட்ட பகுதி வெட்டப்படுவதில்லை; படியொன்று உருவாக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டு விசை அழுத்தப்பட்டிருக்கும் வரை இச்செயன்முறையை விரும்பிய எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். செல்தட முறையையும் முத்திரை முறையைப் போலவே செயற்படுத்தலாம். ஆனால், செல்தட முறையில் கட்டுப்பாட்டு விசைக்குப் பதிலாக மாற்று விசை பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் பயனரொருவர் தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது என்ற கருவியைப் பயன்படுத்துவதற்கான தேவையின்றியே பென்சில் என்ற தெரிவை மாற்று விசையை அழுத்திக் கொண்டு பயன்படுத்தி (வலது சொடுக்கலுடன் இழுத்து) நேராக, கிடையாக, செங்குத்தாகச் சீரான கோடுகளை வரைய முடியும். மேலும் பென்சில் என்ற கருவியின் மூலம் கோட்டை வரைய முன்போ வரைந்து கொண்டிருக்கும்போதோ அக்கோட்டைத் தடிப்பாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள +) மெல்லியதாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள -) முடியும்.
படவணு ஓவியத்தை உருவாக்குவதற்கும் பெயின்ட் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
↑ மைக்குரோசாபுட்டு பெயின்ட் மேலோட்டம் (ஆங்கில மொழியில்)
↑ விண்டோசு 1.0-பூசு(தல்) (ஆங்கில மொழியில்)
↑ மைக்ரோசாபுட்டு விண்டோசு 3.0 திரைக்காட்சிகள் (ஆங்கில மொழியில்)
↑ விண்டோசு 7 முதற்பார்வை: மைக்ரோசாப்டு பெயின்ட் (ஆங்கில மொழியில்)
↑ சுருக்கம்: விண்டோசு 7 பெயின்ட்டில் நாடா உள்ளடக்கப்பட்டுள்ளது (ஆங்கில மொழியில்)
↑ பெயின்ட் (ஆங்கில மொழியில்)
↑ பெயின்ட்டைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)
↑ ["கருவிகளைப் பயன்படுத்தவும் விண்டோசு 7இற்கான மைக்ரோசாப்டு பெயின்ட்டின் மூலம் படங்களை உருவாக்கவும் கற்கவும் (ஆங்கில மொழியில்)". மூல முகவரியிலிருந்து 2012-09-05 அன்று பரணிடப்பட்டது. கருவிகளைப் பயன்படுத்தவும் விண்டோசு 7இற்கான மைக்ரோசாப்டு பெயின்ட்டின் மூலம் படங்களை உருவாக்கவும் கற்கவும் (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயின்ட்&oldid=3222486" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்:
மைக்ரோசாப்ட்
விண்டோசு மென்பொருட்கள்
விண்டோசு ஆக்கக்கூறுகள்
மறைக்கப்பட்ட பகுப்பு:
Pages using div col with unknown parameters
வழிசெலுத்தல் பட்டி
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
புகுபதிகை செய்யப்படவில்லை
இந்த ஐபி க்கான பேச்சு
பங்களிப்புக்கள்
புதிய கணக்கை உருவாக்கு
புகுபதிகை
பெயர்வெளிகள்
கட்டுரை
உரையாடல்
மாறிகள் expanded collapsed
பார்வைகள்
படிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்
மேலும் expanded collapsed
தேடுக
வழிசெலுத்தல்
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
உதவி கோருக
புதிய கட்டுரை எழுதுக
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஏதாவது ஒரு கட்டுரை
தமிழில் எழுத
ஆலமரத்தடி
Embassy
சென்ற மாதப் புள்ளிவிவரம்
Traffic stats
உதவி
உதவி ஆவணங்கள்
Font help
புதுப்பயனர் உதவி
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்சனரி
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
பிற
விக்கிப்பீடியர் வலைவாசல்
நன்கொடைகள்
நடப்பு நிகழ்வுகள்
கருவிப் பெட்டி
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிலையான இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுந்தொடுப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
விக்கித்தரவுஉருப்படி
அச்சு/ஏற்றுமதி
ஒரு புத்தகம் உருவாக்கு
PDF என தகவலிறக்கு
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு
பிற திட்டங்களில்
விக்கிமீடியா பொதுவகம்
மற்ற மொழிகளில்
العربية
Azərbaycanca
Български
Català
Čeština
Deutsch
Ελληνικά
English
Español
Eesti
Euskara
فارسی
Suomi
Français
Galego
עברית
Magyar
Italiano
日本語
ქართული
Қазақша
한국어
Lietuvių
မြန်မာဘာသာ
Dorerin Naoero
Nederlands
Norfuk / Pitkern
Polski
Português
Română
Русский
Simple English
Slovenčina
Српски / srpski
Svenska
ไทย
Türkçe
Українська
اردو
Tiếng Việt
中文
粵語
இணைப்புக்களைத் தொகு
இப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 17:51 மணிக்குத் திருத்தினோம்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
ஜோஸ் பட்லர் அதிரடி சதம்..! தனி ஒருவனாக இங்கிலாந்தை கரைசேர்த்த பட்லர்.. இலங்கைக்கு கடின இலக்கு | jos buttler century helps england to set sri lanka in t20 world cup
Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Live TV
Languages
Live TV
Politics
Coronavirus
Tamil Nadu
Cinema
Video
Gallery
India
World
Sports
Life Style
Business
Crime
Technology
live TV
Tamil News
sports
Cricket
ஜோஸ் பட்லர் அதிரடி சதம்..! தனி ஒருவனாக இங்கிலாந்தை கரைசேர்த்த பட்லர்.. இலங்கைக்கு கடின இலக்கு
ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் இலங்கைக்கு 164 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
karthikeyan V
Sharjah - United Arab Emirates, First Published Nov 1, 2021, 9:30 PM IST
டி20 உலக கோப்பையின் இன்றைய போட்டியில் இங்கிலாந்தும் இலங்கையும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒரு அடியை எடுத்து அரையிறுதிக்குள் வைத்துவிட்ட இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியும் களமிறங்கின.
ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இங்கிலாந்து அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் இலக்கை விரட்டிய நிலையில் இந்த போட்டியில் தான் முதல்முறையாக முதலில் பேட்டிங் ஆடியது. அதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் ஆடுகிறது என்பதை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை 9 ரன்னில் ஹசரங்கா வீழ்த்தினார். இதையடுத்து டேவிட் மலானை 6 ரன்னுக்கு சமீரா வீழ்த்த, ஜானி பேர்ஸ்டோவை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார் ஹசரங்கா. அதனால் 5.2 ஓவரில் 35 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில், ஜோஸ் பட்லரும் கேப்டனு மோர்கனும் இணைந்து நிதானம் காத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 12-13 ஓவர் வரை நிதானம் காத்த இருவரும் அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினர். கடந்த ஓராண்டாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ஒயின் மோர்கன், இந்த போட்டியில் சில பெரிய ஷாட்டுகளை ஆடி ஃபார்முக்கு வந்தார்.
ஏற்கனவே அருமையான ஃபார்மில் இருக்கும் பட்லர், சின்ன மைதானமான ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார். அரைசதத்திற்கு பின்னர், வேற லெவலில் அடித்து ஆடிய பட்லர் 66 பந்தில் 95 ரன்கள் அடித்திருக்க, இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் சதத்தை எட்ட சிக்ஸர் தேவைப்பட்டது. துஷ்மந்தா சமீரா அந்த பந்தை ஃபுல் டாஸாக வீச, அதை லாவகமாக லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டி சதத்தை எட்டினார் பட்லர். இதுதான் டி20 கிரிக்கெட்டில் பட்லரின் முதல் சதம்.
பட்லரின் அதிரடி சதம்(101) மற்றும் மோர்கனின் பொறுப்பான பேட்டிங்கால்(40) 20 ஓவரில்ம் 163 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 163 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. 163 ரன்கள் என்பது பேட்டிங்கிற்கு சவாலான ஸ்லோ பிட்ச்சான ஷார்ஜா பிட்ச்சில் கண்டிப்பாகவே கடினமான இலக்கு.
Last Updated Nov 1, 2021, 9:30 PM IST
t20 world cup
england vs sri lanka
jos buttler century
england team
Follow Us:
Download App:
RELATED STORIES
IPL 2022 Retention: உன் சேவை இனிமேல் எங்களுக்கு தேவையில்லை..! செல்லப்பிள்ளையை கழட்டிவிட்ட ஆர்சிபி
IND vs NZ இந்தியா 2 செசனில் மேட்ச்சை முடிச்சுரும்னு நெனச்சேன்..! இந்திய பவுலர்கள் மீது இன்சமாம் அதிருப்தி
IND vs NZ விராட் கோலி கம்பேக்.. இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்..?
IPL 2022 Retention: ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள்..!
IPL 2022 Retention: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் முழு விவரம்..!
Top Stories
Annaatthe நெட்ஃப்ளிக்ஸில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அண்ணாத்த ? எந்த எந்த மொழியில் தெரியுமா?
BREAKING : சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..! Saravana Stores IT Raid
Ilayaraaja"என்னை யாரும் இந்த அளவு அவமானப்படுத்தியதில்லை" ; இளையராஜா : கடைசி விவசாயிக்கு வந்த சோதனை
Dollar Seshadri: இறுதி மூச்சு வரை திருப்பதி ஏழுமலையானுக்காக வாழ்ந்த டாலர் சேஷாத்ரி மறைவு.. வேதனையில் EPS..! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.